Saturday, June 5, 2021

"சிரமாறு உடையான்" - இச்சொற்கள் எத்தனை தெய்வங்களைக் குறிக்கின்றன?

1. சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையைக் கொண்ட சிவபெருமானைக் குறிக்கும்.

2. சிரம் ஆறு உடையான் - ஆறுமுகம் கொண்ட முருகப்பெருமானைக் குறிக்கும்.

3. சிரம் ஆறு உடையான் - காவிரியாற்றில் தலை வைத்து சயனித்திருக்கும் திருவரங்கப் பெருமானைக் (சட்டைமுனி சித்தரின் சமாதி 🌺🙏🏽) குறிக்கும்.

4. சிரம் மாறு உடையான் - தலையது மாறி - மனித சிரம் அல்லாத - வேழத்தின் சிரம் கொண்ட விநாயகரைக் குறிக்கும்.

5. சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான்முகனைக் குறிக்கும்

தமிழுக்கு நிகர் தமிழே!!

-- பாவலர் செய்கு தம்பி

👏🏽👏🏽👏🏽👌🏽👍🏽🙏🏽😍😍


(சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்தான் 💪🏽💪🏽 என்று ஆணித்தரமாக உறுதிப்படுத்த திரு #ஐராவதம் #மகாதேவன் அவர்களுக்கு உதவிய இலச்சினை)

No comments:

Post a Comment