Saturday, August 29, 2020

கங்கை = வடக்கின் காவிரி, திரிவேணி சங்கமம் = உத்திரபிரதேசத்தின் கூடுதுறை!!

"பாரதத்தின் மான்செஸ்டர்", "பாரதத்தின் டெட்ராய்ட்" என்று அழைப்பதெல்லாம் எவ்வாறு அடிமைத்தனமாகுமோ அவ்வாறே "#தட்சிண #கங்கை", "#தமிழகத்தின் #திரிவேணி" என்று அழைப்பதுமாகும்.

💥 "உலகின் எந்த நதிக்கரையில் அதிக மாமுனிவா்கள் சமாதி கொண்டுள்ளனர்?" என்ற கேள்வியெழுந்தால் நமது #காவிரி அன்னையே முதலிடம் பெறுவார்! எண்ணற்ற மாமுனிவர்கள் அவரது பயண வழியில், அவரது கரைகளில் சமாதி கொண்டுள்ளனர். இந்த புனிதக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் கங்கையன்னை தான் "வடக்கின் காவிரி" என்றழைக்கப்படவேண்டும்.

💥 #பவானி (#திருநணா) கூடுதுறையில் திரு அளகேசப் பெருமான் (திரு #சங்கமேஸ்வரர்) 🌺🙏🏽 குடி கொண்டுள்ளார். திருஞானசம்பந்தப் பெருமானின் 🌺🙏🏽 தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம். (#அளகேசர் எனும் சிவ அடையாளத்தின் கீழ் சமாதி கொண்டுள்ள மாமுனிவர் யாரென்று தெரியாவிட்டாலும், இத்திருத்தலம் ஒரு மாமுனிவரின் சமாதி என்பதில் எந்த ஐயமும் இல்லை) இது போன்று எந்த மாமுனிவரும் #பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் குடி கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. எனவே, மீண்டும் புனிதக் கணக்கின் படி, திரிவேணி சங்கமம் தான் "உத்திரபிரதேசத்தின் கூடுதுறை" என்றழைக்கப்படவேண்டும்!

💥 கங்கையன்னை பனிப்பாறையிலிருந்து வருகிறார். காவிரியன்னையோ ஊற்றிலிருந்து வெளிவருகிறார். எப்போதுமே ஊற்று நீருக்கு தான் மதிப்பு அதிகம்!

oOOo

கங்கையன்னையை மட்டம் தட்டுவது எனது நோக்கமல்ல. "நமது அடையாளங்கள் யாருக்கும் எதற்கும் இரண்டாவதல்ல" என்று உரக்கச் சொல்வதே எனது நோக்கம். 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

No comments:

Post a Comment