Thursday, April 14, 2022

அண்மையில், உலக நன்மைக்காக, சிருங்கேரியில் 10,008 தாமரை மலர்கள் கொண்டு சிவப்பரம்பொருளை பூசித்தனர் -- செய்தி

பூசைக் காணொளி: https://youtube.com/shorts/yk5NybOTgxg?feature=share

10,008 தாமரை மலர்கள் என்ன, 10,00,00,008 மலர்கள் கொண்டு பூசித்தாலும், பூசையின் பொருள் புரியாவிட்டால் எந்த பயனுமில்லை!

🌷 பூ - நமக்கு தோன்றும் எண்ணம்

🌷 மலர்ந்து விரிந்த தாமரைப்பூ - பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்படும் "நான் யார்?" போன்ற நுட்பம் / அவர்கள் காட்டிய வழி

பகவான் போன்ற எண்ணற்ற மெய்யறிவாளர்கள் தோன்றி, இறைவனை அடைய எண்ணற்ற வழிகளை காண்பித்துள்ளனர். அவை யாவும் நம்மை அழைத்துச் செல்வது ஓர் இறையிடமே! இதுவே, 10,008 தாமரை மலர்களால் சிவப்பரம்பொருளுக்கு நடத்தப்படும் பூசையின் உட்பொருளாகும்.

எல்லா வழிகளும் ஓர் இறையிடமே அழைத்துச் செல்லும் என்பதை புரிந்துகொண்ட பின்னர், நமக்கேற்ற மெய்யாசிரியரிடம் தஞ்சமடைந்த பின்னர், அவர் காட்டிய வழியில் நம்பிக்கையுடன் பயணிப்பதே இந்த பூசையின் உட்பொருளை உணர்வதால் விளையக்கூடிய பயனாகும்.

oOOo

ஏன் இந்த பூசையை "உலக நன்மைக்காக" நடத்தியுள்ளனர்?

மதங்களின் பெயரால், குறிப்பாக பாலைவனப் பகுதியில் தோன்றிய 2 மதங்களால், உலகம் பேரழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதை தடுத்து, உலகை அமைதிப் பாதைக்கு திருப்பும் முயற்சியே இந்த பூசை. இறையுருவத்தின் மேல் விழும் ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு வழியைக் குறிக்கும். "எல்லா வழிகளும், இறுதியில், அழிவற்ற பரம்பொருளிடம் கொண்டுசேர்ப்பதால், எல்லோரும் அவரவர் வழியில், நம்பிக்கையுடன், அமைதியாக பயணிப்பதே எல்லோருக்கும் சிறந்தது" என்ற செய்தி எல்லோரையும் சென்றடைந்திடவே இந்த பூசையை நடத்தியுள்ளனர்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment