Friday, March 25, 2022

ஆப்பிள் நிறுவனத்தின் "கடிபட்ட ஆப்பிள்"


ஆப்பிள் நிறுவனத்தின் இலச்சினை: கடிபட்ட ஆப்பிள்

இதைப் பற்றி ஒரு சொல்லில் கூற வேண்டுமென்றால்: ஆசை!

ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இறைமறுப்பாளராக சில காலமும், பௌத்தராக சில காலமும் இருந்து, பின்னர், எல்லாவற்றையும் தூக்கியெறிந்தாலும், இளம் வயதில், ஒரு கிறித்தவராகவே வளர்க்கப்பட்டார்.

இங்கு ஆதாம்-ஏவாள் கதையை நினைவு கூறவும். பாம்பின் பேச்சைக் கேட்டு மதி மயங்கிய ஏவாளின் சொல் கேட்டு ஆதாம் ஆப்பிளை கடித்துவிடுகிறான். கிறித்துவ கடவுளின் கோபத்திற்கு ஆளாகிறான். மனநிறைவு என்ற தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். புவி வாழ்க்கை தொடங்குகிறது.

கடிபட்ட ஆப்பிள் - ஆசை, பற்று, விருப்பம், காமம் (ஆரியம்)

பகவான் திரு இரமண மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பொன் மொழி: ஆசையே மாயை. ஆசையின்மையே கடவுள்.

மெய்யியலுக்கு வேண்டுமானால் ஆசை எதிரியாகவிருக்கலாம். ஆனால், பொருளாதாரத்திற்கு ஆசைதான் அடிப்படை! ஆப்பிள் பொருள்கள் மீது மக்கள் கொண்ட ஆசை, இன்று அதன் சந்தை மதிப்பை ரூ 2.25 இலட்சம் கோடிகளாக்கியுள்ளது (3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்)!!! 🤑

No comments:

Post a Comment