Sunday, October 26, 2025

வடபழனி ஆண்டவரின் வலது கால் சற்று முன்னே இருப்பதின் பொருள்


இறைவடிவம் என்பது மறையாக்கம் செய்யப்பட்ட சுருக்கிய கோப்பு (Encrypted Zip File) போன்றதாகும். மறைநீக்கம் செய்து, விரித்து, அதிலுள்ள கருத்துகளை புரிந்துகொண்டு, வாழ்வை செம்மையாக்கிக் கொள்ளவேண்டும்.

மெய்யியலில், இறைவடிவத்தின் வலதுபுறம் என்பது இறைவனை குறிக்கும்; இடப்புறம் என்பது அன்னையை குறிக்கும்.

> வலம் - இடம்
> இறைவன் - அன்னை
> மாறாதது - மாறுவது
> உள்ளபொருள் - படைப்பு
> அருள் - பொருள்

இங்கு இறைவடிவத்தின் வலதுகால், இடதுகாலை விட சற்று முன்னே உள்ளது. எனில், "பொருள் தேடலை விட அருள் தேடலை சற்று கூடுதலாக செய்" என்பது பொருளாகும்.

oOo

அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு முன், ஓர் இறை வடிவத்தை ஒரு தமிழன் கண்டால்: அவ்வடிவம், அதன் பெயர், அதற்கு நடத்தப்படும் வழிபாடு ஆகியவை எதை உணர்த்துகிறது?

அசுரர்-சைத்தான்-சாத்தான் வருகைக்கு பின்: இறைவா, இதிலிருந்து என்னை காப்பாற்று. அதிலிருந்து என்னை காப்பாற்று. எனக்கு இது வேண்டும். அது வேண்டும். ...

அரசராக உயர்ந்திருந்தவரை இரப்பாளராக (அசுரத்தில், பிச்சைக்காரனாக) தாழ்த்திவிட்டனர்! 😞😢

(அசுரர்: பீடாவாயர் மண்ணிலிருந்து வந்த சமணம், பௌத்தம், நாமம், நூல் என யாவும்.)

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Saturday, October 25, 2025

இடுக்குப் பிள்ளையார் இருக்க இடுப்பு வலி எதற்கு? 🤭


விட்டால், அடுத்து, இடுப்பு வலிக்கான காப்புக் (அசுரத்தில், பரிகாரம்) கோவிலென்று அறிவிப்பார்கள் போலிருக்கிறது! 😁

🔸 இடுக்கு - இடுக்கி - ஒரு பொருளை கவ்வியெடுக்க உதவும் கலன் (கருவி).

🔸 பிள்ளையார் - அறிவு.

இரண்டையும் இணைத்தால் கிடைப்பது: கவ்வியெடுக்க உதவும் அறிவு!

இது, முருக வழிபாட்டில் வரும் சேவலுக்கு நிகரான குறியீடாகும். சேவலானது தேவைப்படும் போது தலையை சற்று நீட்டி, தேவையானதை கொத்தும். அது போன்று, நமது அறிவையும் தேவையான போது, வாழ்வுக்கு இன்றியமையாததின் மீது மட்டும் செலுத்தவேண்டும். இப்படி சிந்தித்து, தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டால் தப்பிப்போம். இல்லையெனில்... "இடுப்பு வலி" ஏற்படும்!

🔸 இடுப்பு - உடலின் இடுப்புக்கு அடுத்திருக்கும் பாலுறுப்பு - உயிர்கள், பொருட்கள் மீது கொள்ளும் விருப்பு, வெறுப்பு (அசுரத்தில், காமம்) - பற்றுகள்.

🔸 வலி - பற்றுகளால் ஏற்படும் விளைவுகள் - தொல்லைகள்.

அதாவது, பற்றுகளில் சிக்கி அவற்றால் பல இன்னல்களை சந்திப்போம்.

இடுக்குப் பிள்ளையார் இருக்க இடுப்பு வலி எதற்கு? = அற்றம் காக்கும் அறிவிருக்க பற்றுகள் எதற்கு?

oOOo

அறிவு அற்றம் காக்கும் கருவி -- திருவள்ளுவர் 🌺🙏🏽🙇🏽‍♂️

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, October 19, 2025

தீபாவளி - திரு கண்ண பெருமான் மெய்யறிவு அடைந்த திருநாள்!


தீபாவளி என்றதும் நம் நினைவுக்கு வர வேண்டியவை நரகாசுரன் மற்றும் கங்கைக் குளியலாகும் ("கங்கா ஸ்நானம் ஆச்சா?"):

🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு - நிலைபேறு / வீடுபேறு!!

🪔 தென்னாடுடையவனின் திருவடிவத்தில், அவரது முடிமேல் அமர்ந்திருக்கும் கங்கையன்னை என்பவர் நமது மனமாகும். அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நம் மனதில் தோன்றிக்கொண்டேயிருக்கும் எண்ணங்களாகும். இப்படிப்பட்ட ஓயாத வெளிப்பாடு, மெய்யறிவு பெறுவதற்கு முன், நமக்கு தொல்லையாக, நம்மை அலைக்கழிப்பது போன்று தோன்றும். மெய்யறிவு பெற்றபின், நம் மீது வீசும் தென்றல் காற்று போன்று, சாரல் மழை போன்று, இன்பமான அருவிநீர் போன்றாகிவிடும்.

கங்கையில் குளித்தீரா? = மெய்யறிவு பெற்றீரா?

ஒருவரைப் பார்த்து, "நீங்கள் நலமா?", "நன்றாக இருக்கிறீர்களா?" என்று கேட்கப்படும் கேள்விகளின் உட்பொருளென்ன? "நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்", "நன்றாக இருக்கவேண்டும்" என்ற நலம் விரும்புதலேயாகும். இதுபோன்று, "கங்கையில் குளித்தீரா? (மெய்யறிவு பெற்றீரா?)" என்று கேட்பதின உட்பொருள், "நீங்கள் மெய்யறிவு பெறவேண்டும்" என்ற நல்லெண்ணமேயாகும். இவையெல்லாம் "யாதும் ஊரே யாவரும் கேளிர்", "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற நமது முதிர்ந்த, மேன்மையான பண்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும்! 💪🏽💪🏽

oOo

🪔 கண்ண பெருமான் உடல் உகுத்ததிலிருந்து தற்போதைய கலியுகம் தொடங்குவதாக கூறுகிறார்கள். தற்போதைய கலியுக ஆண்டு 5,125. அவர் 120 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர். எனில், ஏறக்குறைய 5,250 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவராவார்.

🪔 அவர் மெய்யறிவு பெற்ற நாளையே தீபாவளித் திருநாளாக கொண்டாடுகின்றனர்.

🪔 மெய்யறிவு பற்றிய அவரது கண்ணோட்டத்தை, அல்லது, மெய்யறிவு அடைய அவர் காட்டிய வழியை, நரகாசுரனுடன் கண்ண பெருமான் நடத்திய போராக காண்பித்துள்ளனர்.

🪔 ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னர், தீபாவளியை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியது மன்னர் திருமலையாவார். தெலுங்கு நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில்தான் நாமமதம் இங்கு நிலைபெற்றது. அன்னை மீனாட்சி, காமாட்சி... வகை அம்மன் வழிபாடு வளரத் தொடங்கியது. நவராத்திரி திருவிழாவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

(மன்னரோ ஒரு தெலுங்கு-நாம மதத்தவன். அவரை வழி நடத்தியவர்களோ தெலுங்கு-பௌத்த-நாமாசுரர். அப்போது இங்கிருந்த பண்பட்ட மக்கள்திரளோ தமிழ்-திருநெறியர்! அறிமுகப்படுத்தப்பட்ட நகரமோ வடவரிடமிருந்து தமிழையும், தமிழரது சமயத்தையும் திரு சீர்காழிப் பிள்ளையார் மீட்டெடுத்த மதுரை!! மன்னர் வழி மக்கள் செல்லாவிட்டால் கடும் தொல்லைகள் விளையும். இந்த இக்கட்டிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றலாமென்று நம் பெரியவர்கள் சிந்தித்ததின் விளைவுதான்... "கங்கையில் குளித்தீரா?"!!! ஒரு நாம மதத் திருவிழாவிற்குள் திருநெறியின் ஒரு கூறு புகுந்ததின் பின்புலம் இதுதான்.)

🪔 தீபாவளியன்று வடவர்கள் விளக்கேற்றுவதை பார்க்கலாம். இதற்கும் கண்ண பெருமானுக்கும் எந்த தொடர்புமில்லை. பெருமான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை வேறு. விளக்கு வரிசை உணர்த்தும் பேருண்மை வேறு.

நளித் திங்களில் வரும் நிறைமதியன்று (கார்த்திகை - பெளர்ணமி) மாலையில், திருவண்ணாமலையின் முகட்டில் ஏற்றப்படும் பெரிய விளக்கை தொடர்ந்து, இல்லந்தோறும், ஊர்தோறும் விளக்குகள் ஏற்றப்படும். திருவண்ணாமலை / செஞ்சி போன்ற உயரமான மலையிலிருந்து பார்க்கும்போது, விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். இக்காட்சியினால் பெரிதும் கவரப்பட்ட வடவர்கள், கண்ண பெருமானின் திருநாளோடு விளக்கிடுதலை சேர்த்துக்கொண்டனர்.

oOo



ஒரு பெருமான் மெய்யறிவு அடைந்ததை தொல் தமிழர்கள் கொண்டாட வேண்டுமெனில், அது திரு சீர்காழிப் பிள்ளையாராக இருக்கவேண்டும். அல்லது, திரு அருட்கடல் பெருமானாக (அசுரத்தில், இரமண மாமுனிவர்) இருக்கவேண்டும்.

முதலாமவர் மெய்யறிவு அடையாமல் போயிருந்தால், இன்று, நாமனைவரும் பீடாவாயன்களாக சுற்றிக் கொண்டிருப்போம்! இரண்டாமவர் மெய்யறிவு அடையாமல் போயிருந்தால், இனிவரும் காலங்களிலும், சிலை வணங்கிகளாகவே வலம் வந்து கொண்டிருப்போம்!

oOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக திரு அருட்கடல் பெருமான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்குள்ளான்?" என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

திரு அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 28, 2025

கூமுட்டை கணியரால் (சோதிடரால்) முகமை வேட்பாளர் படும்பாடு! ☺️

"மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால் மன்னராகலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்கிறாராம் ஒரு சிங்களத் தெலுங்கு நடிகர்! 😀

"3 துறவியரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்தால், அரச பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, 3 நாமாசுரரை வீட்டிற்குள் வரவழைத்து மரியாதை செய்திருக்கிறார் கொல்டியாள் முன்னேற்றக் கழகத்தின் (கொமுக) பட்டத்து இளவரசர்! 😃

"கையில் கருங்காலி வைத்திருந்தால் சிறப்பான எதிர்காலம் அமையும்" என்றொரு கூமுட்டை சொன்னதை நம்பி, கையும் கோலுமாக திரிகிறாராம் மதுரை தெலுங்கரின் மனைவி! 😄 இதே அறிவுரையை கேட்டு, காலை நடை பயணத்தின் போது, கருங்காலிக் கோலை பயன்படுத்துகிறாராம் தற்போதைய கொமுக மன்னர்! 😁

(அடியேனும் பிறப்பால் தெலுங்கன்தான். ஆனால், உணர்வால் திருநெறியத் தமிழன்! 🙏🏽)

oOo

🌷 மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்தல்

> கணவன் & மனைவி - அம்மையப்பர்
> கணவன் - அப்பன் (சிவன்) - நான் எனும் நமது தன்மையுணர்வு
> மனைவி - அம்மை - மனம்
> மனைவியை பிரிதல் - மனதை பிரிதல் 
> மனதை பிரிதல் - மனதை கண்டுகொள்ளாதிருத்தல்
> மனதை கண்டுகொள்ளாதிருந்தால் - மனமடங்கும். தொடர்ந்து கடைபிடித்தால், காலப்போக்கில், அழிந்தே போகும்.
> மனமழிந்தால் மீதமிருப்பது - நமது தன்மையுணர்வு மட்டுமே. இதுவே அரச பதவியெனும் வீடுபேறாகும்.

🌷 கையில் கருங்காலி வைத்திருத்தல்

கருங்காலி மரம் உறுதி யானதாகும். முதலில், கருங்காலி மரத்தின் ஒரு பகுதியை / ஒரு கிளையை வெட்டியெடுத்து, சீர் செய்து, கோடாலிக்கு பிடியாக பொருத்திக்கொண்டு, பின்னர் அதைக் கொண்டே மரத்தை வெட்டிச் சாய்ப்பார்கள். இந்த அடிப்படையில், தான் சார்ந்துள்ள குடும்பத்தை, நிறுவனத்தை, குழுவை, இனத்தை, நாட்டை அழிப்பவரை கருங்காலிகள் என்றும், அவர்களது செயலை கருங்காலித்தனம் என்றும் அழைக்கிறோம்.

இந்த வையகத்தில், எதையும் நாம் மனதின் வழியாகத்தான் அறிய முடியும். ஓர் எடுத்துக்காட்டிற்காக, திரு அருட்கடல் பெருமானின் (அசுரத்தில், பகவான் இரமணர்) "நான் யார்?" என்ற அறிவுரையை எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட அறிவுரையை பற்றி படிக்கிறோம்; அல்லது, கேள்விப்படுகிறோம். உடனே, அது நமது மனதின் ஒரு கூறாகிவிடும். அடுத்து, அதைப்பற்றி சிந்திக்க தொடங்குகிறோம். செயல்படுத்துகிறோம். ஒரு சமயத்தில் மனமழிந்து தெளிவு பெறுகிறோம். இவ்வாறு, மனதின் ஒரு கூறாகி, பின்னர் மனதையே அழிப்பதால், "நான் யார்?" என்ற அறிவுரை கருங்காலியாகிறது!

காலையில் கண் விழித்தது முதல், இரவு உறங்கும் வரை, தன்னை நாடும் பயிற்சியை ("நான் யார் ?" என்ற சிந்தனை) இடைவிடாது செய்யவேண்டும். விட்டு விட்டு செய்தால் பயன்படாது. இதையே, "கருங்காலிக் கோலை எப்போதும் கையில் வைத்திருக்கவேண்டும்" என்று பதிவு செய்திருக்கின்றனர்!

மனமழிந்த பிறகு அங்கு செய்வதற்கு ஒன்றுமிருக்காது. எதுவும் நம்மை பாதிக்காது. வருவதை வரவிட்டு, போவதை போக விட்டு, திரைப்படத்தை பார்க்கும் ஒரு பார்வையாளனை போன்று வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருப்போம். இதுவே கருங்காலியால் கிடைக்கும் "சிறப்பான எதிர்காலமாகும்"!

🌷 வீட்டிற்குள் 3 துறவியரை வரவழைத்தல்

முன்னர் கண்ட இரண்டும் நிலைபேற்றினை போற்றுகிறதெனில், இது அலைபேற்றினை போற்றுகிறது.

> அலைபேறு - மனதை அலைபாய விடுவது, பற்றுகளை சேர்த்துக் கொள்வது, பிறவி சுழற்சியில் இருப்பது. அதாவது, இப்போது நாமிருக்கும் நிலை.

> வீடு - நமது உள்ளம்
> 3 துறவிகள் - நனவு, கனவு, தூக்கம் என்ற 3 நிலைகள்

"அன்பே வா" திரைப்படத்தில் ஒரு ஒரு காட்சியில் கம்பிச்செய்தி (அசுரத்தில், தந்தி) வரும். அதைப் படித்துவிட்டு,

நாகேஷ்: நாளைக்கு முதலாளி வர்றார்
மனோரமா: (ஏற்கனவே அங்கிருக்கும் எம்ஜிஆர்தான் முதலாளி என்பது இவருக்கு தெரியும். எனவே...) என்னது? முதலாளி வர்றாரா?
நா: பின்ன என்ன இங்கயா இருக்குறாரு?

இந்த நகைச்சுவை காட்சிக்கு இணையானதுதான் நனவு, கனவு & தூக்கம் என்ற 3 துறவிகளை நமக்குள்ளே வர விடுவதென்பது! ஏற்கனவே அவர்களை உள்ளே வரவிட்டுத்தான் அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறோம்! 😁 மறுபடியும் எங்கிருந்து உள்ளே வரவிடுவது?

எனில், "அரச பதவியை தக்க வைப்பது" என்பது... நாம் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை தக்க வைப்பதாகும்! 😆🤭 இது மட்டும் கொமுக-வின் பட்டத்து இளவரசருக்கு தெரிந்தால், அந்த கூமுட்டையின் நிலை... 😂! இது போன்று, மற்றவருக்கும் அவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் முட்டாள்தனத்தின் உண்மைப் பொருள் தெரிந்தால், அந்த கூமுட்டைகளின் நிலை... 🤣🤣!

கணியரில் சிலர் மற்றவரிடமிருந்து தங்களை வேறுபடுத்தியும், உயர்த்தியும் காட்டுவதற்காக, உட்பொருளை உணராமல் மெய்யியல் சொற்றொடர்களை சோதிடத்திற்குள் புகுத்தி, அதை கெடுத்து, அதன் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழித்துக் கொண்டிருக்கின்றனர்!!

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 19, 2025

திருக்கயிலாயக் காட்சி எனும் சூழ்ச்சியில்லாக் காட்சி!

அப்பர் பெருமான் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருக்கயிலாயக் காட்சியை கண்ட போது, அம்மையப்பரோடு சில அசுரர்களும் காட்சி கொடுத்தனர் போலிருக்கிறது! 😜

oOo

திருக்கயிலாயக் காட்சி:

ஒரு நீர் நிலையில், பாதியுடல் நீருக்குள் இருக்குமாறு, அப்பர் பெருமான் நின்று கொண்டிருப்பார். அவருக்கு எதிரே, விடை மீது அமர்ந்தவாறு திரு அம்மையப்பர் காட்சி கொடுத்துக் கொண்டிருப்பர்.

> அப்பன் + அம்மை + விடை = 
> அவன் + அவள் + அது = 
> காண்பான் + காட்சி + காணும் செயல் = 
> தன்மையுணர்வு + காட்சி (படைப்பு) + மனம்

நமது அன்றாட வாழ்வும் இத்தகையதே. நாமும் ஒரு காட்சியை காணும் போது உணர்வுடன் இருக்கிறோம். காட்சி தோன்றுகிறது. காணுதல் எனும் செயலும் நடக்கிறது. எனில், நாம் காணும் காட்சிக்கும், பெருமான் கண்ட திருக்கயிலாயக் காட்சிக்குமுள்ள வேறுபாடென்ன?

இதற்கான விடையை திரு திருவாதவூரடிகள் (அசுரத்தில், மாணிக்கவாசகர்) கொடுக்கிறார். அப்பர் பெருமான் பெற்ற அதே காட்சியை, அடிகளார் திருக்கழுக்குன்றத்தில் பெறுகிறார். அதை, "சூழ்ச்சியில்லாக் காட்சி" என்றழைக்கிறார்.

இப்போது நம்மிடம் வந்து, "நீ வேறு. உனது மனமும், உடலும், வையகமும் வேறு." என்று சொன்னால் ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஏன்? நமக்கு கிடைக்கும் நுகர்வு (அசுரத்தில், அனுபவம்) அத்தகையது. உண்மையை இம்மியளவு கூட உணர முடியாதவாறு காட்சிகள் திறம்படத் தோன்றுகின்றன. இதுவே அன்னை / பெருமாளின் சூழ்ச்சியாகும் (அசுரத்தில், மாயை).

திருக்கயிலாயக் காட்சியில் சூழ்ச்சிக்கே இடமிருக்காது. யாவற்றிலிருந்தும் நாம் விலகியிருப்போம். அக்காட்சியை காண்பதால் தெளிவு கிட்டும். தெளிவு கிட்டியதால்தான், "கண்டறியாதன கண்டேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

ஒவ்வொரு ஆண்டும் திருக்கயிலாயக் காட்சியை நினைவு கூறுவது எதற்காக? சிந்திப்பதற்காக. பெருமான் பெற்ற தெளிவை நாமும் பெறுவதற்காக. தெளிவு பெற்று, பிறவிச் சூழற்சியிலிருந்து மீள்வதற்காக.

எனில், சூழ்ச்சியில்லா காட்சியில் சூழ்ச்சியின் மனித வடிவங்களில் ஒன்றான அசுரருக்கென்ன வேலை? 👊🏽👊🏽😍😌

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 14, 2025

ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பானையோட்டுச் சில்லில் தமிழ்-"மாமி" எழுத்துகள்! 😜

செய்தி: ஓமன் நாட்டில் கிடைத்துள்ள பானையோட்டுச் சில்லில் தமிழ்-"பிராமி" எழுத்துகள் உள்ளன.

மாமி: ஏண்ணா, இது உங்களுக்கே நன்னாயிருக்கா? படி அளக்குறது வாராகி அம்பாள். அவளோட பேர வைக்காம பிராம்மி அம்பாள் பேர வெச்சிருக்குறேளே!

சாஸ்திரிகள்: (சற்று சிந்தித்து விட்டு) சரிடி. இனி கிடைக்கிற வஸ்துகளுக்கு தமிழ்-மகேஸ்வரி, தமிழ்-கௌமாரி, தமிழ்-வைஷ்ணவி, தமிழ்-வராகி, தமிழ்-இந்திராணி & தமிழ்-சாமுண்டி-ன்னு பேர் வெக்கிறேன்.

மாமி: இதுவும் செக்யூலரா இருக்குண்ணா. ஆனா, எல்லாத்துக்கும் முன்னாடியும் நீச பாஷைய Prefixஅ சேர்க்கணுமா?

சா: இது கலிகாலம்டி. மறுபடியும் அசோகன், கிருஷ்ணதேவராயர், திருமலை நாயக்கர் காலம் வரும்டி. அப்போ கம்ப்ளீட்டா சம்ஹாரம் பண்ணிடலாம். அது வரைக்கும் சித்த பொறுத்துக்கோடி.

😄😄😄

கரிகால் பெருவளத்தானை தங்களது இனத்தைச் சேர்ந்தவனாக காண்பித்து, தங்களுக்கு பெருமை சேர்த்துக் கொள்வார்கள் தெலுங்கர்கள். "எங்களது நாம விகாரைக்கு வந்து வழிபட்டுச் சென்ற பிறகே, வேள்வி செய்து அங்கயற்கன்னியை பெற்றெடுத்தார் பாண்டியர்" என்று புருடா விட்டு, நாமத்தொழிலானது திருநெறிக்கு இணையானது / முந்தையது என்று படங்காட்டுவார்கள் நாமாசுரர்கள். இவை போன்று, எங்கெல்லாம் பழந்தமிழரின் எச்சங்கள் கிடைக்கின்றனவோ, அங்கெல்லாம் அசுரத்தை சேர்த்து, தங்களை தொல்தமிழருக்கு இணையாகவோ / மேலானவராகவோ காட்டுவார்கள் அசுரர்கள்.

💥 2,300 ஆண்டுகளுக்கு முன்னர் தேவலோகத்தில் (அதாவது, பீடாவாயன்களின் மண்ணில்), மன்னன் முதல் குடியானவன் வரை ஒரு பயலுக்கும் கல்வியறிவு கிடையாது.

💥 1,800 ஆண்டுகளுக்கு முன்னர் அசுரத்திற்கு வரி வடிவம் கிடையாது.

💥 7ம் நூற்றாண்டில் கூட அன்னைத் தமிழிலிருந்து சொற்களை திருடிக் கொண்டிருந்தனர் என்பதை குமரில பட்டர் என்ற அசுர அறிஞரே பதிவு செய்திருக்கிறார். (அவர்களது மொழி பழமையானது, முழுமையானது எனில் ஏன் திருடிக் கொண்டிருந்தார்கள்? 😏)

💥 இதுவரை தேவலோகத்தில் ஓர் உரோமானிய, கிரேக்க காசு கூட கிடைக்கவில்லை! (பொருளியல் பற்றி தெரிந்திருந்தால் தானே! தெரிந்ததெல்லாம் படங்காட்டுதல், பீடாவை மென்று துப்புதல், தமிழரிடமிருந்து திருடுதல், பிடுங்குதல், சுரண்டுதல்...)

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

தமிழே மொழி. தமிழரது பண்பாடே பண்பாடு. தமிழரது திருநெறியே சமயம். 💪🏽🙏🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Tuesday, August 12, 2025

அகத்திய மாமுனிவர் பெருமாளை குறுகச் செய்ததால் தென்னாடுடையவருக்கு தலைவலி வந்ததாம்!! 😆

"உள்ளத்தை அள்ளித்தா" என்ற திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி:

சிறையில் இருந்து தம்பி-மணிவண்ணன் வெளியே வந்திருப்பார். அவரைப் பார்த்து செந்திலும் பாண்டுவும், "பாஸ், நீங்க ரொம்ப மாறிட்டீங்க. இங்கிலீஷ் பேசுறீங்க." என்று சொல்வர். அதற்கு மணிவண்ணன், "ஜெயிலுக்குள்ள 2 ஃபாரினர்ஸ வச்சிருந்தாங்கோ. ஸ்மக்ளர்ஸ். அவங்களோட பேசிப்பேசி, தமிழ் கொஞ்சம் கட்டாயிடுச்சு; இங்கிலீஷ் கொஞ்சம் ஏட் ஆயிடுச்சு" என்று பதில் சொல்வார்.

இக்காட்சியை போன்று, அறநிலையத் துறை அலுவலர்களும் அசுரர்களோடு பழகிப் பழகி, அவர்களை போன்று புருடா விடக் கற்றுக் கொண்டுள்ளனர் போலிருக்கிறது! 😁

oOo

அடுத்து, சில "பகுத்தறிவு" கேள்விகள் 😜:

😀 அகத்தியர் குறுகச் செய்தது பெருமாளை. எனில், பெருமாளுக்குத்தானே தலைவலி வரவேண்டும்? எப்படி சிவ பெருமானுக்கு தலைவலி வரும்?

😃 பெருமாளை குறுகச் செய்து சிவ பெருமானாக மாற்றிவிட்டால், ஏற்கனவேயிருக்கும் சிவபெருமானின் நிலை என்னவாகும்? 

😄 மேலும், பெருமாளின் வேலையை யார் பார்த்துக் கொள்வார்?

😁 பெருமாள் சிவனாக மாறிவிட்டால், உமையன்னைக்கு குழப்பமேற்படாதா? பெருமாளை காணாது மலர்மகள் அச்சமடையமாட்டாரா?

😆 யார் யாருக்கு பிறந்தார்கள் என்ற குழப்பம் வராதா? இதென்ன மாமாப்பயலின் பரம்பரையா? அல்லது, கொல்டியாள்களின் திராவிசம் கோளோச்சும் இடமா?

(ஜனகராஜின் ஒலிப்பில்) கன்ஃபியூஷன்!! 😂😂🤣

oOo

அகத்தியர், பெருமாள், சிவ பெருமான், சந்தனாதி தைலம் எல்லாம் மெய்யியல் குறியீடுகளாகும்.

🌷 அகத்தியர் - திருக்குற்றாலீசுவரர் என்ற இறைவடிவத்தின் கீழ் திருநீற்று நிலையில் (அசுரத்தில், சமாதியில்) இருக்கும் பெருமான்.

🌷 பெருமாள் - நமது மனம்.

🌷 பெருமாளை குறுகச் செய்வது - நமது மனதை அடக்குவது.

🌷 சிவ பெருமான் - உள்ளபொருள் / நமது தன்மையுணர்வு.

🌷 மனதை விரிய விட்டால் பெருமாளாவோம். மனதை அடக்கி / சுருக்கி / அழித்து விட்டால் சிவமாவோம்.

🌷 மெய்யறிவு பெற்ற பின்னரும், ஜிஎஸ்டி-சூழ் வையகத்தை சமாளிப்பதற்கு தெளிவு, பயிற்சி வேண்டும். இதையே "6 திங்கள்களுக்கு எண்ணெயை காய்ச்சி, இறைவடிவத்தின் மீது ஊற்றி, வழித்தெடுத்தல்" என்ற பகுதி குறிப்பிடுகிறது. (இதை விரிவாக விளக்கினால், இவ்விடுகையின் நோக்கம் சிதறிவிடும். திருவருள் விரும்பின் வேறொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம். 🙏🏽)

திருக்குற்றாலப் பெருமான் என்பது எந்த மாமுனிவரை குறிக்குமோ அப்பெருமான், தன்னை நாடி வந்தவர்களிடம், "மனதை அடக்கு / அழி. அது போதும். தக்க சமயத்தில் தெளிவு பிறக்கும். பின்னர், அன்றாட வாழ்வில் சந்திக்கும் தொல்லைகளை என்னிடம் கொண்டு வா. சமாளிக்க கற்றுக் கொடுக்கிறேன்." என்று அருளியிருப்பார். இதையே மேற்கண்ட தலைவலிக் கதையாக பதிவு செய்திருக்கிறார்கள். மறையாக்கம் (Encrypt) செய்யப்பட்டு வரும் தரவை மறைநீக்கம் (Decrypt) செய்து பயன்படுத்த வேண்டுமே தவிர, அப்படியே பயன்படுத்தக் கூடாது. 

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻