Tuesday, March 15, 2016

நமக்கு நாமமே!!


பரங்கி நாடுகளில் மருத்துவ செலவு அதிகம் என்பதால், மருத்துவ சுற்றுலா என்னும் பெயரில் சிகிச்சைக்காக நம் நாட்டிற்கு வரும் பரங்கியர்களின் ஏண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிறது. அதாவது, பரங்கியனின் பணம் நமக்கு வருகிறது.

இது, அவனை ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கும்: "கருப்பனின் பணம் தான் நமக்கு வரவேண்டும். நம் பணம் அவனுக்குச் செல்வதா?". 😕

🌋 விளைவு புகழ் பெற்ற (எதற்கு புகழ்? நமது அறிவுச் செல்வங்களை சுடுவதிலா? 😀) கிங்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வருகிறது.
🌋 அடுத்துப் புகழ் பெறாததும் வரும்.
🌋 பரங்கி பணம் இனி அங்கே செல்லும்.
🌋 அடுத்து, ஒண்டிய பிடாரி ஊர் பிடாரியை விரட்டும்.
🌋 கருப்பனின் பணமும் அங்கேயே செல்லும்.
🌋 அடுத்தக் கட்டமாக, சென்ற காலனியாதிக்கக் காலத்தில் மிச்சம் வைத்ததை திருடும் படலம் ஆரம்பிக்கும்.
🌋 இறுதியாக, மிச்சமிருக்கும் நமது கலாச்சாரம், மொழி, சமயம், அறிவு என அனைத்தையும் அழிக்க முற்படுவர்.
🌋 போராட்டங்கள் சமாளிக்க முடியாமல் போகும் போது, உள்ளூர் கருங்காலிகளிடம் நாட்டை விற்றுச் செல்வர். நாமும் அவர்களை அன்னை, தந்தை, மாமா என்றெல்லாம் அழைத்துக் கொண்டாடி மகிழ்வோம்!! 😠😡😬

இது அதீத கற்பனை என்று சிலர் நினைக்கலாம். இது மேற்சொன்ன படிகளில் எதுவரைச் சென்றாலும், நமக்கு நாமமே!!

இது எதுவும் நடக்காமல் இருக்க வேண்டுமானால், ஒரே தீர்வு ஒவ்வொரு இந்தியனும் சுயசார்புடன் வாழ்வதே!!!

posted from Bloggeroid

No comments:

Post a Comment