Wednesday, February 8, 2023

அன்னை அகிலாண்டேசுவரி, திருவானைக்கா 🌺🙏🏽🙇🏽‍♂️



ஒரு சைவ திருக்கோயிலுக்கு வெளியே, இறைவனும் இறைவியும் இரு வேறு பொருட்களை குறிப்பர். ஆனால், ஒரு திருக்கோயிலுக்குள்ளே இருவரும் ஒருவரையே குறிப்பர். வெவ்வேறு வகையாக குறிப்பர்.

திருவானைக்கா என்ற பழம்பெரும் திருக்கோயில் திரு ஜம்பு மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவிடமாகும். திரு ஜம்புலிங்கேசுவரர் என்ற உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் அம்மாமுனிவரையே அன்னையும் குறிப்பிடுகிறார். அதாவது, அன்னையை வணங்கினாலும் ஜம்பு மாமுனிவரை வணங்கியது போலாகும். இதை புரிந்துகொள்வதற்கு மிக எளியதொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

நடிகர் திலகத்தின் மீது பேராவல் கொண்ட அன்பரொருவர், அவரது கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து ஒரு படத்தை தன் வீட்டில் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சிவாஜியை பற்றி அறிந்திராத வெளி மாநில / நாட்டு நபரொருவர் அப்படத்தை காண நேர்ந்து, அது பற்றி அவரிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்?

"இதுதான் நடிகர் திலகம்" என்று சொன்னால் அது "ஜம்புலிங்கேசுவரர்" என்று சொல்வதற்கு சமம்.

"கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடித்த நடிகர் திலகம்" என்று சொன்னால் அது "அன்னை அகிலாண்டேசுவரி" என்று சொல்வதற்கு சமம்.

🌷 ஜம்புலிங்கேசுவரர் - எல்லையற்ற, மாசற்ற, மாறுபாடற்ற, செயலற்ற உள்ளபொருள்

🌷 அன்னை அகிலாண்டேசுவரி - தன்னை அண்டியவரை காத்து (அன்னையின் வலது கை) அருளும் (இடது கை), அன்பே வடிவான (வலதுகையின் மேலுள்ள கிளி) ஜம்பு மாமுனிவர்.

(கிளி என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொள்வதைவிட, அன்பு என்று பொருள் கொள்வதே இங்கு பொருத்தமாகவிருக்கும். "அன்பே சிவம்" என்பது திருமூலர் வாக்காகும். 🌺🙏🏽🙇🏽‍♂️)

நமது திருக்கோயில்களை பின்வருமாறு குறிப்பிடுவர்: அருள்மிகு + அன்னையின் பெயர் + உடனுறை / உடனாய + இறைவனின் பெயர் + திருக்கோயில்

இதை சற்று மாற்றினால்,

> அன்னை + உடனுறை / உடனாய + இறைவன்

> தனித்தன்மை + உடனுறை + பொதுத்தன்மை

> ஜம்பு என்ற தனித்தன்மை உடனுறையும் உள்ளபொருள்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

No comments:

Post a Comment