Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Sunday, November 3, 2024

ஆந்தை எனும் மெய்யியல் குறியீடு!


முழுக்க முழுக்க மெய்யியல் சார்ந்த ஒரு குறியீடான ஆந்தையை உயிருடனோ, அல்லது, உயிரற்ற அதன் உடலுறுப்பையோ வைத்து வழிபட்டால், பொருள் (தெய்வப்பிறவிக்கு மிகவும் பிடித்தமான காசு, பணம், துட்டு, டப்பு, மணி...) சேரும் என்பது முழு முட்டாள்தனமாகும்! 🤦🏽 குறியீட்டை தவறாக புரிந்துகொண்டு, அழியும் பொருளுக்காக, அதை வேட்டையாடுகிறார்கள்; கொல்கிறார்கள்; பல மடங்கு விலை கொடுத்து வாங்கி, வழிபாடு என்ற பெயரில் தீவினைகளை சேர்த்துக் கொள்கிறார்கள்!

(அன்பு கூர்ந்து, "மலர்மகள்-ஆந்தை" தொடர்புடைய தீபாவளி கதையை, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🌷 மெய்யியலில், ஆந்தை என்பது விழிப்புணர்வை குறிக்கும்.

மெய்யறிவுத் தேடலில் இருக்கும்போது, விழிப்புடன் இருக்காவிட்டால் மெய்யறிவு கிட்டாது. மெய்யறிவு கிடைத்த பின்பு, விழிப்புடன் இருக்காவிட்டால் மெய்யறிவு பறிபோய்விடும். எனவே, மெய்யியலுக்கு விழிப்புணர்வு (ஆந்தை) இன்றியமையாததாகிறது.

🌷 ஆந்தையின் கண்கள் இருட்டில் நன்கு வேலை செய்யும்.

மெய்யியலில், இருள் என்பது தற்போது நாமிருக்கும் நிலையாகும். அதாவது, நம் மீது போர்த்தப்பட்டிருக்கும் உடலையும், கண் முன்னே தோன்றும் வையகத்தையும் உண்மையென்று கருதும் நமது அறியாமை. 

"இருட்டில் காண்பது" என்பது, நம் உடலும், நம் மனதில் தோன்றும் எண்ணங்களும், கண்முன்னே விரியும் வையகமும் பொய்யென்றும், இப்பொய்யை உணரும் நாமே என்றுமுள்ள மெய்யென்றும் உணருவதாகும்.

🌷 வடவர்களை பொருத்தவரை, ஆந்தை மலர்மகளின் ஊர்திகளில் ஒன்றாகும். ஆந்தை என்பது விழிப்புணர்வு எனில், மலர்மகள் (செல்வம்) என்பது மெய்யறிவாகும்.

🌷 பாற்கடலை கடையும்போது தோன்றியவர் மலர்மகள்.

("பாற்கடல் கடைதல்" கதையை, அன்பு கூர்ந்து, இணையத்தில் தேடிப் படித்துக் கொள்ளவும்.)

🔸 பாற்கடல் - நமதுடல்.

🔸 மந்தார மலை - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "தன்னாட்டம்" போன்ற நுட்பம் (டெக்னிக்).

🔸 வாசுகிப் பாம்பு - நமது மூச்சுக்காற்று.

🔸 பாம்பின் தலைப்பக்கம் இருக்கும் தேவர்கள் - நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி (ஆக்சிஜன்).

🔸 பாம்பின் வால் பக்கம் இருக்கும் அசுரர்கள் - நாம் வெளிவிடும் கரியமிலம் (கார்பன் டையாக்சைடு).

🔸 மலையை தாங்கும் ஆமை - புலனடக்கம்.

🔸 மேற்கண்டவற்றை கொண்டு செய்யப்படும் "கடைதல்" செயல் -

மூச்சை உள்ளேயிழுத்து வெளிவிடும் செயல், எவ்வாறு நம்மை அறியாமல் தானாக, இயல்பாக நடக்கிறதோ, அவ்வாறு, புலனடக்கத்துடன், தன்னாட்டம் போன்ற நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

🔸 மூத்தவள் / மூத்தாயி / தவ்வை / மூத்த தேவி / மூதேவி -

மேற்கண்ட "கடைதல்" செயலை செய்யத் தொடங்கினால், அவரவர் ஊழ்வினையின் படி, முதலில், பல நுண்ணிய அறிவு, திறமைகள் வெளிப்படும். இவற்றால் பேரும், புகழும், பொருளும் கிட்டலாம். ஆனால், பிறவியறுக்க முடியாது. இதனால்தான், முதலில் வெளிப்படும் அனைத்தையும் சேர்த்து, "மூத்தவள் / மூதேவி" என்று பெயரிட்டுள்ளனர்.

🔸 இளையவள் / சின்னாயி / மலர்மகள் / இலக்குமி / ஶ்ரீதேவி -

வெளிவர வேண்டியதெல்லாம் வெளியே வந்த பிறகு, இறுதியில், "தி ட்ரூமேன் ஷோ" (The Truman Show) திரைப்படத்தின் இறுதியில், ட்ரூமேன் உணருவது போல, எல்லாம் வெறும் ஒலிஒளி காட்சியென்பதையும், அக்காட்சியை இதுகாறும் கண்ட நாமே உள்ளபொருள் என்பதையும் உணருவோம். இதுவே மெய்யறிவு - இளையவள் - இலக்குமி - செல்வம் - ஞானம் - அமிர்தம் எனப்படும்.

oOo

இதுவரை நாம் கண்ட "ஆந்தை" குறியீடு மட்டுமல்ல, தீபாவளியுடன் தொடர்பு கொண்டுள்ள 

- நரகாசுரனை கண்ணன் கொன்றது
- இராமன், சீதை & இலக்குமணன் அயோத்திக்கு திரும்பியது
- காட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பியது
- பாற்கடலிலிருந்து மலர்மகள் தோன்றியது

ஆகிய அனைத்து குறியீடுகளும், மெய்யறிவு பெறுதல் என்ற ஒரே நிகழ்வை உணர்த்துகின்றன. 

மெய்யறிவே செல்வம்! அதை அடையும் பொழுதே தீபாவளி!

oOOo

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Wednesday, October 30, 2024

யாருடைய தீபாவளியை தமிழர்கள் கொண்டாடவேண்டும்?


🌷 தீபாவளி - திரு கண்ண பெருமான் மெய்யறிவு அடைந்த திருநாள்.

🌷 "நான் இவ்வுடல்" என்ற எண்ணமே நரகாசுரன். இதையுணர்ந்து, அவ்வெண்ணத்தை விட்டொழித்தலே விடுதலையாகும் (தீபாவளியாகும்).

🌷 தமிழ்நாட்டில் தீபாவளி அறிமுகப்படுத்தப்பட்டது திருமலை நாயக்கரின் ஆட்சிப் பொழுதில் (பொ.ஆ. 1623-59). அதற்கு முன்னர், இங்கு, கொண்டாடப்படவில்லை.

🌷 நாம மதத் திருவிழாக்களில், தீபாவளி மட்டுமே மெய்யறிவை போற்றும். மற்றவை... தூற்றும்! (எ.கா.: கண்ணன் பிறந்தநாளன்று வரையப்படும் கண்ணனின் காலடிச்சுவடுகள் - வெண்ணெய் திருடிய கண்ணன் - மெய்யறிவை திருடிய மனம்!) இதையுணர்ந்து கொள்ள ஒரு சிறிய எடுத்துக்காட்டு:

🔸 திருநெறி திருக்கோயில்களில் திருநீறு தருவார்கள். நாம விகாரைகளில் நீர் தருவார்கள்.

🔸 திருநீறு - திண்பொருள் - நிலைபேறு.
நீர் - நீர்மப்பொருள் - அலைபேறு.

🔸 நிலைபேறு - மனதை அழி. பற்றுகளை அறு. பிறவியறு.

🔸 அலைபேறு - மனதை அலைய விடு. பற்றுகளை சேர்த்துக்கொள். பிறவியெடு.

🌷 மொத்த நாம மதமே மெய்யறிவுக்கு எதிரானதாக இருந்தும், அவர்களுக்கேற்ற தெலுங்கு நாயக்க மன்னர்களின் ஆட்சி நடந்தும், ஏன் மெய்யறிவை போற்றும் தீபாவளியை அறிமுகப்படுத்தினார்கள்?

ஏனெனில், இது மெய்யறிவுத் திருமண்ணாகும்!

அப்போது, 300 ஆண்டுகளுக்கு மேலாக தமிழரல்லாதோர் ஆட்சி நடந்தும், ஊராட்சி அமைப்புகளுக்குள் அசுரர்கள் வெகுவாக நுழைந்திருந்தும், வளங்கொழிக்கும் தொழில்கள் தெலுங்கர்களிடம் சென்றதால் வருமானம் சரிந்திருந்தும், தொல் தமிழரிடம் பண்பாடு சரிந்திருக்கவில்லை! கொள்கைகள் நீர்த்துப் போகவில்லை!! அவ்வளவு உரமேறிய திருமண்ணாக விளங்கியது தமிழ் திருநிலம்!!!

("முதலில், நமது இனத்தவரான கண்ண பெருமானை வைத்து, நம்மை நிலை நிறுத்திக் கொள்வோம். நமது 'கொள்கைகளை' பிறகு பார்த்துக் கொள்ளலாம்." என்பது நாமாசுரர்களின் நிலைப்பாடாக இருந்திருக்கவேண்டும். 😏)

🌷 திருவிழா முடிவாகிவிட்டது. மன்னரின் ஆதரவும் கிடைத்துவிட்டது. பட்டாசு, புதுத்துணி, இனிப்பு என்று மக்களை கவரும் நுட்பங்களும் சேர்த்தாகிவிட்டது. ஆனாலும், "மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?" என்ற ஐயம் இருந்திருக்கிறது. எனவே, "கங்கையில் குளித்தீரா?" என்ற திருநெறியின் கூறு ஒன்றை சேர்க்கிறார்கள்!

கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) = மெய்யறிவு பெற்றீரா?

குளிர்ந்த கங்கை நீரில், முதன் முதலாக முழுகும் போது, ஓரிரு நொடிகளுக்கு உடல் மரத்துப்போகும். ஆனால், நான் எனும் நமது தன்மையுணர்வு மரத்துப்போகாமல் விழிப்புடனிருக்கும். இது, "நாம் உடலல்ல" என்ற உண்மையை உணருவதற்கு ஓர் எளிய வழியாகும்.

🌷 நமது விளக்கீடு திருவிழாவைப் போன்று, தீபாவளியின் போது வடவர்கள் இல்லந்தோறும் விளக்கேற்றுவார்கள்.

விளக்கீடின் போது, திருவண்ணாமலையின் முகட்டில் (அசுரத்தில், உச்சியில்) விளக்கேற்றுவார்கள். அதைக் கண்டதும், சுற்றுப்புறங்களிலுள்ள மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றுவார்கள். இக்காட்சியை திருவண்ணாமலை மீதிருந்து கண்டால், விளக்கொளி அலை அலையாக பரவுவது போன்றிருக்கும். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதில் மனதை பறிகொடுத்த வடவர்கள், விளக்கிடுதலை அவர்களது தீபாவளியோடு இணைத்துக் கொண்டார்கள். ஆனால், இது தவறாகும்!

🙏🏽 கண்ண பெருமான் உணர்ந்த பேருண்மை: நான் இவ்வுடல் என்ற எண்ணமே நரகம். அதை விட்டொழித்தலே விடுதலை.

🙏🏽 திரு இடைக்காடர் உணர்ந்த பேருண்மை: உயிரிகள் பல்வேறு வகையாக தோன்றினாலும், எண்ணற்றவையாக தோன்றினாலும், அவர்களுக்குள் இருக்கும் நான் என்ற தன்மையுணர்வு ஒன்றுதான். (எரியும் விளக்குகள் பல்வேறு வகையாக இருந்தாலும், எண்ணற்றவையாக இருந்தாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான்.)

இரண்டு பேருண்மைகளும் ஒன்றல்ல. இரண்டையும் இணைப்பது சரியல்ல.

oOo

தமிழர்கள், ஒரு பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாளை கொண்டாட வேண்டுமெனில், அது திரு சீர்காழி பிள்ளையாரின் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) திருநாளாகத்தான் இருக்கவேண்டும். அப்பெருமான் மட்டும் தோன்றியிருக்காவிட்டால், மூன்றாவது அகவையில் அவர் மெய்யறிவு பெற்றிருக்காவிட்டால்... திருநெறியத் தமிழரது மொழியும், சமயமும், வாழ்வியலும், வரலாறும் & அருமைப் பெருமைகளும் என்றோ வடவர்களால் மண்ணோடு மண்ணாக்கப்பட்டிருக்கும்!

இதையுணர்ந்ததால்தான், திரு வள்ளற்பெருமான், தனது வழிகாட்டி நூலாக திருவாசகத்தை கொண்டிருந்தாலும், தனது மெய்யாயராக திருவாதவூர் அடிகளாரை கொள்ளாமல், திரு சீர்காழி பிள்ளையாரை கொண்டார்.

oOo

தமிழர்களுக்கு தீபாவளி என்பது திரு காழியூர் பிள்ளையாரின் திருநாள் எனில், வையகத்திற்கு... பகவான் திரு இரமண மாமுனிவரின் திருநாளாகும்!

கடந்த ஒரு நூற்றாண்டில், வையகம் முழுவதும், பிறவிப் பெருங்கடல் நீந்தியோரை அணுக முடிந்தால், அவர்கள் அனைவரிடமும் "பகவான்" என்ற ஒரு பொது கூறு (factor) இருக்கும். இனிவரும் நாட்களில், "பகவானின்றி கிட்டாது வீடுபேறு" என்று கூறுமளவிற்கு அவரது திருச்சொற்கள், மெய்யியலுக்கு இன்றியமையாததாக இருக்கும்.

தொன்று தொட்டு, வையகம் முழுவதும் எண்ணற்ற பெருமான்கள் அவ்வப்போது தோன்றி, நல்வழி காட்டியிருந்தாலும், குறுகிய கண்ணோட்டம் கொண்ட நரகாசுரக்கூட்டங்களால் மீண்டும் மீண்டும் இவ்வையகம் குப்பைத்தொட்டியாகிவிடும்! இம்முறை அத்தகைய கூட்டங்களிடமிருந்து நம்மை காக்கவும், அக்கூட்டங்களின் வேரறுக்கவும், இனி எவரும் எப்போதும் "மீகாமன் இல்லா மாகாற்று அலைகலம்"- ஆகாமலும் காக்கப்போவது பகவானிடமிருந்து வெளிப்பட்ட திருச்சொற்களாகும்!

இத்தகைய பெருமான் நம் மண்ணில் பிறந்து, தென்தமிழை விரும்பி, தூய தமிழில் இரண்டன்மை (அசுரத்தில், அத்துவைதம்) பற்றிய நூலில்லை என்ற குறையை போக்கி, மெய்யியல் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து, பலரையும் கரையேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது...

தெக்கணமும் அதிற்சிறந்த நற்றமிழ்நாடே 
என்றும் செம்பொருள் விரும்பும் திருநாடு

... என்பதற்கு இன்னொரு சான்றாகும்!

oOOo

தமிழே நிறைமொழி, மறைமொழி & இறைமொழி! 🙏🏽💪🏽

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, November 13, 2023

தீபாவளி எனும் உருவகத்தின் வெவ்வேறு வடிவங்கள்!!


🌷 திருவாரூரில் பிறக்க விடுதலை
🌷 தில்லையை காண விடுதலை
🌷 காசியில் இறக்க விடுதலை
🌷 திருவருணையை நினைக்க விடுதலை

மேலுள்ள புகழ்பெற்ற வரிகளின் பொருள்: மெய்யறிவு பெறுதல்!

இது போன்றதுதான் இணைப்புப் படத்திலுள்ள 5 வரிகள். வெவ்வேறு உருவகங்களாக இருந்தாலும் அவை மெய்யறிவு பெறுதலையே குறிப்பிடுகின்றன.

1. கண்ணபிரான் நரகாசுரனை கொன்றார்

🌷 நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம்.

கண்ணபிரான் - 5,125 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆரியரென்றும் கொள்ளலாம். அல்லது, நம் கண் முன்னே விரியும் வையகமென்றும் கொள்ளலாம். வையகத்தில் நாம் கண்ட / கேட்ட ஏதோவொன்று நமக்கு மெய்யறிவை கொடுக்கிறதென்று பொருள் கொள்ளலாம்.

(இணைப்புப் படத்திலுள்ள சொற்றொடர்களை எழுதியவர்கள் வைணவர்களாவர். இவர்களைப் பொருத்தவரை காண்பவனை விட காணப்படுவதே மேலானதாகும். இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில் பொருள் காணவேண்டும்.)

2. பாண்டவர்கள் 12 ஆண்டு கால காட்டு வாழ்விலிருந்து வெளிப்பட்டார்கள்

🌷 காடு - வையகம்
🌷 பாண்டவர்கள் - 5 பேர் - 5 புலன்கள்

மெய்யறிவு அடையும்வரை வையகத்திலிருந்து புலன்கள் வழியாக பெறப்படும் தரவுகளால் மனம் கட்டுண்டு கிடக்கும். மெய்யறிவு அடைந்த பிறகும், கண்கள் காணும், காதுகள் கேட்கும்... ஆனால், பாதிப்பிருக்காது. இதையே, "காட்டிலிருந்து புலன்கள் விடுபட்டன" என்ற உருவகப் படுத்தியுள்ளனர்.

3. இராமபிரான், இலக்குவன் & சீதையன்னை அயோத்திக்கு திரும்பினர்

🌷 இராமபிரான் - இருள். வைணவர்களுக்கு இருளே பெரிது. எனவே, முதலில் இடம் பெறுகிறது.
🌷 இலக்குவன் - ஒளி
🌷 சீதையன்னை - குளுமை
🌷 அயோத்தி - போர் நடக்காத இடம்

வையகம் என்பது போர் (அன்றாட வாழ்க்கை) நடக்குமிடம். இதற்கு எதிரான திருநீற்று நிலையென்பது போர் நடக்காத இடம் (அயோத்தி - அ+யுத்தா). அந்நிலைக்கு திரும்பும்போது, நாமிருப்போம் (ஒளி - இலக்குவன்); வெறுமையிருக்கும் (இருள்); ஜிஎஸ்டி-சூழ் வையகத்திலிருந்து தப்பினோம் என்ற குழுமையுமிருக்கும் (சீதை).

4. மன்னர் மகாபலியை ஒழித்து, அன்னை இலக்குமியை மீட்டார் குறளன் பெருமாள்

🌷 குறளன் பெருமாள் - வாமனர் - பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மெய்யறிவாளர்களிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற சின்னஞ்சிறு அறிவுரை.

🌷 மகாபலி - "நான் இன்னார்" என்ற நமது தனித்தன்மை

🌷 இலக்குமி - மெய்யறிவு

மெய்யாசிரியரின் அறிவுரையை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில், நமது தனித்தன்மை அழியும். மெய்யறிவு தானாக வெளிப்படும். இதையே மகாபலியை (நமது தனித்தன்மை) அழித்து, அன்னையை (மெய்யறிவு) மீட்டார் குறளன் பெருமாள் (அறிவுரை) என்று உருவகப்படுத்தியுள்ளனர்.

5. அன்னை இலக்குமி தோன்றிய நாள்

மெய்யறிவு தோன்றிய நாள்.

oOo

ஆக, உருவகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவையுணர்த்தும் பொருள் ஒன்றுதான்: தீபாவளி திருநாள் என்பது மெய்யறிவு கிடைத்த நாளாகும்!

🔸 யாருக்கு மெய்யறிவு கிடைத்த நாள்?

5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணன் என்ற ஆரியப் பெருமானுக்கு மெய்யறிவு கிடைத்த நாள்.

🔸 இத்திருநாளுக்கும் வைணவத்திற்கும் தொடர்புண்டா?

சிறிதளவு கூட கிடையாது. வைணவம் மெய்யறிவுக்கு எதிரானது. தீபாவளித் திருநாளோ மெய்யறிவைப் போற்றுவது. மேலும், கண்ணபிரான் வாழ்ந்த காலத்தில் வைணவமே கிடையாது!

🔸 எனில், ஏன் அனைத்து உருவகங்களும் வைணவர்களுடையதாக உள்ளன?

கண்ணபிரான் ஓர் ஆரியர் என்பதைத்தவிர வேறு பதில் கிடையாது.

எவ்வாறு அரேபியர்களை குறிமதத்தான்கள் கொண்டாடுகிறார்களோ, ஐரோப்பியர்களை எம்எல்எம் மதத்தினர் கொண்டாடுகிறார்களோ, அவ்வாறே கண்ணபிரானை ஆரியர்கள் கொண்டாடுகிறார்கள். ("அவரு எங்க ஆளு!")

oOOo

கண்ணனே காண்பித்தான். கண்ணனே எழுதினான். 🌺🙏🏽🙇🏽‍♂️ (இங்கு கண்ணன் என்பது மாயையாகும். 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பெருமானல்ல.)

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, October 23, 2022

தீபாவளி திருநாள் - சில குறிப்புகள்


அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!!

🙏🏽✨🎁🍥🍡🎊🎉

oOo

☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ மெய்யறிவு பெற்ற நாள்

☀️ நரகாசுரன் - "நான் இவ்வுடல்" என்ற தவறான எண்ணம். இவ்வெண்ணத்தை ஒழிக்கும் நாளே தீபாவளி.

☀️ கங்கையில் குளித்தீரா? - மெய்யறிவு பெற்றீரா?

☀️ வைணவத்தை முன்னிறுத்தவும், கார் காலத்தில் அடங்கிப்போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும், வடக்கத்தியரின் திருநாளான தீபாவளியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினார் மன்னர் திருமலை நாயக்கர்.

அறிமுகம்தான் அன்று நடந்தது. ஆனால், இத்திருவிழா பற்றி என்றோ நாம் அறிந்திருந்தோம். உலகின் பல பகுதிகளுக்கு சென்றுவந்தவர்கள் நாம். வடக்கோடு பல காலம் போர் புரிந்திருக்கிறோம். ஆரியப்படை கடந்திருக்கிறோம். இமயத்தில் கொடி நட்டிருக்கிறோம். கங்கை நீர் கொண்டுவந்திருக்கிறோம். ஆகையால், வடக்கைப் பற்றி நாம் அறிந்திருந்தோம். நமக்கு தேவையானவை நம்மிடம் ஏற்கனவேயிருந்ததால், தீபாவளியை நம் மன்னர்கள் இங்கு கொண்டுவரவில்லை. நம்மால்தான் ஏனையோர் செம்மையானார்களே தவிர, ஏனையோரால் நாம் செம்மையாகும் நிலையில் நம்மை எப்பெருமான் படைக்கவில்லை! 💪🏽

☀️ கடகத் திங்களில் (ஆடி) அம்மன் கோவில்களில் நடத்தப்படும் கூழ் வார்த்தலும், நிறைகோல் திங்களில் (ஐப்பசி) கொண்டாடப்படும் தீபாவளியும், பொருளாதாரத்தை தூண்டிவிடுதல் என்ற வகையில், ஒன்றுதான். கூழ் வார்த்தலின்போது, அனைவரது பணமும் கோயிலுக்கு சென்று, கூழாக மாறி, மீண்டும் அனைவரையும் வந்தடையும். தீபாவளியின்போது, அவரவர் பணத்தை அவரவரே செலவு செய்து மகிழ்ந்து கொள்வர்.

☀️ தீபாவளி என்ற பெயருக்கும், கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நிகழ்வுக்கும் எந்த தொடர்புமில்லை. தீபாவளி எனில் விளக்குகளின் வரிசை. எத்தனை விளக்குகள் ஏற்றினாலும், எத்தனை வகையான விளக்குகள் ஏற்றினாலும், அவற்றில் எரியும் நெருப்பு ஒன்றுதான். இதுபோன்றே, எத்தனை கோடி உயிரிகள் வாழ்ந்தாலும், அவர்களின் தன்மையுணர்வு ஒன்றுதான். இந்த பேருண்மை உணரப்பட்டது திருவண்ணாமலையில். உணர்ந்த நாளை திருக்கார்த்திகை திருநாளாக இன்றுவரை கொண்டாடி வருகிறோம். இந்த விளக்கீடு திருவிழாவால் கவரப்பட்ட வடக்கத்தியர், இதனை கண்ணபிரானோடு இணைத்துவிட்டார்கள்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நம் திருஞானசம்பந்தர் 🌺🙏🏽🙇🏽‍♂️ பாடியதுபோன்று "தொல் கார்த்திகை நாளன்று" நாம் விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOo


தீபாவளி பற்றி பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ எழுதிய ஒரு பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: "இவ்வுடலே நான்" என்ற தவறான எண்ணமே (மனமே) நம்மையாளும் நரகாசுரன். "இந்த எண்ணம் (அசுரன்) எங்கிருந்து தோன்றுகிறது?", அல்லது, "யாருக்கு தோன்றுகிறது?" என்று நோக்கினால் (நோக்கம் - ஞானத்திகிரி - அறிவெனும் சக்கிராயுதம்), எழுந்த எண்ணம் காணாமல் போகும் (கொல்லுதல்). இவ்வாறு செய்பவனே (மனதை கொல்பவனே / மனதென்பது இன்னது என்று உணர்ந்து கொள்பவனே) நாராயணன். இது நடக்கும் நாளே தீபாவளி.

oOOo

சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன்
கண்ணனே காட்டினான் கண்ணனே தாக்கினான்
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
போகட்டும் கண்ணனுக்கே 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

Wednesday, November 3, 2021

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽✨🎁🍥🍡🎊🎉


☀️ தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽🙇🏽‍♂️ நரகாசுரனை கொன்ற நாள். அதாவது, கண்ணபிரான் மெய்யறிவு பெற்ற நாள்.

☀️ நரகாசுரன் - "நான் இந்த உடல்" என்ற தவறான எண்ணம். இந்த தவறான எண்ணத்தை விட்டொழிக்க வேண்டுமெனில் நம்மைப் பற்றிய சரியான அறிவு துய்ப்பாக மலரவேண்டும். இது கண்ணபிரானுக்கு நடந்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

☀️ கங்கை குளியல் - தீபாவளியன்று சந்திக்கும் நபர்களிடம் கேட்கப்படும் கேள்வி: கங்கையில் குளித்தீரா? (கங்கா ஸ்நானம் ஆச்சா?) இதன் பொருள்: மெய்யறிவு கிடைத்ததா?

மெய்யறிவில் திளைக்கும்போது நம் தலையிலுள்ள பிட்டியூட்டரி சுரப்பி சிறப்பாக வேலை செய்யும். இதனால் உடலிலுள்ள மற்ற சுரப்பிகள் தூண்டப்பட்டு, அவையும் சிறப்பாக வேலை செய்யும். இதையே குளியல் என்று குறிப்பிட்டுள்ளனர். பிட்டியூட்டரி சுரப்பியிலிருந்து வெளிப்படும் நீர் வெள்ளை (கங்கை) நிறத்தில் இருப்பதால் "கங்கை குளியல்" என்று பெயரிட்டுள்ளனர். இதையே "சிவபெருமானின் தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவதாக" உருவகப்படுத்தியிருக்கிறார்கள்.

☀️ தமிழகத்தில் தீபாவளியை அறிமுகப்படுத்தியது தெலுங்கு வைணவ மன்னரான திருமலை நாயக்கராவார். வைணவம் பரவுவதற்காகவும், அடைமழை காலத்தில் அடங்கிப் போகும் பொருளாதாரத்தை தூண்டிவிடுவதற்காகவும் அறிமுகப்படுத்தினார். இன்றும் கூட, பெரும்பாலான கிராமப்புற தமிழர்கள் தீபாவளியை கொண்டாடுவதில்லை. பொங்கலே தமிழர் திருநாளாகும்.

☀️ கண்ணபிரான் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மை மெய்யறிவைப் பற்றியது. ஆனால், தீபாவளி என்ற சொல் உணர்த்தும் பேருண்மை வேறு: விளக்குகள் பலவானாலும் எரியும் நெருப்பு ஒன்றுதான். இது போன்று, உயிரிகள் பலவானாலும் எல்லோருள்ளும் உள்ள தன்மையுணர்வு ஒன்றுதான்.

இந்த உண்மை உணரப்பட்ட திருத்தலம் நமது திருவண்ணாமலை (உணரப்பட்ட திருநாள் - திருக்கார்த்திகை). சில சமயம், ஒரு திரைப்படம் தமிழிலிருந்து வடக்கிற்கு சென்று, மீண்டும் வடக்கிலிருந்து தமிழுக்கு வரும். இது போன்று, திருக்கார்த்திகை வடக்கிற்கு சென்று கண்ணபிரானின் திருநாளோடு இணைந்து தீபாவளியாகி, பின்னர், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ஆனாலும், நம்மவர்கள் விளக்கிடுதலை மட்டும் திருக்கார்த்திகையன்றே தொடர்ந்துள்ளனர்.

தீபாவளியன்று விளக்கிடுதலை வடக்கத்தியர் வைத்துக்கொள்ளட்டும். நாம் "தொல் கார்த்திகை நாளன்று" (காழியூர் பிள்ளையாரின் சொற்கள் 🌺🙏🏽🙇🏽‍♂️) விளக்கேற்றுவோம். நமது தொன்மையான மரபைக் காப்போம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Tuesday, July 20, 2021

பக்ரீத் கதையின் உட்பொருள்

(இவ்விடுகை கதை உணர்த்தும் பொருளைப் பற்றியது. கதையை தெரிந்துகொள்ள விரும்புவோர், தயவு செய்து இணையத்தில் தேடிப் படித்துக்கொள்ளவும். அல்லது, இந்த விகடன் கட்டுரையைப் படிக்கவும்: https://www.vikatan.com/spiritual/temples/68302-the-story-of-eid-al-adha--bakrid. நன்றி.)

பக்ரீத் கதையின் அடிப்படை வீடுபேறாகும். இக்கதையின் இரண்டு முக்கிய சொற்கள்: மகன் & ஆடு.

🔹மகன்

தீபாவளிக் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். கண்ணபிரானும் அன்னை சத்யபாமாவும் சேர்ந்து அவர்களது மகனான நரகாசுரனைக் கொன்ற நாளே தீபாவளி. இதில் கண்ணபிரான் என்பது பரம்பொருளின் கூறாகிய நாம். புவியின் கூறாகிய சத்யபாமா என்பது நமதுடல் முதலான அனைத்தும். நரகாசுரன் என்பது "நான் இவ்வுடல்" என்ற தவறான அறிவு. இந்த தவறான அறிவு நீங்குவதற்காக நாம் செய்யும் முயற்சிகள்தாம் கண்ணபிரான்-சத்யபாமா & நரகாசுரனுக்கு இடையே நடந்த போர் ஆகும். இந்த தவறான அறிவு நீங்கியவுடன் நாம் யாரென்று நம்மைப் பற்றிய தெளிவு (மெய்யறிவு) கிடைத்துவிடுகிறது. இந்த தருணமே தீபாவளி.

எல்லாவற்றையும் ஏடாகூடமாக பார்ப்போர் உண்டு. இக்கதையை அப்படி பார்த்தால்... "பெற்றோரே பிள்ளையைக் கொன்றால் நல்லது நடக்கும் (தீபாவளி)" என்றாகிவிடும்!! 😂

அண்மையில், ஆந்திரா/தெலுங்கானாவில் ஒரு கல்லூரிப் பேராசிரியரும் அவரது மனைவியும் சேர்ந்து அவர்கள் பெற்ற 2 மகள்களை, ஒரு கிறுக்கு/ஏமாற்றுக்கார மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பலியிட்டனர். இந்நிகழ்வை "பெற்றோர்-பிள்ளைகள்-பலி" என்று சுருக்கலாம். பெரும்பாலான புறம்போக்குகள் மகனை பலியிடச் சொல்லும். பெண்தெய்வ வழிபாட்டு புறம்போக்குகள் மகளை பலியிடச் சொல்லும்.

தகவல் தொடர்பு வெகுவாக வளர்ந்து விட்ட இக்காலத்திலும் இப்படி ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் இருக்கும் போது அக்காலத்தைப் பற்றி சிந்தித்துப் பார்க்கவும். அதுவும், பண்படாத, காட்டுமிராண்டித்தனமான மக்களையே பெரும்பான்மையாகக் கொண்டிருந்த ஐரோப்பிய & மத்திய கிழக்குப் பகுதிகள் எப்படியிருந்திருக்கும்?

கிறித்துவ மதத்தின் முக்கிய நகரமான வாடிகன் ஒரு காலத்தில் சிறு பிள்ளைகளையும் விலங்குகளையும் பலியிடும் இடமாக இருந்தது. அந்நகரின் அடித்தளமே மண்டையோடுகளால் ஆனது என்று சொன்னாலும் மிகையாகாது!

இஸ்ரவேலர் இயேசுவின் கதையும் "தந்தை-மகன்-பலி" வகை தான்! ("உலகைக் காப்பதற்காக பரமபிதா தனது ஒரே மகனான இயேசுவை பூமிக்கு அனுப்பியதன் மூலம் அவரை பலியாக்கினார்") குறுக்கை என்பது நமது உடலாகும். அதில் அறையப்பட்டிருக்கும் இயேசு என்பது சிதைக்கப்பட்ட  மனமாகும். இவ்வுருவைக் கண்டவுடன் "மனதை அழி" என்று அவர்களுக்குத் தோன்றவேண்டும். மாறாக, "2000 வருசத்துக்கு முன்னாடி உன்னக் கொன்னுட்டாங்களேய்யா!" என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

ஐரோப்பாவின் கதையே இப்படியெனில் பாலைவனப் பகுதிகள் எப்படியிருந்திருக்கும்?

🔹ஆடு

"மனதை அழி" என்று சொன்னால் எல்லோரையும் சென்றடையாது என்பதால் "நரகாசுரன்" வகை கதைகளை உருவாக்கினர். இது, சமூகத்தின் சில பகுதிகளில் ஏடாகூட விளைவுகளை ஏற்படுத்தியதால் அடுத்து விலங்குகளுக்கு மாறினர். குறிப்பாக, ஆட்டைத் தேர்ந்தெடுத்தனர்.

நம் ஊர்களில் "கிடா வெட்டு" திருவிழாக்கள் நடக்கும். ஆட்டுக்கிடாவை வெட்டி, பொங்கல் வைத்து, இறையுருவங்களுக்கு படையலிட்டு, உற்றார் உறவினருடன் விருந்துண்பர்.

இதில், ஆடு என்பது மனமாகும் (மனதைக் குறிக்கும் முருகப்பெருமானின் ஊர்திகளில் ஒன்று ஆடு). ஆட்டை வெட்டுதல் என்பது மனதை அழித்தலாகும். பொங்கல் என்பது மனம் அழிந்தோரிடமிருந்து (மெய்யறிவாளர்களிடமிருந்து) வெளிப்படும் சொற்கள் - அறிவுரைகளாகும். அந்த அறிவுரைகளை எல்லோரிடமும் எடுத்துச் செல்லுதலே பகிர்ந்து உண்ணுதலாகும்.

இதற்கு அண்மைக்கால மிகச்சிறந்த எடுத்துக்காட்டு: பகவான் திரு ரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. இவரது மனமழிந்த பிறகு, இவரிடமிருந்து பொங்கிய "நான் யார்?" எனும் பொங்கலால் வீடுபேறு அடைந்தோர் எத்தனையோ! இனி வரும் காலங்களிலும் ஆன்மபசி போக்கவல்ல உணவு இது ஒன்றேயாகும்.

மீண்டும் பாலைவனப் பகுதிக்கு திரும்புவோம்.

"மகனைக் கொல்" என்று சொன்னதால் வந்த விளைவைக் கண்ட அப்பகுதி பெரியவர், "ஆட்டைக் கொல்" என்று மாற்றியிருக்கிறார். "மகன் நின்ற இடத்தில் ஆடு இருந்தது" என்று பக்ரீத் கதையில் வரும் சொற்றொடர் உணர்த்தும் பொருள் இதுதான்.

இதன் பிறகு, ஆட்டின் இறைச்சியை மூன்றாகப் பிரிப்பதென்பது நாம் மேலே பார்த்த "பகிர்ந்துண்ணுதலுக்கு" சமம்.

பக்ரீத் = பக்ரு + ஈத் = ஆடு + திருநாள் = ஆட்டுத் திருநாள் = மனதை அழிக்கும் பெருநாள்!!

(எவ்வாறு நமது விநாயகர் சதுர்த்தி, அனுமார் படைப்பு/பிறப்பு (ஜெயந்தி) போன்ற திருவிழாக்கள், அந்தந்த இறையுருவங்கள் உருவாக்கப்பட்ட நாட்களோ (அல்லது, அப்படிப்பட்ட இறையுருவங்களை உருவாக்கலாம் என்ற எண்ணங்கள் நமது பெரியோர்களுக்கு தோன்றிய நாட்களோ), இவ்வாறே பக்ரீத்தும் "பிள்ளைக்கு மாற்று ஆடு" என்ற சிந்தனை தோன்றிய நாள் அல்லது அந்த சிந்தனை செயலாக்கப்பட்ட நாள். அக்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கருத்தில் கொண்டால் இது எவ்வளவு பெரிய, சிறப்பான, அப்பகுதி மக்களைக் காப்பாற்றிய மாற்றம் என்பதை உணரலாம்.)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

Wednesday, January 6, 2021

தீபாவளி - திரு கண்ணபிரான் 🌺🙏🏽 மெய்யறிவு பெற்ற நாள்!!


🪔 நம் உடலே நரகம். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணமே நரகாசுரன். இத்தவறான எண்ணத்தை விட்டொழித்தலே தீபாவளி - கொண்டாட்டம் - பெருமகிழ்ச்சி - மரணமில்லாப் பெருவாழ்வு!

🪔 நரகாசூரன் பன்றிப் பெருமாளுக்கும் நிலமகளுக்கும் பிறந்தவர் - நிலமகள் என்பது நமது உடல். பன்றிப்பெருமாள் என்பது மெய்யறிவு பெறாத நாமே.

(பன்றித்திருவிறக்க கதையில் பன்றிப்பெருமாள் கடலுக்குள் சென்று பூமாதேவியை மீட்டு வருவார். இவ்வுருவகக் கதையில் வரும் பூமாதேவி மெய்யறிவைக் குறிக்கும். பூமா எனில் முழுமை. ஆனால், பூமி என்று தவறாகப் பொருள் கொண்டுவிட்டனர். இக்கதையில் வரும் கடல் என்பது நமது உடல். கடலுக்குள் செல்லும் பெருமாள் என்பது மெய்யறிவுக்காக வடக்கிருக்கும் நாம். பூமாதேவியுடன் திரும்ப வரும் பெருமாள் என்பது மெய்யறிவு பெற்று உலக வாழ்க்கைக்கு திரும்பும் நாம். கடலுக்குள் செல்லும் போதும், பூமாதேவியுடன் வெளிப்படும் போதும் பெருமாள் பெருமாள் தான். வேறுபாடு பூமாதேவி மட்டுமே. இவ்வாறே, மெய்யறிவு பெறுவதற்கு முன்னும், பெற்ற பின்னும் நாம் நாம் தான். வேறுபாடு நம்மைப் பற்றிய மெய்யறிவு மட்டும் தான்.)

நம்மைப் பற்றிய தெளிவு இல்லாததால் அழிவற்ற நம்மை (பெருமாள்) அழியும் உடலுடன் (நிலமகள்) இணைத்துக் கொள்கிறோம். விளைவு... "நாம் இவ்வுடல்" என்ற நரகாசூரன்!!

🪔 நரகாசூரனின் இறப்பு. தனது இறப்பு தன் தாயின் மூலமாக மட்டுமே நிகழ வேண்டும் என்ற பேறுபெற்று வந்தவன் நரகாசூரன். இதன்படி, கண்ணபிரான் திருவிறக்கத்தில் கண்ணபிரான் (தந்தை) போராடி அயர்ந்த பின்னர், சத்யபாமா (தாய்) போராடி நரகாசூரனைக் கொல்லுவார்.

இக்கதையில் வரும் கண்ணபிரான் நாமே. எவ்வளவு முட்டிமோதினாலும் "நாம் இவ்வுடல்" என்ற பொய்யறிவு நம்மைவிட்டு விலகாது. இது விலக 2 வழிகள் உண்டு: 1. பல காலம் வடக்கிருந்து, மிகவும் முதிர்ந்த (பக்குவமடைந்த) பின்னர் பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யாசிரியர்களின் அறிவுரைகளால் நமதுண்மையை உணர்தல், 2. மொத்த அண்டமும் நமக்குள் இருந்தாலும், நாம் அதற்குள் இருப்பது போல் கண்கட்டு வித்தைக் காட்டிக்கொண்டிருக்கும் அன்னை மாயை (சத்யபாமா) சில கணங்கள் காட்சிகளைத் தவிர்த்து நமதுண்மையை நாம் உணர வழிவிடுதல்.

இரண்டாவது வழியில் அன்னையால்தான் "நாம் இவ்வுடல்" என்ற எண்ணம் (நரகாசூரன்) அழிகிறது என்றால் ஏற்றுக் கொள்வோம். முதலாவது வழியிலும் அன்னை தான் கொல்கிறார். அறிவுரையை வெளிவிட்ட மெய்யாசிரியர் சிவப்பரம்பொருளில் நிலைபெற்றவராய் இருந்தாலும், அவரிடமிருந்து வெளிப்பட்ட அறிவுரை உயிரற்ற பொருளாகிறது - அன்னையின் கூறாகிவிடுகிறது (அம்சமாகிவிடுகிறது).

ஆக, இரு வழிகளிலும் அன்னை தான் "நாம் இவ்வுடல்" என்ற தவறான எண்ணத்தை அழிக்கிறார். இதையே அன்னை சத்யபாமாவால் நரகாசூரன் இறப்பதாக உருவகப்படுத்தியுள்ளனர்.

🪔 "கங்கை நீரில் குளித்தீரா?" - தீபாவளியன்று கேட்கப்படும் பாரம்பரிய கேள்வி. நலம் விசாரிப்பது போல.

மெய்யறிவில் நிலைபெறும்போது நம் உச்சந்தலையிலுள்ள பிடியுட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். அதன் வெள்ளை நீர் (கங்கை நீர்; கங்கை - வெள்ளை) உடலெங்கும் பரவி, மற்ற சுரப்பிகளைத் தூண்டி உடலை சீராக்கி, மகிழ்ச்சியைக் கொடுக்கும். இதை, சிவபெருமானின் ஓவியத்தில் அவரது தலையிலிருந்து கங்கை நீர் வெளிப்படுவது போல் வரைந்திருப்பார்கள்.

"கங்கை நீரில் குளித்தீரா?" என்ற கேள்வியின் உட்பொருள்:

- மெய்யறிவு பெற்றீரா?
- உமதுண்மையை உணர்ந்தீரா?
- சிவப்பரம்பொருளாய் சமைந்தீரா?
- தன்மையுணர்வில் நிலைபெற்றீரா?

🪔 இவ்வளவு பொருள் பொதிந்த திருவிழாவாக இருந்தாலும், வடக்கத்திய தீபாவளி நம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் திருமலை நாயக்கர் காலத்தில்தான். இந்நாளன்று வடகத்தியர் தீபங்களை ஏற்றுவதற்கு அடிப்படை நமது கார்த்திகை திருநாள்! இடைக்காட்டுச் சித்தர் உணர்ந்து உணர்த்திய "ஏகன் அநேகன்" என்ற பேருண்மையைக் கொண்டாடும் கார்த்திகை திருநாள் திருவிழா அவ்வளவு தாக்கத்தை ஆரியர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

oOOo

ஒரு தீபாவளி திருநாளுக்காக பகவான் எழுதிய பாடல்:

நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே

பொருள்: அழியும் இவ்வுடலா நான்? இவ்வுடலை ஆளும் நரகாசூரன் எங்கு உள்ளான்? என்று ஆராய்ந்து, தானே உள்ளபொருள் என்று தெளிந்து, அந்த மெய்யறிவினால் (ஞானத்திகிரி - பெருமாளின் கையிலுள்ள சக்கிராயுதம்) தான் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (நரகாசூரனை) விட்டொழித்தவனே (கொன்றவனே) நாராயணன். அப்படி விட்டொழித்த நாளே நரகசதுர்த்தசி எனும் தீபாவளி நன்னாளாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

oOOo

பி.கு.: வைணவத்திற்கும் கண்ணபிரானுக்கும் எந்த தொடர்புமில்லை. வைணவம் தோன்றியது பொது ஆண்டு 700களில். நிலைபெற்றதோ 1500களில் (விஜயநகர & நாயக்க மன்னர்களின் காலத்தில்). ஆனால், கண்ணபிரான் வாழ்ந்ததோ சுமார் 5,100 ஆண்டுகளுக்கு முன்னர்!

Thursday, August 16, 2018

திருவரங்கம் மூலவர் அணியும் சாலக்கிராம மாலை அகற்றப்பட்டு விட்டதாம்! 😁



#திருவரங்கம் மூலவர் அணியும் சாலக்கிராம மாலை அகற்றப்பட்டு விட்டதாம்! மூலவரின் தோற்றத்தில் மாற்றங்கள் தெரிகிறதாம்!! உற்சவர் நம்பெருமாளும் மாறிவிட்டதாம்!!! புருஷோத்தம பெருமாள் காணவில்லையாம்!!!! இந்தப் புகார்களுக்கெல்லாம் பதில் அளிக்க வேண்டிய நிலையில் ஐயர்கள் (1). இந்த நிலைக்கு காரணமென்ன?

இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிலைகள் தான் கடவுள் என்ற மாயப் போர்வையை பல நூற்றாண்டுகளாக தூக்கிப் பிடித்ததும், ஒவ்வொரு சீவனும் இறைவனை அடைய அதனதன் சொந்த முயற்சி ஒன்று தான் வழி என்ற உண்மையை மறைத்து தாங்கள் நடத்தும் வழிபாடு தான் வழி என்று கோயிலை பொருளாதாரத்தோடு இணைத்ததும் தான் காரணங்கள். (2)

உண்மையை உணர்ந்த அன்பர்களுக்கு சாலக்கிராம மாலை, மூலவரின் தோற்றம் ... என எவையும் ஒரு பொருட்டல்ல. அவை இருந்தாலும் இல்லையென்றாலும் அவர்கள் வணங்க வருவது மூலவரின் கீழ் சமாதியாகியிருக்கும் #சட்டைமுனி #சித்தர் பெருமானைத்தான். 🌸🔥🙏 சமாதியின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அடையாளத்தின் (#ஸ்ரீரங்கநாதர்) ஒப்பனை, அமைப்பு சற்று மாறுபட்டதால் சமாதியில் இருக்கும் பெருமானின் நிலை மாறப்போவதில்லை. அடையாளத்திற்கு செய்யப்படும் எதுவும் பெருமானைப் போய் சேரப்போவதுமில்லை. எதுவுமே செய்யாவிட்டாலும் அவர் குறைந்து விடப்போவதில்லை.

🌺🌺🌺

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்ச்சி...

அது ஒரு குக்கிராமத்திற்கு அடுத்த நிலையிலுள்ள கிராமம். அங்கு ஒரு பலசரக்கு கடையில் நான் பொருட்களை வாங்கிக் கொண்டிருக்கும் போது, ஒரு 40 வயது தக்க கிராமத்தவர் வந்தார். அம்ருதாஞ்சன் வேண்டுமென்று கேட்டார். கடைக்காரர் அம்ருதாஞ்சன் ஸ்ட்ராங் என்ற பொருளைக் கொடுத்தார். கிராமத்தவர் அதை நான்கு பக்கமும் திருப்பிப் பார்த்துவிட்டு, திறந்தும் பார்த்துவிட்டு, "இது மஞ்சளா இல்ல. வேணாம்.", என்று திருப்பிக் கொடுத்தார். கடைக்காரர், "எல்லாம் என் தலையெமுத்து" என்ற பார்வையோடு, கிராமத்தவரிடமிருந்து ஸ்ட்ராங்-ஐ திரும்ப பெற்றுக் கொண்டு, வெறும் அம்ருதாஞ்சனைக் கொடுத்தார். கிராமத்தவரும் ஏதோ பெரிய மோசடியிலிருந்து தப்பியது போல பெருமிதத்துடன் சென்றார். கடைக்காரர் சங்கடத்துடன் என்னைப் பார்த்து புன்னகைக்க, நானோ "மஸ்தானின் டிஜிட்டல் இந்தியா வித்தைகளால் பாதிக்கப்படாத மனிதர் ஒருவர் உண்டெனில் அவர் இவரே" என்ற பேருண்மை விளங்கப் பெற்ற பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தேன்!! 😁

இந்த நிகழ்வில் வரும் கிராமத்தவர் போன்று தான் நம்மில் பலர் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை இருக்கின்றோம். இறைவன், கோயில், வணங்குதல், வழிபாடு போன்றவற்றின் உண்மை பொருள் தெரியாமல், இறை உருவத்திற்கு ஒப்பனை நன்றாக செய்யப்பட்டிருக்கிறதா? ஐயர் பலமாக, தெளிவாக, நீண்ட நேரம் மந்திரம் சொன்னாரா? இறை உருவத்திற்கு அருகில் செல்ல தனக்கு (சிலருக்கு: தனக்கு மட்டுமே) வாய்ப்பு கிடைத்ததா? இன்று அக்கார அடிசில் கிடைக்குமா? என்று கண்காணிப்பாளராக, நீதிபதியாக, உளவாளியாக, சாப்பாட்டு ராமனாக... சென்று வருகிறோமே தவிர, கோயிலுக்குச் சென்று வருவதன் உண்மையான குறிக்கோள் இறையுணர்வைப் பெறுதல் என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத கேவல நிலையில் (3) தாம் நாம் உள்ளோம். யாரும் எடுத்துச் சொன்னாலும் நாம் கேட்கப்போவதில்லை. அம்ருதாஞ்சன் என்றால் மஞ்சள் நிறத்தில் தான் இருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும்! 😂

🌷🌷🌷

68 வருடங்களுக்கு முன் சமாதியான #பகவான் #ஸ்ரீரமண மகரிஷிகளின் சமாதித் தலத்திற்குச் செல்வோம். 🌸🔥🙏 பகவானைப் பற்றி அறிந்த அன்பர்கள் எப்படி வணங்குகிறார்கள் என்று கவனிப்போம். பகவானின் சமாதி அடையாளத்திற்கு (ஸ்ரீரமணேஸ்வர லிங்கம்) எப்படிப்பட்ட ஒப்பனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. தலம் அசுத்தமாக இருந்தால் மட்டுமே அவர்களது முகத்தில் வருத்தம் தெரியும். மற்றபடி, ஒப்பனை, ஓதுதல் என எதற்கும் அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை வணங்குதல் என்பது மரியாதை செலுத்துதல். உரிய மரியாதை செலுத்தி விட்டு, கிடைத்த இடத்தில் அமர்ந்து பகவான் உணர்ந்து உலகுக்குத் தெரிவித்த தன்னாட்டப் பயிற்சியை மேற்கொள்வர். அல்லது, ஏதாவது படித்துக் கொண்டிருப்பர். அல்லது, மூத்த அன்பர் யாரேனும் பகவானது அறிவுரைகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால், அதைக் கேட்டுக் கொண்டிருப்பர். பகவானைப் பற்றி சற்றும் தெரியாத வெளியூர்/வெளிமாநில அன்பர் எவரேனும் வந்து வணங்கும் போது, அது பகவானின் சமாதி என்ற அறிவு இருப்பதால், அவரும் பாரம்பரிய முறையில் வணங்கி விட்டுச் செல்வார். வணங்கும் போது பகவானை வணங்குகிறோம் என்ற உணர்வு அவரிடம் இருக்கும்.

இனி, திருவண்ணாமலையின் பெரிய கோயிலான #திருஅண்ணாமலையார் கோயிலுக்குச் செல்வோம். இதுவும் ஒரு மகானின் சமாதியே. மூல அடையாளமான ஸ்ரீஅருணாச்சலேஸ்வர லிங்கத்தின் கீழ் சமாதியாகி இருப்பது #இடைக்காட்டு #சித்தர் ஆவார். 🌸🔥🙏 ஆனால், பெரும்பாலானோர்க்கு இவ்வறிவு இல்லை. ஆகையால், ஜடாமுடி, கங்கை, பிறைச் சந்திரன், புலித்தோல், திரிசூலம் ஏந்திய சிவபெருமான் என்று எண்ணிக் கொண்டு, வணங்குதல் என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து கொண்டு செல்வர். 😀 இதுவே சமாதியில் இருப்பது இடைக்காட்டு சித்தர் என்ற உண்மைத் தெரிந்திருப்பின், குறைந்தது வணங்கும் தொழிலாவது சரியாக நடக்கும்.

அடுத்தது, சென்னை #திருவொற்றியூரில் உள்ள #பட்டினத்தாரின் திருக்கோயிலுக்குச் செல்வோம். 🌸🔥🙏 இது அவரின் சமாதித்தலம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, இங்கு வரும் அன்பர்கள் வணங்கும் போது பட்டினத்தாரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்குவர். அடுத்தது, அருகிலுள்ள பழம்பெரும் திருத்தலமான #திருஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலுக்குச் செல்வோம். இதுவும் ஒரு பெரும் ஞானியின் (சிவனின்) சமாதித்தலமே. 🌸🔥🙏  பன்னெடுங்காலத்திற்கு முன்னர் சமாதியானவர் என்பதனால் தான் ஆதி (பழமை, முதல்) என்ற அடைமொழி சேர்ந்துள்ளது. இவர் சமாதியான பின், இவரது உடலைச் சுற்றி புற்று வளர்ந்திருக்கும். புற்று வளர்ந்த பின்னரே இச்சமாதி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். இவரைப் பற்றிய விபரம் ஏதும் கிடைக்காமல் போயிருக்கும். ஆகையால், பொதுவாக புற்றை இடமாகக் கொண்ட ஞானி / சிவன் என்ற பொருளில் #புற்றிடங்கொண்டார் என்று பெயரிட்டிருக்கிறார்கள். எண்ணற்ற அன்பர்கள் தவமியற்றி நிலைபேறு பெற்ற தலம். பல அருளாளர்கள் வந்து சென்ற தலம்.  🙏🙏🙏

அருகிலுள்ள பட்டினத்தாரின் சமாதியை வணங்கும் போது மட்டும் பட்டினத்தாரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்கும் அன்பர்கள், இங்கு வந்து வணங்கும் போது மட்டும் ஜடாமுடி, கங்கை, பிறைச் சந்திரன்... என்று தங்களை ஏமாற்றிக் கொள்வர். ஏனெனில், இது ஒரு ஞானியின் (சிவனின்) சமாதி என்ற உண்மை தெரியாததால்!!

இனி, திருவரங்கத்திற்குச் செல்வோம். திருக்கோயில் வளாகத்தினுள்ளேயே #ஸ்ரீராமானுஜர் எரியூட்டப்பட்ட தலமுள்ளது. இங்கு வந்து வணங்கும் அன்பர்கள் ஸ்ரீராமானுஜரை வணங்குகிறோம் என்ற உணர்வோடு வணங்குவார்கள். இறுதியாக, திருவரங்க மூலவரைக் காண்போம். ஸ்ரீரங்கநாதர் என்னும் அடையாளத்தின் கீழ் சமாதியாகியிருப்பது சட்டைமுனி சித்தர் ஆவார். இவ்வுண்மைத் தெரியாததால் பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள் என்று யாரையோ கற்பனை செய்து கொண்டு, உடையவரை நன்றாக பார்ப்பது (சிறு வயதிலிருந்து "சாமிய நல்லா பாரு" என்று தானே வளர்த்தார்கள்! 😁) (4), வேண்டுவது, ஒப்பந்தம் செய்வது போன்ற தொழில்களில் சிலவற்றை செய்து விட்டுக் கிளம்புவர். இதுவே உண்மைத் தெரிந்திருந்தால், சித்தரை வணங்குவர். அவரது பாடல்களில் உள்ள கருத்துக்களைப் பற்றி சிந்திப்பர். நாம் இவ்வுடல் என்ற தவறான எண்ணத்தை (இவ்வெண்ணமே #நரகாசுரன்; இதன் அழிவே #தீபாவளி) விட்டொளிக்க முயற்சிப்பர். இத்தவறான எண்ணம் அழிய, என்றும் அழியாத மாறாத சுயஒளி கொண்ட உள்ளிருக்கும் உண்மை உணரப்படும். இவ்வுண்மைக்கே இறை(வன்) என்று பெயர். இவ்வுணர்வே இறையுணர்வு எனப்படும். இவ்வுணர்வு நிலைபெறும் போது நிலைபேறு எனப்படும். இந்நிலையின் வேறு பெயர்கள் ஞானம், முக்தி, சிவப்பதம் மற்றும் பல. இவ்வுணர்வை தற்காலிகமாகவாவது பெறுவதே திருத்தலங்களுக்குச் சென்று வருவதன் அடிப்படை நோக்கம்.

புகழ் பெற்ற மகிமை வாய்ந்த சில உடையவர்களின் பெயர்களைப் பார்ப்போம். ஆலங்காட்டு அப்பர், காளத்தி அப்பர், நெல்லையப்பர், முல்லைவன நாதர், வைத்தீஸ்வரர், கபாலீஸ்வரர், ஏகாம்பரநாதர் மற்றும் வீரட்டானேஸ்வரர். 🙏🙏🙏 உடையவர் பெயரிலேயே சமாதியான ஞானியைப் பற்றிய குறிப்பு இருக்கும். இன்ன பகுதியில் இருப்பவர், இன்ன இனத்தால் வணங்கப்படுபவர், இன்ன திருச்செயல் புரிந்தவர் என தேவையான தகவல்களை மட்டும் பதிவு செய்திருப்பார்கள். ஆனால், எல்லா ஞானிகளையும் ஒருவராக -  சிவனாக - சிவமாக - சிவம் எனும் தத்துவமாக - நம்மை வணங்க வைத்திருப்பர்! ஏன்?

மீண்டும் பகவான் ஸ்ரீரமணரிடம் வருவோம். ஒரு அன்பர் பகவான் மீது அதீத அன்பு, மரியாதை வைத்து சதா தொழுது கொண்டேயிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதன் விளைவாக அவருக்கு நிலைபேறு (ஞானம்) கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு விளைவு உறுதியாக ஏற்படும்: பகவானது உருவத்தை, குணங்களைப் பெறுவார்!! இதற்கு ஆரியத்தில் #சாரூபம் என்று பெயர். பகவானைப் போன்ற உருவத்தைப் பெறுவதற்காகவா அந்த அன்பர் இவ்வளவு பாடுபட்டிருப்பார்? யாரை வணங்குகிறோம் என்று தெரியாமல் வணங்கினால் முட்டாள்தனத்தில் முடிகிறது. தெரிந்துகொண்டு ஆழ்ந்து வணங்கினால் சாரூபத்தில் முடிகிறது. .. இதற்கு விடையாகத் தான் நம் முன்னோர் ஞானியைப் பற்றிய குறிப்புகளை குறைவாகவும் (முட்டாள்தனம் விளையாத அளவிற்கு), வணங்குவதற்குப் பொதுவான தத்துவங்களையும் (சாரூபத்தில் முடியாமல், சாயுச்சியத்தில் முடியும் வண்ணம்) விட்டுச் சென்றுள்ளனர்! 👏👌👍😍

எடுத்துக் காட்டாக திருவரங்கநாதப் பெருமானைக் காண்போம். இவ்வடையாளத்தின் கீழ் சமாதியாகி இருப்பது சட்டைமுனி சித்தர் என்று பார்த்தோம். முதலில் நாம் மரியாதை செலுத்த வேண்டியது இந்த சித்தருக்கே. அடுத்து, நாம் சிந்திக்க வேண்டியது சித்தர் காட்டிய வழியை & வெளிப்படுத்திய உண்மைகளை (5). இவைப் பற்றி தெரியாவிட்டால், சிந்தனைப் பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டியது மூலவர் திருவரங்கநாதரின்  திருஉருவத்தை. இது பற்றியும் ஏதும் தெரியாவிட்டால், இத்தலத்திற்கு வந்து சென்ற அருளாளர்கள், அவர்கள் காட்டிய வழிகளைப் பற்றி சிந்திக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, நமக்கு ஏற்கனவே ஞானாசிரியர் அமைந்திருப்பின், அவர் காட்டிய வழியைப் பற்றி சிந்திக்கலாம்; பயிற்சி மேற்கொள்ளலாம். இவையெல்லாம் ஆரம்ப நிலைகள் தாம். ஒரு நிலைக்கு மேல் எங்கு சென்றாலும் ஒரு இறையையே வணங்குவோம். இறுதியில் அவ்வோர் இறையும் நாமே என்று உணர்ந்து, இவ்வண்ட காட்சிகள் அரங்கேறும் அரங்கமாக - அரங்கம் எனும் நாதனாக - அரங்கநாதனாக அறிதுயிலில் கிடப்போம்! 😍

🌹🌹🌹

இதுவரை நாம் பார்த்தது திருத்தலத்திற்கு வரும் அன்பர்களைப் பற்றி. இனி ஐயர்களின் பங்கைப் பார்ப்போம்.

இவர்களது முக்கிய பணி, தங்களது செயல்பாடுகளால் (இறையுருவை சுத்தம் செய்து, ஒப்பனை செய்து, சிந்தனையைத் தூண்டும் செய்யுள்களை ஓதுதல் (மந்திரம் ஓதுதல்; மந்திரம் - சிந்தனையைத் தூண்டும் கருவி)) வரும் அன்பர்களின் மெய் மறக்கச் செய்தல் (அ) பரவசமடையச் செய்தல். (6) இது நடக்க வேண்டுமெனில் அன்பர்களாகிய நமக்கு, ஐயர்களின் செயல்பாடுகளின் பொருள் தெரிந்திருக்க வேண்டும். நமக்கு அம்ருதாஞ்சன் மஞ்சள் நிறத்தில் தான் இருக்குமென்று தெரியும். அவர்களுக்கு, வருபவர்கள் மஞ்சள் நிற அம்ருதாஞ்சன் தான் கேட்பார்கள் என்று தெரியும். 😛😜😂

ஐயர்கள் செய்யும் 16 படி வழிபாடு என்பது இறையுருவை ஒரு மாமன்னராக பாவித்து, அனைத்து மரியாதைகளையும் செய்விப்பது. அதிக பொருளும் உழைப்பும் தேவைப்படும் இம்முறை மன்னர்கள், சமூகப் பெரியோர்கள் போன்றோருக்காக உருவாக்கப்பட்டது. பின்னாளில் பொருளாதாரத்தோடு இணைந்துவிட்டது. பல பேருக்கு வாழ்வு அளித்திருக்கிறது. இன்றும் அளித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று பொருளாதாரம் கோயில்களை நம்பி இல்லை. இன்னும் சொல்லப் போனால், பொருளாதாரத்திலிருந்து நமது திருத்தலங்களைப் பிரிக்கவேண்டும். இதற்குத் தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. அன்பர்கள் தவமியற்றவும், தமது சொந்த முயற்சியால் இறையுணர்வைப் பெறவேண்டும் என்ற நோக்கங்களோடு வரவேண்டும். பணிபுரியும் ஐயர்கள் திருத்தலங்களை தூய்மையாகவும், எளிமையாகவும் வைத்திருக்க வேண்டும். தேவைப்பட்டால் அன்பர்களது ஐயங்களை தீர்த்து உதவிடவேண்டும். இவை நடந்தால் பல ஒட்டுண்ணிகள், நச்சுப்பிறப்புக்கள் விலகிச் சென்றுவிடும். "பெருமாளின் சாலக்கிராம மாலை சற்று விலகிவிட்டது" போன்ற தேவையற்ற புகார்கள் எழாது. உண்மையான அன்பர்களிடம் திருத்தலங்கள் சென்று சேரும். "இந்துக்கள் சிலைகளை வணங்குபவர்கள்" என்று கேலி செய்து பிழைப்பு நடத்தும் உலகப் பெருபான்மை மதத்தினருக்கும் (7), சீனாவின் கைகூலிகளான பான்பராக் சட்டைகளுக்கும், வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுத் தருவதின் மூலம் கமிஷன் பார்க்கும் தொழிலை பின்புறமாகவும், "இந்துக் கடவுள்கள் மட்டும் இல்லை" என்று முன்புறமாகவும் தொழில் நடத்தும் சாக்கடை பிறப்புகளுக்கும் பிழைப்பு அறுந்துபோகும். எந்த நோக்கங்களோடு நம் முன்னோர்கள் கோயில் என்னும் அமைப்பை ஏற்படுத்தினரோ அவை நிறைவேறும்.

🌼🌼🌼

இவ்விடுகையில் சைவமும் இல்லை, வைணவமும் இல்லை என்போருக்கு...

வைணவம் என்பது திருஞானசம்பந்தரும், ஆதிசங்கரரும் கொடுத்த அடி தாங்காமல், உயிர் பிழைப்பதற்காகவும் வயிற்றுப் பிழைப்பிற்காகவும் அன்றிருந்த பெண்தெய்வ வழிபாட்டு கூடாரத்திற்குள் புகுந்து கொண்ட பெளத்தர்களின் தொழிலாகும். வைணவம் உருபெற ஆரம்பித்தது 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தான். அவர்களது சின்னமான நாமம் உருவானது 12ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் தான். அதற்கு முன்னர் திருப்பதி பெருமாள் முதற்கொண்டு அனைத்து இறையுருவங்களுக்கும் பூசப்பட்டது விபூதி தான். அனைத்து மதங்களுக்கும் முன்னோடியான சைவ சமயத்திற்கு சாத்திரங்கள் ஏன் அனைத்திற்கும் பின்னர் உருவானது என்று சிந்திக்க ஆரம்பித்தால் அன்று (சமண பெளத்த வைணவ வைதீக வருகைகளுக்கு முன்பு) நடைமுறையில் இருந்த தமிழரின் சமயமே வேறு என்ற விடை கிடைக்கும். ஒவ்வொரு மகானும் தத்தம் சொந்த அனுபவத்திலிருந்து இறையுணர்வு பெறும் வழிகளை உருவாக்கியிருப்பார்கள். சில மகான்களின் வழிகள் சமூக நடைமுறைக்கு சிறிதும் ஏற்றதாக இல்லாமல் கூடவிருக்கும். அவர்கள் காட்டிய வழிகள் எத்தகையதாக இருப்பினும், அனைவரது குறிக்கோள்களும் ஒன்றேயாகும்: அவர்களை நாடி வருவோர் இறையுணர்வு பெறவேண்டும் (அ) தனியிருப்பை இழக்கவேண்டும். இரண்டும் ஒன்றேயாகும். இவ்வடிப்படையில் தான் இவ்விடுகையை எழுதியுள்ளேன்.

சித்த வேட்கை கொண்டு சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய் ஸ்ரீசட்டைமுனி பெருமானே!

("அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற" என்று வருவது இவரது வரலாற்றில் வரும் ஒரு நிகழ்வை குறிப்பதல்ல. இவ்வண்டம், இதில் வாழும் உயிர்கள், அவ்வுயிர்கள் வாழும் வாழ்க்கை என அனைத்தையும் இறையின் அணிகலன்களாக காணவேண்டும் என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தியவர் என்பதையே குறிக்கும். "சிவன் அபிஷேகப் பிரியர். பெருமாள் அலங்காரப் பிரியர்." என்பதில் வரும் "பெருமாள் அலங்காரப் பிரியர்" என்னும் சொற்றொடரின் பொருளும் இதுவே.)

🌸🌸🌸
🔥🔥🔥
🙏🙏🙏
󽐼󽐼󽐊
*குறிப்புக்கள்:*

1. #ஐயர் - படித்தவர் / கற்றவர் / அறிந்தவர். இதைவிட, இன்றைய நிலையில், #பூசாரி - பூ சார்த்துபவர் - என்ற சொல்தான் இவர்களது பணியைச் சரியாக விளக்குகிறது என்று நினைக்கிறேன்.

#பூஜை என்ற சமற்கிருத சொல் பூசு மற்றும் பூ + வை ஆகிய தமிழ் சொற்களில் இருந்து வருகிறது. ஆக, இறை உருவங்களை குளிப்பாட்டி, சுத்தம் செய்து, பூக்கள், துணிகள், நகைகள் முதலியவற்றால் ஒப்பனை செய்து வழிபாடு நடத்தி வைக்கும் முறை தமிழருடையது!

2. இப்பொருளாதார இணைப்பினால் இன்று பெரும் பயனடைவோர் பெரும்பாலும் அந்நிய சக்திகள் வீசி எறியும் பொரைகளுக்காக நம் சமயத்தின் மீது கல்லெறியும் கூட்டத்தைச் சேர்ந்தோர் தான். கருவறைத் தவிர மீதமுள்ள இடங்கள் அனைத்தையும் கடைகளாக்கிவிட்டனர். காலணி பாதுகாப்பதிலிருந்து அனைத்து இடங்களையும் ஏலம் விடுவதில் கமிஷன் பார்ப்பது, மாதம் தோறும் கப்பம் பெறுவது என அனைத்திலும் காசு பார்ப்பது இந்தக் கூட்டமே.

3. ஒரு பொருள் உள்ளது; மேலும், அது பற்றி நமக்குத் தெரியும். இது தெரியும் என்கிற நிலை.

ஒரு பொருள் உள்ளது. அது பற்றி நமக்குத் தெரியாது. இது தெரியாது என்கிற நிலை.

ஒரு பொருள் உள்ளது. அதைப் பற்றி இன்று வரை நாம் கேள்விப்பட்டது கூடக் கிடையாது என்பதே கேவல நிலை.

"#இறையுணர்வு பெறுவதற்காகத் தான் கோயில்களா?" என்பது ஒரு கேவல நிலையெனில், "இறையுணர்வு என்றால் என்ன?" என்று கேட்கும் கேவலத்திலும் கேவல நிலையில் தாம் இன்று நம்மில் பலர் உள்ளர்!! 😔

4. "சுவாமியை நன்றாக பார்த்தீர்களா?", "நல்லா தரிசனம் ஆச்சா?" போன்ற கேள்விகளின் சரியான உட்பொருள் "இறையுணர்வு பெற்றீரா?" என்பதே. இதைப் பற்றி விரிவாக இன்னொரு இடுகையில் எழுதவுள்ளேன்.

5. சட்டைமுனி சித்தர் உணர்ந்து வெளிப்படுத்திய பேருண்மைகளில் ஒன்றே வைணவத்தின் சின்னங்களுள் ஒன்றான திருசக்கிரம்! 🙏

(உடனே சக்கிரம், #சக்கிரத்தாழ்வார் போன்றவற்றை இவர் உருவாக்கினார் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. சித்தர் வெளிப்படுத்திய உண்மைக்கு பிற்காலத்தில் கொடுக்கப்பட்ட வடிவங்கள் இவை.)

நம்முள் தோன்றும் எண்ணங்கள் முதல், வெளிப்புறத்தில் நாம் காணும் காட்சிகள் வரை அனைத்தும் திரையில் தோன்றும் படக்காட்சிகள் போன்றவை. நாமோ அக்காட்சிகள் தோன்றுவதற்கு இடம் கொடுக்கும் திரை போன்றவர். அனைத்தும் தொடர்ந்து அசைந்த வண்ணம் இருந்தாலும், நாம் அசைவதில்லை. நாம் சாட்சி மட்டுமே. இதுவே #ஸ்ரீசக்கிரத்தாழ்வார் உணர்த்தும் உண்மை. #திருவரங்கநாதர் என்ற பெயரின் விளக்கமும் இதுவே (அரங்கத்திற்கு நாதன் என்று விரிக்காமல், அரங்கம் என்னும் நாதன் என்று விரித்தால் சரியான பொருள் விளங்கும்).

பின்னர் ஏன் மூலவராக திருசக்கிரத்தாழ்வாரை வைக்காமல் அரங்கநாதப் பெருமானை வைத்தார்கள்?

ஏனெனில், ஆழ்வார் வைணவ தத்துவங்களுக்கு ஏற்றவாறு பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவர். அரங்கநாதப் பெருமானோ, வைணவம் முழுமை பெறுவதற்கு முன்னரே உருவாக்கப்பட்டவராக இருக்கும். அரங்கநாதர், நடராஜப் பெருமானின் பிரதிபலிப்பு மற்றும் அரவ ஆபரணம் சூட்டப்பட்ட சிவலிங்க வடிவத்தின் விரிவாக்கமுமாவார். நடராஜப் பெருமானின் மேற்கைகளில் உள்ள தீ (ஒளி) மற்றும் உடுக்கையே (ஒலி) அரங்கநாதரின் மேற்கைகளில் உள்ள சக்கிரம் (ஒளி) மற்றும் சங்கு (ஒலி) ஆகும். அதாவது, அண்டம் என்பது ஒளி & ஒலியின் கலவையே! பிரதிபலிப்பு என்பதால் ஒளியும் ஒலியும் இடமாறியிருக்கும். அரவ ஆபரணம் சூட்டப்பட்ட சிவலிங்கத்தில், அரவம் ஐம்பூதங்களையும், லிங்கம் இன்னதென்று வடிவம் கொடுக்கமுடியாத இறையையும் (பிரம்மம்) குறிக்கும். அரங்கநாதரின் பாம்பனண ஐம்பூதங்களையும், அரங்கநாதர் லிங்கத்தையும் குறிக்கிறார்கள். அதாவது, அண்டம் ஐம்பூதங்களால் ஆன கலவை. இக்கலவையின் தோற்ற இயக்க மறைவுக்கு ஆதாரனமான இறைசக்தி சாட்சிமாத்திரமாக, எவ்வித சலனமுமில்லாமல், அனைத்தையும் அறிந்தவண்ணம் உள்ளது.

மீண்டும் ஸ்ரீசக்கிரத்தாழ்வாருக்கு திரும்புவோம். ஒரு கணக்கில் இது அண்டத்தையும், இன்னொரு கணக்கில் நம் உடலையும் குறிக்கும். உடல் என்று வரும் போது, சக்கிரம் உடலின் இயக்கத்தையும், பின்னிருக்கும் யோக நரசிம்மர் நம்முள்ளிருக்கும் இறை சக்தியையும் குறிக்கும். ஆன்மிகத்தின் இறுதி நிலையை எட்டிய பின், சீவன் தனது இயலாமையை உணர்ந்து பணியும் போது (சரணாகதி), உள்ளிருந்து இறை சக்தி வெளிப்பட்டு சீவனை - நமது தனித்தன்மையை - அழித்துவிடும். இவ்வாறு வெளிப்பட்டு அழிக்கும் சக்தியை (நரசிம்மரை), அது வெளிப்படும் முன்னர் உள்ள நிலையில்  (#யோக #நரசிம்மர்) வடிவமைத்திருக்கிறார்கள். 🌸🔥🙏

6. இவ்விரண்டு சொற்றொடர்களும் ஆழ்ந்த பொருள் பொதிந்தவை:

▶ *மெய் (உடல் / உயிரற்றது) மறத்தல் - மெய்யை மறப்பது யார் / எது? மெய் மறந்தபின் அவர் / அதன் நிலையென்ன?*

▶ *பரவசம் அடைதல் - பர - பரம் - பரம்பொருள் - பரம்பொருள் என்றால் என்ன? எங்குள்ளது? பரம்பொருளிடம் யார் / எது வசமானது?*

இக்கேள்விகளுக்கு விடை தெரியாமல், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும், எத்தனை வழிபாட்டில் கலந்து கொண்டாலும் ஆன்மிகத்தில் சிறிதும் முன்னேற முடியாது.

7. உலகப் பெருபான்மை மதத்தினரும் சிலைகளை, உருவங்களை, கட்டிடங்களை வணங்குபவர் தாம். இன்னும் சொல்லப்போனால், கெட் அவுட் (Get Out) என்ற ஹாலிவுட் படத்தில் மணி சப்தம் கேட்டவுடன், கேட்பவர் மதி மயங்குவது போல, இவர்களும் சில உருவங்களைப் பார்த்தவுடன், சில வார்த்தைகளை கேட்டவுடன் மதி மயங்குவார்கள். அவ்வாறு பழக்கியிருக்கிறார்கள்.

▶ சிலுவையில் அறையப்பட்ட ஞானி யேசுவின் சிலை - இச்சிலை பெரும்பாலான பரங்கி மதத்தினரின் வீடுகளில் தவறாமல் இருக்கும். இதற்கு பகவான் #ஸ்ரீரமணர் கொடுக்கும் விளக்கம்: உடல் என்னும் சிலுவையில், மனம் என்னும் யேசுவை அறைந்தால் (அதாவது நாம் உடல் என்னும் தனியிருப்பை ஒழித்தால்) எஞ்சியிருப்பது "தான்" மட்டுமே. இதுவே உயிர்த்தெழுதல் எனப்படும். ஆக, இச்சிலையைக் கண்டவுடன் அவர்களுக்குத் தோன்ற வேண்டிய எண்ணம் "மனதை அழி". ஆனால், அவர்களுக்குத் தோன்றுவது? தோன்ற வைத்திருப்பது? 😁

▶ வெற்றுச் சுவற்றை நோக்கி வழிபாடு நடத்தும் முகம்மதியர் - அது வெற்றுச் சுவரல்ல; மெக்காவிலுள்ள காபாவைக் குறிக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். இன்று காபா ஒரு வெற்றுக் கட்டிடம். ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அவ்வாறல்ல. 360 சிலைகள் இருந்த கோயில் அது. (அது பெரும் சிவாலயம் என்றும், #சமண முனிவர் #பகுபாலி சமாதியான தலம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.) அதிலிருந்த அனைத்துச் சிலைகளை உடைத்து எறிந்தவர் கூட ஒரு சிலையை ஆரத்தழுவி முத்தமிட்டுள்ளார். இன்றும் அச்சிலை கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஒரு மூலையில் பதிக்கப்பட்டுள்ளது. இடம் வரும் போது அதை நோக்கித் திரும்பிப் பார்ப்பர் (தொட்டு வணங்குவதற்கு சமம்). மேலும், ஹஜ் பயணத்தின் போது சிலர் அவர்களது இறைத்தூதரின் சமாதி தலத்திற்கும் சென்று வருகின்றனர். இறைத்தூதர் இறைக்கு சமமல்ல. காபா, பதிக்கப்பட்ட கல், ஜம்ஜம் கிணறு, இறைதூதரின் சமாதி, குர்ஆன்...  இவற்றை வணங்குவதும், இவைகளைப் பார்த்தவுடன் அல்லது இவைகளைப் பற்றிக் கேட்டவுடன் மனதில் மரியாதை, பாசம் பொங்குவதும் உருவ வழிபாடு தாம்.

முகம்மதியம் உருவாவதற்கு முன்னரே ஹஜ் பயணம் இருந்தது. மெக்கா நகர மக்கள் சரணடையும் முன்னர் போட்ட ஒப்பந்த விதிகளில் ஒன்று, ஹஜ் பயணம் நிறுத்தப்படக் கூடாது என்பதாகும். அன்று அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் என்பதால் இந்த விதி போடப்பட்டது.

posted from Bloggeroid

Saturday, August 12, 2017

வருட பிறப்பு, ஆடிப்பெருக்கு, தீபாவளி & பொங்கல் – பின்னுள்ள நம் முன்னோரின் அறிவியல்! 👌🙏

கீழ்காணும் இடுகை வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. எனது கருத்துக்களை இதற்குக் கீழ் பதிவிட்டுள்ளேன். நன்றி. 🙏

🌞☀🌞☀

சித்திரை 1, ஆடி 1, தை 1 எல்லாம் விழாவாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!!!

Ok. Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லித்தற்றோம்....

என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பண்ணி இருக்கோமா???!!! கண்டிப்பாக இல்லை...
நம்ம education system design பண்ணின வெள்ளக்காரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல அழிச்சிட்டு, ஒரு முட்டாள்த்தனமான கல்வியை புகுத்திட்டு போயிருக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....

சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exactஆ கிழக்கே உதிக்கும்.... அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme pointல மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்புறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி correctஆ கிழக்குல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correctஆ கிழக்குக்கு வர ஆகிற time, Correctஆ "1 year"...!!!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு தானே யோசிக்குறீங்க?

சூரியன் correctஆ கிழக்குல start ஆகுற நாள் தான் #சித்திரை 1 - புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி 1 .... (Solstice)

மறுபடியும் கிழக்குக்கு வர்றது #ஐப்பசி 1 (Equinox)

Going to extreme தென்கிழக்கு is #தை 1 (Solstice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox) - தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் சேர்த்து கொண்டு சேர்ப்போம்...

🌞☀🌞☀

மேலுள்ள இடுகையில் "In science it is called Equinox" என்று எழுதியிருக்கிறார் அதன் சொந்தக்காரர். இது தவறு! "காலை" என்பதை "In science it is called Morning" என்று கூறுவதற்கு சமம்! 😛 நம்மையும் அறியாமல், நம் மரபணுவில் ஏற்றப்பட்டிருக்கும் அடிமைத்தனத்தினால் வெளிப்பட்டிருக்கும் வாக்கியம் இது!! 😡

ஒன்றை பரங்கியரின் மொழிகளில் (ஆங்கிலம், கிரேக்கம், லத்தீனம், ...)  சொன்னால் அறிவியலன்று. 👊

கிரேக்கம், லத்தீனம் செம்மொழிகளாக இருக்கலாம். தமிழ் மட்டுமே நிறைமொழியாகும். மற்றவை குறைமொழிகளாகும். 💪

கொடூரன் அலெக்ஸாண்டரின் வருகை-தோல்விக்குப் பின்னர் இந்தச் சாக்கடைகளால் ஏற்பட்ட சமூகச் சீரழிவை (பிள்ளைபேறுக்கு பெண் மனைவி. உடல் இன்பத்திற்கு சமூக மதிப்பிற்கு ஆண் மனைவி! 😲🤒😝) நம் முன்னோர்கள் மிகவும் பிரயத்தனப்பட்டு  நீக்கியிருக்கிறார்கள். அதற்கேற்றாற் போல் அன்றைய அரசுகள் இருந்தன. ஆனால், இன்று அப்படியில்லை. பரங்கி பொறுக்கி வாஸ்கோட காமாவின் வருகையினால் மீண்டும் ஆரம்பித்த சீரழிவு இன்று வரை தொடருகிறது.

அவர்களது அறிவியலால் உலகம் ஒவ்வொரு விநாடியும் மேன்மேலும் அழிந்து கொண்டேயிருக்கிறது. ஆகையால், அவர்களது அறிவியலை அழிவியல் என்று அழைப்பதே சரி! 👌

எனில், மேலுள்ள வாக்கியம் "In அழிவியல் it is called Equinox" என்று மாற்றப்பட்டால் பொருத்தமாக இருக்கும்!! 😜😁