Wednesday, April 6, 2022

தொல்காப்பியத்தை ஹங்கேரி அறிஞர் புகழ்ந்தாராம்! -- செய்தி


ஊழியம் தொடங்கிவிட்டது என்று தோன்றுகிறது!

பாரதத்திற்கு வந்தேயிராத ஒருவரோடு
நம் வள்ளுவப் பெருந்தகையை தொடர்புபடுத்தி, திருக்குறள் பொய்பிளை பிரதிபலிக்கிறது என்று சுவிசேஷம் செய்து, திருவள்ளுவருக்கு பாவாடை மாட்டிவிடப்படும் ஊழியம் நடந்துகொண்டிருப்பதை வைத்துப் பார்த்தால் ...

👊🏽 நாளை, தொல்காப்பியர் ஏதாவது சில உரோமானிய, கிரேக்க காட்டுமிராண்டிகளின் மாணவர் என்ற செய்தி வெளிவரும்.

👊🏽 தொல்காப்பியத்தில் பீட்டரின் (ஆங்கிலம்) இலக்கணம் பின்னிப்பிணைந்திருப்பது கண்டுபிடிக்கப்படும். 

👊🏽 தொல்காப்பியத்திலுள்ள "சிவணுதல்" போன்ற சொற்கள், இட்லிகூட வேகவைக்க உதவாத, பரிசுத்த ஆவியைக் குறிப்பதாக அறியப்படும். 

👊🏽 "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்ற சொற்றொடரில் பிழை அறியப்பட்டு, "எல்லாச் சொல்லும் ஊழியம் குறித்தனவே" என்று மாற்றப்படும். 

👊🏽 இறுதியில், ஊழியத்திற்காக உருவாக்கப்பட்ட மொழிதான் தமிழ் என்ற சுவிசேஷம், வானவரால் இந்த ஹங்கேரி புனிதருக்கு உணர்த்தப்படும். 

👊🏽 ஹங்கேரி புனிதரின் மொழிபெயர்ப்பு மூலநூலாக்கப்படும். 

👊🏽 அந்த மொழிபெயர்ப்பு நமது பாடதிட்டங்களில் நுழைக்கப்பட்டு, பகுத்தறிவு காக்கப்படும். 

👊🏽 உண்மையான தொல்காப்பியம் கோவிந்தாவாக்கப்படும்.

ஐய்யோமென்!! 😂

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

No comments:

Post a Comment