Thursday, April 28, 2016

மேக்நாட் சாகா - புதிய மொந்தை தயார்!!

இவ்வளவு நாள் அம்பேத்கர், அம்பேத்கர் என்று மீட்டரை ஓட விட்டாயிற்று. தொடர்ந்து வண்டி ஓட வேண்டுமென்றால், புதிய மொந்தைக்கு மாறியாக வேண்டும். அந்த புதிய மொந்தை தான் மேக்நாட் சாகா! 😛


(தினமலர் - சென்னை - 24/04/2016)

சாகா வாழ்ந்த காலம் வேறு. இன்றைய காலம் வேறு. சாகா நியாயமானவராக இருந்து, இன்று இருந்திருந்தால் தன் தலையை தொங்கவிட்டிருப்பார் - ஆட்சி & அதிகாரம் அவர்கள் கைக்குச் சென்றும் காட்சி மாறாமல் இருப்பதைக் கண்டும் மற்றும் அவர் போற்றிய "நவீன" அறிவியலின் விளைவுகளைக் கண்டும்!!

இன்று, "நவீன அறிவியலின் விளைவுகள் என்ன?" என்று கேட்டால் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட பதிலளிப்பர்....

💥 உலகை வெப்பமாக்கியது
💥 மண்ணை மலடாக்கியது
💥 புவியை குப்பைமேடாக்கியது
💥 சுற்றுபுறசூழலைக் கெடுத்தது
💥 தாய்பால் முதற்கொண்டு அனைத்தையும் விஷமாக்கியது
💥 தவறான வாழ்க்கைமுறையால் வியாதிகள் பெருகியது, மனநலம் குன்றியது
...
...

🌋 "வேதத்தில் நவீன அறிவியலின் மூலக்கூறுகள் எங்குமே காணப்படவில்லை" என்று சொல்லியிருக்கிறார். வேதங்களுக்கு தமிழில் திருமறைகள் என்று பெயர். செய்திகளை மறைத்து வைத்ததால் மறைகள் என்று பெயர். வேதம் படித்த சாஸ்திரிகளை அமெரிக்க நாசா நிறுவனம் பணியில் வைத்துள்ளது. ஏனெனில், அண்டத்தைப் பற்றி, அணுவைப் பற்றி, வானவியலைப் பற்றி அவ்வளவு செய்திகள் வேதத்தில் உள்ளன.

"கடவுள் துகள்" எனும் ஹிக்ஸ் - போசான் துகளை ஆராயும் CERN நிறுவனத்தின் வாசலை அலங்கரிப்பது நம் நடராஜ பெருமான். இவரை ஆடல்வல்லான், பரதத்தின் தலைவர் என்று தான் பெரும்பாலானோர் அறிவர். ஆனால், இந்த உருவம் குறிப்பது அண்டத்தின் இயக்கத்தை!!

அடுத்து, விஸ்வாமித்ர மகரிஷியைப் பார்ப்போம். இவர் திரிசங்கு சொர்க்கத்தைப் படைத்தவர் என்று படிப்போம். பகுத்தறிவு'வியாதி'களும் அறிவுஜீவிகளும் இதை புருடா என்பர். 😂 உண்மையில் இவர் ஒரு சிறந்த வானவியலாளர். கோள்களையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்தவர். இவர் ஆராய்ந்த நட்சத்திரங்களில் ஒன்று திரிசங்கு. இது மற்றவற்றிலிருந்து முழுதும் வேறுபட்டிருந்தது. இதன் இயக்கம் தலைகீழாக இருந்தது. இதனால் தான் திரிசங்கு சொர்க்கம் தலைகீழாக உள்ளது என்பர். மேலும், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் 108 பூமிகள் மற்றும் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் 108 சந்திரன்கள் என்று "நவீன"அறிவியலின் எந்த கூறுகளும் இன்றி தன் உள்ளுணர்வில் உணர்ந்து கூறியவர். 😉

இப்படி சொல்லிக் கொண்டே போகலம். ஒரு நிறக்குருடனால் சிவப்பு நிறத்தை காண இயலவில்லை என்பதால் சிவப்பு நிறமே இல்லை என்று முழங்குவது தவறு.

இன்னொரு கேள்வி எழலாம். இவ்வளவு உண்மைகளையும் ஏன் மறைத்து வைத்தார்கள்? ஒரளவு நம்மிடமிருந்து தெரிந்து கொண்ட பரங்கியனால் உலகம் இன்று குப்பை மேடாகியுள்ளது. இதுவே மிலேச்சனாக இருந்திருந்தால் இந்நேரம் உலகம் அழிந்தே போயிருக்கும்!! ஆகையால், சரியான மனிதர்களுக்கு சரியான தருணத்தில் தேவையான அளவு இவ்வுண்மைகள் உணர்த்தப்படும் என்பது மகான்களின் வாக்கு.

🌋 நமது பஞ்சாங்கத்தை சாடியிருக்கிறார்.

பஞ்சாங்கம் நமது முன்னோர்களின் வானவியல் அறிவுக்கு சிறந்த சான்று. "நவீன அறிவியலின் கூறுகள்" ஏதுமின்றி நம் முன்னோர் எப்படி இவற்றைக் கண்டறிந்தனர் என்று நம்மை பிரமிக்க வைக்கும் ஆச்சர்யப் பெட்டகம்!! 😉

இன்றைய வானிலைத்துறை போன்றது அன்றைய பஞ்சாங்கம். பயணம், விவசாயம், வியாபாரம், போர் என பல பணிகளுக்கு உதவியது.

எவ்வாறு, நவீன அறிவியலும், நவீன மருத்துவமும் தவறான மனிதர்களின் கையில் சிக்கி உலகை இன்று சீரழித்துள்ளதோ, அவ்வாறே இந்த பஞ்சாங்கம் சுயநலம் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்ட சிலரிடம் சிக்கிக்கொண்டு தன் மதிப்பை இழந்துவிட்டது. 😑

🌋 நமது சாதி அமைப்பை வெகுவாக சாடியிருக்கிறார். ஏனெனில், அதனால் அவருக்கு ஏற்பட்ட தலைகுனிவுகள் மற்றும் அவர் கண்ட / அனுபவித்த கொடுமைகள்.

"சாதி" என்ற வார்த்தையின் சரியான பொருள் "தன்மை". இது, ஆரம்பத்தில் பிறப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அவரவர் செய்யும் தொழிலையும், அறிவுத்திறனையும் மற்றும் குணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. இன்றைக்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னால், குப்தர்கள் உச்சத்திலிருந்த போது இது பிறப்பு அடிப்படைக்கு மாறியது. அதாவது, தாழ்த்தப்பட்டவரின் மதங்கள் எனப்படும் சமணமும் பெளத்தமும் உச்ச நிலையில் இருக்கும் போது!

இவர்கள் உச்சத்தில் இருக்கும் போது, ஆட்சி அதிகாரம் கையிலிருக்கும் போது எப்படி மற்றவர்களால் அன்று வரை கடைபிடிக்கப்பட்ட ஒன்றை அடியோடு மாற்றியிருக்க முடியும்? இவர்கள் தான் மாற்றியவர்கள் என்பது என் கருத்து!!

ஏன் மாற்றியிருப்பார்கள்? இதற்கு விடையாக இன்றைய நிலையை சிறிது பார்ப்போம்.

இடஒதுக்கீட்டை மட்டுமே வைத்துக்கொண்டு மேலே வரும் ஒருவர், மேலே வந்தபின் மனநிறைவு அடைவதில்லை. ருசி கண்ட பூனையாகிறார். தனக்கு கிடைத்தது தன் வாரிசுகளுக்கும், பின்னர் தன் சுற்றத்தார்க்கும், தனது இனத்துக்கும் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார். இவர் பேராசைப் பிடித்தவராயிருப்பின் மேற்சொன்ன வரிகள் சிறிது மாறும்: தனக்கு மட்டும், தன் வாரிசுகளுக்கு மட்டும், ... என மாறும். இதை சமூகநீதி என அழைப்பார். காலம் மாறும். வேறொரு இனம் மேலெழும்பும். அது இவர் செய்ததையே செய்யும். இவர் மிதிபட வேண்டி வரும். அன்று சமூகஅநீதி எனப் பொங்குவார். 😉😀

சமண பெளத்த காலத்தில் கிடைத்த வாய்ப்புகள் தங்களுக்கே, தங்களுக்கு மட்டுமே என்ற பேராசையால், சாதிப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படைக்கு மாற்றியிருப்பார்கள். அதன் விளைவுகளை இன்று வரை இந்த நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. 😑

சமூகம் எப்போதும் முக்கோண வடிவில் தான் இருக்கும். மேலிருப்பது கீழிருப்பதை அமுக்கும். கீழிருப்பது மேலிருப்பதைக் கண்டு பொருமும். இது மாற வேண்டுமானால், பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும். முக்கோணம் நியாயத்தை அடிப்படையாகக் கொண்டு அமையவேண்டும். மக்கள் தொகை வெகுவாகக் குறையவேண்டும். மேற்கத்திய வாழ்க்கை முறையை வேறோடுப் பிடுங்கி எறியவேண்டும். சுயசார்பு வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பவேண்டும் - அவரவர் உணவை அவரவரே உற்பத்தி செய்ய வேண்டும்; அவரவர் கழிவை அவரவரே பராமரிக்க வேண்டும்.

"எவ்வளவு தூரம் ஒருவன் தன் வேலைகளை தானே செய்யாமல் பிறரை வைத்து செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் அவன் பெரிய ஆள் " எனும் குப்பையான அளவுகோலை பிடித்துக் கொண்டிருக்கும் இந்நாட்டில் (😂) இத்துணை மாற்றங்கள் ஏற்பட வேண்டுமெனில், அட்டமா சித்திகளுடன் ஒருவர் தோன்றினால் தான் உண்டு! அதுவரை, சில காலம் ராமன்களும் பாபாக்களும் சாகாக்களையும், சில காலம் சாகாக்கள் ராமன்களையும் பாபாக்களையும் மதித்துக் கொண்டுதான் இருப்பர்!!! 😔

🌋 சாகா இந்து சமயத்தை மட்டும் சாடினாரா அல்லது அது போன்றொரு மாயையை உருவாக்க முனைகிறார்களா தெரியவில்லை.

மிலேச்ச மதம், அதன் 1400 ஆண்டு கால வரலாற்றைப் பார்த்தால், பெண்களை அடிமைப்படுத்த வேண்டும், புனிதப்போர் என்ற பெயரில் உழைக்காமல் மற்றவரை கொள்ளையடித்து வாழ வேண்டும் என்ற 2 கொள்கைகளுக்காகவே உருவாக்கப்பட்டது எனத்தோன்றும். மேலும், இதன் ஷியா, சன்னி, அகமதியா பிரிவுகளுக்குள் நடக்கும் சண்டைகளும், IS காட்டுமிராண்டிகள் யாசிடி இனத்தவருக்கு இழைக்கும் கொடுமைகளும், தலாக்கை SMS / WhatsApp / eMail வழியாகக் கூட ஒரு ஆண் தெரிவிக்கலாம் என்கிற "வசதியும்" அனைவரும் அறிந்ததே.

இவர்களுக்கு பரங்கியர் எவ்விதத்திலும் சளைத்தவரல்லர். உலகைப் பிடித்த பீடைகள்! இன்று உலகம் குப்பைமேடாகி அழிந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் இவர்களே. இதுவரை தோன்றிய இனங்களுள் எந்த இனம் அதிக பேரைக் கொன்றிருக்கிறது என்றால் அது பரங்கி இனமே. ப்ளேக் நோய் கூட இரண்டாம் இடத்தை தான் பெறும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான் என அனைத்து நாடுகளிலும் சேர்த்து இவர்கள் கொன்றது சுமார் 10 கோடி மக்களாகும். அமெரிக்க மண்ணில் மட்டும் இவர்கள் கொன்ற செவ்விந்தியரின் எண்ணிக்கை 1.5 - 5.0 கோடிகளாகும். கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்து இவர்கள் அரங்கேற்றிய அவலங்கள் இன்று IS காட்டுமிராண்டிகள் யாசிடி இனத்தவருக்கு இழைக்கும் கொடுமைகளுக்கு நிகராகும்.

💮💮💮

ஏற்கனவே சொன்னது போல், சாகாவின் காலம் வேறு. இன்றைய காலம் வேறு. மேலும், பெரும்பாலான இந்துக்களைப் போல், சாகாக்கும் இந்து சமய உண்மைகளைப் பற்றியும் அதன் புனித நூல்களைப் பற்றியும் முழுமையான சரியான ஞானம் இல்லை.

எனக்கென்னவோ, எப்போதும் நாம் முழித்துக் கொள்ளக்கூடாது, தாழ்வு மனப்பான்மையுடனே வாழ்ந்து சாகவேண்டும், நம் சமயமும் நாடும் மீண்டும் உன்னத நிலையை அடைந்து விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெறியுடன் திரியும் அந்நிய சக்திகளும் அதற்கு உதவும் உள்ளூர் கருங்காலிகளும் தான் இது போன்ற வெளியீடுகளுக்கு பின்னே உள்ளனர் என்று தோன்றுகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு பெளத்தரிடம் இதைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்த போது, அவரது ஜப்பானிய குரு கூறினதாக கூறினார்: பாரதம் கணக்கிலடங்கா புண்ணியம் பெற்ற பூமி. அந்த புண்ணியமே இதுவரை அதனைக் காத்துள்ளது. இனியும் காக்கும். அது மீண்டும் நிமிர்ந்து நிற்கும். மறுபடியும் உலகுக்கு வழிகாட்டும்!! 👏👍

அந்த குருவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மையாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நம்புவோமாக!

என்றும், வாய்மையே வெல்லும்!! 🔯

posted from Bloggeroid

No comments:

Post a Comment