Friday, February 2, 2024

யார் நல்லவர்? இராமனா இராவணனா?


திரு இராமேச்சுரத்தை சுற்றியுள்ள பல திருக்கோயில்களில், "[பேரரசர்] இராவணனை கொன்றதினால் தன்னை பிடித்துக்கொண்ட 'பிரம்மஹத்தி' (மனநோய்) விலகுவதற்காக, இராமன், இங்கு சிவலிங்கம் நிறுவி, வழிபட்டார்" என்று எழுதி வைத்திருப்பார்கள்...


> பிரம்மம் - உள்ளபொருள்

> பிரம்மஹத்தி - உள்ளபொருளை உணர்ந்த மெய்யறிவாளரை (பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றோரை) கொல்பவன்.


எனில், இராவணன் ஒரு மெய்யறிவாளராகிறார்! அவரை கொன்றதால் இராமன், பிரம்மஹத்தி ஆகிறார்!!


ஒரு மெய்யறிவாளர் பிறன்மனை நோக்குவாரா? நோக்கமுடியுமா? உண்மையில், யார் நல்லவர்? யார் தூற்றப்படவேண்டியவர்?


வடக்கிலிருந்து வந்த அத்தனையுமே புருடா, பொய், பித்தலாட்டம், ஏமாற்று வேலை, நயவஞ்சகம், நச்சு... இராமன் கதைமட்டும் விதிவிலக்காகிவிடுமா?


மெய்யியல் அடிப்படையில், இராமன் என்பது மனம், இராவணன் என்பது உடல் & இராமாயணம் என்பது மனம் அடங்குதல். வரலாற்று அடிப்படையில்... 😏


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment