Sunday, January 9, 2022

சபரிமலையில் செலுத்தப்படும் நெய் தேங்காய் காணிக்கை - சிறு விளக்கம்


"சபரிமலை வரலாற்றில் முதன்முறையாக 18,000 நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டன" -- செய்தி.

18 ஆயிரமென்ன, 18 கோடி நெய் தேங்காய்களை உடைத்தாலும் பொருள் புரியாமல் செய்வதால் பயனில்லை.

எவ்வாறு "விளக்கேற்றுதல் எனில் தன்னலமற்று வாழ்தல்" என்ற பொருள் புரியாமல் 108, 1008, 10008, 100008 என எத்தனை விளக்குகள் ஏற்றினாலும் பயனில்லையோ, அவ்வாறே பொருள் புரியாமல் நெய் தேங்காய்களை உடைப்பதுமாகும்.

🔸 தேங்காய் - நமது தலை
🔸 தேங்காய்க்குள் நிரப்பப்படும் நெய் - நமது மூளை - நமது சிந்தனை
🔸 தேங்காயை உடைத்து நெய்யால் மூலவரை முழுக்குவது - நமது ஆணவத்தை ஒழித்து, சிந்தனையை இறைவனது திருவடிக்கு உரித்தாக்குவது. அதாவது, சித்தத்தை சிவன்பால் வைப்பது. அல்லது, சித்தமெல்லாம் சிவமயமாக்குவது.

இதை ஒரு முறைதான் செய்யமுடியும். ஆணவமழிந்தால் தானாகவே சித்தம் சிவமயமாகிவிடும். 18,000 முறை எப்படிச் செய்யமுடியும்?

நெய் தேங்காய் சடங்கின் உட்பொருள் மறந்து போனதால் வந்த விளைவு இது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment