Sunday, September 29, 2024

திருக்குற்றாலம்: கண்ணாடி பேழைக்கு நீராட்டு சரியா?

காணொலி: கண்ணாடி பேழைக்கு நீராட்டு


அன்பர்களின் மனநிலை:


😒 இறைவனின் திருப்பெயர் - பெரிதில்லை.

😒 இறைவடிவம் - பெரிதில்லை.

😒 திருக்கோயில் அமைப்பு - பெரிதில்லை.

😒 தொடர்புடைய அருளாளர்கள் - பெரிதில்லை.

😒 அவர்களிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொல் (பாடல்கள்) - பெரிதில்லை.

😒 திருக்கோயிலின் தொன்ம வரலாறு - பெரிதில்லை.

🤦🏽 விரல் நகங்களிலும், மனதிலும் அழுக்கேறிய அசுரன் - பெரிது.

🤦🏽 அவன் காட்டும் படம் - அதனிலும் பெரிது.

🤦🏽 "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரத்துடன் காட்டப்படும் படம் - அனைத்திலும் பெரிது!


😒😤😞😢😠


அசுரர்களின் மனநிலை:


🙏🏽 அச்சுவற்றிற்கு பின்னால், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றொரு பெருமான் திருநீற்று நிலையில் இருக்கிறார் - பெரிதில்லை.


🙏🏽 அவரது நிலையை குறிக்கும், அல்லது, மெய்யியலில் அவரது பங்களிப்பை குறிக்கும் வண்ண வரைபடங்கள் தொன்மையானவை - பெரிதில்லை.


😒 அவற்றை பழமை மாறாமல் சீர் செய்ய வெகுவாக பொருள் செலவாகும் - பெரிதில்லை.


😤 கண்ணாடி பேழைக்கு நடத்தப்படும் நீராட்டினால் வரைபடம் பாழாகும் - கவலையில்லை.


🤨 தனது "மழித்த முன் மண்டை-பின் குடுமி-பிறந்த மேனி-நூல்-ஐஞ்செருகு" தோற்றம் - பெரிது.


😠 தனது "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரம் - அதனிலும் பெரிது.


🤬 இவ்விரண்டையும் கொண்டு நடத்தப்படும் படங்காட்டும் தொழில் - அனைத்திலும் பெரிது!


🤬🤬😡😡😡


வழிபாடு நடத்துபவன், முதலில், தான் இறைநிலைக்கு உயர்ந்து, பின்னர், வந்திருக்கும் அன்பர்களையும், தனது சொல் & செயல்களால் அந்நிலைக்கு உயர்த்தவேண்டும். ஆனால், சிந்து சமவெளியில் கிடைத்த சமையல் அடுப்புகளை "வேள்விக்குழிகள்" என்று கூறும் இந்த பொய்யர்களோ, தாமும் தாழ்ந்து, அன்பர்களையும் தாழ்த்திவிட்டார்கள்!!


oOo


கழுவாய் வழிபாடு (பிரதோசம்) & இந்த கண்ணாடிப் பேழை நீராட்டு - ஒரு ஒப்பீடு:


🌷 கழுவாய் வழிபாட்டில், விடைக்கு (காளைக்கு) நீராட்டு நடக்கும். இங்கு, கண்ணாடிப் பேழைக்கு நீராட்டு.


🌷 விடைக்கு எதிரில் தென்னாடுடையவன். கண்ணாடிக்கு எதிரில் கூத்தப்பெருமான்.


🌷 விடை அசைவை குறிக்கும். தென்னாடுடையவன் அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும். இதற்கு எதிர்மாறாக, கண்ணாடி நிலையானதை குறிக்கும்! கூத்தப்பெருமான் நிலையற்றதை குறிக்கும்!


💥 நிலையான பொருளுக்கு எதற்கு நீராட்டு? நிலையற்ற பொருளில் அழுக்கேறுமா? அல்லது, நிலையான பொருளில் அழுக்கேறுமா?தில்லையை தவிர மற்ற திருக்கோயில்களில், கூத்தப்பெருமானின் திருவடிவத்தை எங்கு வைத்திருக்கிறார்கள்? மனதை குறிக்கும் 3வது கூடத்தில்! எனில், எதற்கு நீராட்டு நடத்தப்படவேண்டும்?


நீராட்டு என்பதே தேவையற்றது. அப்படி நடத்தித்தான் துட்டு பார்க்கவேண்டுமெனில், ஒரு விழாத்திருமேனியை (அசுரத்தில், உற்சவர்) வைத்து, அதற்கு நீராட்டு நடத்தி, துட்டு பார்க்கலாம். 👊🏽👊🏽


oOOo


அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment