Thursday, November 29, 2018

173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள் கொள்ளையடித்த பரங்கி ஓநாய்கள்!!

1765-1938 வரை பரங்கி ஓநாய்கள் நம்மிடம் கொள்ளையடித்த செல்வத்தின் மதிப்பு இன்றைய சந்தை நிலவரப்படி ரூ. 70,67,500 கோடிகளாம்!! 😡😡

▶173 வருடங்களில் ரூ. 70,67,500 கோடிகள்
▶1 வருடத்தில் ரூ. 40,853 கோடிகள்
▶1 நாளுக்கு ரூ. 112 கோடிகள்

அன்று அந்த ஓநாய் நாட்டின் மக்கள் தொகை சுமார் 1.50 கோடிகள். எனில், தலைக்கு சுமார் 75 ரூபாய்கள் பார்த்திருக்கிறார்கள்! இதனால் தான் மோகன்தாஸ், "நாங்கள் என்றும் ஆங்கிலேயர்களாக ஆக முடியாது. அப்படி ஆக வேண்டுமானால், நாங்கள் கொள்ளையடிக்க இன்னொரு பூமி வேண்டும்." என்று பஞ்ச் டயலாக் பேசினார். (இதுல ஒரு கொறைச்சலும் இல்ல. இந்தப் பக்கம் பஞ்ச் டயலாக் பேசிட்டு, அந்தப் பக்கம் அந்த ஓநாய்களோடயே அக்ரிமெண்ட்டு போட்டுக்க வேண்டியது. "பகத்சிங்க நீ போட்டுக்க. நான் கண்டுக்கல. நான் வெள்ளையனே வெளியேறுன்னு உதார் உடுவேன். நீ ஜகா வாங்குற மாறி கொஞ்சநாள் நடிச்சுக்கணும். டீல் ஓகேயா?" 😠)

இன்றும் கூட அந்நாட்டின் பொது திட்டங்கள் நடப்பது நம் பணத்தில் தான் என்று சில வருடங்களுக்கு முன் செய்தி வெளிவந்தது. இதற்குப் பிறகும் பற்றாக்குறை மற்றும் பேராசை!! இன்று வரை அவர்களது வீணாய்ப் போன மொழி, கல்வி, உணவு, மருந்து, அ(ழி)வியல், மதம் என்று பல நஞ்சுகளைக் கொண்டு நம்மையும் உலகையும் அழித்துப் பணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் இங்கிலாந்து, அது செய்த பாவங்களின் பலனால், கடலுக்கடியில் போய்விடுமென்று ஸ்ரீராமசந்திர மகராஜ் என்ற மகான் சொல்லியிருக்கிறார். 👏👌👍😘 மகான்களின் வாக்கு பொய்யாகாது.

(https://www.livemint.com/Companies/HNZA71LNVNNVXQ1eaIKu6M/British-Raj-siphoned-out-45-trillion-from-India-Utsa-Patna.html)

No comments:

Post a Comment