விளக்கீடுத் திருவிழாவின் அழகில் மயங்கிய வடவர், அதை அவர்களது தீபாவளியோடு (திரு கண்ண பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாள்) இணைத்துக் கொண்டனர்.
திரு கண்ண பெருமான் உணர்ந்தது: "இவ்வுடலே நான்" எனும் தவறான எண்ணத்தை விட்டொழித்தலே, உடலெனும் கொடுஞ்சிறையிலிருந்து (நரகம்-நரகாசுரன்) விடுதலை (அசுரத்தில், முக்தி) அடைவதாகும்.
திரு இடைக்காடர் உணர்ந்தது: உயிரிகள் எண்ணற்றவையாக இருந்தாலும், வகை வகையாக இருந்தாலும், அவற்றின் உள்ளிருப்பது ஓர் உள்ளபொருளேயாகும்.
இதையுணர்த்தவே வரிசை வரிசையாக, பல் வேறு அளவுகளில், பல் வேறு வகைகளில் விளக்குகளை ஏற்றுகிறோம். எனவே, விளக்கீடுத் திருநாளே உண்மையான தீபாவளியாகும் (தீப+ஆவளி - தீபங்களின் வரிசை)!
oOo
இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.
-- திரு அருட்கடல் பெருமான் (அசுரத்தில், பகவான் இரமணர்) 🌺🙏🏽🙇🏽♂️
பொருள்: "இவ்வுடலே நான்" எனும் தவறான எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, புறம் நோக்காது, அகம் நோக்கி (கருத்தை நமது தன்மையுணர்வில் பொருத்தி), "நாமே இறுதியான உள்ளபொருள்" என்பதை உறுதியாக அறுதியாக உணர்வதே, திரு அண்ணாமலையாரின் முடி மீது ஏற்றப்படும் சுடரை காண்பதின் பொருளாகும்.
oOo
தொல்கார்த்திகைநாள் விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!
-- திரு ஆளுடைய பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) 🌺🙏🏽🙇🏽♂️
திருமயிலைப் பதிகத்தில், தொன்மையான தமிழர் திருவிழாக்களை பட்டியலிடும் பெருமான், விளக்கீடை மட்டும் "தொல்" என்ற பெயரடையோடு குறிப்பிட்டு, அதன் தொன்மையை சிறப்பிக்கிறார்.
oOo
அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🪔☀️
oOOo
அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽
பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️
🪻🌼🪷🌼🪻

No comments:
Post a Comment