Sunday, April 24, 2016

ஆதிசங்கரரையே மிஞ்சிய உலகநாயகன்!

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து ... ஆதிசங்கரரையே மிஞ்சினார் உலகநாயகன்! 😉

அடுத்த வசனம்: யார் சார் நீங்க? (அ) Who are you, man? (அமெரிக்கனாக இருப்பின்) 😂


(The Hindu - சென்னை - 24/04/2016)

இச்செய்தியில் கட்டமிட்டுக் காட்டப்பட்ட பகுதியின் தமிழாக்கம்: "கனவு காணுங்கள் என்று எல்லோரும் சொன்ன காலம் உண்டு. ஆனால், இப்போது நான் கனவிலும் விழிப்பு நிலையில் இருக்க முயற்சிக்கிறேன். இந்த நிலையைப் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார்".

"இதில் சர்ச்சைக்குரிய செய்தி என்ன?" என்று கேட்கலாம். இப்போது, இதை வேறு விதமாக சிறிது மாற்றிப் பார்க்கலாம்...

🌋 "நானும் எனது தந்தையும் ஒன்றே என்று உணர்கிறேன். இதே போன்று 2000 ஆண்டுகளுக்கு முன்னர் யேசுநாதரும் உணர்ந்து கூறினார்."

🌋 "மனிதன் புரியும் சிறந்த புனிதப்போர் என்பது அவன் தன்னை வெல்வதே. 1370 ஆண்டுகளுக்கு முன்னர் முகம்மது நபியும் இவ்வாறு கூறினார்."

இப்படிப் பேசியிருந்தால், ஒன்று படவாய்ப்புகள் இல்லாமல் போயிருக்கும் அல்லது உடம்பில் ஏதாவது ஒரு அங்கம் காணாமல் போயிருக்கும். ஆனால், அவர் ஒப்பீட்டிற்கு குறிப்பிட்டது ஆதிசங்கர பெருமானை. சொரணை கெட்ட இந்துக்களுக்குப் புரியவா போகிறது? அப்படியே புரிந்தாலும் இது Sickular நாடு. மேலும், இந்துக்கள் உலக சிறுபான்மையினர் தான். என்ன செய்துவிடமுடியும் அவர்களால்? 😠

ஆதிசங்கரர் தொடங்கி பகவான் ஸ்ரீரமணர் வரை படித்துவிட்டு, ஏதோ இவர் அந்த நிலையை சுயம்புவாக அறிந்தது போன்று பேசுகிறார். 😤

சாதாரணமாக பரங்கியர் தான் நம்மிடமிருந்து அறிந்து கொண்டு, அதற்கு வேறு பெயர் வைத்து தாமே கண்டுபிடித்தது என்று அறிவிப்பர். உலகநாயகனும் பரங்கியர் நிலைக்கு முன்னேறிவிட்டார். இன்னும் முன்னேறுவார். ஏனெனில், இவர் "அதுக்கும் மேல" ஜாதியாயிற்றே. 😝

இவர் அடைய முயற்சிக்கும் நிலைக்கு துரியம் / வீடுபேறு / ஞானம் / முக்தி என பல பெயர்கள் உண்டு. இந்த அருமையான பெயர்களையே உபயோகிக்கலாமே. அப்படி செய்தால் இந்து என்று முத்திரை குத்துவார்களே. அறிவுஜீவி என்ற பட்டம் போய்விடுமே. இந்துக் கடவுள்களை கிண்டலடிக்கும் கருங்காலி வேலையும் செய்ய முடியாதே. "அதுக்கும் மேல" என்று படமும் காட்டவேண்டுமே. ஆகையால், உலகமயமாக்கக் காலத்தில் உலகநாய ஆதிசங்கரரையே மிஞ்சினார் உலகநாயகன்! கன் உலக கொள்ளையர்களான பரங்கியரின் வழிப்பற்றி, இன்று "கனவிலும் விழித்திருக்க" என்று மட்டும் சொல்லியிருக்கிறார். நாளை அந்நிலைக்கு அருமையான பெயர் வைப்பார். பின்னர், ஹார்வார்டு பல்கலைகழகத்தில் வகுப்பெடுப்பார்!!!

😂😂😂😂😂

posted from Bloggeroid

No comments:

Post a Comment