🌷 அன்னை - மனம்
🌷 இறைவன் - தன்மையுணர்வு (உள்ளபொருள்)
🌷 கைகோர்த்தல் - மனதை முழுவதுமாக தன்மையுணர்வில் கரைத்து விடுதல்
திருமணஞ்சேரி கருவறையிலுள்ள இறைச்சின்னத்தின் கீழிருக்கும் திரு அருள்வள்ளற் பெருமான் (அசுரத்தில், உத்வாகநாதர்), தனது மனதை முழுவதுமாக கரைத்துவிட்டார் என்பதையே "அங்கு இறைவனும் அன்னையும் கைகோர்த்தபடி உள்ளனர்" என்று பதிவு செய்துள்ளனர்.
இப்படி வெளிப்படையாக சொன்னால் என்னவாகும்? எல்லோருக்கும் தெளிவு கிடைத்து, பழையபடி, மெய்யறிவுத் தேடலில் ஈடுபடுவர். பிறகு, படங்காட்டும் தொழில் படுத்துவிடும்! 😏
oOo
பெரும்பாலான இறைத் திருமணங்கள் பின்வரும் இரு வகைகளுக்குள் அடங்கும்:
🌷 திருச்செந்தூர் முருகன்-தெய்வானை திருமணம் - மெய்யறிவு அடைதலை குறிக்கும். (தெய்வானை - மெய்யறிவு)
🌷 திருத்தணி முருகன்-வள்ளி திருமணம் - ஏற்கனவே திருநீற்று நிலையிலிருக்கும் பெருமான், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு நல்வழி காட்டுவதற்காக, தனது மனதை சற்றே இயங்கவிடுதலை குறிக்கும். (வள்ளி - மனம்)
இன்னொரு வகை "திருமணமும்" உண்டு:
|/ பெருமாள்-மலர்மகள் திருமணம் - மெய்யறிவு பெற்ற ஒரு பெருமான், தன்னிலையிலிருந்து விலகி, மீண்டும் வையக வாழ்க்கைக்கு திரும்பி, "கோவிந்தா" ஆவதை குறிக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு: திரு மறைக்காட்டு மணாளர் (அசுரத்தில், விசுவாமித்திரர்) பெண்ணாசையால் தன்னிலை தவறியது.
> மலர்மகள் - மெய்யறிவு பெற்ற மணாளர்
> பெருமாள் - மேனகை, மேனகையால் அவருக்கு தோன்றிய பெண்ணாசை, அதனால் பிறந்த சகுந்தலை...
எவ்வாறு குடித்து உடல், குடும்பம் & நாட்டு நலன்களை கெடுத்துக் கொள்ளுமிடத்திற்கு "மனமகிழ் மன்றம்" என்று கொல்டியாள் கூட்டம் பெயரிட்டுள்ளதோ, அவ்வாறே உயர்ந்த வீடுபேற்றிலிருந்து, தாழ்ந்த வையக வாழ்க்கைக்கு திரும்புதலை, கொல்டியாள் மண்ணிலிருந்து வந்த நாம மதம் திருமணமென்று அழைக்கிறது!
ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் காணும் கூட்டத்திற்கு, திருமணம் என்பது கோவிந்தாவாகவும், கோவிந்தா ஆவது திருமணமாகவும் தோன்றுவதில் வியப்பில்லை! 👊🏽👊🏽
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment