Tuesday, April 26, 2016

குப்பையை மட்டும் கற்போம்!!


(தினமலர் - சென்னை - 27/04/2016)

💥 இந்தியாவைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 உலகம் உருண்டை என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 சூரியனை பூமி சுற்றுகிறது என்று கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பூவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 இருதயம் தான் உடலின் அனைத்துப் பகுதிக்கும் ரத்தத்தை அனுப்புகிறது என்று கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 காட்டாற்று வெள்ளத்தில் அணைக்கட்ட உலகுக்கு சொல்லிக் கொடுத்தது பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 கேப்பில்லரி விசையைக் கண்டறிந்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 ஆங்கிலம் தமிழைக் கொண்டு செம்மையாகவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போன்ற ஞானிகள் இங்கு வந்து கற்கவில்லை.
🙇 ஆமென்.
💥 யேசுநாதர் போதித்தது அத்தைவதமல்ல.
🙇 ஆமென்.
💥 பரங்கி நாடுகள் மட்டுமே மோதிக் கொண்டாலும் அது உலகப்போர்.
🙇 ஆமென்.
💥 கரியையும் உப்பையும் வைத்து பல் துலக்க உலகுக்குச் சொல்லிக் கொடுத்தவன் பரங்கியன்.
🙇 ஆமென்.
💥 பாலம் கட்டும் தொழில்நுட்பத்தை தமிழனிடமிருந்து பரங்கியன் கற்கவில்லை.
🙇 ஆமென்.

இப்படியாக, "ஆமென்" தொழில் சிறந்த முறையில் நடக்க வேண்டுமெனில், நமது அறிவுசெல்வங்களைப் பற்றி சரியாக தெரிந்துகொள்ளாமல் நாமே நம்மை எள்ளி நகையாடவேண்டும்.

என்ன, சரி தானே? 😉

posted from Bloggeroid

No comments:

Post a Comment