Showing posts with label ரமணமகரிஷி. Show all posts
Showing posts with label ரமணமகரிஷி. Show all posts

Monday, June 27, 2016

🌸 திருநீற்றைப் / விபூதியைப் பற்றி சில தகவல்கள் 🌸

சைவச் சின்னங்களுள் ஒன்று. திருநீறு எனில் "மதிப்பிற்குடைய / ஞான செல்வம்" (திரு+நீறு). விபூதி எனில் "மேலான செல்வம்" (வி+பூதி). இது, இரு வகையில் மேலான செல்வத்தைக் குறிக்கும்.

🔯 தத்துவ ரீதியில்:

*ஒரு பொருள் முழுவதும் எரிந்து முடிந்த பிறகு, சில சமயம், அதன் உருவம் கலையாமல் சாம்பல் அப்படியே இருக்கும். உருவம் கலையாதிருப்பதால் மட்டும் அப்பொருளினால் எந்த உபயோகமும் கிடையாது. அவ்வாறே, ஞானமடைந்த பின் (சிவ நிலையை அடைந்த பின்), ஞானிக்கு (சிவனுக்கு) இவ்வுலகம் எரிந்து முடிந்து சாம்பல் உரு கலையாமல் இருப்பது போல் தோன்றும் (தோற்றமாத்திரமே; இருப்பற்றது; சுயப்பிரகாசமற்றது). இக்காரணத்தினால் தான் "சிவன் சுடுகாட்டில் வாழ்பவர்" எனப்படுகிறார்!!*

அதாவது, ஞானிக்கு (சிவனுக்கு) தன்னைத் தவிர மற்றனைத்தும் கலையாத சாம்பால் உரு போன்று, கானல் நீர் காட்சி போன்று, கனவு போன்று , பொய்யென்றுத் தோன்றும்!

🔯 மருத்துவ ரீதியில்:

பசுஞ்சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் விபூதி நல்ல கிருமிநாசினி!

மறைந்த மராத்திய பேராசிரியர் தபோல்க்கரின் ஆய்வின்படி, முழுவதும் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் சாம்பலில் இருக்கும் மேன்மையான சத்துக்கள் (மேலான செல்வங்கள்) மட்டுமே மண்ணிலிருந்து தாவரங்களால் உறிஞ்சப்பட்டவை. இவை அளவில் மிகக்குறைவாகவே இருக்கும். நம் உடலுக்கும் மிகக் குறைவாகவே தேவைப்படும். நாம் உடலில் பூசிக்கொள்ளும் போது தோலின் மூலம் சிறிதளவு அந்தச் சத்துக்கள் ஈர்த்துக் கொள்ளப்படும். அது போதுமானது.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

இந்த மருத்துவ ரீதியான பயன் நமக்கு உடனடியாகப் புரியும். தத்துவ ரீதியான பயன்? ஞானிக்கு (சிவனுக்கு) உலகம் எப்படித் தோன்றினால் என்ன? அதனால் நமக்கு என்ன பயன்?

*நம் சமயத்தில் இருக்கும் பெரும்பாலான சமாச்சாரங்களைப் போன்று தான் இதுவும்: விபூதியை இட்டுக் கொள்வது, நம்மைப் பார்த்து மற்றவர்களும் மற்றவரைப் பார்த்து நாமும், மேற்சொன்ன பேருண்மைகளை மறவாதிருக்கவும் & இடைவிடாது சிந்திக்கவும் தான்!*

இந்த பேருண்மைகளை என்றும் மறவாது, தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருத்தால் இறுதியில் அதுவாகவே (சிவனாகவே) மாறிவிடுவோம் ("எதை நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற கோட்பாட்டின் படி).


💠 "மந்திரமாவது நீறு" என்கிறார் ஆளுடையப்பிள்ளையார். மந்திரம் எனில் சிந்தனையைத் தூண்டக்கூடிய கருவி. இது சொல், சொற்றொடர், பொருள், அடையாளம், ஜீவன், எண்ணம், செயல் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆகையால், பிள்ளையாரின் வார்த்தைகளை இப்படி மாற்றலாம்: "சிந்திக்கத் தூண்டுவது நீறு". எதை சிந்திக்கத் தூண்டுகிறது நீறு? *மேற்சொன்ன பேருண்மைகளை!!*.

💠 "விபூதியை கீழே சிந்தாதே" என்பர் நம் பெரியோர். இதுவும் தத்துவ ரீதியில் சொல்லப்பட்டதே. "பாடுபட்டு அடைந்த மேலான ஞானத்தை இழந்து விடாதே" என்பதே இதன் பொருள். ஞானம் என்பது அறிவு. என்ன அறிவு? "நான் இவ்வுடலல்ல என்ற *அனுபவ* அறிவு". இவ்வனுபவம் கிட்டும் போது உலகம் இருப்பற்று போகும் - கலையாத சாம்பல் உரு / சுடுகாடாகி விடும். இந்த நிலையை அடையும் ஜீவன் சிவனாகிறான். இப்படி சிவநிலையை அடைந்த பின்னும் சிலர் மீண்டும் உலகமாயையில் சிக்கிவிடுவர். ஞானானுபவம் ("நான் இவ்வுடலல்ல" என்ற அனுபவம்) ஸ்திரமாகும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பார் பகவான் ஸ்ரீரமணர்!


பகவானின் எச்சரிக்கைக்கு உதாரணமாக மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை சிறிது பார்ப்போம். திருப்பெருந்துறையில் (ஆவுடையார்கோயிலில்) முதல் ஞானானுபவம் பெற்று பின்னர் இழந்துவிடுகிறார் (விபூதியை சிந்திவிட்டார்!!). பின்னர், அழுதுபுலம்பி அவ்வனுபவத்தைத் தேடி பல இடங்களுக்குச் செல்கிறார். இரண்டாவது முறையாக திருக்கழுகுன்றத்தில் சிறிது நேரம் கிடைக்கப் பெறுகிறார். இறுதியில், சிதம்பரத்தில் அவரது ஞானம் (சிவானுபவம் / ஞானானுபவம் / இறையனுபவம்) ஸ்திரமாகிறது. சீவத்தன்மை முற்றிலும் நீங்கப்பெறுகிறார் - சிவமாகிறார். இதையே "இறைவனோடு கலந்தார்" என்கிறோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

விபூதியை வாங்குவதிலும் மிகுந்த கவனம் தேவை! நாட்டுப் பசுவின் சாணத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட திருநீறே பூசிக்கொள்ள உகந்தது. தமிழகத்தில் மிகப் பிரபலமான விபூதி தயாரிப்பு நிறுவனம், பழைய காகிதங்களையும் மற்றும் குப்பை காகிதங்களையும் வாங்கி, எரித்து சாம்பலாக்கி பின்னர் அதனுடன் வாசனை வேதியல் பொருட்களைச் சேர்த்து "ஸ்பெஷல் விபூதி" என்று மக்களை ஏமாற்றுகின்றது!! ஆகையால், விசாரித்து வாங்கவும். நன்கு தெரிந்த அர்ச்சகரிடமிருந்து அபிஷேக விபூதி பெற்றாலும் கூட, தயவு செய்து பிரசாதமாக வாயில் போட்டுக் கொள்ளவேண்டாம்.

🔥 வெளிப்புறத்தில் தரமான திருநீற்றைப் பூசி மருத்துவப் பயன்களைப் பெறுவோம்
🔥 உள்புறத்தில் சரியான தவமியற்றி இறைவனடி எனும் திருநீற்றினைப் பெறுவோம்
🔥 பிறப்பறுப்போம்
🔥 பிறவிப்பயனையடைவோம்

🔯 திருச்சிற்றம்பலம் 🔯

posted from Bloggeroid

Thursday, May 5, 2016

🎶 கனிந்த உன் வேணுகானம் ....


(www.independent.co.uk/news/science/free-will-could-all-be-an-illusion-scientists-suggest-after-study-that-shows-choice-could-just-be-a7008181.html)

இந்த ஆராய்ச்சி எல்லாம் என்றோ நம் மூதாதையர் முடித்து விட்டனர். அருமையான விடையும் கண்டறிந்தனர். தாங்கள் கண்டதை நமக்கு ஒரே வார்த்தையில் ஒரு ரத்தினம் போல் விட்டுச் சென்றனர். அவ்வார்த்தை - பிரகிருதி / இயற்கை!

இந்த அண்டம் (அணு முதல் கருந்துளை வரை) தானாக இயங்குகிறது. அதன் பிரதிபலிப்பாகிய பிண்டம் எனும் நம் உடலின் இயக்கமும் அவ்வாறே. தானாக இயங்கினாலும் தாறுமாறாக இயங்காமல், ஒரு வரைமுறையின் படிதான் இயங்குகிறது. அதாவது, விதிப்படிதான் இயங்குகிறது. (உடனே நம் சிந்தனை "தலைவிதி"-யை நோக்கிப் பாயும்! 😀 விதி என்பதற்கு Rule என்றும் பொருள் கொள்ளலாம்.)

உயிருள்ளவைகள் புரியும் வினைகளும், அதனால் விளையும் எதிர்வினைகளும் அவ்வாறே. எல்லாம் ஒரு ஒழுங்குடன் நடந்தாலும், எல்லாம் தோற்றமாத்திரமே!

நான் இந்த இடுகையை எழுதவில்லை. எழுதியது பிரகிருதியே. நீங்கள் இதைப் படிக்கவில்லை. படிப்பது பிரகிருதியே. 😂😂

நம் சமய அடிப்படைகள் தெரியாத ஒருவர் இதைப் படிக்க நேர்ந்தால், கேனப்பயல் என்று கிண்டலடிக்க வாய்ப்புண்டு. 😉

அப்படிப்பட்டவர்களுக்கும், "மேற்கே சரி" என்னும் அறிவுஜீவிகளுக்கும் பகவான் ஸ்ரீரமணரின் இந்த வார்த்தைகள் ஏற்புடையதாக இருக்கும்: "அவரவர் பிராரப்தம் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது. நடப்பது என் செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மெளனமாய் இருக்கை நன்று."



பிரகிருதி என்னும் இயற்கையின் செயல்பாட்டையும், நாம் எப்படி வாழ வேண்டும் என்னும் சூட்சுமத்தையும் ஒருங்கே வெளியிட்டிருக்கிறார் பகவான். அவர் குறிப்பிடும் மெளனம் வாய் மூடிய மெளனமன்று. எண்ணங்களற்ற மெளனம். கண்ணபிரானின் கையிலிருக்கும் புல்லாங்குழல் போன்று நாமிருக்க வேண்டும். கானம் எழுவது நம்மால் அல்ல என்பதை உணரவேண்டும். முழுவது உணருவது என்பது ஞானமடைந்த பின்னர் தான். ஆனால், இதையெல்லாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொள்ள ஆரம்பித்தாலே, வாழ்க்கை கண்ணன் எழுப்பும் வேணுகானம் தான்!! 😍



எல்லாம் சரி. இதற்கும் இணைக்கப்பட்டிருக்கும் பரங்கி இணையப் பக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? இங்கே சொல்லப்பட்டவைகளை பரங்கி ஒப்புக் கொள்வானா? என பல கேள்விகள் எழும்.

அதெப்படி பரங்கி ஒப்புக்கொள்வான்? யேசுநாதரை மேற்கோள் காட்டியிருந்தால் பரவாயில்லை. மேற்கோள் காட்டியிருப்பது ஸ்ரீரமணரையும் & கண்ணபிரானையும் அல்லவா. 😜

கிழக்கிலிருந்து சுட வேண்டியது. சுட்ட இடம் அழிவதற்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டியது. சுட்டதை பிட்டு பிட்டாக பிரித்துக் கொள்ளவேண்டியது. விதவிதமான பெயர்களை வைத்துக் கொள்ளவேண்டியது. ஒவ்வொன்றாக வெளிவிடவேண்டியது. அவர்களுக்கு அவர்களே புகழாரம் சூட்டிக் கொள்ள வேண்டியது. அதற்கு Copyright/left/top/bottom பெற்றுக் கொள்ளவேண்டியது. உலகத்தின் தலையில் கட்டவேண்டியது. கிடைக்கும் வருமானத்தில் "உல்லாச உலகம் எனக்கே சொந்தம்" என தானும் அழிந்து உலகையும் அழிக்கவேண்டியது! 😡😡😡

posted from Bloggeroid