Friday, August 25, 2017

அனைவருக்கும் இனிய ஆனைமுகன் பிறந்த தின வாழ்த்துக்கள்!!

ஒளவைப்பாட்டி இல்லாமல் ஐந்துகரத்தான் எங்கே? தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் பிள்ளையார் காணப்படுவதற்கு இவரே காரணம். திருக்கோவிலூர் வீரட்டேசுவரர் திருக்கோயிலே இவர் சமாதியான இடம். 🌹🔥🙏

பாட்டியை நினைவு கூர்வதென்பது அவர் விட்டுச் சென்ற பெருஞ்செல்வங்களை நினைவு கூர்வதாகும் (ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, விநாயகர் அகவல்...). பாட்டியையும், அவர் தம் செல்வங்களையும் நினைவு கூர்ந்து விட்டு, அவரைப் போலவே பெரிய வயிற்றுப் பெருமானுடன் ஒப்பந்தமும் போட்டுக் கொள்வோம். 😉😀

*பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை*
*நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய்*
*துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்*
*சங்கத் தமிழ்மூன்றுந் தா.*

🌼🌺🔥🔥🙏🙏

சென்ற வருட இடுகைகளிலிருந்து சில செய்திகள்...

🐘 பிள்ளையார் என்று Gene Splicing செய்து கொண்ட மனிதர் யாருமில்லை. *நம்மில் இயங்கும் அறிவுத் தத்துவம்  தான் விநாயகர். இவ்வறிவு தத்துவத்திற்கு ஆனைமுக வடிவம் உருவாக்கப்பட்ட தினம் இன்று!*

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சுருக்கமாக:

(கையில் கொழுக்கட்டை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், மோதகம் எனும் பிறவாநிலையைப் பெறலாம்.

(கையில் சிவலிங்கத்தை வைத்திருப்பின்)

நல்லறிவைப் பெருக்கி, ஆசை (அல்லது எண்ணம்) எனும் எலியைக் கட்டுப்படுத்தி, நான் எனும் அகந்தையை தன்னாட்டம் எனும் மழுவால் துண்டித்தால், இறைவன் உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குவான்.

🐘 ஆனைமுக வடிவம் உணர்த்தும் கருத்து - சற்று விரிவாக:

அறிவுக்கு அடிப்படை ஞாபகத்திறன். ஞாபகத்திறனின்றி வாழ்வது மிகக் கடினம். உம்.: Parkinson's உடையவர், விபத்தில் சிக்கி ஞாபகத்  திறனை இழந்தோர், ...

யானை அபரிமிதமான  ஞாபகத்திறன் கொண்ட, சைவ உணவு உண்ணும் சாத்வீக மிருகம். மேலும், பலம் பொருந்தியது. அறிவுடையோன்  பலமுடையோன். எதிரியையும் வீழ்த்திக் காலடியில் வைக்கக் கடவோன். விநாயகரின் காலடியில்  இருக்கும் மூஞ்சுறு போல.

உடலால் உழைப்பவனை விட அறிவு கொண்டு உழைப்பவனுக்கு வருமானம், மரியாதை அதிகம். சுகமாக வாழலாம். விநாயகரின் பருமனான உடல் இதைக் காட்டுகிறது. யானையின்  உடலும் பருமனானதே.

மிதமிஞ்சிய அறிவு, ஞானத்தைத் தரும். ஞானம் அடக்கத்தைத் தரும். விநாயகரின் தும்பிக்கை இதைக்  காட்டும்.

''தெள்ள தெரிந்தார்க்கு சீவன்  சிவலிங்கம்" எனும் திருமந்திர வரிகளுக்கேற்ப ஒரு கையில் சிவிலிங்கம்  வைத்திருப்பார்.

சில உருவங்களில் மோதகம்  வைத்திருப்பார். *மோதகம், வெளிப்புறம்  மாவுப் பொருளாலும் உள்ளே இனிப்புப்  பொருளாளும் ஆனது. வெறும் இனிப்பு தித்திக்கும். வெறும்  மாவுப்பொருள் நெஞ்சையடைக்கும். இரண்டும் கலந்தால் தான் உண்ண முடியும். மாவுப்பொருள் உலக வாழ்க்கை. இனிப்பு பொருள் ஆன்மிகம்.*

இதற்கு வேறு விளக்கமும்  உண்டு. *மாவுப் பொருள் உடல். மோதகத்தின்  உள்ளிருக்கும் இனிப்பு, உடலினுள் இருக்கும் சிவன். சதா சிவமாக இருந்தால் திகட்டி விடும். வெறும் உடலை மட்டும் வளர்த்தால் உருப்பட முடியாது. ''உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே" என்ற திருமந்திர வரிகளே பிள்ளையாரின்  மோதகம்.*

விநாயகர் அறிவைக்  குறிப்பவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தெருக்குத்து வருமிடங்களில்  அவரை வைப்பது. இது, "சிந்தித்து செயல்படு. கவனமாக இரு. முட்டிக்  கொள்ளாதே." என்பதற்கு சமம்.

இவர் உருவான பின் தான், இவரைப்  போன்று மனித உடல் - மிருகத்  தலையோடு இருக்கும்  அனைத்து  உருவங்களும்  உருவாகின. இதற்கு,  வழக்கில்  இருக்கும்  ஒரு சொலவடை உதாரணம்: *பிள்ளையார்  பிடிக்கப்போய்  குரங்காய் மாறிற்று!!*

🐭 ஐந்துகரத்தானை வணங்குவோம்! 🙏
🐁 அவனது உருவம் உணர்த்தும் பேருண்மைகளை சிந்திப்போம்!! 🙏
🐘 அஞ்ஞான இருள் நீக்குவோம்!!! 🙏
🔥 மனிதப் பிறவியின் பயனாகிய பிறவாநிலையைப் பெறுவோம்!!!! 🙏

(இணைப்புப் ஓவியம்: திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாரை வணங்கும் நம்பியாண்டார் நம்பி. உடன், பேரரசர் முதலாம் இராஜராஜ சோழன் மற்றும் அரசவையைச் சேர்ந்தோர். இப்பிள்ளையாரே நம்பிக்கு தேவார ஏடுகள் இருக்குமிடத்தைக் காட்டியவர்.)

🙏🌸🙏🌸🙏

*விக்கிப்பீடியாவை மட்டும் நம்புவர்களுக்கு...*

வரலாற்றில் பல ஒளவைப் பாட்டிகள் இருந்தனர் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், எந்தப் பாட்டியும் சுந்தரமூர்த்தி நாயனார் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தைச் சேர்ந்தவரல்லர் என்பதை ஏற்க முடியாது. ஒருவர் 10ஆம் நூற்றாண்டாம். இன்னொருவர் 12ஆம் நூற்றாண்டாம். 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் யாருமில்லையாம். கேட்டால், "அதையும் தாண்டியவர்" மட்டும் புரிந்து கொள்ளும்படியாக ஒரு பதிலைக் கொடுப்பார்கள்! 😛

விக்கிப்பீடியாவின் பின்புலத்தில் இருப்பவர்கள் பரங்கியர்கள் என்பதையும், இங்கு பலர் அவர்களின் அடிப்பொடிகள் என்பதையும் எக்கணமும் நினைவில் கொள்ளவேண்டும். ஏன் 10, 12ஆம் நூற்றாண்டு? ஏதாவது பரங்கி அச்சமயம் வந்து போயிருக்கும். முதலில், அதற்கேற்றவாறு இங்கு மாற்றம் செய்வர். பின்னர், அப்படி வந்து போனது தான் பாட்டிக்கு ஞான ஸ்நானம் கொடுத்தது என்ற பிட்டை வெளியிடுவர். பின்னர், சைவமும் எங்களுடையதே என்பர்! 😜

நம்மை மட்டும் அவர்கள் குறி வைக்கிறார்கள் என்று நினைப்பது தவறு. அவர்களை விட உலகிலுள்ள அனைத்து மூத்த குடிகளுக்கும் இதே நிலை தான். உலக சமய வரலாற்றை 2000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மற்ற வரலாறுகளை 4000 முதல் 6000 வருடங்களுக்குள் கொண்டு வரவேண்டும். மீண்டும் உலகை ஆள வேண்டும். அதாவது, நேரடியாக கொள்ளையடிக்க வேண்டும். இப்போது நடைமுறையிலுள்ள மறைமுகக் கொள்ளைப் பற்றவில்லை. 200-300 வருடங்களுக்கு முன்னர், நம்மை கொள்ளையடித்து, ஐரோப்பாவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்று உலுத்துப் போயிருப்பதே இதற்குச் சான்று. அவைகளை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். "துரை" வாழ்க்கை என்னவென்றே தெரியாமல் வளரும் தற்போதைய பரங்கி தலைமுறைக்கு மீண்டும் அவ்வாழ்க்கையை பெற்றுத்தர வேண்டும். எவ்வளவு "நியாயமான" தேவைகள் & கனவுகள்!! 😝😝

👊👊👊👊👊

விக்கிப்பீடியாவை முழுவதுமாக ஒதுக்கத் தேவையில்லை. அதே போல, நமது தல புராணங்களையும், பாரம்பரிய கதைகளையும் அப்படியே எடுத்துக் கொள்ளவும் கூடாது. அவற்றிலும் பல இடைச்செருகல்கள், மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2000 வருடங்களில் பல அரச, மத படையெடுப்புகள் நடந்துவிட்டன. நடுவில் திருஞானசம்பந்தரால் சைவம் எழுச்சிப் பெற்றாலும், ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சி, அதனால் இங்கு ஏற்பட்ட அதிர்வலைகள், வடக்கில் காட்டுமிராண்டி முகம்மதியர்களின் படையெடுப்புகள், அதனால் புலம்பெயர்ந்த வடக்கத்தியர்கள் என பல மாற்றங்கள் சில நூற்றாண்டுகளில் நடந்துவிட்டன. தமிழனின் நேரடி ஆட்சியும் முடிந்து 1000 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆகையால், கிடைக்கும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து உண்மைகளை உணரவேண்டும். எல்லாம் வல்ல பரம்பொருள் நமக்கு துணையிருக்கட்டும்.

🌸 திருச்சிற்றம்பலம் 🔥

No comments:

Post a Comment