Sunday, August 16, 2026

குடவாசல் புனைவுக் கதையின் உட்பொருள்


🌷 கருடன் கட்டிய திருக்கோவில் & சுயம்பு இலிங்கம் - அந்த இறைசின்னத்தின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், யாருடைய வழிகாட்டுதலும் இன்றி நிலைபேறு அடைந்தவர். மேலும், கூர்ந்த அறிவுடையவர்.

🌷 கருடனின் அலகு பட்ட தழும்பு - ஏதோவொரு கூர்மையான பொருள் பட்ட தழும்பு.

🌷 தாயின் ஆசை - மனதின் ஆசை. மனதில் தோன்றும் ஆசைகளை நிறைவேற்றத் தொடங்கினால்... 😏 இதற்கு பதிலாக, "அந்த ஆசை யாருக்கு தோன்றியது / எங்கிருந்து தோன்றியது?" என்று கூர்ந்துப் பார்த்தால், எழுந்த ஆசை காணாமல் போய்விடும்; மனமும் அடங்கிவிடும்.

இன்று கருடப்பஞ்சமி என்பதால் இணைப்புப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

🌷 நாகச்சதுர்த்தி - மனதை போற்றும் திருநாள்
🌷 கருடப்பஞ்சமி - அறிவை போற்றும் திருநாள்

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment