Wednesday, May 3, 2017

கீழடியில் சமற்கிருத நுழைப்பு!!

▶ வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது:

*#கீழடி*

பாகுபலியைப் பார்த்து வாயைப் பிளந்து கொண்டிருக்கும் தமிழனுக்கு அடுத்த அடியை மிக பலமாகவே கொடுத்திருக்கிறது ஆளும் மத்திய அரசு.

ஒரு இனத்தின் வரலாற்றை அழித்தால்தான் அந்த இனத்தை எளிதில் அழிக்க முடியும். அந்த விதத்தில் தமிழர்கள் மற்றும் தமிழ் மொழியை அழிப்பதில் மிக கவனமாக இருக்கும் மத்திய அரசு கீழடியில் தமிழ் மொழியின் அடையாளங்கள் மட்டுமே உள்ளது என்று தெளிவாக சொன்ன ஆராட்சியாளர் அமர்நாத் அவர்களை பணியிட மாற்றம் செய்துவிட்டு அங்கு சமஸ்கிருத சுவடுகள் இருந்ததாகத் திரித்து வரலாற்றை எழுதியுள்ளது.

மேலும், சமஸ்கிருதம் இருந்ததற்கான எந்த சுவடும் இல்லாத பட்சத்தில் அங்கு சமஸ்கிருத மொழி முக்கிய மொழியாகவும் தமிழ் வட்டார மொழியாகவும் இருந்தது என அப்பட்டமான, கேவலமான பொய்யை ஆளும் மத்திய அரசு திணித்துள்ளது.

இதற்கு எதிராக போராடிய மக்கள் இயக்கங்களை மிகவும் கொடூரமாக தாக்கினார்கள். இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தின் எந்த மூலையிலும் தன் இனத்தைத் தாக்குபவனுக்கு கொடி பிடிக்கும் மானங்கெட்ட மக்களைக் கொண்ட ஒரு இடம் இருக்குமென்றால் அது தமிழ்நாடாகத்தான் இருக்கும்.

💥 தமிழ் மொழி சிதைக்கப்பட்டது,
💥 தமிழ் இனம் அழிக்கப்பட்டது,
💥 தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டது,
💥 தமிழர் உடைமைகள் பறிக்கப்பட்டது,
💥 தற்போது உலகின் மூத்த குடியான தமிழர் வரலாறு அழிக்கப்படுகிறது.

ஆனாலும் தமிழனுக்கு இன்னும் சொரணை வரவே இல்லை.

🌸🏵🌹💮🌺🌷🌼

இத்தாலிய கயவர்கள் பரங்கி மதத்தை நுழைய விட்டு நம்மை அழிக்க முயற்சித்தார்கள் என்றால், இந்த குஜ்ஜு கயவர்கள் தமிழை அழித்தும், இந்தியை நுழைத்தும், சமற்கிருதத்தை உயர்த்தியும் தாங்கள் ஆரியர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

ஓர் இனத்தை அவ்வினமே தான் ஆளவேண்டும். நேர் தமிழனின் ஆட்சி ராஜேந்திர சோழனின் மகன்களோடு முடிந்தது (சுமார் 1060 வரை). அதன் பின்னர் இன்று வரை வேற்று மொழி, மத, இன ஆட்சி தான் நடக்கிறது. அதிலும் இப்போது மத்தியில் இருப்போர் உலக மகா நயவஞ்சகர்கள். அந்த ஆளுடைய பிள்ளையார் மீண்டும் வந்தால் கூட ஏதும் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment