Showing posts with label நாயைக் கண்டால் கல்லைக் காணோம். Show all posts
Showing posts with label நாயைக் கண்டால் கல்லைக் காணோம். Show all posts

Sunday, August 8, 2021

திருக்கயிலாயக் காட்சி என்றால் என்ன?

நேற்று (08/08/2021) ஆடி அமாவாசை.

அப்பர் பெருமானுக்கு திருவையாற்றில் திருக்கயிலாயக் காட்சியை இறைவன் காட்டியருளிய திருநாள்!!


🌺🙏🏽🙇🏽‍♂️

திருக்கயிலாயக் காட்சி என்றால் என்ன?

"நாயைக் கண்டால் கல்லைக் காணோம். கல்லைக் கண்டால் நாயைக் காணோம்." என்பது எல்லோரும் அறிந்த பழமொழி. சிலர், இத்துடன் இன்னொரு வரியையும் சேர்ப்பர்: இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம்.

☀️ நாயைக் கண்டால் கல்லைக் காணோம் - நாம் காணும் உலக காட்சி. உலகை காண்கிறோம். ஆனால், அதற்கு பற்றுக்கோடு நாம்தான் என்பதை நாம் உணர்வதில்லை. நம்முள்ளிருந்துதான் உலகம் வெளிப்படுகிறது என்பதையும் உணர முடிவதில்லை. உலகினுள் நாமிருப்பது போன்று காண்கிறோம்.

☀️ கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - மெய்யறிவாளர்கள் காணும் காட்சி. எக்கணமும் தமது தன்மையுணர்வில் இருப்பவர்கள். காணப்படும் யாவும் இருப்பற்றவை என்பதை உணர்ந்தவர்கள். உலகை "எரிந்து முடிந்து, உருக்கலையாத சாம்பல்" போன்று காண்பவர்கள். இதனால் தான் மெய்யறிவாளர்களை - சிவனை - சுடுகாட்டில் வசிப்பவர் (காடுடைய சுடலை) என்றழைத்தனர்.

☀️ இரண்டையும் கண்டால் அடிப்பவனைக் காணோம் - திருக்கயிலாயக் காட்சி! காண்பானும் உண்டு (கல்). காணப்படும் காட்சியுமுண்டு (நாய்). காணப்படுவது காட்சி மாத்திரமே என்ற அறிவுமுண்டு! இவ்வறிவுக்கு காரணம் காட்சி தோன்றும் வகை. காட்சியின் பொய்த்தன்மை உணரப்பட்டதும் "நான் இன்னார்" என்ற மனம் (அடிப்பவன் - எல்லா வினைகளுக்கும் காரணமானது) மறைந்துவிடும்.

சில பழமையான சிவத்தலங்களில் மூலவருக்கு பின்னே அம்மையப்பரை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்திருப்பதைக் காணலாம். "அகத்தியருக்கு சிவபெருமான் தனது திருமணக்காட்சியை இங்கே காட்டியருளினார்" என்று தலவரலாற்றில் பதிவு செய்திருப்பர். இதன் பொருள்: அத்தலத்தின் மூலவருக்கு கீழ் சமாதியாகி இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில், மேற்கண்டவாறு திருக்கயிலாயக் காட்சியைக் காணும் பேறு பெற்றவர். (இங்கு அகத்தியர் எனில் மெய்யறிவாளர் என்று பொருள். நாமறிந்த குள்ள மாமுனிவரைக் 🌺🙏🏽🙇🏽‍♂️ குறிக்காது.)

oOOo

ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮