Tuesday, January 16, 2024

விடையை உணவுப்பொருட்களால் ஒப்பனை செய்யலாமா?


விடையென்பது மனமாகும். விடையை அழகு செய்யும் உணவுப் பொருட்கள்: 

- "நான் இன்னார்" என்ற எண்ணம் முதற்கொண்டு, நாம் சேர்த்து வைத்திருக்கும் பற்றுகள்
- நம் மீது மாட்டப்பட்டிருக்கும் உடல்
- நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சிகள்

இப்படி ஒப்பனை செய்யப்பட்ட விடையும், "ஒப்பனை விரும்பி" (அசுரத்தில், அலங்காரப்பிரியர்) என்ற பெயர் பெற்ற பெருமாளும் ஒன்றுதான்!

வருவிருளின் (அசுரத்தில், பிரதோஷம்) போது அனைத்தையும் நீக்குபவர்கள், மாட்டுப்பொங்கலின் போது அனைத்தையும் மாட்டிவிடுகிறார்கள்!! எது சரி?

"பெயர்களும் வடிவங்களும் தொல்லைக்கே" என்பது பகவானது வாக்காகும்!

(இணைப்பு படங்கள்: திருவண்ணாமலை, திரு இரமண நிலையம் & தஞ்சை விடைகள்.)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment