Sunday, November 27, 2016

"யேசுநாதரே, விளக்கத்தை மாற்றிச் சொல்லும்"

இந்த வாரத்தில் 2 நிகழ்வுகள்:

💥 எனது நண்பரின் 9 வயது மகள் என்னிடம், அவளது அடுக்கத்தில் உள்ள அவளது வயதொத்த ஒரு பெண் பிள்ளையைப் பற்றி புகார் அளித்தாள்.

அப்பிள்ளை பரங்கி மதத்தைச் சேர்ந்தவள். அவளது நாடுகள் எல்லாம் பணக்கார நாடுகள் என்றும், சுத்தமான நாடுகள் என்றும், நம் நாடு ஏழை நாடு என்றும், குப்பையான நாடு என்றும் பீற்றிக் கொண்டிருக்கிறாள். "அவளது நாடுகள்" என்று அவள் குறிப்பிட்டது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றை.

இது எனது நண்பரின் மகளின் மனதில் காயத்தை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக நான் கேட்டது, *"அவளது நாடுகளில் அவள் இல்லாமல் ஏன் இங்கிருக்கிறாள்?". பின்னர், பரங்கிகளைப் பற்றியும், அவர்களது இன, நிற, மொழி, மத வெறிகளைப் பற்றியும்,  கொடூரன் அலெக்ஸாண்டர் முதல் இன்று வரை பரங்கிகள் எப்படியெல்லாம் நம்மை அழித்து நம்மிடமிருப்பதை கொள்ளையடிக்கிறார்கள் என்றும், நம்மிடமிருந்தும் நம்மைப் போன்ற ஏனைய நாடுகளிலிருந்தும் கொள்ளையடித்ததை வைத்துத்தான் அவர்கள் வசதியுடன் இருக்கிறார்கள் என்றும், ஞானி யேசுவிற்கு ஞானம் கொடுத்த பூமி நம் பூமி என்றும் அவளுக்குப் புரியும்படியாக விளக்கமளித்தேன்.* அவளும் இம்முறை வெற்றி பெறுவோம் என்ற உற்சாகத்துடன் கிளம்பினாள்.

10 வயதிற்குள் கொம்பு சீவி என்ன சாதிக்கப் போகிறார்கள்? பரங்கி மதத்தை கரைத்துக் குடித்திருந்தாலும், இந்தியாவை  பரங்கி மத நாடாக மாற்றிக் காட்டினாலும், ஒரு தமிழ் பெண்ணிற்கு போப் பதவி கிடைக்கப் போவதில்லை!

இந்நிகழ்வு, "Book of Eli" என்ற படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியை நினைவுக்குக் கொண்டுவந்தது: "இந்த உலகம் அழிந்ததற்கு இந்தப் புத்தகம் தான் காரணம் என்று சிலர் சொன்னார்கள்" என்று டென்சல் வாஷிங்டன் கிறித்துவ பைபிளை காண்பிப்பார்! 😑

இவர்களால் முழுவதுமாக அழிக்க முடியவில்லையாகினும் கவலைப்படத் தேவையில்லை. மீதமிருப்பதை, இன்னொரு அப்ரகாமிய மதமான முகம்மதியம் செய்துவிடும். கள்ளப் பணம், வரி ஏய்ப்பு என அனைத்திற்கும் தீர்வு கிடைத்துவிடும். பிரதமர் மோடிக்கு வேலையில்லாமல் போய்விடும்!! 😂😂😂

💥 அடுத்தது, எனக்கு நேர்ந்த ஒரு நிகழ்வு.

எனக்குத் தெரிந்த ஒருவர் (பரங்கி மதத்தைச் சேர்ந்தவரல்ல. ஆனால், அவர்களால் கொம்பு சீவப்பட்டவர்.) என்னிடம், "தேவையிருக்கும் இடத்தில் தான் தோன்றுதலும் இருக்கும். பாரதத்தில் அநேக மகான்கள் தோன்றக் காரணம் இங்குத் தேவையிருந்தது. வியாதி இருந்தால் தானே மருந்து கண்டுபிடிப்பர்." என்றார்!! 😀

அதாவது, இங்கு சமூகம் சரியில்லையாம். அதனால், சீர் செய்ய மகான்கள் வந்தனராம். 😛 எப்படி சீவியிருக்கிறார்கள் பாருங்கள்!! அங்கு எண்ணிக்கை அதிகமில்லை என்ற குறையை மறைக்க, நம் மீது இப்படி ஒரு கல் எறிந்திருக்கிறார்கள். 😁

நான் சொன்னேன், *"பாலைவனத்தில் புல், பூண்டு கூட முளைப்பதில்லை. ஆனால், காடுகளில் பல்லுயிர்கள் பெருகிப் பின்னிப் பிணைந்து பசுமைப் போர்வையால் மூடியிருக்கும். ஒன்றும் வளரவில்லை என்பதற்காக பாலை மணல் சுத்தமானதல்ல. அது, இறந்த மணல். எதற்கும் உபயோகப்படாது. எக்கச்சக்கமான வளர்ச்சி என்பதற்காக காடுகள் குப்பையல்ல. மாறாக, உயிரோட்டம் மிகுந்த மண்ணை உடையது. இதன் உபயோகம் கணக்கிலடங்காது."* 👊👊💪

அவரால் ஏதும் பேச முடியவில்லை. நானே மேற்கொண்டுத் தொடர்ந்தேன், *"கிறித்தவ நாடுகளிலும், முகம்மதிய நாடுகளிலும் ஞானியர் தோன்றியிருக்கின்றனர். ஆனால், அப்பகுதிகள் பின் தங்கி இருந்தமையால், அம்மக்கள் மூடர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் இருந்தமையால் அங்கு தோன்றிய ஞானியர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்."*

மேலும், தொடர்ந்தேன், *"திருஞானசம்பந்தர் இறையுணர்வை தனது குழந்தையாக உணர்ந்தார். அப்பர் பெருமான இறையுணர்வை முதலாளியாக உணர்ந்தார். சுந்தரமூர்த்தி நாயனார் இறையுணர்வை நண்பனாக உணர்ந்தார். மணிவாசகப் பெருமானோ இறையுணர்வை காதலியாக உணர்ந்தார். இதே போன்று தான் ஞானி யேசுவும் இறையுணர்வை தந்தையாக உணர்ந்தார். அங்கு சமூகம் பின்தங்கி இருந்ததால், அவரை பின் தொடர்ந்தவர்கள் சரியில்லாததால், அவரது வெளிப்பாடு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. அப்படிப்பட்ட சமூகமோ, பின்பற்றுபவர்களோ நம் சைவ நால்வருக்கு அமைந்திருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? மொத்த நாடும் தசமபாகம் கொடுத்தே அழிந்து போயிருக்கும்."* 😉

இவ்விளக்கங்கள் எல்லாம் தற்காலிகமாக வாயை மூட வைக்குமே அன்றி, அவர் முட்டிக்கொள்வதை நிறுத்தாது. அந்த ஞானி யேசுவே மீண்டும் வந்து, தனது வார்த்தைகளுக்குத் தெளிவான விளக்கமளித்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டர். நாட்டாமை படத்தில் வரும் புகழ் பெற்ற வசனம் போல் *"யேசுநாதரே, விளக்கத்தை மாற்றிச் சொல்லும்"* என்று மீசையை முறுக்குவர்!! 😛😜😝

No comments:

Post a Comment