Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Thursday, October 24, 2024

திருக்குறள் #873: ஏமுற் றவரினும் ஏழை - சிறு விளக்கம்


ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்

-- திருக்குறள் #873, பகைத்திறம் தெரிதல்

பொருள்: தனியாளாய் பலரையும் பகைத்துக் கொள்பவன், "ஏமுற்றவரைவிட" ஏழையாக இருப்பான்.

🔸 ஏமுற்றுவர் - ஏமம் + உற்றவர்.

🔸 ஏமம் - ஷேமம் என்ற அசுரச் சொல்லை குறிக்கும்.

🔸 ஷேமம் - தனித்திருத்தல். எனில், யாருமற்றிருத்தல் என்பது பொருளல்ல. எதுவுமற்றிருத்தல் என்பது பொருளாகும். அதாவது, எந்த பற்றுமின்றி இருத்தலாகும்.

🔸 ஏமுற்றவரினும் ஏழை - ஷேமமாய் இருப்பவரை விட ஏழை - பற்றற்று இருப்பவரை விட ஏழை. எனில், பற்றற்றிருக்கும் மெய்யறிவாளர்கள் ஏழையாக இருப்பார்கள் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

மீண்டும் பொருள் காண்போம்: தனியாளாய் பலரையும் பகைத்துக் கொள்பவன், மெய்யறிவாளர்களை விட ஏழையாக இருப்பான்.

(இது தெரிந்த பிறகு, இனி , எந்த அசுரராவது, "ஷேமமா, சௌக்கியமா, நன்னா இரு!" என்று வாழ்த்தினால் நமக்கு 'அள்ளு' விடும்! 😁)

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, October 16, 2024

திருக்குறள் #672 (வினைசெயல்வகை): தூங்குக தூங்கிச் செயற்பால...


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

-- திருக்குறள் #672 (வினைசெயல்வகை)

தூங்குதல் என்பதற்கு "காலந்தாழ்த்துதல்" என்ற பொருளை வைத்து குறளுக்கு பொருள் எழுதியுள்ளனர். இதைவிட, "இடைவிடாது செய்தல்" என்றொரு பொருளுண்டு. அதை பொருத்திப் பார்த்தால்... 😍!

இடைவிடாது செய்யவேண்டியதை இடைவிடாது செய்க. இடைவிட்டு செய்யவேண்டியதை இடைவிட்டு செய்க.

எதை இடைவிடாது செய்யவேண்டும்? இதற்கான பகவான் திரு இரமண மாமுனிவரின் பதில்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சி போல
விட்டிடாது உன்னலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

பகவானின் பதிலை வைத்து, குறளின் பொருளை பார்த்தால்: தன்னாட்டத்தை இடைவிடாது செய்யவேண்டும். பொருள் நாட்டத்தை தேவைக்கேற்ப செய்யவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 1, 2024

திருக்குறள் #20: நீர்இன்று அமையாது உலகெனின்...


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு


-- திருக்குறள் #20 (வான் சிறப்பு)


பொதுவான பொருள்: நீர் இல்லாமல், நாம் வாழும் இவ்வையகம் இயங்காது. மழை பெய்யாவிட்டால், ஒருவரிடமும் ஒழுக்கமிருக்காது (மழையின்மை -> பஞ்சம் -> ஒழுக்கமின்மை -> மனிதமின்மை -> அனைத்தும் கோவிந்தா!).


இனி, வேறொரு பொருளை பார்ப்போம்.


🌷 மெய்யியலில், நீர் என்பது அசைவை (நிலையற்றதை) குறிக்கும். படைப்பில், அசையாதது, மாறாதது, என்றும் நிலைத்திருப்பது என்று ஏதேனுமிருக்கிறதா? இல்லை. தோற்றமும், மாற்றமும் & அழிவும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. எனவே, அசையும் பொருட்களில்லாமல் வையகமில்லை.


நீர்இன்று அமையாது உலகு = அசைவின்றி அமையாது வையகம்.


🌷 அடுத்தது, வான்இன்று அமையாது ஒழுக்கு.


மெய்யியலில், வான் என்பது மனதை குறிக்கும். வான் - விண் - விண்டு (விஷ்ணு) - மாயோன் - மாயை - மனம்.


ஒழுக்கு என்பது, இங்கு, பொருந்துகையை குறிக்கும். எதனோடு பொருந்தவேண்டும்? உள்ளபொருளோடு.


வெறுமனே பொருந்தி விடுவோமா? 😏 "தரும" அடி வாங்கினால்தானே "போதுமடா, சாமி" என்ற எண்ணமே வரும்! 😀 


அப்படி "தரும" அடி வாங்குவதற்கு என்னவேண்டும்? பற்றுகள் வேண்டும்.


பற்றுகள் எதன் வழியாக தோன்றும்? மனதின் வழியாக.


மனமின்றி பற்றுகள் கிடையாது. பற்றுகளின்றி தரும அடி கிடையாது. தரும அடியின்றி ஒழுக்கு கிடையாது.


வான்இன்று அமையாது ஒழுக்கு = மனமின்றி அமையாது உள்ளபொருளோடு பொருந்துகை.


இனி, இரண்டையும் சேர்ப்போம்:


அசைவின்றி அமையாது வையகம். இது போன்று, அசையும் மனமின்றி கிட்டாது வீடுபேறு.


oOo


🌷 கடவுள் வாழ்த்து = அசைவற்ற உள்ளபொருளை பற்றியது


🌷 வான் சிறப்பு = அசையும் மனதைப் பற்றியது


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Monday, March 6, 2023

திருக்குறள் #28 (நீத்தார் பெருமை): நிறைமொழி மாந்தர் பெருமை...



நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

-- திருக்குறள் #28 (நீத்தார் பெருமை)

🔸 நிறைமொழி மாந்தர் - மனமழிந்தவர் / தன்னையுணர்ந்தவர். இவர்களால் மட்டுமே உள்ளபொருளை பற்றி சரியாக எடுத்துக்கூறமுடியும்.

உள்ளபொருள் - முழுபொருள் - நிறைபொருள். இது பற்றிய மொழி நிறைமொழி.

சில நிறைமொழி மாந்தர்:

🙏🏽 பகவான் இரமண மாமுனிவர்
🙏🏽 திருவள்ளுவர்
🙏🏽 ஒளவையார்
🙏🏽 கபிலதேவர்
🙏🏽 நம்பியாண்டார் நம்பி

🔸 மறைமொழி - நீரிலிருந்தும் நீரையுணராத மீனுக்கு நீரைப் பற்றி எப்படி நேரடியாக எடுத்துக்கூறமுடியும்? மறைமுகமாக குறிப்பால்தான் உணர்த்தமுடியும்.

மறைமொழி - உள்ளபொருளை மறைமுகமாக குறிப்பால் உணர்த்தும் மொழி.

மேற்கண்ட நிறைமொழி மாந்தரிடமிருந்து வெளிப்பட்ட சில மறைமொழிகள்:

🌷 தன்மையின் உண்மையை தான் ஆய, தன்மை அறும்
🌷 தூஉய்மை என்பது அவாவின்மை
🌷 [சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாத] ... என்னை யறிவித்து எனக்கருள் செய்து
🌷 [விநாயகனே வெவ்வினையை வேரறுக்க] ... தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து
🌷 [என்னை நினைந்தடிமை கொண்டென் இடர்கெடுத்து] ... தன்னை நினையத் தருகின்றான்

இம்மறைமொழிகளைக் கொண்டு மேற்கண்ட மெய்யறிவாளர்களின் பெருமையை உணரலாம்.

மக்களிடம் (நிலத்தில்) பயன்பாட்டிலிருக்கும் மறைமொழிகளைக் கொண்டு, அவற்றை வெளியிட்ட நிறைமொழி மாந்தரின் பெருமைகளை உணரலாம். 🙏🏽

oOo

மறைமொழி என்றதும் ஆரியம் நினைவுக்கு வருமாறு கைங்கரியம் செய்துள்ளனர். இந்த சீர்கேடெல்லாம் கடந்த சில நூற்றாண்டுகளில் அரங்கேறியுள்ளது. குறிப்பாக, தமிழ் மன்னர்களின் ஆட்சி முடிவடைந்த பின்னர் நடந்துள்ளது. அன்னைத்தமிழ் நிறைமொழி மட்டுமல்ல; உண்மையான மறைமொழியுமாகும். 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌺🙏🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Monday, May 16, 2022

திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!


வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

-- திருக்குறள் #612 (ஆள்வினையுடைமை)

பொருள்: கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும்; செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் (குறள்திறன் உரை - பண்டைய ஆசிரியர்களின் உரைகளை அடிப்படையாகக் கொண்டது).

oOo

வினைப்பயன்கள் மீதமிருப்பதனால்தான் பிறவியே ஏற்படுகிறது. இல்லையெனில், இந்த ஜிஎஸ்டி, பகுத்தறிவு, சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் பல பட்டை நாமங்கள்-சூழ் உலகில் நமக்கென்ன வேலை? ☺️

🔸 வினைக்குறை - மீதமிருக்கும் வினைப்பயன்கள்

🔸 வினைக்குறை தீர்ந்தார் - வினைப்பயன்கள் தீர்ந்தவர்கள். மெய்யறிவாளர்கள். 

🔸 தீர்ந்தன்று உலகு - மெய்யறிவில் நிலைப்பெற்றவுடன் பிறவி முடிந்துவிடாது. இதற்கு பெரியோர்கள் கொடுக்கும் எடுத்துக்காட்டு: மிதிவண்டி. விசை கொடுப்பதை நிறுத்திய பிறகும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட விசையினால், மிதிவண்டி சற்று தூரம் சென்றபிறகு நிற்பது போல, நிலைப்பேறு கிட்டியபிறகும், மீதமிருக்கும் வினைப்பயன்களினால் உடல்-உலகக் காட்சிகள் தொடரும்.

இதற்கு, பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒரு சிறந்த எடுத்துக்காட்டாவார். 16 வயதில் நிலைப்பேறு கிட்டினாலும், 70 வயதுவரை வாழ்வு தொடர்ந்தது.

🔸 உடல்-உலகக் காட்சிகள் தொடர்ந்தாலென்ன?

எச்சரிக்கையாக இருக்காவிடில், மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்வர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திரு விசுவாமித்திர மாமுனிவராவார் 🌺🙏🏽🙇🏽‍♂️. மெய்யறிவு பெற்ற பின்னரும், மேனகையிடம் மாட்டிக்கொண்டார்.

🔸 தொடரும் உடல்-உலகக் காட்சிகளுக்குள் சிக்காமலிருக்க என்ன செய்வது?

"வினைக்கண் வினைகெடல் ஓம்பல்" என்று பதிலளிக்கிறார் வள்ளுவப் பெருந்தகை 🌺🙏🏽🙇🏽‍♂️.

"முயலுதல் இல்லாமலிருக்க முயலுங்களேன்" என்று சில அன்பர்களுக்கு அறிவுருத்தினார் பகவான். முயலுதல் என்பது ஒரு வினையெனில், முயற்சியற்று 'இருத்தல்' என்பது இன்னொரு வினையாகிறது. ஒன்றுக்கு இன்னொன்று மாற்றாகிறது. வினைக்கண்ணுக்கு மாற்று வினைகெடல்!

> வினைக்கண் - ஒரு வினையில் ஈடுபடுதல் / விருப்பம் கொள்ளுதல்

> வினைகெடல் - அந்த ஈடுபாட்டை / விருப்பத்தை அழித்தல் / அடக்குதல் / தவிர்த்தல்

> அதாவது, செயல் (வினைக்கண்) அற்றிருத்தல் (வினைகெடல்)

> இவ்வாறு செயலற்றிருத்தலே, ஓம்பல் (காத்துக்கொள்ளல்)

இப்போது அனைத்தையும் இணைப்போம்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக் கொள்ளாமலிருக்க செயலற்றிருக்கவேண்டும் என்பது பொருளாகும்.

oOo

இன்றைய சூழ்நிலையில், எந்த செயலையும் செய்யாமலிருக்க முடியுமா?

இதற்கு விடை காண்பதற்கு முன்னர், வேடிக்கையாக ஒரு பொருள் காண்போம்.

செயல், வேலை, வினை, உழை என எல்லாம் மனதின் அசைவை, மனதை வெளிவிடுவதைக் குறிக்கும். மனம், அசைவு என்றாலே அது அன்னைதான். எனில், செயல் = அன்னை.

செயலுக்கு / அசைவுக்கு எதிர்மறை செயலற்று இருத்தல் / அசைவற்று கிடத்தல் = அப்பன் / சிவன். "சித்த நேரம் சிவனேன்னு கிடக்க வேண்டியதுதானே?".

செயலுக்கு மாற்று செயலற்றிருத்தல். அன்னைக்கு மாற்று அப்பன்.

பொருள்: மெய்யறிவு பெற்றவர்கள் மீண்டும் உலகிற்குள் சிக்கிக்கொள்ளாமலிருக்க சிவமாய் கிடந்தால் போதும்! 😊

எனில், சிவமாய் கிடப்பது / இருப்பது எவ்வாறு?

நான் என்னும் தன்மையுணர்வை விடாது நாடி, புறம் நாடாது, தன்னை நாடி நிற்றலே சும்மாவிருத்தல் (சிவமாயிருத்தல்) -- திரு சாது ஓம் சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOo

செயலற்றிருத்தல் என்றாலென்ன?

எந்த வேலையும் செய்யாமல் சும்மாவிருத்தல் அல்ல. அப்படி சும்மாவிருக்கும் தலைவிதி அமைந்தால் நல்லதே. இல்லையெனில், சும்மாவிருக்க முயல்வது வீணாகும். இதைவிட, உண்மையில் என்ன நடக்கிறதென்று தெரிந்துகொண்டால் செயலற்ற நிலை தானாக அமையும்!

பகவானது விளக்கத்தைப் பார்ப்போம்: "வேலை செய்கிறேன்" என்ற உணர்ச்சியே தடை. "வேலை செய்வது யார்?" என்று ஆராய்ந்து, உனது உண்மையை நினைவிற் கொள். வேலை தானே நடக்கும். உன்னை கட்டுப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயற்சிக்கவேண்டாம். உனது முயற்சியே உனது தளை.

வினைக்கண் வினைகெடுவதற்கு இந்த ஒரு பொன்னான அறிவுரை போதும்! 🙏🏽

oOOo

வாலறிவன் வள்ளுவன் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, May 2, 2022

திருக்குறள் #901: மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது

-- திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)

பொருள்: மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர், சிறந்த பயனை அடையமாட்டார், கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே. (மு.வ.)

இன்றைய உரையாசிரியர்கள், மனைவிழைவார் என்பதற்கு "சிற்றின்பத்தை பெரிதும் விரும்புவோர்" என்றும், வினைவிழையார் என்பதற்கு "பொருளீட்ட விரும்புவோர்" என்றும் பொருள் கொள்கின்றனர்.

இங்கு நுட்பமாகக் காணவேண்டிய சொற்கள்: விழைவார் & விழையார்.

🔸 விழைவார் - விரும்புவோர்
🔸 விழையார் - விரும்பாதவர் / பகைவர்

மனை என்ற சொல்லுக்கு மனைவி, வெற்றிடம் (காலி மனை), இல்வாழ்க்கை என பல பொருள்கள் உண்டு. மனைவி மூலம் மட்டுமே பெறவேண்டிய சிற்றின்பத்தைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ என்று எடுத்துக் கொள்ளலாம். (தற்காலத்தில், இல்வாழ்க்கை என்று பொருள் கொண்டாலும் தவறாகாது! 😊)

வினைவிழையார் - வினை + விழையார் - செயலை விரும்பாதவர். யார் அவர்கள்?

செயல் என்பது அசைவு. செயலை விரும்பாதவர் - அசைவை விரும்பாதவர். நேர்மறையாக்கினால், அசைவற்றதை விரும்புபவர். எது அசைவற்றது? உள்ளபொருளே அசைவற்றது. உள்ளபொருளில் நிலைபெற விரும்புபவர். அதாவது, நிலைபேற்றினை விரும்புபவர்!!

இப்போது பொருள் காண்போம்:

நிலைபேற்றினை விரும்புவோர் ஒதுக்கும் சிற்றின்பத்தை விரும்புவோர் மேன்மையடையமாட்டார்கள்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, March 17, 2022

திருக்குறள் #160: உண்ணாது நோற்பார் யார்? இன்னாச்சொல் நோற்பார் யார்?


உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

-- திருக்குறள் #160, பொறையுடைமை

பொழிப்புரை: உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர். (மு.வ.)

(பொறையுடைமை என்ற அதிகார தலைப்பையும், அதிலுள்ள பிற குறட்பாக்களையும் ஒதுக்கி, இந்த குறளை மட்டும் சற்று காண்போம்.)

பிறர் சொல்லும் கொடுஞ் சொற்களை யார் பொறுத்துக் கொள்ளவேண்டும்? ஏன் பொறுத்துக் கொள்ளவேண்டும்? வேறு வழியில்லாமல், சில சமயம், தவறு செய்யாதவர்களும் பொறுத்துக் கொள்ளவேண்டிவரும். மற்றபடி, மற்றவர்களின் கொடுஞ் சொற்களை தவறானவர்கள் / தவறு செய்தவர்களே பொறுத்துக் கொள்ளவேண்டும்.

எனில், தவறு செய்தவர்கள் எப்படி பெரியவராக முடியும்? எந்த நோக்கில முப்பால் முனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ இவ்வாறு வரிசைபடுத்தியுள்ளார் என்று பார்ப்போம்.

நோன்பு எனில் கட்டுப்பாடு அல்லது ஒதுங்கியிருத்தல். உண்ணா நோன்பு எனில் உணவு உண்ணுவதில் கட்டுப்பாடு அல்லது உணவு உண்ணாதிருத்தல். இதனால் உடல் வாடும். செருக்கு குறையும். தன்மையுணர்வில் நிலைத்து நிற்க (வடக்கிருக்க) உதவும்.

இன்னொரு வகையிலும் பொருள் காணலாம்.

உணவு என்பது வயிற்றிற்கு இடும் சாப்பாட்டை மட்டும் குறிக்காது. நாம் காணும் காட்சிகளையும், நமக்கு தோன்றும் எண்ணைங்களையும் குறிக்கும். இவற்றை ஒதுக்கியிருத்தலும் உண்ணாநோன்புதான்!

🌷 யார் இப்படிப்பட்ட உண்ணாநோன்பு நோற்பர்? தனது தன்மையுணர்வில் இன்னமும் நிலைபெறாதவர்கள்.

🌷 தன்மையுணர்வில் நிலைபெற்றவர்கள் எப்படியிருப்பர்? நம்மை போல் "உண்டு களிக்கவும்" மாட்டார்கள். மேற்சொன்னவர்களை போல் உண்ணாநோன்பு நோற்கவும் மாட்டார்கள். இருப்பற்ற, வெறும் தோற்றமாத்திரமேயான உலகக்காட்சியால் எந்தவித பாதிப்பும் அடையாதிருப்பார்கள். புகழாரமும் சரி; கொடுஞ்சொற்களும் சரி. அவர்களுக்கு ஒன்றுதாம்.

🌷 இப்போது வரிசை படுத்துவோம்:

- நிலைபேறு பெற்றவர் - கொடுஞ்சொற்களை பொறுப்பவர்
- நிலைபேறு பெற முயற்சிப்பவர் - உண்ணாநோன்பிருப்பவர்

🌷 வேடிக்கையாக வரிசை படுத்தினால்:

- உணவைக் கண்டுகொள்ளாதவர்
- உணவை ஒதுக்குபவர்
- உணவே வாழ்வென்று கருதுபவர் (நாம்)

😊

(திருவள்ளுவர் ஒரு கிறித்தவரென்று ஊழியம் செய்ய முயற்சிக்கும் நரித்துவர்களுக்கு 👊🏽👊🏽👊🏽!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Friday, February 18, 2022

திருக்குறள் #569: ஏன்யா பயப்பட்டு சாவுற?


செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

தொன்மவழி பொருள்: முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான். (மு.வ.)

செரு, வேந்தன் & வெரு ஆகிய சொற்களுக்கு போர், நாட்டை ஆள்பவர் & விரைவில் என்று பொருள் கொள்வதை விட, செருக்கு (அகந்தை), உடலெனும் நிலத்தின் வேந்தராகிய நாம் & உடனடியாக என்று பொருள் கொண்டால் குறளுக்கு சிறப்பான பொருள் கிடைக்கும்.

இனி பொருள் காண்போம்: அகந்தை தோன்றிய போது, அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளாதவன், அச்சத்தினால் ஆட்கொள்ளப்பட்டு உடனடியாக அழிந்துபோவான்.

🔸 அகந்தைக்கும் அச்சத்திற்குமுள்ள தொடர்பு

"மெய்யறிவு கிடைத்தவுடன் தங்களுக்கு என்ன நடந்தது?" என்று கேட்ட ஓர் அன்பருக்கு, "அத்தோடு இறப்பைப் பற்றிய அச்சம் என்னை விட்டு நீங்கியது" என்று பதிலளித்தார் பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ . எனில், அகந்தை அழியும்போது (மெய்யறிவு தோன்றும்போது) அச்சம் நீங்குகிறது; அகந்தை தோன்றும்போது அச்சம் தோன்றுகிறது.

அன்றாட வாழ்க்கையில், வெளியே தலைகனத்துடன் சுற்றித்திரியும் பெரும்பாலான நபர்கள் உள்ளே வெருக்கொள்ளிகளாக இருப்பதைக் காணலாம் (வெருக்கொள்ளி - பயங்கொள்ளி. வெரு[ள்] - அச்சம் / பயம். பயம் - ஆரியம். வெரு[ள்], அச்சம் - தமிழ்.)

🔸 அச்சத்திற்கும் இறப்பிற்குமுள்ள தொடர்பு

மெய்யறிவில் நிலைபெறும் நிகழ்வே பிறப்பென்றும், மற்றதெல்லாம் இறப்பென்றும் பல முறை அறிவுறுத்தியிருக்கிறார் பகவான். எனில், அகந்தையின் அழிவு பிறப்பாகிறது; அதன் தோற்றம் இறப்பாகிறது.

"ஏன்யா பயப்பட்டு சாவுற?" என்பது பொது மக்கள் அடிக்கடி பேசும் / கேட்கும் சொற்றொடர்களில் ஒன்றாகும். அச்சத்திற்கும் இறப்பிற்குமுள்ள தொடர்பை, அத்தொடர்பை பற்றிய நம் முன்னோர்களின் ஆழமான புரிதலை இந்த கேள்வி காட்டுகிறது! 😍

oOo

திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ ஒரு கிறித்துவர் என்று "ஊழியம்" செய்த நரித்துவனுக்கு 👊🏽!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, February 10, 2022

திருக்குறள் #1017: நாண் என்ற சொல்லுக்கு எது சிறப்பாக பொருந்துகிறது? வெட்கமா? பற்றா?


நாணால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்

-- திருக்குறள் #1017 (நாணுடைமை)

தொன்மவழி பொருள்: நாணத்தைத் தமக்குரிய பண்பாகக் கொள்பவர், நாணத்தால் உயிரை விடுவார்; உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விடமாட்டார். (மு.வ.)

இனி, சொற்களை சற்று மாற்றிப்பார்ப்போம்!

நாண் என்ற சொல்லுக்கு கயிறு என்றும் பொருளுண்டு. கயிறு என்ற சொல்லுக்கு பற்று (பாசம்) என்றும் பொருளுண்டு.

நாண் -> கயிறு -> பற்று

பற்றால் உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
பற்றுதுறவார் பற்றாள் பவர்

இப்போது கிடைக்கும் பொருள் நம்மில் பெரும்பாலானோர்க்கு பொருந்தும்: கொண்ட பற்றினால் / கொண்ட பற்றுக்காக உயிரையும் விடுவோம். உயிர்போகும் தருவாயிலும் பற்றை விடமாட்டோம். ஏனெனில், பற்றே நம்மையாள்கிறது / பற்றால் நாம் ஆட்கொள்ளப்பட்டுவிட்டோம்.

இவ்வகையில், மேற்கண்ட குறளிலுள்ள 'நாண்' என்ற சொல்லுக்கு 'வெட்கம்' என்ற பொருளைவிட, 'பற்று' என்ற பொருள்தான் நன்கு பொருந்துவதாகத் தோன்றுகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Monday, February 7, 2022

திருக்குறள் #610 (மடியின்மை): மடியிலா மன்னவன் யார்? அடியளந்தான் அளந்ததென்ன?


மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

-- திருக்குறள் #610 (மடியின்மை)

பொருள்: சோம்பலில்லா மன்னவன் முயன்றால், அன்று திரு குறள் பெருமாள் (வாமனர்) மூன்று அடிகளால் அளந்த பரப்பு யாவற்றையும் வெல்லலாம்.

மேலோட்டமாகப் பார்த்தால் அரசாட்சி பற்றி திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதியிருப்பதாகத் தோன்றும். ஆனால், இக்குறள் மெய்யியலைப் பற்றியதாகும்!

முதலில், "குறளன் அளந்த 3 அடிகளின்" உட்பொருளைப் பற்றி பார்ப்போம் (திருவிறக்கக் கதையை, தயவு செய்து, இணையத்தில் தேடி படித்துக்கொள்ளவும்).

மெய்யறிவாளரிடமிருந்து (இந்திரன்) வெளிப்படும் அறிவுரையே (உபேந்திரன் - வாமனர்) குறள் (குள்ள) பெருமாளாகும்!! பகவான் திரு ரமண மாமுனிவரிடமிருந்து 🌺🙏🏽🙇🏽‍♂️ வெளிப்பட்ட "நான் யார்?" என்பது மிகச்சிறந்த குறளனாகும். தொடக்கத்தில், இந்த அறிவுரையை ஏற்க மனமெனும் அசுரகுரு தடைபோடும். மனதை ஒதுக்கி, இவ்வறிவுரையை ஏற்றுக்கொண்டு, விடாது சிந்திக்கத் தொடங்கினால் நனவு, கனவு, தூக்கம் (குறளன் அளந்த 3 அடிகள்) என்று எல்லா நிலைகளையும் அந்த சிந்தனை நிறைத்துவிடும். இறுதியில், மீதமிருக்கும் நமது தனித்துவத்தையும் (நான் இன்னார்) விட்டுவிடுவோம் (மகாபலியின் தலை மீது குறள் பெருமாள் கால் வைத்தது).

அடுத்து, மன்னவன் என்ற சொல்லைப் பார்ப்போம்.

மன்னவன் எனில் நிலத்தின் தலைவன். நிலம் எனில் நமதுடல். மண்ணில் விளைந்த பொருட்களை உண்டு பெருகியதால் நமதுடலும் மண் என்ற கணக்கில் சேர்கிறது. இந்த உடலென்னும் மண்ணின் தலைவன் நாமே!

இப்போது மீண்டும் பொருள் காண்போம்: மண் என்றழைக்கப்படும் உடலின் தலைவனாகிய நாம், சோம்பலின்றி விடாது முயற்சித்தால், நனவு, கனவு, தூக்கம் என்ற மூன்று நிலைகளையும் வெல்லலாம்.

வென்றால்? நான்காவது நிலையாகிய நிலைபேற்றினை (சிவநிலையை) அடையலாம்.

சோம்பலின்றி விடாது எந்த செயலை முயற்சித்தால் சிவநிலையை அடையலாம்?

தில்லை கூத்தப்பெருமானின் தூக்கிய இடதுகாலும், திருவாலங்காட்டு இரத்தின சபாபதி பெருமானின் மேல்நோக்கிய இடதுகாலும், உடையவரை நோக்கி அமர வைக்கப் பட்டிருக்கும் சிவன்காளையும் உணர்த்தும் தன்னாட்டமாகும்!!

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

இறுதியாக, இந்த குறளுக்கு சமமான பகவானின் பாடல்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சிபோல்
விட்டிடாது உன்னலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

பொருள்: இடைவிட்டுச் செய்யப்படும் தன்னாட்டப் பயிற்சியைவிட, ஆற்றின் நீரோட்டத்தைப் போன்று, உருக்கிய நெய்யின் வீழ்ச்சியைப் போன்று, இடைவிடாது செய்யப்படும் தன்னாட்டப் பயிற்சியே சிறந்ததாகும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Thursday, February 3, 2022

திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

-- திருக்குறள் #834 (அதிகாரம்: பேதைமை)

பொருள்: நன்கு கற்றும், கற்றதை உணர்ந்தும், உணர்ந்ததை பிறர்க்கு எடுத்துக் கூறுமளவுக்கு வளர்ந்தும், தனது அகந்தையை ஒழிக்காமலிருக்கும் அறிவிலிகளை விட இழிந்த அறிவிலிகள் இல்லை.

🔸 தானடங்கா என்ற சொல்லே இக்குறளின் தலையாயச் சொல்லாகும்.

🔸 தானடங்கா - தானடங்குதல் - அகந்தையடங்குதல். "நான் இன்னார்" என்ற அகந்தையடங்கினால் மீதமிருப்பது? நான் என்ற தன்மையுணர்வு மட்டுமே. இதுவே சிவமெனப்படும். இந்நிலையில் நிற்றலே சிவநிலை.

🔸 தானடங்கத் தேவை? கல்வி (இன்றைய மெக்காலே கல்வியல்ல! 😊)

🔸 கல்வி என்ற சொல்லை கல்+வி எனப் பிரித்தால், கல் போன்று அசைவற்று, உருக்கொளாது அல்லது வெளிப்படாதிருத்தல் என்ற பொருள் கிடைக்கும்.

🔸 கல்வி என்ற சொல்லுக்கு சுவாமி விவேகானந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ கொடுக்கும் பொருள்: கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே இருக்கும் முழுமைத்துவத்தை வெளிப்படுத்துவது.

oOo

இங்க எனக்கொரு பகுத்தறிவு டவுட்டு: 2000ம் வருசங்களுக்கு முன்னாடி, நம்ம திருவள்ளுவரும், ஒரு பரங்கியரும், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருல, "முஸ்தஃபா முஸ்தஃபா ..." பாடிகிட்டு ஆடிகிட்டு, சுத்தி வரும்போது, அந்த பரங்கியர் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தாருன்னு "ஆராய்ச்சி" செஞ்சவங்க சொன்னாங்களே. அப்படின்னா, திருவள்ளுவர் அகந்தையடங்குதல் பத்தியா எழுதியிருப்பாரு? "2000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேயா"-ன்ற ஒப்பாரிய பத்தியில்ல எழுதியிருப்பாரு? 🤔

😜

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Sunday, November 24, 2019

#திருக்குறள் ஊழியத்திற்கு வ.உ.சி. கிடைத்துவிட்டார்!!

https://www.hindutamil.in/amp/news/opinion/columns/525736-voc.html

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் பகுதியில் இயங்கி வந்த ஒர் இந்து சமய-சமூக-தேசத் துரோக நிறுவனம் (கருங்காலி சாதி அரசியல் கட்சி), அது இயங்கி வந்த வாடகை இடத்திலிருந்து காலி செய்யச் சொல்லி உயர் நீதிமன்றம் ஆணையிட்டும், காலி செய்ய மறுத்தது. பின்னர், காவல்துறையைக் கொண்டு அவர்களை வெளியேற்றிய போது அப்பகுதியையே போர்களமாக்கினர். (முதலில் வாடகைக்கு குடி வந்து, பின்னர் மொத்தத்தையும் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்ற அவர்களது "நியாயமான" கனவில் மண் விழுந்ததால் அவ்வளவு வயிற்றெரிச்சல், கோபம், ஆத்திரம்.) இதற்கு சமமான "அறப்போர்" தான் இன்று  திருவள்ளுவரை வைத்து நடந்து கொண்டிருக்கின்றது. 😎

எத்தனை ஆண்டு கால "ஊழியம்"? வளர்ப்பு மகளை மணந்தவன் 🤢, தொழில் செய்தவளுக்கு பிறந்து அக்காள் மகளை வைத்து தொழில் செய்தவன் 🤮, திருட்டு ரயில் ஏறி வந்து மொத்த தமிழ்நாட்டையும் தன் குடும்பத்தாருக்கு கூறுபோட நினைத்தவன் 🥶 ...  வளர்ப்பு மகளை அடைய நினைத்தவன் 🤯 என்று எத்தனை கருங்காலிகளின் "ஊழியங்கள்"? திருக்குறளில் டுபாக்கூர் புத்தகத்தின் கருத்துக்கள் உள்ளன என்றும், காலத்தால் முற்பட்ட திருவள்ளுவரை 🌺🙏🏽 பாரதத்திற்கு வந்தேயிராத தோமையரின் மாணவர் என்றும் பல வித விதைப் பந்துகளை உருவாக்கி, கல்வி, ஊடகம் போன்ற விமானங்கள் வாயிலாக மக்கள் என்னும் விளைநிலத்தில் வீசியெறிதல் போன்ற எத்தனை மெக்காலே "ஊழியத்" திட்டங்கள்? 🥵 அத்தனையும் வீணாக விடுவரா? 👻👹👺

சிவஞானபோதத்திற்கு உரை எழுதி, இறுதி வரை சைவ சமய வகுப்புகள் நடத்திக் கொண்டு, சுத்த சைவராக வாழ்ந்த வ உ சிதம்பரம் பிள்ளையவர்களை கேடயமாக்க முயற்சித்திருக்கிறார்கள் - பரிமேல்அழகரின் திருக்குறள் உரையில் பிழைகள் உள்ளனவாம்!! நம் சமய கருத்துக்கள் தெள்ளத் தெளிவாக காணப்படும் கடவுள் வாழ்த்து முதலான முதல் 4 திருக்குறள் அதிகாரங்களும் இடைச்செருகலாம்!!! இப்படி #வஉசி சொன்னார் என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள். இதற்கு பின்னர், தமிழறிஞர் வையாபுரி பிள்ளையவர்களின் விளக்கத்தைக் கேட்டு வஉசி அமைதியுற்றார் என்பதை எழுதவில்லை. "ஊழியத்திற்கு" உதவாததை ஒதுக்குவதும் / மறைப்பதும் சிறந்த ஊழியம் எனக் கருதியிருக்கலாம். 😒

தமிழையும், தமிழரையும் அவர்களது சொந்த சமயத்திலிருந்து பிரிக்க பல "ஊழியத்" திட்டங்கள் இயக்கத்தில் உள்ளன. தற்போது இயக்கத்திலுள்ள #சுமேரியா #திட்டம் வெற்றி பெற்றால் திருக்குறள் திட்டத்தின் பங்களிப்பு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். அவ்வளவு பாதகமானது!! திருக்குறளை வைத்து நம்மை நம் சொந்த சமயத்திலிருந்து பிரித்து, நாம் சமணர்கள் என்று போக்கு காட்டி, நரித்துவத்தோடு இணைக்க முற்பட்டார்கள். சுமேரியா திட்டத்தின் மூலம் நமது தோற்றம், சமயம், மொழி, நாட்டுப்பற்று என அனைத்தையும் ஒரே நேரத்தில் குறி வைத்து, இஸ்ரவேல் அத்வைதியான யேசுவை நமது மாமன்-மச்சான் கடவுளாக கொண்டாட வைத்து, நரித்துவத்தை நமது சொந்த மதமாக காண வைத்து, தமிழகத்தை காஷ்மீரம் போன்று மாற்றி ஆள்வதே இவர்களது குறிக்கோள். 🤬😡

பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்

-- குறள் #319

வள்ளுவ நாயனாரின் சொற்படி உலகக் கொல்லிகளான பரங்கியரும், அவர்களது அடிவருடும் நம் நாட்டு கருங்காலிகளும் துன்பப்படும் காலம் விரைவில் வரும்!!

🌸🏵️🌼🌻💮

"#மனத்துக்கண் #மாசிலன் ..." என்ற திருக்குறளுக்கு வஉசியின் உரை: மனத்தின்கண் குற்றம் இல்லாதவனாய் செய்யப்படுவது அனைத்தும் அறம்; குற்றம் உள்ளவனாய் செய்யப்படுவன துன்பம் தருவன.

(மற்றவர்கள் "... மாசிலன் ஆதல்..." என்று பதம் பிரிக்க, இவர் மட்டும் "மாசிலன் ஆவது" என்று பிரித்துள்ளார்.)

"தன் மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆகுக; அவ்வளவே அறம்", என்று உரை எழுதியவர்களை, "மனத்தின்கண் குற்றமில்லாதவனாய் ஆதல் ஓர் ஒழுக்கமேயன்றி அதுவே அறமாகாது.", என்று எதிர்க்கிறார். மேலும், "அறம் என்பது ஓர் உயிர்க்கு நன்மை பயக்கும் ஒரு செயல்", என்று பொருள் கூறுகிறார்.

🌸🏵️🌼🌻💮

அறம் என்பது அறு என்ற வினையோடு தொடர்பு கொண்டது. நல்லறம், இல்லறம், துறவறம். நல்வழி, இல்வழி, துறவு வழி. இந்த மாய உலகில் நல்லபடியாக பயணித்து கரையேற - மெய்யறிவு / நிலைபேறு பெற - நாம் தேர்ந்தெடுக்கும் / உருவாக்கி கொள்ளும் வழியே அறம்.

மெய்யறிவாளரை (இறைவனை) வாலறிவன், வேண்டுதல் வேண்டாமை இலான், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான், ஐந்தவித்தான் என்று பலவாறு அழைத்த நாயனார், இக்குறளில் மனத்துக்கண் மாசிலன் என்றழைக்கிறார். இப்படி பலவாறு அழைப்பதன் மூலம் மெய்யறிவாளர் என்பவர் யார், அந்நிலையை எப்படி அடைவது போன்ற கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் - மனதில் மாசு இல்லாதவன். மாசு எனில் தீய எண்ணங்கள் மட்டுமல்ல. நல்லெண்ணங்களும் மாசு தான். மாசற்று - எண்ணங்களற்று - இருத்தலே நிலைபேறாகும். சிவப்பரம்பொருளுக்கு #மாசிலாமணி என்றொரு அருமையான பெயர் இருப்பதும் இந்த அடிப்படையில் தான்.

எண்ணங்களற்று இருப்பது எவ்வாறு?

இக்கேள்விக்கு, நம் தமிழ் மண் உருவாக்கிய பெரும் மாமுனிவர்களில் ஒருவரான பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கொடுத்த அருமையான பதில் ("நான் யார்?" என்ற நூலிலிருந்து, கேள்விகள் 10 & 11):

"நான் யார்?" என்னும் விசாரணையினாலேயே மனம் அடங்கும். "நான் யார்?" என்னும் நினைவு மற்ற நினைவுகளை எல்லாம் அழித்து, பிணம் சுடும் தடி போல் முடிவில் தானும் அழியும். பிற எண்ணங்கள் எழுந்தால் அவற்றை பூர்த்தி பண்ணுவதற்கு எத்தனியாமல், அவை "யாருக்கு உண்டாயின?" என்று விசாரிக்க வேண்டும். எத்தனை எண்ணங்கள் எழினும் என்ன? ஜாக்கிரதையாய் ஒவ்வொரு எண்ணமும் கிளம்பும் போதே "இது யாருக்கும் உண்டாயிற்று?" என்று விசாரித்தால் எனக்கு என்று தோன்றும். "நான் யார்?" என்று விசாரித்தால் மனம் தன் பிறப்பிடத்திற்குத் திரும்பி விடும்; எழுந்த எண்ணமும் அடங்கிவிடும். இப்படி பழகப்பழக மனதிற்கு தன் பிறப்பிடத்தில் தங்கி நிற்கும் சக்தி அதிகரிக்கின்றது.

(விசாரித்தல் / விசாரணை - தற்கவனம் - தன்னாட்டம் - தன்னை நாடுதல் - நான் என்னும் நம் தன்மையுணர்வின் மேல் நம் கவன ஆற்றலை வைத்திருத்தல்.)

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Tuesday, March 19, 2019

திருக்குறளை ஆரியர்கள் திரிக்கிறார்களாம்! இவர்கள் வினவுகிறார்களாம்!!

https://www.vinavu.com/2018/12/25/brahmanism-interpretting-thirukural-opinion/

👊 வினவ வேண்டியது தான். மொத்த இந்து சமயமும் தமிழர்களுடையது தான். அதற்கு மேல் ஆரியப் போர்வையைப் போர்த்தி விட்டு தங்களது என்று அவர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை வினவ வேண்டியதுதான். இதே போன்று சர்ச்சியர்களை வினவுவார்களா?

👊 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையை 2,000 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த தோமையரோடு இணைத்ததுப் பற்றி வினவுவார்களா?

👊 நம் புண்ணிய பாரத மண்ணிற்கே வராமல், இத்தாலியிலேயே வாழ்ந்து இறந்த தோமையர், வள்ளுவருடன் மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஏ.ஆர். ரகுமானின் முஸ்தபா பாடல் பின்னணியில் ஒலிக்க சுற்றி வந்த போது, வள்ளுவருக்கு மெய்யறிவு கொடுத்தார் என்ற "சோத்துல செங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 நமது #திருக்குறள், மறை நூல்கள் மற்றும் அவர்களது மெய்யறிவாளர்கள் அருளியது என எல்லாவற்றையும் அரைவேக்காட்டாக ஒரு புத்தகத்தில் பதிவு செய்து விட்டு, அந்த அரைவேக்காடுப் புத்தகத்திலிருந்து தான் நமது திருக்குறளும் மற்றும் அனைத்து மறை நூல்களும் தோன்றின என்ற "சோத்துல பாறாங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 குறுக்கையில் அறையப்பட்டிருந்த போது ஞானி யேசு பேசிய சொற்களில் சில தமிழ் சொற்களும் இருக்கின்றன என்று சொன்னால் (அதாவது, அவர் இங்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டு திரும்பியுள்ளார் என்று சொன்னால்) தமிழை உருவாக்கியதே அவர் தான் என்று "தீர்ப்பை மாற்றிச் சொல்லும்" சுவிசேஷத்தைப் பற்றி வினவுவார்களா?

👊 "கற்றதனால் ஆய பயனென்கொல் #வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" என்ற திருக்குறளில் வரும் வாலறிவன் (1) என்பது இறைவனை அல்லது இறையை உணர்ந்து இறையாகவே உள்ள மெய்யறிவாளர்களைக் (ஞானிகளைக்) குறிக்கும் என தொல் ஆசிரியர்கள் அனைவரும், இன்றைய ஆசிரியர்கள் சிலரும் பொருள் கூறியுள்ள போது, வேண்டுமென்றே "தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர்" (2) என்று திரித்து பொருள் கூறிய பகுத்தறிவைப் பற்றி வினவுவார்களா?

அந்நிய மதத்தினரும், தேச விரோத சக்திகளும், அமெரிக்க சி.ஐ.ஏ. போன்ற உளவு அமைப்புகளும் வீசிய பொரைகளைக் கவ்விக் கொண்டு, தெரு சந்திப்பில் நின்று கொண்டு, எதுகை மோனையுடன் இந்து சமயத்தை எதிர்த்து குளைத்ததை மக்கள் ரசித்தது ஒரு காலம். இன்று "திருச்சி குலுங்கியது" என்று கிராஃபிக்ஸ் வேலை தான் செய்யவேண்டும்!!

👊👊👊👊👊👊👊👊👊👊

குறிப்புகள்:

1. வா என்பது வெளிவருவதைக் குறிக்கும். வால் என்பது உடலிலிருந்து முளைத்த ஒன்றைக் குறிக்கும். உடல் இல்லாமல் வால் இல்லை. ஆனால், வால் இல்லாமல் உடலால் இயங்க முடியும். இது போன்றது தான் நாம் காணும் உலகம். பரம்பொருளில் இருந்து முளைத்த வால் போன்றது இவ்வுலகம். பரம்பொருள் இல்லாமல் உலகமில்லை. ஆனால், உலகமில்லாமல் பரம்பொருள் இருக்கும்.  இந்தப் பரம்பொருளிலிருந்து (மெய்யிலிருந்து) உலகம் தோன்றுவதை உணர்ந்தவர்களை - வாலை அறிந்தவர்களை - வாலறிவர்கள் என்றனர்!! வால் முளைப்பது மெய்யிலிருந்து. மெய்யாகவே இருப்பவர்களால் தான் வாலை உணரமுடியும். ஆகவே, இவர்களை மெய்யறிவாளர்கள் (ஞானியர்) என்றனர்!! 🌸🙏

இவ்விளக்கத்தின் உருவ வடிவம் தான் திருவரங்கம் அரங்கநாதப் பெருமான். 🌸🙏 பெருமான் தொழிலற்ற பரம்பொருளைக் குறிக்கிறார். பெருமானின் தொப்புளில் இருந்து வால் போன்று கிளம்பும் தாமரையும், அதன் மேல் அமர்ந்திருக்கும் நான்முகனும் உலகைக் குறிப்பர்.

2. இவர்களது அகராதியில் "அறிவில் மூத்த பெருந்தகையாளர்" எனில்...

- 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியதற்காக செருப்படி வாங்கியவர்,
- வளர்த்த மகளையே மணந்தவர்,
- அக்காள் மகளை  வைத்து தொழில் செய்தவர்,
- திருட்டுத்தனமாக தொடர்வண்டியில் பயணித்தவர்,
- மகளின் தோழியை மடக்கியவர்,
- இலட்சக்கணக்கான தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மெரினாவில் படுத்துக் கொண்டு காற்று வாங்கியவர்

மற்றும் இது போன்ற அறிவார்ந்த செயல்களை செய்தவர் என்று பொருள். 😛