Sunday, August 23, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #62 - பிட்டுக்கு மண் சுமந்த படலம், கூத்தப்பெருமான் - சிறு விளக்கம்

பண்அடுத்த கூடல் பழம்பதியில் பிட்டமுதை
உண்ணடுத்து வைகை உடையாமல் - மண்எடுத்துப்
போடுமலை சந்ததமும் பொன்னம் பலத்தில்நடம்
ஆடுமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #62

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

சிவப்பரம்பொருள், பழமையான மதுரை மாநகரில் சொக்கநாதப் பெருமானாக பிட்டுக்கு மண் சுமந்த படலத்தையும், தில்லையில் கூத்தப்பெருமானாக திருநடனம் புரிவதையும் போற்றிப் பாடுகிறார் ஆசிரியர்.

🔸#பிட்டுக்கு #மண் #சுமந்த #படலம்

🔹பிட்டு - இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் அனைத்து துய்ப்புகள்

🔹சுமக்கும் மண் - நமது உடல். "மண்ணினாய விகாரமும் மண்ணே" என்பது கண்ணபிரானின் 🌺🙏🏽 வாக்கு. உடல் எப்படி உருவானது? உணவிலிருந்து. உணவு எங்கிருந்து கிடைத்தது? தாவரங்களிடமிருந்து (அசைவம் எனில் தாவரம் -> விலங்கு -> மனித உடல்). தாவரம் எங்கிருந்து உருவானது? மண்ணிலிருந்து. ஆக, உடல் = மண்.

மண்ணை (உடலை) சுமந்து என்ன பெறுகிறோம்? வாழ்க்கை எனும் ஒரு சொல்லில் அடங்கும் பலவிதமான துய்ப்புகள். இந்த துய்ப்புகள் எனும் பிட்டுக்காக மண்ணைச் சுமக்கிறோம். எப்போது "இனி, பிட்டு வேண்டாம்" என முடிவெடுத்து அசைவற்று நிற்கிறோமோ (தன்மையுணர்வில் நிலை பெறுகிறோமோ) அதன் பிறகு மண்ணைச் சுமக்க வேண்டியிருக்காது.

🔹பெருமானின் மீது பட்ட பிரம்படி அனைத்துயிர்களின் மீதும் படுவது - எல்லோருக்குள்ளும் இருப்பது ஓர் இறைவன் தான் என்பதைக் குறிக்கிறது. படைப்பு என்பது நீரில் தோன்றும் குமிழிகள் போன்றது. குமிழிகள் பலவாக இருந்தாலும், எல்லாம் நீர் தான்.

#பகவான் திரு #ரமணர் 🌺🙏🏽 அருளுகிறார்: ... பொருட்களை, அவற்றின் உருவங்களையும், பெயர்களையும் கொண்டு வேறுபடுத்தி அறியலாம். ஆனால், மனிதர்களைப் பொறுத்தவரையில், எல்லோரும் தங்களை ஒரே பெயரில் தான் அறிகிறார்கள். அப்பெயர்... "நான்"! யாரை வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொருவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். சிவபெருமானேயானாலும் அவரும் தன்னை "நான்" என்றே உணர்கிறார். ... (பகவத் வசனாம்ருதம் - #582)

🔸#கூத்தப்பெருமான் திருநடனம் புரியும் தில்லை பொன்னம்பலம்

🔹பொன்னம்பலம் என்பது திருமூலர் 🌺🙏🏽 மற்றும் அவரது வழிச்சென்ற சிலரது 🌺🙏🏽 சமாதித் தொகுப்பாகும்.

🔹கூத்தப்பெருமான் என்பது நம்மைப் பற்றிய மெய்யறிவைக் கொடுக்கும் மெய்யாசிரியர், அவ்வறிவில் நிலைபெற உதவும் நல்ல துணைவன், நிலைபெற்ற பின் இவ்வுலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் நல்வழிகாட்டி!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment