Thursday, February 1, 2024

போச்சு! நம்ம ஜி-க்கு போட்டியாளர் வந்துட்டார்!! 😁


💥 சாப்பிடாமல் இருப்பதற்குப் பெயர் பட்டினி கிடப்பது. நோன்பல்ல (அசுரத்தில், விரதமல்ல).

🌷 நோன்பு எனில் உண்ணாமல் இருப்பதுடன், இறைசிந்தனையும் இருக்கவேண்டும்.

🌷 உண்ணாமல் இருப்பது எனில் உடலுக்கான உணவை உண்ணாமல் இருப்பதல்ல. மனதில் தோன்றும் எண்ணங்களையும், நம் கண் முன்னே விரியும் வையகக் காட்சிகளையும் சட்டை செய்யாமல் இருப்பதாகும்.

🌷 இறைசிந்தனை எனில் பொருள் புரியாமல், பாடல்களை, செய்யுள்களை, இறைவனின் திருப்பெயர்களை உருட்டிக் கொண்டிருப்பதல்ல. அல்லது, இறைவனை எங்கோ இருப்பதாக கற்பனை செய்துகொண்டு, அவ்விடத்தையும், அவரது வடிவத்தையும் சிந்தித்துக் கொண்டிருப்பதல்ல. நான் எனும் நமது தன்மையுணர்வை (உள்ளபொருளை) இடைவிடாது பற்றிக் கொண்டிருப்பதாகும்!

🌷 கண் எப்படி தன்னையே பார்க்கும்? நாம் எப்படி நம்மையே பற்றிக் கொண்டிருக்க முடியும்?

பகவான் திரு இரமண மாமுனிவரின் பதில்:

தானாய் இருத்தலே தன்னை அறிதலாம்  
தான் இரண்டற்றதால் உந்தீபற 
தன்மய நிட்டையீது உந்தீபற

🌷 "சும்மா இரு" என்ற பேரறிவுரையின் விளக்கமும் இதுவேயாகும்.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼

No comments:

Post a Comment