Sunday, January 28, 2024

திரு இரமண நிலையத்தில் இராமன் வழிபாடு நடந்துள்ளது!! 😔


மெய்பொருளுக்கு உள்ளபொருள் என்று பெயரிட்ட மாமுனிவரின் நிலையத்தில், அல்லாத பொருளுக்கு வழிபாடு!! 😔

💥 பகவான், தனது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தியது - அசைவற்ற நிலை (நிலைபேறு).

இராமனின் வடிவம் உணர்த்துவது - அசைவு (அலைபேறு).

பகவானின் நிலைப்பாட்டிற்கு நேரெதிர் நிலைப்பாட்டினை உணர்த்தும் ஒரு வடிவத்தை, அவரது நிலையத்தில் வைத்து, வழிபடலாமா?

💥 பௌத்தம் போற்றும் சூன்ய நிலையை பற்றிய உரையாடலின் போது, "அது இருளல்ல. அவ்விருளை காண்பவன் ஒருவன் இருக்கிறான். அதுவே ஒளி." என்று அருளினார். எனில், இருளை போற்றும் / முன்வைக்கும் வைணவத்தின் இறைவடிவத்தை, ஒளியை மட்டும் போற்றியவரின் திருக்கோயிலில் வைத்து, வழிபடலாமா? (வைணவத்தின் வேர் அம்மன் வழிபாடாகும். வைணவர்களின் வேர் பௌத்தமாகும்.)

💥 இராமனின் வடிவத்தை 2 வகையாக ஆராயலாம்:

🔸 கறுப்பு உடல் & அவ்வுடலை போர்த்திய காவி / மஞ்சள் / வெள்ளை ஆடை

பொருள்: இருளிலிருந்து ஒளி பிறந்தது. அல்லது, இருளுக்குள் ஒளி அடக்கம்.

🔸 மேல் பாதி கறுப்பு நிறம் & கீழ் பாதி காவி / மஞ்சள் / வெள்ளை நிறம்

பொருள்: இருள் மேலானது. ஒளி கீழானது.

அறிவிலிருந்து அறிவற்றது பிறந்ததா? அறிவற்றதிலிருந்து அறிவு பிறந்ததா? அறிவு மேலானதா? அறிவற்றது மேலானதா?

"நாமுலங் காண்டலால்..." என்ற செய்யுளை அருளியவரின் நிலையத்தில் வைப்பதற்கே ஏற்புடைய வடிவமில்லாத போது, எப்படி அதற்கு வழிபாடு நடத்தலாம்?

💥 இராமன் என்ற வடிவத்துடன் சேர்க்கப்பட்டிருக்கும் யாவற்றையும் (பெருமாளின் திருவிறக்கம், இன்னாரின் மகன், இன்னார் உடன்பிறந்தோர், இராமன் என்ற பெயர்....) நீக்கிவிட்டுப் பார்த்தால், அது அன்னை மாயையின் ஆண் வடிவமென்பது புலப்படும். எதை காமாட்சி, வெண்ணெய் திருடிக் கண்ணன் என்றழைக்கிறோமோ, அதுவே இங்கு வில்லேந்திய இராமனாகிறது. இராமனின் அம்பு... பற்றுகளை தோற்றுவிக்கும் கணையாகிறது!

பற்றுகளை அறுத்தெறிவதற்கு வழிகாட்டிய பெருமானின் நிலையத்தில், பற்றுகளை தோற்றுவிக்கும் வடிவங்களை வைத்து, வழிபாடு செய்யலாமா?

oOo

இராமனும் கண்ணனும் அவர்களுடைய இனமாக இருக்கலாம். அல்லது, அவர்கள் படைத்த கதாபாத்திரங்களாக இருக்கலாம். அல்லது, இம்மண்ணின் மைந்தர்கள் படைத்ததை, அவர்கள் தங்களுடையதாக்கி இருக்கலாம். எப்படியானாலும், இன்று வரை, இராமனும் கண்ணனும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். எனில், அவரவர் இல்லங்களில், அல்லது, வேறு ஏதாவதொரு இடத்தில் வைத்து, வழிபாடு செய்து கொள்ளலாம். திரு இரமண நிலையத்தில் வைத்து, வழிபாடு செய்வது தவறாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment