Saturday, June 27, 2020

உண்ணாமுலை (அம்மன்) என்பது யார? அல்லது, உண்ணாமுலை என்றால் என்ன?

🔸 அம்பிகை உண்ணாமுலை அம்மைக்கு உகந்த வாம மலை

அண்ணாமலை வெண்பா திரட்டின் 49வது பாடலில் வரும் இச்சொற்றொடரைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

இது இரண்டு பொருள்களைத் தரும்:

- அம்மைக்கு பொருத்தமான/பிடித்தமான அழகு அப்பன்
- அம்மைக்கு பொருத்தமான/பிடித்தமான இடப்பாகம்

முதலில், உண்ணாமுலை என்பது யாரென்று பார்ப்போம்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து முழு விழிப்பிற்குள் 5 நிலைகள் இருப்பதாக பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கூறுகிறார்: 1. உறக்கம், 2. எண்ணங்களற்ற நிலை, 3. எண்ணங்களற்ற நிலையை உணர்வதால் ஏற்படும் மகிழ்ச்சி, 4. வினைப்பதிவுகளின் கலப்பு மற்றும் 5. விழிப்பு.

நான்காவது நிலை கஷாயம் (எண்ணங்கள்) எனப்படும். இந்நிலையில் இருப்போரே கஷாயம் - காவி - தரித்தவர் எனப்படுவர். காவி உடை உடுத்துபவரல்லர். தாங்கள் உடலல்லர் என்பதை படிப்பறிவாக அறிந்தவர்கள். ஆனால் துய்ப்பு பெறாதவர்கள். அதற்காக பாடுபடுபவர்கள். உலகியலில் இருக்கும் ஏனையோருக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு இந்த படிப்பறிவு தான். மற்றவர்களுக்கு தெரியாது; தெரிந்து கொள்ளவும் ஆர்வமிருக்காது. இவர்கள் தெரிந்து கொண்டு, அதை நோக்கி பயணிப்பவர்கள்.

மூன்றாவது நிலை ரசவாதம் எனப்படும். சாதாரணமாக "ரசவாதம் அறிந்தவர்" எனில் "இரும்பை தங்கமாக்கத் தெரிந்தவர்" என்று நமக்கு நாமம் போட்டிருப்பார்கள். இது தவறு. எனில், எண்ணங்களற்று இருக்க தெரிந்தவர் - மெய்யறிவாளர் - என்பது ஒரு பொருள். தன்னிடம் வருவோரை மெய்யறிவாளராக மாற்றக்கூடியவர் என்பது இன்னொரு பொருள். உலகறிவு - இரும்பு. மெய்யறிவு - தங்கம். பகவான் திரு ரமணர் ஒரு சிறந்த ரசவாதியாவார். தனது பார்வையாலேயே பலரை தங்கமாக்கியுள்ளார். அவரது சொற்கள் இன்று வரை பலரை தங்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாவது நிலையே உண்ணாமுலையாகும். விழிப்பு நிலையிலிருந்து பின்நோக்கி செல்லும் போது இதுவே இறுதி நிலை. இந்த நிலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நுணுக்கமாக நமது மாமுனிவர்கள் ஆராய்ந்துள்ளனர். அவ்வுயர் ஆராய்வுகளின் முடிவுகள் தாம் உண்ணாமுலை, மீனாட்சி, விசாலாட்சி போன்ற, நமது சிந்தனையைத் தூண்டக் கூடிய மிகச்சிறந்த பெயர்களும் உருவங்களுமாகும்!! 😍 அன்னை மீனாட்சியின் திருக்கரத்தில் உள்ள கிளியைப் பற்றி சிந்தித்தாலே பகவான் போன்ற மெய்யறிவாளர்கள் எப்படி இவ்வுலகில் இயங்குகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இந்த உண்ணாமுலை நிலையை அடைவதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று பகவான் அறிவுருத்தியுள்ளார்.

oOOo

இது வரை உண்ணாமுலை என்ற சொல்லை ஒரு தனி மனித கணக்கில் பார்த்தோம். அடுத்து, படைப்பு என்று வரும்போது, மொத்த படைப்பும் உண்ணாமுலை அம்மை தான். இயங்கிக் கொண்டே இருப்பவர் (அண்டம் எங்கே நிற்கிறது? மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா!). அழகானவர் (இயற்கையில் இல்லாத அழகா!). இவர் எப்படி இயக்கமே இல்லாத, சுடுகாடுடைய அப்பனுக்கு பொருத்தமானவர் என்று குருநமச்சிவாயர் பாடுகிறார்?

வெகு வேகமாக சுழலும் ஒரு பம்பரத்தைக் காணும் போது, அது சுழல்வது தெரியாமல், அப்படியே நிற்பது போல் காட்சியளிக்கும். ஒரு மெய்யறிவாளரின் நிலை இப்படிப்பட்டது தான் என்கிறார் பகவான். அப்பனுக்கு சதாசிவம் என்றொரு பெயருண்டு. சதா + சிவம் - எப்பொழுதும் சிவநிலையில் இருப்பவர். சிவநிலை - தன்னிலை. தானாய் இருத்தலே தன்னிலை. இருத்தல் என்பது இடைவிடாத, ஓயாத (சதா) செயலாகும். எனவே, இயங்கிக் கொண்டேயிருக்கும் அம்மைக்கு ஓயாத செயலில் இருக்கும் அப்பன் உகந்தவராகிறார்!

அடுத்தது, அழகு. இச்சொல்லுக்கு அழுக்கற்றது, மலமற்றது என்ற பொருள்களும் உண்டு. அழுக்கற்றது எனில் சுத்தம். மெய்ப்பொருளை விட சுத்தமான பொருள் உண்டா? ஆகவே, மெய்ப்பொருள் அழகானதும் கூட. இதனால் தான் அப்பன் "சுந்தரன்" என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, அழகான அம்மைக்கு அழகான அப்பன் உகந்தவராகிறார்.

oOOo

வாமம் என்ற சொல்லை அழகு என்ற பொருளில் மேலே பார்த்தோம். இனி, இடது என்ற பொருளில் பார்ப்போம்.

(அம்மை இடப்பாகம் பெற்ற வரலாறு. ஏற்கனவே இருமுறை பார்த்துள்ளோம். மீண்டும் நினைவு கூறுவோம்.)

நம் மாமுனிவர்கள் அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து, மாறாத மெய்ப்பொருளுக்கு வலது புறத்தையும், மாறிக்கொண்டே இருக்கும் இயற்க்கைக்கு இடது புறத்தையும் கொடுத்தார்கள். இது தொடர்பான முதற்கட்ட ஆராய்ச்சிகள் காஞ்சிபுரத்தில் இருந்த மாமுனிவர்களால் நடத்தப்பட்டது. பின்னர், திருவருணையில் இருந்த மாமுனிவர்களால் தொடரப்பட்டு, முடிவுகளும் எய்தப்பட்டன.

இதனால் தான், "அம்மை, முதலில் காஞ்சிபுரத்தில் வடக்கிருந்து, பின்னர் அதை திருவருணையில், கெளதம மாமுனிவரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து, இறுதியில் இடப்பாகம் பெற்றார்." என்று தலவரலாறுகளில் பதிவு செய்யப்பட்டது. கெளதம மாமுனிவரின் பெயர் வெளிப்படையாக இருப்பதால், இந்த ஆராய்ச்சியில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது.

oOOo

இவையெல்லாம் நமது மண்ணும், இனமும், சமயமும் எவ்வளவு பழமையானவை, பண்பட்டவை, மேம்பட்டவை என்பதற்கும், நமது பெரியோர்கள் எவ்வளவு தூரம் அறிவிற்சிறந்து விளங்கினார்கள் என்பதற்குமான சின்னஞ்சிறு ஆதாரங்களாகும். தொடர்ந்த படையெடுப்புகளாலும், சரியான ஆட்சியாளர்கள் இல்லாததாலும் "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற உயர்ந்த நிலையிலிருந்து "பகுத்தறிவு" என்ற தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டோம். மீண்டும் அவ்வுன்னத நிலைக்கு திரும்ப முடியாவிட்டாலும் இருப்பதையாவது போராடிக் காப்போம். திருவருள் நமக்குத் துணை புரியட்டும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

இந்த இடுகையிலுள்ள செய்திகள் எதுவும் நமக்கு பெரிதில்லை. பரங்கியர்கள் இல்லை. அவர்களது தலையில் ஆப்பிள்கள் விழவில்லை. எந்த பரங்கியும் குளியல் தொட்டியிலிருந்து "யுரேகா" என்று கத்திக்கொண்டு பிறந்தமேனியாக ஓடவில்லை. ஆண்டுக்கு சுமார் "12 லட்சம் கோடிகள்" சம்பாதிக்கும் "தொழிற்"நிறுவனம் எந்த பரங்கியையும் சிறை வைக்கவில்லை, உயிருடன் எரிக்கவில்லை. பாரத நாட்டிற்கு வந்தேயிராத ஒரு பரங்கி, வந்ததாகவும் கொல்லப்பட்டதாகவும் குறிப்பில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக காப்பிரைட், லெஃப்ட், டாப், பாட்டம், சைடு, சந்து என்று எதுவுமில்லை. இவை எதுவுமில்லாமல் இவையெல்லாம் கண்டுபிடிப்புகளா? பகுத்தறிவு கண்ட தமிழா ஏமாந்துவிடாதே!! 😁

oOOo

கண்டுபிடிப்பு என்றால் என்ன?

பரங்கியர்கள், பாரதம் போன்ற பழம்பெருமை வாய்ந்த நாடுகளுக்கு சென்று, சுட வேண்டியதை சுட்டு, சுட்டதை இலத்தீன் கிரேக்க மொழிகளால் மறைத்து, காப்புரிமை பெற்று, சுட்ட நாட்டினரிடமே, உள்ளூர் கருங்காலிகளின் துணையுடன், அதை விற்று, கொள்ளை காசு சம்பாதித்து, தவறாமல் ஜி.எஸ்.டி கட்டிவிட்டு, மீதமாகும் சில்லறையில், ஹவாய் கடற்கரையில் புட்டி, குட்டிகளுடன் மேற்கொண்டு அடுத்த கண்டுபிடிப்பு (சுடுவது) பற்றி சிந்திப்பது.

👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽💪🏽😌

No comments:

Post a Comment