Wednesday, March 13, 2019

முருக தத்துவம் கருங்காலிகளின் முப்பாட்டனாம்!! 😁

https://youtu.be/RbcrJS794Pc (வாட்ஸ்அப் மூலம் கிடைத்த காணொளி)

நம்மைப் போல் மனிதப் பிறவியெடுத்து வந்து, தான் உய்ய பாரதம் வந்து அத்வைதம், பெளத்தம், தமிழ் என பலவற்றை கற்றுத் தேர்ந்து, தன் இனமும் உய்ய வேண்டி தாய்மண் திரும்பி, பாடுபட்டும் தோற்றுப் போய், மீண்டும் பாரதம் வந்து, காஷ்மீரத்தில் சமாதியடைந்த இஸ்ரவேல் மெய்யறிவாளர் யேசுவை நமது மெய்யறிவாளர்களான பேயார், மாணிக்கவாசகர், ஸ்ரீரமணர் போன்று மெய்யறிவாளர்களாகவே முன்னிறுத்தியிருக்க வேண்டும். அல்லது, பகவான் கண்ணனைப் போன்று உடல் தாங்கியராகவும் தத்துவமாகவும் வளர்த்து வந்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல், டுபாக்கூர் திரைப்படமான "அவென்ஜர்ஸ் இன்ஃபினிடி வார்ஸ் பகுதி 1" போன்று கண்டபடி வார்த்துவிட்டார்கள். மூளைச்சலவை மற்றும் தில்லாலங்கடி வேலைகளால் மேலும் முன்னேற முடியாது என்பதால் இப்போது அவர்கள் "உனது பொருளை உயர்த்திக் காட்ட முடியாவிட்டால் எதிரியின் பொருளை குறைத்துக் காட்டு" போன்ற விற்பனை உத்திகளையும், "வெல்ல முடியாவிட்டால், முதலில் இணைந்து பின்னர் விழுங்கி விடு" போன்ற மேலாண்மை உத்திகளையும் கையிலெடுத்துள்ளனர். முருக தத்துவத்தை முப்பாட்டன் என்ற அளவுக்கு இறக்கி, அந்த முப்பாட்டனுக்கும் "ஞானஸ்நாநம்" கொடுத்தது யேசுவே என்று நற்செய்தி வெளியிட்டு, மொத்த தமிழ் இனமும் ஒரு காலத்தில் சர்ச்சியர்கள் தான் என்ற சுவிசேஷத்தில் முடிப்பது தான் Project "Murugan is our Muppaattan" திட்டத்தின் இறுதி இலக்காக இருக்கும். 😛

👊👊👊👊👊

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை.
சுப்ரமண்யருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.

- என்பது பழமொழி. இவ்வளவு உயர்ந்த முருக தத்துவம் சில கருங்காலிகளுக்கு பொறை பெற்றுத் தரும் கருவியாக மாறக் காரணம் நம் சமயப் பேருண்மைகளின் மேல் பிற்காலத்தில் போர்த்தப்பட்ட புரூடா போர்வைகள் தாம்!! 😔 தத்துவங்களுக்கு வடிவம் கொடுத்தது ஒரு காலத்தில் புதுமையாகக் கருதப்பட்டிருக்கலாம். இன்று அவைகளே நாய்வாந்தி, மலம் போன்ற கொள்கைகளை வைத்திருக்கும் மதங்கள் எல்லாம் நம் சமயத்தை எள்ளி நகையாடவும், கருங்காலிகள் பொறைகளை சம்பாதிக்கவும் காரணமாகிவிட்டன.

👊👊👊👊👊

நாம் நம்மை வேறாகவும், நம்மைச் சுற்றியுள்ளவற்றை வேறாகவும் உணர்கிறோம். இது சீவ நிலை. நம்மைத் தவிர வேறொன்றுமே இல்லை என்றொரு நிலை உண்டு. இது சிவ நிலை (நிலைபேறு, மெய்யறிவு, மெய்ஞானம், சிவபதம் என்றெல்லாம் அழைக்கப்படுவதும் இந்நிலையே). இந்த இறுதி நிலையை அடைவதற்கு (#) சற்று முன் நடக்கும் நிகழ்வையும், நிலைபேற்றிலிருந்து வெளிவரும் நிகழ்வையும் அதிதுல்லியமாக படிப்படியாக விதவிதமாக ஆராய்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்! 👌👏💪😍 இவ்வராய்ச்சியின் பலனாக நமக்கு பல தெய்வங்கள் கிடைத்துள்ளன (நிலைபேற்றிற்கு துணை புரியும் தெய்வங்கள்: நரசிம்மர், அன்னபூரணி, முருகர். நிலைபேற்றிலிருந்து வெளிக்கொணரும் தெய்வங்கள்: காளி / வெண்ணைத் திருடி கண்ணன், சிவகாமி.).

சிவப்பரம்பொருளோடு இரண்டறக் கலக்கும் முன் நாம் காணும் கடைசி தெய்வம் (உணரும் கடைசி தத்துவம்) முருகப் பெருமானாவார். இவருக்குப் பின் காண்பதற்கு ஏதுமில்லை. பரம்பொருளை அடைந்த பின்னர் காண்பான், காட்சி, காணும் செயல் என அனைத்தும் அகன்றுவிடும். ஆகவே, தெய்வங்களுள் (பரம்பொருளை உணர்த்துபவைகளுள்) முருகப்பெருமானே உயர்ந்தவராகிறார். இந்த நுண்ணிய மற்றும் உயரிய ஆராய்ச்சியை மேற்கொண்டு இவரை (இத்தத்துவத்தை) வெளிக்கொணர்ந்தவர் நம்மவர்கள் - தமிழர்கள். ஆகையால் தான் இவர் தமிழ் கடவுளாகிறார்!! 👏👏👏😍🙏

🌼🌷🌹🌺🏵🌻🌼

கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே...

🌸🙏🌸🙏🌸

# - அடைதல், இரண்டறக் கலத்தல் எல்லாம் விளக்குவதற்காக பயன்படுத்தும் சொற்கள். உண்மையில், அடைதலோ கலத்தலோ அங்கு இல்லை. குறைந்தபட்சம் இரண்டு பொருட்கள் இருந்தால் தானே இவை சாத்தியம். இருப்பது ஒன்றே. அதுவே அனைத்துமாகி உள்ளது.

posted from Bloggeroid

No comments:

Post a Comment