Wednesday, October 16, 2024

திருக்குறள் #672 (வினைசெயல்வகை): தூங்குக தூங்கிச் செயற்பால...


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

-- திருக்குறள் #672 (வினைசெயல்வகை)

தூங்குதல் என்பதற்கு "காலந்தாழ்த்துதல்" என்ற பொருளை வைத்து குறளுக்கு பொருள் எழுதியுள்ளனர். இதைவிட, "இடைவிடாது செய்தல்" என்றொரு பொருளுண்டு. அதை பொருத்திப் பார்த்தால்... 😍!

இடைவிடாது செய்யவேண்டியதை இடைவிடாது செய்க. இடைவிட்டு செய்யவேண்டியதை இடைவிட்டு செய்க.

எதை இடைவிடாது செய்யவேண்டும்? இதற்கான பகவான் திரு இரமண மாமுனிவரின் பதில்:

விட்டுக் கருதலின் ஆறுநெய் வீழ்ச்சி போல
விட்டிடாது உன்னலே உந்தீபற
விசேடமாம் உன்னவே உந்தீபற

பகவானின் பதிலை வைத்து, குறளின் பொருளை பார்த்தால்: தன்னாட்டத்தை இடைவிடாது செய்யவேண்டும். பொருள் நாட்டத்தை தேவைக்கேற்ப செய்யவேண்டும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment