Samicheenan
Wednesday, October 16, 2024
திருக்குறள் #672 (வினைசெயல்வகை): தூங்குக தூங்கிச் செயற்பால...
Saturday, October 12, 2024
ஆக்கம் பெருக்கும் மடந்தையின் திருநாள்!
Tuesday, October 8, 2024
பிராமணர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டுமாம்! 😏
Wednesday, October 2, 2024
செஞ்சியை செஞ்சி என்றே அழைப்போம்!
👊🏽 கிழக்கின் டிராய்
👊🏽 பாரதத்தின் மான்செஸ்டர்
👊🏽 பாரதத்தின் டெட்ராய்ட்
👊🏽 பாரதத்தின் ஏதென்ஸ்
👊🏽 பாரதத்தின் நெப்போலியன்
👊🏽 தட்சிண கங்கை
👊🏽 காசிக்கு இணையான திருக்கோயில்
...
இவையெல்லாம் நம்மை தாழ்த்துவதற்காகவும், அடிமை மனப்பான்மையை விதைப்பதற்காகவும், அடி பணிய வைப்பதற்காகவும் இழிபிறவிகள் கையாளும் நுட்பங்களில் ஒன்றாகும்!
டிராய் டிராயாக இருக்கட்டும். செஞ்சி செஞ்சியாக இருக்கட்டும். காசி காசியாக இருக்கட்டும். நமது திருவிடங்கள் நமது திருவிடங்களாக இருக்கட்டும்.
oOo
அதென்ன ஜிஞ்ஜி? நமது திரைப்படமொன்றில் வருவது போன்று, "பப்ளிசிட்டி" எனும் பீட்டர் சொல்லை "பப்ளிக்குட்டி" என்று நாம் சொன்னால், அதை வெள்ளைச்சாத்தான் அப்படியே ஏற்றுக்கொண்டு, திரும்பச் சொல்லி மகிழ்வானா? நாம் மட்டும் ஏன் இன்னமும் அவனது குறையொலிப்பை தொடர்வதில் பெருமையடைகிறோம்?
ஓர் இனத்தை அவ்வினத்தின் பண்பட்டோரே ஆளவேண்டும்; பராமரிக்கவேண்டும். கடந்த 700 ஆண்டுகளாக மாற்று இனங்களின் கைகளில் திருநெறியத் தமிழ்மண் இருப்பதின் விளைவே "கிழக்கின் டிராய்" & "காசிக்கு இணையானது"!! 😡
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
"தர்ப்பணம் கொடுத்தல்" எனும் தேவையற்ற "கண்ணாடி கொடுத்தல்" தொழில்!
Sunday, September 29, 2024
திருக்குற்றாலம்: கண்ணாடி பேழைக்கு நீராட்டு சரியா?
காணொலி: கண்ணாடி பேழைக்கு நீராட்டு
அன்பர்களின் மனநிலை:
😒 இறைவனின் திருப்பெயர் - பெரிதில்லை.
😒 இறைவடிவம் - பெரிதில்லை.
😒 திருக்கோயில் அமைப்பு - பெரிதில்லை.
😒 தொடர்புடைய அருளாளர்கள் - பெரிதில்லை.
😒 அவர்களிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொல் (பாடல்கள்) - பெரிதில்லை.
😒 திருக்கோயிலின் தொன்ம வரலாறு - பெரிதில்லை.
🤦🏽 விரல் நகங்களிலும், மனதிலும் அழுக்கேறிய அசுரன் - பெரிது.
🤦🏽 அவன் காட்டும் படம் - அதனிலும் பெரிது.
🤦🏽 "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரத்துடன் காட்டப்படும் படம் - அனைத்திலும் பெரிது!
😒😤😞😢😠
அசுரர்களின் மனநிலை:
🙏🏽 அச்சுவற்றிற்கு பின்னால், பகவான் திரு இரமண மாமுனிவர் போன்றொரு பெருமான் திருநீற்று நிலையில் இருக்கிறார் - பெரிதில்லை.
🙏🏽 அவரது நிலையை குறிக்கும், அல்லது, மெய்யியலில் அவரது பங்களிப்பை குறிக்கும் வண்ண வரைபடங்கள் தொன்மையானவை - பெரிதில்லை.
😒 அவற்றை பழமை மாறாமல் சீர் செய்ய வெகுவாக பொருள் செலவாகும் - பெரிதில்லை.
😤 கண்ணாடி பேழைக்கு நடத்தப்படும் நீராட்டினால் வரைபடம் பாழாகும் - கவலையில்லை.
🤨 தனது "மழித்த முன் மண்டை-பின் குடுமி-பிறந்த மேனி-நூல்-ஐஞ்செருகு" தோற்றம் - பெரிது.
😠 தனது "ஓட்டைப் பானைக்குள் ஈ" ஒலிப்புடைய அசுரம் - அதனிலும் பெரிது.
🤬 இவ்விரண்டையும் கொண்டு நடத்தப்படும் படங்காட்டும் தொழில் - அனைத்திலும் பெரிது!
🤬🤬😡😡😡
வழிபாடு நடத்துபவன், முதலில், தான் இறைநிலைக்கு உயர்ந்து, பின்னர், வந்திருக்கும் அன்பர்களையும், தனது சொல் & செயல்களால் அந்நிலைக்கு உயர்த்தவேண்டும். ஆனால், சிந்து சமவெளியில் கிடைத்த சமையல் அடுப்புகளை "வேள்விக்குழிகள்" என்று கூறும் இந்த பொய்யர்களோ, தாமும் தாழ்ந்து, அன்பர்களையும் தாழ்த்திவிட்டார்கள்!!
oOo
கழுவாய் வழிபாடு (பிரதோசம்) & இந்த கண்ணாடிப் பேழை நீராட்டு - ஒரு ஒப்பீடு:
🌷 கழுவாய் வழிபாட்டில், விடைக்கு (காளைக்கு) நீராட்டு நடக்கும். இங்கு, கண்ணாடிப் பேழைக்கு நீராட்டு.
🌷 விடைக்கு எதிரில் தென்னாடுடையவன். கண்ணாடிக்கு எதிரில் கூத்தப்பெருமான்.
🌷 விடை அசைவை குறிக்கும். தென்னாடுடையவன் அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும். இதற்கு எதிர்மாறாக, கண்ணாடி நிலையானதை குறிக்கும்! கூத்தப்பெருமான் நிலையற்றதை குறிக்கும்!
💥 நிலையான பொருளுக்கு எதற்கு நீராட்டு? நிலையற்ற பொருளில் அழுக்கேறுமா? அல்லது, நிலையான பொருளில் அழுக்கேறுமா?தில்லையை தவிர மற்ற திருக்கோயில்களில், கூத்தப்பெருமானின் திருவடிவத்தை எங்கு வைத்திருக்கிறார்கள்? மனதை குறிக்கும் 3வது கூடத்தில்! எனில், எதற்கு நீராட்டு நடத்தப்படவேண்டும்?
நீராட்டு என்பதே தேவையற்றது. அப்படி நடத்தித்தான் துட்டு பார்க்கவேண்டுமெனில், ஒரு விழாத்திருமேனியை (அசுரத்தில், உற்சவர்) வைத்து, அதற்கு நீராட்டு நடத்தி, துட்டு பார்க்கலாம். 👊🏽👊🏽
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻
Saturday, September 7, 2024
பிள்ளையாரின் திருவடிவம் - சிறு விளக்கம்
இன்று பிள்ளையார் பிறந்தநாள் - அதாவது, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை வடிக்கலாம் என்ற எண்ணம் நம் பெரியவர்களுக்கு தோன்றிய நாள்; அல்லது, அப்படியோர் வடிவத்தை வடித்து, அவர்கள் வெளியிட்ட திருநாள்.
🌷 யானைத் திருமேனி - நினைவுகளின் தொகுப்பே நீ!
🌷 பாசம் - பற்றுகளை சேர்த்துக்கொள்வதும் நீயே!
🌷 மழு - பற்றுகளை அறுத்தெறிவதும் நீயே!
🌷 ஒடித்த தந்தம் - உன்னுள்ளிருந்து வெளிப்படும் எண்ணங்களையும் காட்சிகளையும் கொண்டு, உனது வாழ்வை (உனது மகாபாரதத்தை) எழுதுபவனும் நீயே!
🌷 உள்ளபொருள் (சிவலிங்கம்) / இனிப்பு - வீடுபேறும் / மெய்யறிவும் உன்னிடமேயுள்ளது.
🌷 வசதியாக அமர்ந்திருத்தல் - நீ அசையாத பொருள் (காட்சிகள்தாம் அசைகின்றன).
🌷 மடக்கிய இடதுகால் - புறமுகமாக செல்லும் உன் கண்ணோக்கத்தை, அகமுகமாக உன் மீதே (உனது தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டிரு.
🌷 மூஞ்சூறு - பிள்ளையார் ஒளியெனில் மூஞ்சூறு இருளாகும். பிள்ளையார் அறிவெனில் மூஞ்சூறு அறியாமையாகும். பிள்ளையார் மெய்ப்பொருள் எனில் மூஞ்சூறு மனமாகும். எச்சரிக்கையாக இல்லாவிடில், மனமானது மெய்யறிவை தின்றுவிடும் (மூஞ்சூறு இனிப்பை கொறிப்பது போன்று).
மொத்தத்தில் பிள்ளையாரின் திருவுருவம் தெரிவிப்பது: உன் வாழ்க்கை உன் கையில்!!
வணங்குதல் எனில் இணங்குதலாகும். பிள்ளையாரை வணங்குதல் எனில் அவரது உருவம் உணர்த்தும் கருத்துகளோடு இணங்குதலாகும். அவ்வாறு இணங்கி அமைதியடைதலே பிள்ளையார் வழிபாட்டின் உட்பொருளாகும்!!
oOOo
குரு வடிவாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிய
பகவான் திருவடி போற்றி!
(மேலுள்ள செய்யுள் "விநாயகர் அகவல்" பாடலில் இடம்பெறுகிறது. திரு ஒளவைப்பாட்டி 🌺🙏🏽🙇🏽♂️, பிள்ளையார் என்ற இறைவடிவத்தை போற்றுவது போன்று, தனது மெய்யாயரை போற்றியிருப்பார். அவரது திருவடி பின்பற்றி, எனது பிள்ளையாரான பகவான் திரு இரமண மாமுனிவரை போற்றிப் பணிகிறேன். 🌺🙏🏽🙇🏽♂️)
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻