Showing posts with label திருநணா. Show all posts
Showing posts with label திருநணா. Show all posts

Monday, August 3, 2026

"4 வேதங்களும் தீர்த்தமாக உள்ள தலம்" - கும்மாங்குத்துப் பொருள்! 😀


வீடுபேறடைவதற்கு 4 வழிகள் உள்ளன - அன்பு, பணிவு, ஆளுமை & அறிவு. இதை நால்வர் பெருமக்களை கொண்டு குறிப்பால் உணர்த்திருயிருப்பர் தொல்தமிழர். இதையே பேச்சுவழக்கில், "நாலு பேர் சொல்றத கேக்கணும்" என்று சொல்லி வைத்தனர்.

திருநணா திருக்கோவிலானது திருநெறியத் தமிழரிடமே தொடர்ந்து இருந்திருந்தால், "4 வகை அடியவரும் வீடுபேறடைந்த திருக்கோவில்", அல்லது, "4 பெருவழிகளில் பயணித்தவரும் வீடுபேறடைந்த திருக்கோவில்" என்று எழுதியிருப்பர். ஆனால், தமிழரின் போதாத நேரம், இன்று, அத்திருக்கோவில் அசுரரிடம் இருப்பதால், "4 வேதங்களும் தீர்த்தமாக உள்ள தலம்" என்று ஒருவரும் புரிந்து கொள்ள முடியாதபடி எழுதியுள்ளனர்!

அவர்களும் கரையேறப் போவதில்லை. மற்றவரையும் கரையேற விடப்போவதில்லை. அவர்கள் கரையேறி விட்டால், பருப்பு ஸாதத்தை சுவைக்க முடியாதே! மற்றவர் கரையேறி விட்டால், பருப்பு ஸாதம் கிடைக்காதே!

👊🏽👊🏽