Tuesday, July 12, 2022

பேரூர் திரு பட்டீசுவரர் திருக்கோவிலின் பொன் ஏர் திருவிழா

கோவை பேரூர் திரு பட்டீசுவரர் திருக்கோவிலில் பொன் ஏர் கொண்டு உழவு செய்து, நாற்று நடவும் திருவிழா அண்மையில் நடந்தது: https://youtube.com/shorts/DJCel1-xXLI?feature=share

oOo

திரு பட்டீசுவரர் என்ற மூலவரின் கீழே திருநீற்று நிலையில் இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் உழவராக வாழ்ந்தவர். அவரை காண திரு சுந்தரமூர்த்தி நாயனார் வந்திருந்தபோது, அருகிலுள்ள வயலில், பட்டீசுவரப் பெருமானும் அவரது மனைவியும் உழவு செய்துகொண்டிருந்தார்கள். இவ்வரலாற்றை நினைவு கூறவே இந்த பொன் ஏர் திருவிழா!

மெய்யறிவும் வேலையும் ஒன்றுக்கொன்று எதிரானது என்ற கூற்று தவறென்பதை இந்த வரலாறு மெய்ப்பிக்கிறது.

"வேலை தடையல்ல. அந்த வேலையை செய்கிறவன் நான் என்ற எண்ணமே தடை." என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் வாக்கு.

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️

No comments:

Post a Comment