Tuesday, March 19, 2019

திருக்குறளை ஆரியர்கள் திரிக்கிறார்களாம்! இவர்கள் வினவுகிறார்களாம்!!

https://www.vinavu.com/2018/12/25/brahmanism-interpretting-thirukural-opinion/

👊 வினவ வேண்டியது தான். மொத்த இந்து சமயமும் தமிழர்களுடையது தான். அதற்கு மேல் ஆரியப் போர்வையைப் போர்த்தி விட்டு தங்களது என்று அவர்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்வதை வினவ வேண்டியதுதான். இதே போன்று சர்ச்சியர்களை வினவுவார்களா?

👊 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையை 2,000 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த தோமையரோடு இணைத்ததுப் பற்றி வினவுவார்களா?

👊 நம் புண்ணிய பாரத மண்ணிற்கே வராமல், இத்தாலியிலேயே வாழ்ந்து இறந்த தோமையர், வள்ளுவருடன் மேற்கு தொடர்ச்சி மலைகளில், ஏ.ஆர். ரகுமானின் முஸ்தபா பாடல் பின்னணியில் ஒலிக்க சுற்றி வந்த போது, வள்ளுவருக்கு மெய்யறிவு கொடுத்தார் என்ற "சோத்துல செங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 நமது #திருக்குறள், மறை நூல்கள் மற்றும் அவர்களது மெய்யறிவாளர்கள் அருளியது என எல்லாவற்றையும் அரைவேக்காட்டாக ஒரு புத்தகத்தில் பதிவு செய்து விட்டு, அந்த அரைவேக்காடுப் புத்தகத்திலிருந்து தான் நமது திருக்குறளும் மற்றும் அனைத்து மறை நூல்களும் தோன்றின என்ற "சோத்துல பாறாங்கல்" நற்செய்தியைப் பற்றி வினவுவார்களா?

👊 குறுக்கையில் அறையப்பட்டிருந்த போது ஞானி யேசு பேசிய சொற்களில் சில தமிழ் சொற்களும் இருக்கின்றன என்று சொன்னால் (அதாவது, அவர் இங்கு வந்து தமிழும் கற்றுக் கொண்டு திரும்பியுள்ளார் என்று சொன்னால்) தமிழை உருவாக்கியதே அவர் தான் என்று "தீர்ப்பை மாற்றிச் சொல்லும்" சுவிசேஷத்தைப் பற்றி வினவுவார்களா?

👊 "கற்றதனால் ஆய பயனென்கொல் #வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்" என்ற திருக்குறளில் வரும் வாலறிவன் (1) என்பது இறைவனை அல்லது இறையை உணர்ந்து இறையாகவே உள்ள மெய்யறிவாளர்களைக் (ஞானிகளைக்) குறிக்கும் என தொல் ஆசிரியர்கள் அனைவரும், இன்றைய ஆசிரியர்கள் சிலரும் பொருள் கூறியுள்ள போது, வேண்டுமென்றே "தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர்" (2) என்று திரித்து பொருள் கூறிய பகுத்தறிவைப் பற்றி வினவுவார்களா?

அந்நிய மதத்தினரும், தேச விரோத சக்திகளும், அமெரிக்க சி.ஐ.ஏ. போன்ற உளவு அமைப்புகளும் வீசிய பொரைகளைக் கவ்விக் கொண்டு, தெரு சந்திப்பில் நின்று கொண்டு, எதுகை மோனையுடன் இந்து சமயத்தை எதிர்த்து குளைத்ததை மக்கள் ரசித்தது ஒரு காலம். இன்று "திருச்சி குலுங்கியது" என்று கிராஃபிக்ஸ் வேலை தான் செய்யவேண்டும்!!

👊👊👊👊👊👊👊👊👊👊

குறிப்புகள்:

1. வா என்பது வெளிவருவதைக் குறிக்கும். வால் என்பது உடலிலிருந்து முளைத்த ஒன்றைக் குறிக்கும். உடல் இல்லாமல் வால் இல்லை. ஆனால், வால் இல்லாமல் உடலால் இயங்க முடியும். இது போன்றது தான் நாம் காணும் உலகம். பரம்பொருளில் இருந்து முளைத்த வால் போன்றது இவ்வுலகம். பரம்பொருள் இல்லாமல் உலகமில்லை. ஆனால், உலகமில்லாமல் பரம்பொருள் இருக்கும்.  இந்தப் பரம்பொருளிலிருந்து (மெய்யிலிருந்து) உலகம் தோன்றுவதை உணர்ந்தவர்களை - வாலை அறிந்தவர்களை - வாலறிவர்கள் என்றனர்!! வால் முளைப்பது மெய்யிலிருந்து. மெய்யாகவே இருப்பவர்களால் தான் வாலை உணரமுடியும். ஆகவே, இவர்களை மெய்யறிவாளர்கள் (ஞானியர்) என்றனர்!! 🌸🙏

இவ்விளக்கத்தின் உருவ வடிவம் தான் திருவரங்கம் அரங்கநாதப் பெருமான். 🌸🙏 பெருமான் தொழிலற்ற பரம்பொருளைக் குறிக்கிறார். பெருமானின் தொப்புளில் இருந்து வால் போன்று கிளம்பும் தாமரையும், அதன் மேல் அமர்ந்திருக்கும் நான்முகனும் உலகைக் குறிப்பர்.

2. இவர்களது அகராதியில் "அறிவில் மூத்த பெருந்தகையாளர்" எனில்...

- 10 வயதில் ஆசிரியையின் இடுப்பைக் கிள்ளியதற்காக செருப்படி வாங்கியவர்,
- வளர்த்த மகளையே மணந்தவர்,
- அக்காள் மகளை  வைத்து தொழில் செய்தவர்,
- திருட்டுத்தனமாக தொடர்வண்டியில் பயணித்தவர்,
- மகளின் தோழியை மடக்கியவர்,
- இலட்சக்கணக்கான தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் போது காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று மெரினாவில் படுத்துக் கொண்டு காற்று வாங்கியவர்

மற்றும் இது போன்ற அறிவார்ந்த செயல்களை செய்தவர் என்று பொருள். 😛

No comments:

Post a Comment