Monday, November 17, 2025

டகால்டிக்காரர்தான் மீன்குஞ்சுக்கும் நீந்தக் கற்றுக் கொடுத்தவராம்! 😜


பல கோடி ஆண்டுகளுக்கு முன்னரே வையகத்தை தப்பும் தவறுமாக படைத்து விட்டு, அதை சரி செய்ய, 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் தனது ஒரே மகனை அனுப்பி வைத்தார் இறைவன் என்று ஒப்பாரி வைக்கும் ஒரு கூட்டம்!

பிறைநிலவைக் கூட ஆண்குறியின் உட்திறப்பாக கண்ட ஒரு பெருமகனார் காட்டிய "அன்பு" வழிதான் வையகத்தை உய்ய வைக்குமென்று ஊளையிடும் இன்னொரு கூட்டம்!

இவ்வரிசையில், டகால்டி வேலைகளை செய்து கொண்டிருந்த ஒரு தெலுங்கர்தான், நாராயணன் என்ற அசுரச்சொல்லிற்கான பொருளை வெளிப்படுத்தினார் என்று டோலிவுட் வகை படங்காட்டுகிறது ஒரு கூட்டம்!

சமயம் என்ற சொல்லுக்குள் அடங்கும் யாவற்றையும், "அக்கு வேறு ஆணி வேறாக" என்றோ பிரித்து மேய்ந்தவர் தொல் தமிழர். டகால்டிக்காரருக்கு 1300-1400 ஆண்டுகளுக்கு முன்னரே,

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

என்று எழுதிவைத்துள்ளார் முப்பால் முனிவர்.

பொருள்: எப்போதும் உயர்ந்த உள்ளபொருளை மட்டுமே சிந்திக்கவேண்டும். அப்படி சிந்திக்கவிடாமல் "மற்றது" தடுத்தாலும், அப்படி தடுக்கும் அந்த "மற்றதை" விடாது தவிர்க்கவேண்டும்.

"மற்றது" என்ற சொல்லினால் முனிவர் குறிப்பிடுவது... நாராயணனை!

உண்மையில், அவர் குறிப்பிடுவது அன்னையை (டகால்டிக்காரரின் நாராயணனை, அன்று, பண்பட்டோர் மதிக்கவேயில்லை! 😏). அன்னை எதை குறிப்பிடுகிறாரோ அதை ஆணாகக் கொண்டால் நாராயணன். இதனால்தான் மாயோனை அன்னையின் தமையன் என்றனர்.

> நாராயணன் - நீராய் இருப்பவன்.
> நீர் - நிலையாக இல்லாமல் மாறிக்கொண்டேயிருக்கும் யாவும். அதாவது, மனம், உடல், வையகம் என மொத்த படைப்பும் ஆனவன்.

சுவரிருந்தால்தான் வரைபடம்!
> சுவர் - உள்ளபொருள்
> வரைபடம் - நாராயணன்

இவ்வளவுதான் நாராயணன்!

இதைப் போய் ஒருவர், "வெளியே சொல்லக் கூடாது" என்று கட்டளையிட்டாராம். அதை மீறி டகால்டிக்காரர், ஒரு நெடுமாடத்தின் மீதேறி, வெளியிட்டாராம். அக்கால பாலகிருஷ்ணாவாக (திராவிட நடிகர் 😉) இருந்திருப்பார் போலிருக்கிறது! 🤣

oOOo

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

No comments:

Post a Comment