Monday, August 31, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு: பாடல் #65 - பெருமானுக்கும் மேலான அன்னைத்தமிழ் & அவரது புலவர்கள்!!

பொருந்துதலைச் சங்கப் புலவர்தமைப் போலே
விரிந்தபுகழ்க் கூடலிலே மேவி - அரும்தமிழை
ஆய்ந்தமலை பார்மீதில் ஐந்துஎழுத்தன் ஆகிவந்து
வாய்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #65

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙇🏽‍♂️

கடல்கொண்ட தென்மதுரையில் நடந்த முதல் தமிழ்சங்கத்தில் அன்னைத்தமிழை, தகுதியான புலவர்களோடு ஆராய்ந்த சிவபெருமானையும் 🌺🙏🏽, தனது மெய்யாசிரியரான திரு குகை நமச்சிவாயப் பெருமானையும் 🌺🙏🏽 போற்றுகிறார் ஆசிரியர்.

இங்கு சிவபெருமான் எனில் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர் என்று பொருள்.

அந்த மெய்யறிவாளர் எப்படி நம் நிறைமொழியை ஆராய்ந்தாராம்? தமிழ் சங்கத்திலே அங்கம் வகித்த தகுதியான புலவர்களைப் போன்று ஆராய்ந்தாராம்!! உலகின் வேறெந்த கலாச்சாரத்திலும் இப்படியொரு நடைமுறை இருந்திருக்குமா என்று தெரியவில்லை. புலவர்களை இறைவனுக்கும் மேலானவர்களாக சித்தரிக்கும் உரிமையை கொடுத்துள்ள இனம் எவ்வளவு பண்பட்டதாக இருந்திருக்கும்! அவ்வாறு மேலானவர்களாக சித்தரிக்கப்படும் புலவர்கள் எவ்வளவு "திரு" உடையவர்களாக இருந்திருப்பர்!! தனது மொழியை எல்லாவற்றிற்கும் மேலானதாக ஒரு இனம் கருதுகிறது என்றால் அந்த மொழி எவ்வளவு மேன்மையானதாக இருக்கும்!!!

நம் அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல. உண்மையான இறைமொழி. அவரை முறையாகக் கற்றால் அவரே நிலைபேற்றினை நமக்கு கொடுத்துவிடுவார்!

அந்நிய இனத்தின் ஊடுறுவல், இருள் மதங்களின் படையெடுப்பு (சமண, பௌத்த மற்றும் பௌத்தத்திலிருந்து தோன்றியவைகளும் சேர்த்து), தகுதியற்றவர்களின் கையில் ஆட்சி, அதிகாரம் & அனைத்திலும் முன்னுரிமை, பகுத்தறிவு என்னும் பெரும் தீநுண்மி ... இத்தனைக்குப் பிறகும் நமது மொழியும், அடையாளங்களும் இன்னமும் பெயரளவிலாவது இருக்கிறதென்றால் அது நம் முன்னோர் செய்த நல்வினைகளும், விட்டுச்சென்ற உறுதியான கட்டமைப்பும் தான் காரணம். 🙏🏽🙏🏽🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment