Showing posts with label திருவானைக்கா. Show all posts
Showing posts with label திருவானைக்கா. Show all posts

Thursday, December 18, 2025

திருக்கச்சி ஒருமாவன் (அசுரத்தில், ஏகாம்பரநாதர்) திருக்கோவிலின் முதல் திருச்சுற்றிலிருக்கும் நிலாத்துண்டப் பெருமாள்!


இன்று முதலெழுத்து திருடிக் கொண்டிருக்கும் கொல்டியாள்களின் கொடுங்கோல் முன்னோருடன் வந்த நாம நஞ்சு, நம் திருக்கோவில்களுக்குள் நுழைந்து, இன்று வரை தங்கியிருப்பது கொடுமையெனில், நஞ்சாக காண வேண்டிய அதை, திருநெறியின் ஒரு கூறாக காணுவது கொடுமையிலும் கொடுமையாகும்!! 😔

oOo

🌷 பெருமாள் + தொப்புளிலிருந்து கிளம்பும் தாமரைக் கொடி

இது, திருவானைக்கா திருக்கோவிலிருந்து சுடப்பட்டதாகும். அங்கு குடி கொண்டிருக்கும் திரு நாவல் மாமுனிவர் (அசுரத்தில், ஜம்பு மகரிஷி), "நாம் நுகரும் யாவும் நமக்குள்ளிருந்து வெளிப்படுகிறது" என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தினார். அதை, ஒரு நாவல் மரம் அவரது வயிற்றில் தோன்றி, வாய் வழியாக வளர்வதாக பதிவு செய்திருப்பர். அதை சற்று மாற்றி, பெருமாளின் வயிற்றிலிருந்து வளரும் தொப்புள் கொடியாக காண்பித்துள்ளனர்.

🌷 தொப்புள் கொடியில் மலர்மகள்

🔸 மலர்மகள் - மெய்யறிவு
🔸 தொப்புள் கொடி - மனம், உடல், காட்சிகள்... நாம் நுகரும் யாவும். மனம் தோன்றினால் யாவும் தோன்றும். மனமழிந்தால் யாவும் அழியும். மனமே அனைத்திற்கும் அடிப்படையாகிறது. எனவே, இங்கு, தொப்புள் கொடி என்பது மனதை குறிக்கும்.

🔸 தொப்புள் கொடியில் மலர்மகள் = மனதில் மெய்யறிவு.

மெய்யறிவு கிடைத்துவிட்டால், படைப்பை பற்றிய நமது கண்ணோட்டம் மாறிவிடும். பிறகு, எதனாலும் பாதிப்படைய மாட்டோம். படைப்பினால் பாதிப்படைய வேண்டுமென்பது இயற்கை (அசுரத்தில், விதி). ஆனால், மெய்யறிவு கிடைத்துவிட்டால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதையே, "இவ்வரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு" என்று பதிவு செய்துள்ளனர்.

ஓர் இறைவடிவத்தை காண்பதால் எந்த "விதியும்" மாறிவிடாது. அது உணர்த்தும் செய்தியை புரிந்து கொண்டால் மட்டுமே "விதி" மாறும்.

🌷 தாய்-சேய் பாசப்பிணைப்பு கூடும்

நாம மதத்தை பொறுத்தவரையில், தாய் என்பது உள்ளபொருளையும், சேய் என்பது மனதையும் குறிக்கும்.

(ஓர் அசுரத்தாய் (வெள்ளையினம்) ஓர் அழகிய தமிழினக் குழந்தையை (கருப்பினம்) தூக்கி வைத்திருக்கிறார். இது, பாலைவன மதங்களிடமிருந்து சுடப்பட்டதாகும். இதிலும் தங்களது இனவெறியை நாமாசுரர் புகுத்தியிருப்பர்.)

மெய்யறிவு பெற்ற பிறகு, மனமானது, மெல்ல மெல்ல, மாறும் வையகத்தை விரும்பாமல், மாறாத உள்ளபொருளை விரும்பத் தொடங்கும். இதுவே, "தாய்-சேய் பாசப்பிணைப்பு கூடும்" என்ற சொற்றொடரின் உட்பொருளாகும்.

oOo

எல்லா விளக்கமும் ஏரண (பீட்டரில், இலாஜிக்) அடிப்படையில் பொருந்தும் போது, ஏன் நாம மதத்தை விளாசுகிறேனென்ற கேள்வியெழலாம். அதற்கான பதில்:

மாப்பிள்ளை அவருதான். ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது!

😁

அதாவது, இப்பதிவில் பயன்படுத்தியுள்ள குறியீடுகள் நாம மதத்தை சேர்ந்தவைதாம். ஆனால், விளக்கம் திருநெறியினை சேர்ந்ததாகும்!

நாம மதத்தை வைத்து விளக்கவேண்டுமானால்:

ஒரு வாழப்பழம் இங்கிருக்கு. இன்னொரு வாழப்பழம் எங்க?

அதாங்க இது!

என்ற வகை ஏமாற்று வேலையாக இருக்கும். 😆

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 3, 2025

திருவானைக்கா திருக்கோவிலிலிருந்தும், எகிப்திலிருந்தும் சுட்ட நாமாசுரர்!!

தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத நாமாசுரர், இம்முறை, திருவானைக்கா திருக்கோவிலின் வரலாற்றிலிருந்து ஒரு செய்தியை உட்டாலங்கடி செய்துள்ளனர்! 🤭

முதலில், அவர்களது உட்டாலங்கடி கைங்கரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு:

திரு காரைக்கால் அம்மையார், கயிலையின் அடிவாரத்திலிருந்து கண்டபோது, அம்மலை அவருக்கு ஓர் இறைச்சின்னமாக (அசுரத்தில், சிவலிங்கமாக) தோன்றியது. எனவே, அம்மலையை காலால் கடக்காமல், தலையால் கடந்து சென்று, அங்கிருந்த பெருமானை வணங்கினார்.

நாமாசுரரின் உட்டாலங்கடி: 

தெலுங்கனான இராமானுஜர் திருமலையின் அடிவாரத்திலிருந்து கண்டபோது, அம்மலைத்தொடரானது, எகிப்திலிருந்து நாமாசுரர் சுட்டுக் கொண்டுவந்த பள்ளிகொண்ட பெருமாள் (1) போலத் தோன்றியது. எனவே, அம்மலைத்தொடரை காலால் கடக்காமல், முழங்காலால் கடந்து சென்று, [நாமாசுரரின் பித்தலாட்டங்களை தலையெழுத்தே 🤦🏽என்று தாங்கிக் கொண்டிருக்கும்] திரு கொங்கணவப் பெருமானை (திருமலைப் பெருமாள்) வணங்கினார்.

வேறுபாடு: அம்மையார் ஒரு மலையை கடந்தார். தெலுங்கர் ஏழு மலைகளை கடந்தார்.

🥹🥹🥹

திருவானைக்கா திருக்கோவிலின் வரலாற்றில் இடம் பெற்றுள்ள ஒரு செய்தி: 

அங்குள்ள 4வது மதில்சுவரை, அங்கு உறையும் திரு நாவல் முனிவரே மனிதவடிவில் வந்து, பணியாளருக்கு திருநீற்றை கொடுத்துக் கட்டினார். பின்னர், அந்நீறு அவரவர் கூலிக்கேற்ற பொன்னாக மாறியது.

இப்போது, திருநாங்கூருக்கு வருவோம்:

இந்த விகாரையை பெருமாளே கட்டினார்.

(அங்கு திருநீறு கொடுக்கப்பட்டதற்கு நிகராக இங்கு செய்தியேதுமில்லை. அதாவது, Story Development சரியாக நடக்கவில்லை! 😜)

வேறுபாடு: திருவானைக்கா பெருமான் மதில்சுவரை மட்டுமே கட்டினார். திருநாங்கூர் பெருமான் கோவிலையே கட்டினார்.

🥹🥹🥹

பின் குறிப்புகள்:


1. எகிப்தில் கிடைத்திருக்கும் வரைபடத்தில், ஒரு மனிதர் நீரில் படுத்திருப்பார். அவரை சுற்றி 5 தலைகள் கொண்ட ஒரு பாம்பு இருக்கும். அதை சற்று மாற்றி, பள்ளி கொண்ட பெருமாளாக நம் தலையில் கட்டியுள்ளனர். எகிப்திய வரைபடத்தை பார்த்தவுடன், அதுதான் பள்ளிகொண்ட பெருமாளின் வேரென்ற உண்மை பளிச்சென்று விளங்கும். (வரைபடத்தில், நீல நிற கோடிட்ட குறியீடுகள் நீரை குறிக்கும்)

(திருநெறியை வீழ்த்துவதற்காக நாமாசுரர் எவ்வளவு "உழைத்திருக்கின்றனர்" 😪!! ஆனாலும், பெருமாள் அவர்களுக்கு வழங்கியுள்ள பட்டம்... ஏமாற்றுக்கூட்டம்! (\|/ = ஏமாற்றுவேலை) 😃)

2. "திருநாங்கூர் விகாரையை கோச்செங்கட் சோழர் கட்டினார்" என்றொரு பிட்-ஐ பதிவு செய்திருக்கின்றனர்!

"மறைக்காயர் நகர் கலவி நிலையத்தை கோச்செங்கட் சோழர் கட்டினார்"

"டுமீல் குப்பம் ஒப்பாரி நிலையத்தை கோச்செங்கட் சோழர் கட்டினார்"

மேற்கண்ட இரு சொற்றொடர்களை படித்தவுடன் என்னென்ன உணர்வுகள் தோன்றுகின்றனவோ, அதே உணர்வுகள் முதற்சொற்றொடரை படித்ததும் தோன்றவேண்டும். ஆனால், என்ன நடக்கிறது? கோவில் என்ற சொல்லுக்கு தகுதியான திருநெறி திருக்கோவிலுக்கு இணையாக ஒரு நாம விகாரையை காணும்படி கொம்பு சீவியிருக்கின்றனர்!! 🤬

எல்லாம், கடந்த 7+ நூற்றாண்டுகளாக தமிழரை தமிழரல்லாதோர் ஆண்டதின், பராமரித்ததின் விளைவாகும்! 😡😤

பொழுது இப்படியே போய்விடாது. நல்லது நடக்கும். யாவும் மீண்டும் நலமாகும்.

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪷🪷🪷🪷🪷

Wednesday, February 8, 2023

அன்னை அகிலாண்டேசுவரி, திருவானைக்கா 🌺🙏🏽🙇🏽‍♂️



ஒரு சைவ திருக்கோயிலுக்கு வெளியே, இறைவனும் இறைவியும் இரு வேறு பொருட்களை குறிப்பர். ஆனால், ஒரு திருக்கோயிலுக்குள்ளே இருவரும் ஒருவரையே குறிப்பர். வெவ்வேறு வகையாக குறிப்பர்.

திருவானைக்கா என்ற பழம்பெரும் திருக்கோயில் திரு ஜம்பு மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவிடமாகும். திரு ஜம்புலிங்கேசுவரர் என்ற உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் அம்மாமுனிவரையே அன்னையும் குறிப்பிடுகிறார். அதாவது, அன்னையை வணங்கினாலும் ஜம்பு மாமுனிவரை வணங்கியது போலாகும். இதை புரிந்துகொள்வதற்கு மிக எளியதொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

நடிகர் திலகத்தின் மீது பேராவல் கொண்ட அன்பரொருவர், அவரது கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து ஒரு படத்தை தன் வீட்டில் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சிவாஜியை பற்றி அறிந்திராத வெளி மாநில / நாட்டு நபரொருவர் அப்படத்தை காண நேர்ந்து, அது பற்றி அவரிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்?

"இதுதான் நடிகர் திலகம்" என்று சொன்னால் அது "ஜம்புலிங்கேசுவரர்" என்று சொல்வதற்கு சமம்.

"கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடித்த நடிகர் திலகம்" என்று சொன்னால் அது "அன்னை அகிலாண்டேசுவரி" என்று சொல்வதற்கு சமம்.

🌷 ஜம்புலிங்கேசுவரர் - எல்லையற்ற, மாசற்ற, மாறுபாடற்ற, செயலற்ற உள்ளபொருள்

🌷 அன்னை அகிலாண்டேசுவரி - தன்னை அண்டியவரை காத்து (அன்னையின் வலது கை) அருளும் (இடது கை), அன்பே வடிவான (வலதுகையின் மேலுள்ள கிளி) ஜம்பு மாமுனிவர்.

(கிளி என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொள்வதைவிட, அன்பு என்று பொருள் கொள்வதே இங்கு பொருத்தமாகவிருக்கும். "அன்பே சிவம்" என்பது திருமூலர் வாக்காகும். 🌺🙏🏽🙇🏽‍♂️)

நமது திருக்கோயில்களை பின்வருமாறு குறிப்பிடுவர்: அருள்மிகு + அன்னையின் பெயர் + உடனுறை / உடனாய + இறைவனின் பெயர் + திருக்கோயில்

இதை சற்று மாற்றினால்,

> அன்னை + உடனுறை / உடனாய + இறைவன்

> தனித்தன்மை + உடனுறை + பொதுத்தன்மை

> ஜம்பு என்ற தனித்தன்மை உடனுறையும் உள்ளபொருள்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Friday, July 2, 2021

திருவானைக்கா திருத்தலத்தின் தலவரலாறு உணர்த்தும் உண்மைகள்


🌺🙏🏽🙇🏽‍♂️

(இந்த சுதைக் காட்சியை, திருக்கோயிலுக்குள் செல்லும் போது வலது புறத்தில் காணலாம். உள்ளேயும் ஒரு கல்தூணில் இதே காட்சியை மிக அழகாக வடித்திருக்கிறார்கள்.)

தலவரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புவோர், தயவு செய்து, இணையத்தில் தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளவும். அது உணர்த்தும் கருத்துகளை மட்டும் இங்கு பார்ப்போம்.

🌷 உலக வாழ்வு என்பது அறிவுக்கும் (யானை) மனதிற்கும் (சிலந்தி) நடக்கும் போராட்டமாகும்.

🌷 இவற்றால் பரம்பொருள் (சிவலிங்கம்) பாதிப்படைவதில்லை. பரம்பொருளுக்கு பிறப்பில்லை, இறப்பில்லை, மாற்றமில்லை & செயலும் இல்லை. சாட்சி மாத்திரம்தான்.

🌷பரம்பொருள் சாட்சி மாத்திரம்தான் எனில், உலகை இயக்குவது இறைவனின் ஆற்றலாகிய அன்னை/பெருமாள். உலக இயக்கத்தை, அதில் நிகழும் நிகழ்வுகளை, "அன்னை இறைவனுக்கு நடத்தும் பூசனை" என்று சித்தரித்துள்ளனர். இதையே, காசியம்பதியில், "அன்னை இறைவனுக்கு அளிக்கும் அமுது" என்று சித்தரித்திருப்பர்.

🌷 நாம் காணும் உலகம் நம்முள்ளிருந்து வெளிப்படுகிறது என்ற பேருண்மையைக் கண்டுணர்ந்து உலகுக்கு தெரிவித்தவர் ஜம்பு முனிவர். இத்திருத்தலத்தின் மூலவர். 🌺🙏🏽🙇🏽‍♂️ (தலவரலாற்றில், இவரது வயிற்றிலிருந்து வாய் வழியாக நாவல் மரம் வெளிவருவதாக எழுதியிருப்பர். இங்கு சித்தரிப்பில், இவரது தலைவழியாக வெளிவருவது போன்று காட்டியுள்ளனர்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Monday, May 25, 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு - பாடல் #28: வாலமதி, வாலறிவு, வாலறிவன் - சிறு விளக்கம்

வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை
சீலமுனி வோர்கள் செறியுமலை - காலம்
கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே
அடர்ந்தமலை அண்ணா மலை

-- #அண்ணாமலை #வெண்பா - #28

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸சீல முனிவோர்கள் செறியும் மலை - ஒழுக்கம் நிறைந்த துறவியர்களால் நிறைந்த மலை. ஒழுக்கம் எனில் ஒழுங்கு, நல்லொழுக்கம் போன்ற பொதுவான பொருள்கள் அல்ல. "விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்" என்று பகவான் 🌺🙏🏽 பாடியது போன்ற ஒழுகலாறு! நான் என்ற தன்மையுணர்வை விட்டுவிட்டுக் கருதாமல், ஆற்றின் ஓட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியை போல், விடாது கருதுபவர்கள் என்று பொருள்!!

🔸காலம் கடந்த மலை - நேரம், இடம் போன்ற யோசனைகள் எல்லாம் நமக்கே. இறைவனுக்கு அல்ல. அவர் எல்லாவற்றையும் தாண்டியவர். என்றும் இருப்பவர்.

🔸காலனைக் காலாலே அடர்ந்த மலை - திருக்கடவூர் மார்கண்டேய மாமுனிவரின் 🌺🙏🏽 வரலாறு. மரண பயம் போக்குதல். எனில், மெய்யறிவு வழங்குதல்.

🔸வால மதியை மவுலியின் மேல் வைத்த மலை - பிறைநிலவை தனது முடிமேல் வைத்திருப்பவர். சிவபெருமானின் (மெய்யறிவாளர்களின்) அடையாளங்களில் ஒன்று. #வாலமதி, #வாலறிவு, #வாலறிவன் ("கற்றதனால் ஆய பயனெனன்..." - திருக்குறள், திருவள்ளுவ நாயனார் 🌺🙏🏽) எல்லாம் அவர்களது உள்ள நிலையைக் குறிக்கும் சொற்களாகும். அது என்ன நிலை?

வா என்பது வெளியே வருவதைக் குறிக்கும். வால் என்பது ஒன்றிலிருந்து முளைத்த இன்னொன்றைக் குறிக்கும். முளைத்தது இல்லாமல் ஒன்று தனியாக இருக்க முடியும். ஆனால், அந்த ஒன்று இல்லாமல் முளைத்தது தனியாக இருக்க முடியாது. நாம் காணும் இவ்வுலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைத்தது. மெய்ப்பொருள் இல்லாமல் உலகம் இல்லை. ஆனால், உலகம் இல்லாமல் மெய்ப்பொருள் இருக்கும். இந்த உலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைப்பதை அறிந்தவரே வாலமதியன் - வாலறிவன் - மெய்யறிவாளன் - சிவபெருமான்!!

இந்த வாலமதி/வாலறிவு பலவிதமாக நமது சமயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிலவற்றை இங்கு பார்ப்போம்:

🔹"நாம் காணும் இவ்வுலகம் நமக்குள் இருந்து தோன்றுவது" என்ற செய்தியை ஆன்மிக நூல்களில் படித்திருப்போம். சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். இதன் சொந்தக்காரர் #ஜம்பு #மாமுனிவர் 🌺🙏🏽. #திருச்சி #திருவானைக்கா திருத்தலத்தில் மூலவருக்கு கீழ் சமாதியாகி உள்ளார். இவர் உணர்ந்து வெளியிட்டதை தலவரலாற்று சிற்பமாக, ஓவியமாக அத்திருத்தலத்தில் பல இடங்களில் வைத்திருப்பார்கள். அதில், மாமுனிவர் கூப்பிய கைகளுடன் அமர்ந்திருப்பார். அவரது தலையிலிருந்து ஒரு நாவல் மரம் வெளிப்பட்டிருக்கும். மாமுனிவர் - மெய்ப்பொருள். நாவல் மரம் - காணப்படும் உலகம். (சிற்பத்தில் மீதமிருக்கும் விடயங்கள், மெய்யறிவு கிடைத்த பின்னரும் நடக்கும் போராட்டத்தைக் குறிக்கும்.)

🔹அடுத்து, பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் 🌺🙏🏽. பெருமாள் படுத்திருக்கும் பாம்பணை, அவரை சுற்றியிருக்கும் அன்னையர், முனிவர்கள், கருடன், அனுமன் என அனைவரையும் ஒதுக்கிவிட்டு, பெருமாளையும் அவர் தொப்புளிலிருந்து முளைத்துள்ள நான்முகனை மட்டும் எடுத்துக் கொள்வோம். இப்போது, பெருமாள் மெய்ப்பொருளாவார். அவரிடமிருந்து முளைத்துள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் நான்முகன் உலகமாவார். ஜம்பு மாமுனிவர் நாவல் மரமாக சித்தரித்ததை, வைணவர்கள் தொப்புள்கொடி நான்முகனாக சித்தரித்துள்ளனர்.

🔹உமையன்னை நடனமாடுவது போன்றும், சிவபெருமான் காண்பது / வடக்கிருப்பது போன்றும் உள்ள ஓவியங்களும் இதே வாலறிவைத் தான் குறிக்கின்றன.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽