Tuesday, June 22, 2021

மாவீரன் அலெக்ஸாண்டர் @ பேட்டை தாதா அலெக்ஸு புராணம்!! 😁

https://www.bbc.com/tamil/india-57500238

ஒரு திரைப்படத்தில், தனது மாமனை ஏமாற்றுவதற்காக, ஜனகராஜ் பெயர்களை மாற்றி மாற்றிப் பேசுவார். சாலையை தண்டவாளம் என்றும், கால்வாயை கடல் என்றும், ஊர் பெரியவர்களை பன்றி என்றும் மாற்றி மாற்றிப் பேசுவார். இது போன்று, பரங்கியரும் உலகை ஏமாற்றுவதற்காக மாற்றி மாற்றிப் பேசுவர்!

> தங்களுக்குள் அடித்துக்கொண்டதை முதல் உலகப் போர் என்றும்,

> பேட்டை தாதாவை உலகை ஆண்டவன் என்றும் (நம்ம அலெக்ஸு தான்),

> மன்னர் புருசோத்தமனையும் அவரது வீரர்களையும் பார்த்தவுடனேயே ஒரு மடக்கு ஆமணக்கு எண்ணெய் குடித்தவனைப் போல வயிறு கலங்கி நின்றவனை மாவீரன் என்றும் (அலெக்ஸேதான்),

> மன்னரிடம் தோற்று நுரையீரல் பங்க்சர் ஆனவனை வெற்றி பெற்றவன் என்றும் (அட, மறுக்காவும் நம்ம அலெக்ஸுதாங்க),

> ஜேப்படி தொழில் செய்வதற்காக ஒரு குஜராத் மாலுமியின் துணைகொண்டு பாரதம் வந்து சேர்ந்தவனை "பாரதத்தைக் கண்டுபிடித்தவன்" என்றும் (பொறுக்கி #வாஸ்கோடகாமா) கதை விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

எல்லாம் எதற்காக? மனதளவில் நம்மை அடிமைகளாக வைத்திருப்பதற்காக! இன்னொரு முறை 3,375 லட்சம் கோடிகள் கொள்ளையடிப்பதற்காக!! குளித்து விட்டு வந்து கால் நீட்டி அமர்ந்து, நியூஸ் ஆஃப் தி வோர்ல்ட் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு பாரதியர் (இந்தியர்) கால் நகங்களை வெட்டி விடும் பேரின்ப வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்காக!!!

oOOo

பரங்கியர்களின் பிட்டுகளுக்கு இப்போதெல்லாம் எதிர்வினைகள் நிறையவே வெளிவருகின்றன. இந்நேரம் பரங்கியரது நிலை "உள்ளத்தை அள்ளித்தா" திரைப்படத்தில் வரும் "டெம்போ எல்லாம் வச்சி கடத்திகிட்டு வந்திருக்கோம்ய்யா. கொஞ்சம் பாத்து போட்டு குடுங்கய்யா!" நிலையாக இருக்கும் என்று நினைக்கிறேன் 😍:

"முகம்மதியர வச்சி, உருதுல எழுதி, மொழி பெயர்ப்பெல்லாம் செஞ்சிருக்கோம்ய்யா. கொஞ்சம் பாத்து கமெண்ட்டு போடுங்கய்யா. நெறைய லைக்கும் குடுங்கய்யா." 😂😂

✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽💪🏽💪🏽😌

No comments:

Post a Comment