Showing posts with label பசுவுக்கு ஒரு வாயுறை. Show all posts
Showing posts with label பசுவுக்கு ஒரு வாயுறை. Show all posts

Friday, August 28, 2020

"பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்" என்பதின் பொருள்

🐂 பசு - மெய்யறிவு பெறாதவர்கள். உலக வாழ்க்கையில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள்.

🌿 அகத்தி - அகம் + தீ - மெய்யறிவு. பல பிறவிகளாக, பன்நெடுங்காலமாக உடலையும், உலகையும் உண்மை என்று கருதிக் கொண்டிருப்பவர்களை மாற்றுவது எளிதல்ல. அவர்களுக்கு சிறிது சிறிதாக, ஆனால், தொடர்ந்து மெய்யறிவைப் பற்றி எடுத்துக்கூறவேண்டும். இதனால் தான், "தினம் ஒரு கட்டு வாங்கிக் குடுங்க" என்றார்கள். "ஒரு செமை" என்று சொல்லவில்லை.

🥭 பழம் - நாம் கேள்விப்படுவதை எல்லாம், நமக்கு தோன்றுவதையெல்லாம் மற்றவர்களிடம் தெரிவிக்கும் முன், அவற்றைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு, சோதித்துப் பார்த்துவிட்டு, துய்த்தும் பார்த்து விட்டு மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

"பசுவுக்கு அகத்திக்கீரை..." என்ற சொற்றொடரின் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல், அகத்திக்கீரை சாகுபடியை வளர்த்துவிட்டார்கள்! பல மாடுகளை, தினமும் அதிகாலையில், கீரை கொடுக்கப்படும் இடங்களில் வடக்கிருக்க வைத்துவிட்டார்கள்!! 😁

oOOo