Friday, January 26, 2024

இராமாயணம் = மனம் அடங்குதல்!!


🌷 படத்தின் மேல் பகுதி:

> மனதின் (பெருமாளின்) அடிப்படைத் தன்மை அசைவாகும். அத்தன்மையை மனதிற்கு வழங்குவது இறைவனாகும்!

> உள்ளபொருள் (நமது தன்மையுணர்வு) தன்னொளி கொண்டது. சிவந்த நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள். மனம் தன்னொளியற்றது. கருமை நிறத்தில் காண்பித்திருக்கிறார்கள்.

🌷 படத்தின் நடுப்பகுதி:

> நீரோட்டம் - வையகம்.

> இலங்கை - நீரோட்டத்திலுள்ள திட்டு (அசுரத்தில், தீவு). "நான் இன்னார்" என்ற எண்ணமுள்ள மனிதன்.

மெய்யறிவில் நிலைபெற்றிருப்போர் (மெய்யறிவாளர்கள்) தங்களை படைப்பிலிருந்து வேறாக உணரமாட்டார்கள். ஏனையோர் தம்மை வேறாக, தனிமனிதர்களாக உணர்கிறாரகள். இப்படிப்பட்டவர்களையே இலங்கை என்ற சொல் குறிக்கிறது.

> குரங்குப்படை - எண்ணங்கள்.

மேற்கண்ட "இலங்கை" நிலையிலிருப்போரையே - அதாவது, தன்னை தனிமனிதனாக உணர்பவரையே - எண்ணங்கள் தாக்குகின்றன. மெய்யறிவாளர்களை குரங்குப்படை தாக்காது.

🌷 படத்தின் கீழ் பகுதி:

> இராவணனின் 10 தலைகள் - ஐம்புலன்கள் & ஐந்து உறுப்புகள் - உடல்.

> இராமன் - மனம்.

> உடலின் தொடர்பு ஏற்பட்டவுடனேயே, மனம் தனது குளுமையை / நிம்மதியை (சீதை) இழந்துவிடுகிறது. பின்னர், பல போராட்டங்களுக்குப் பிறகு, இறையருளால் மெய்யறிவாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, தன்னைப் பற்றியும், உடல் & வையகத்தைப் பற்றியும் புரிந்துகொண்டு அமைதியடைகிறது (சீதையை மீண்டும் பெறுதல்).

oOo

இராமாயணம் போன்ற உவமைகள் மிகுந்த கதையை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளவேண்டும். ஓரிடத்தில் இராமன் மனதை குறிப்பார். இன்னொரு இடத்தில் தசரதன் மனதை குறிப்பார். வேறோரிடத்தில் இராவணன் மனதைக் குறிப்பார். இன்னுமொரு இடத்தில் சீதை மனதை குறிப்பார். ஒவ்வொரு காட்சியையும் / நிகழ்வையும் தனித்தனியாக சிந்திக்கவேண்டும்.

ஓர் எடுத்துக்காட்டிற்காக, வாலியின் கதையை பார்ப்போம்.

> வாலி - மனம்
> வாலி பறித்துக்கொண்ட ருமா (சுக்கிரீவனின் மனைவி) - உடல் 
> சுக்கிரீவன் - நல்லறிவு
> மறைந்திருந்து கொல்லும் இராமன் - உள்ளபொருள்
> இராமன் எய்தும் அம்பு - மெய்யறிவு

வாலிக்கும் சுக்கிரீவனுக்கும் நடக்கும் சண்டையென்பது மனதிற்கும் அறிவுக்கும் நடக்கும் போராட்டமாகும். இதே சண்டையை, திருவானைக்கா திருக்கோயிலில் சிலந்தி-யானை சண்டையாக காண்பித்திருப்பார்கள்!

மொத்த இராமாயணத்தை பொருத்தவரை இராமன் மனமெனில், இவ்விடத்தில் உள்ளபொருளாகிறார்!

இராமாயணத்தை ஒரு MCU-வாக (Marvel Cinematic Universe) வைத்துக்கொண்டால், அதில் வரும் தசரதன், இராமன், குரங்குகள் கதைகளை MCUவில் வரும் Iron Man, Thor, Dr Strange போன்ற கதைகளாக கொள்ளலாம். ஒவ்வொன்றிலும் கதாபாத்திரங்கள் & சூழ்நிலைகள் வெவ்வேறாக இருக்கும். ஆனால், ஒரே கரு தானிருக்கும். MCUவில், தீயது அழிதல்; இராமாயணத்தில், மனம் அழிதல் / மனம் அமைதியடைதல்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment