Wednesday, August 16, 2017

பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர்! சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ்!!

👏👏👏👍💪

இது என்ன புதுக் கதை என்று தோன்றுகிறதா? வரலாற்றை பார்ப்போம்...

"பாரதத்திற்கு #சுதந்திரம் 'கொடுக்கிறோம்' (1)" என்று மௌண்ட்பேட்டன் தெரிவித்தவுடன் ஜவஹர்லால் காஜிக்கு (2) என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனிருந்த #மூதறிஞர் #இராஜாஜி பாரம்பரிய நியதிகளை எடுத்துச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். #திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார். ஆதீனம்  கடும் காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்ததால், ஆதீன கட்டளைத்தம்பிரான் ஒருவரையும், ஓதுவார் ஒருவரையும் தனி விமானத்தில் டில்லிக்கு அனுப்பிவைத்தார். கிளம்பும் முன், கட்டளைத்தம்பிரான் ஆதீனத்திடம் செங்கோல் பெறும் முன் கடைபிடிக்க வேண்டிய நியதிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

விழாவில் பரங்கி மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைக் கட்டளைத்தம்பிரான் பெற்று, ஓதுவார் கோளறு பதிகம் பாட, அச்செங்கோலை காஜியிடம் அளித்தார்!!

💪 ஆம், ஒலித்தது தமிழ் (கோளறு பதிகம்).
💪 செங்கோலைப் பெற்றது தமிழர் (கட்டளைத்தம்பிரான்).
💪 கடைபிடிக்கப்பட்ட நியதிகள் தமிழ் மன்னர்கள் கடைபிடித்த நியதிகள்.

👏👌👍💪💪🙏😍😘

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புதிய இரத்தத்தை பாய வைக்கும் செய்தி இது. ஏன் மறைக்கப்பட்டது? #தமிழ், #தமிழர், #சைவம், #ஆதீனம், #கோளறு #பதிகம் - இவை தான் மறைக்கப்பட காரணங்கள். இன்று, இங்கேயே இவை பலருக்கு ஆகாது. 😏 அண்டை மாநிலங்களை, வடக்கத்தான்களைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன? 😜

நேதாஜியால் கிடைத்த சுதந்திரத்தை இன்று வரை "மோகன்தாஸ் தான் பெற்றுக்கொடுத்தார்" என்று உரு ஏற்றிக் கொண்டிருக்கிறோம். 😛 இந்த லட்சணத்தில் அன்றைய இரவு, பரங்கி மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது நம் திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் தான் என்றால் யார் ஏற்றுக்கொள்வர்? அதுவும் #திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது என்றால்...? கோபம், அதிர்ச்சி, குபீர் சிரிப்பு போன்ற *நியாயமான* விளைவுகளைத் தவிர "அருமை" என்ற *அநியாயமான* விளைவு இன்று எத்தனை பேருக்கு ஏற்படும்? 😁

கோளறு பதிகத்தை "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்று முடிக்கிறார் #ஆளுடையபிள்ளை. (அடியார்கள் என்பது சிவனடியார்களை மட்டுமல்லாது, நல்ல உள்ளம் கொண்டவர்கள், நியாயமானவர்கள், தர்மத்தை கடைபிடிப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.) மகான்களின் வாக்கு பொய்க்காது. *சம்பந்தப் பிள்ளை சொன்னது வானைத் தான். பாரதத்தை அல்ல. எனில், பாரதத்தை ஆட்சி செய்வது... அன்றிலிருந்து இன்று வரை... கொள்ளைக்காரர்கள்!!*  👊👊👊

பி.கு.: *வந்தே மாதரம்* என்ற முழக்கம் முதன் முதலில் ஒலித்தது கோவை சிறையில் தான்! *ஜெய்ஹிந்த்* என்று முதன் முதலில் முழங்கியதும் ஒரு தமிழர் தாம் - "எம்டன்" புகழ் செண்பகராமன் பிள்ளை!!

(மூலம்: ஒரு வாட்ஸ்அப் செய்தி மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தின் முகநூல் பக்க இடுகை)

🔥🔥🔥

1. எங்கே கொடுத்தார்கள் சுதந்திரம்? "பட்டது போதும். நாங்கள் இனி நேரடியாக கொள்ளையடிக்க விரும்பவில்லை. நாங்கள் சொல்லியபடி நீங்கள் கொள்ளையடித்து, ஒரு பகுதியை எங்களுக்கு கொடுத்தால் போதும்" என்றல்லவா கொள்ளையர்கள் கையில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். 😠

2. "எந்த பெண்ணை எப்படி கவிழ்ப்பது" என்பது மட்டும் தான் ஜவஹர்லால் காஜிக்குத் தெரியும்! 😂 மீறிப் போனால்,  ஆட்சியாளர்களிடமிருந்து தலை தப்பிக்க இரவோடு இரவாக பெயரை #காஜி என்பதிலிருந்து #நேரு என்று எப்படி மாற்றுவது என்பது தெரிந்திருக்கும். 😝

No comments:

Post a Comment