Showing posts with label இராஜா தேசிங்கு. Show all posts
Showing posts with label இராஜா தேசிங்கு. Show all posts

Wednesday, August 11, 2021

செஞ்சிக் கோட்டையை வைத்து விகடன் சுட்ட வட்லப்பம்!! 😠

செஞ்சிக்கோட்டையைப் பற்றி சொல்கிறேன் பேர்வழி என்று காட்டுமிராண்டி ஆற்காடு நவாபு சதத்துல்லாகான் பற்றி "வட்லப்பம்" சுட்டிருக்கிறது விகடன்! (https://www.vikatan.com/arts/literature/the-history-and-the-significance-of-gingee-fort-aka-senji-fort)

முதலில், வட்லப்பம்:

செஞ்சி என்றதும் எல்லோருக்கும் நினைவுக்கு வரும் பெயர், ராஜா தேசிங்கு. செஞ்சியை அவன் ஆண்டது வெறும் 10 மாதங்கள் மட்டுமே! மொகலாயர்களின் ஆளுநராக செஞ்சியை நிர்வாகம் செய்தவர் சொரூப் சிங். அவரது மகன் தேஜ் சிங். அவரையே 'தேசிங்கு' என்றனர் மக்கள். தந்தை மறைந்ததும் ராஜா தேசிங்கு 22 வயதில் ஆட்சிக்கு வந்தான். இந்த ஆட்சி மாற்றத்தை மொகலாயப் பேரரசு அங்கீகரிக்கவில்லை. சமாதானத்துக்கும் தேசிங்கு வரவில்லை. அதனால் ஆற்காட்டு நவாப் படையெடுத்து வந்தார். 30 ஆயிரம் படைவீரர்களுடன் வந்த நவாப்பை வெறும் 350 குதிரைப்படையினர், 500 வீரர்களோடு எதிர்கொண்ட தேசிங்கு, சில மணி நேரங்களில் வீழ்ந்தான்.

இப்போது, நமது ஜிகாத்:

அதாவது, காட்டுமிராண்டி நவாபுக்கு செஞ்சியைக் கைப்பற்ற வேண்டும், அரசி ராணிபாயை துய்க்கவேண்டும் என்ற கீழான எண்ணங்கள் இல்லையாம். காட்டுமிராண்டி மொகலாயர்களின் அடிவருடும் மேலான எண்ணம் ஒன்று மட்டும்தான் இருந்ததாம். டில்லி காட்டுமிராண்டி கட்டளையிட்டதும் சிரமேற்கொண்டு தேசிங்கு மன்னரின் கதையை முடித்தானாம். அதுவும் சில மணிநேரத்திலாம்.

👊🏽 தனது திருமணத்தை நிறுத்திவிட்டு விரைந்து வந்து போரிட்ட தளபதி மோபத்கானை எப்படிக் கொன்றானாம் காட்டுமிராண்டி நவாபு?

👊🏽 தளபதி இறந்த செய்தி கேட்டு தானும் இறங்கி கடும்போர் புரிந்த மன்னர் தேசிங்கை எப்படிக் கொன்றானாம் காட்டுமிராண்டி நவாபு?

👊🏽 இவையெல்லாம் சில மணிநேரத்திலேயே நடந்து முடிந்துவிட்டனவா?

👊🏽 அக்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்ததும், செல்வ செழிப்பானதுமான ஒரு தலைநகரக் கோட்டையைக் காக்க வெறும் 350 வீரர்கள்தாம் இருந்தனரா?

👊🏽 350 வீரர்கள் காக்குமளவு இருந்த ஒரு கோட்டையைக் கைபற்றுவதற்குத்தான் ஆங்கிலேயரும், பிரெஞ்சுகாரர்களும் அத்தனை முறை மோதிக்கொண்டனரா?

👊🏽 ஒரு சிறப்புமில்லாத வீரமற்ற மன்னரைத்தான் நாட்டுப்புறப் பாடல்களாலும், கதைகளாலும் சிறப்பித்ததா வாளோடு பிறந்த முத்த குடி?

விகடன் பாய், எத்தனை வட்லப்பம் சுட்டாலும், வகைவகையாக சுட்டாலும் நடத்திய அட்டூழியங்களை மறைக்க முடியாது. இறைவன் மிகப் பெரியவன்!!