Friday, March 29, 2019

ஆஸ்திரிய விண்வெளி வீரரும் நம் புளுத்தறிவும்!!

ஃபீளிக்ஸ் என்ற ஆஸ்திரிய விண்வெளி வீரர் விண்வெளியிலிருந்து குதித்து 1,28,000 மீ. தூரத்தை 04:20 நிமிடங்களில் கடந்து நிலபரப்பை அடைந்திருக்கிறார் (https://youtu.be/ixg74E82ja0). அவர் விண்கலத்திலிருந்து குதிப்பதற்கு சற்று முன்பாக, பூமியிலுள்ள கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அவரை வழிநடத்துபவர் இவ்வாறு சொல்கிறார்: இனி நம் காக்கும் தேவதை உன்னைக் காக்கட்டும்.

(பரங்கியரின் காக்கும் தேவதை என்பது நம் ஊர், கோயில் & கோட்டை காவல் தெய்வங்களுக்கு சமம்.)

இவ்வாறு சொன்னதில் எந்த தவறுமில்லை. இதுவே நமது விண்வெளித்துறையாக இருந்து, வழி நடத்துபவர் இந்துவாக இருந்து, "இனி நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 🌺🙏🏼 உன்னைக் காப்பராக" என்ற ரீதியில் பேசியிருந்தால் அவ்வளவு தான்...

பெரும்பாலும் தேச & இந்து விரோத சக்திகளால் நிறைந்த ஊடகத்துறை ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்துவிடும்! 😛 பான்பராக் மற்றும் கூவம் சட்டைக்காரர்கள் முதற்கொண்டு சமீபத்திய நாய்டம்ளர்கள் வரை அனைவரும் ஊளையிடவும் குரைக்கவும் ஆரம்பித்துவிடுவர்!! 👻💀☠️👹👺🌚👽 "5000 பார்ட்டுகள்ல ஓடாத வண்டி இந்த ஒரு எலுமிச்ச பழத்தாலயா ஓடப்போகுது" என்ற ரீதியில் திரைப்படங்களில் வசனம் பேசுவர் (இத்துறையும் ஊடகத்துறை போன்று புரையோடி விட்டது).

2013-ல் செவ்வாய் கோளைச் சுற்றி வர ஒரு கலத்தை பாரதம் அனுப்பியது. ஏவுதலுக்கு முன்னராக, அப்போதைய இஸ்ரோ தலைவர் முனைவர் கே. ராதாகிருஷ்ணன் திருமலைப் பெருமாளை 🌺🙏🏼 வணங்கி வழிபாடு நடத்தி விட்டு வந்தார். அச்சமயம் மேற்சொன்ன காட்சிகள் அரங்கேறின.

மணிமேகலை மணிபல்லவ தீவுக்கு பறந்து சென்றாள் என்பது பகுத்தறிவு. 😏 கண்ணாடியை ஒளி ஊடுருவி செல்வதைப் போல, பரமபிதாவின் விந்து இஸ்ரவேல் மெய்யறிவாளர் யேசுவின் தாயாரின் கருப்பையை அடைந்தது என்றால் பகுத்தறிவு. 🙄 ஆனால், அனுமன் ஒரே தாவலில் இலங்கையை அடைந்தார் என்றால் அது புரூடா 😁 (இதற்காவது தத்துவ விளக்கமுண்டு).

No comments:

Post a Comment