Tuesday, February 8, 2022

வைணவ நாமம் - சில குறிப்புகள்


(சமய அடையாளங்கள், சின்னங்கள் பற்றி ஒரு சிறிதும் அறியாதவர்களுக்கு இந்த இடுகை முதலில் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தும்!)

🔸 வைணவத்தின் அடையாளங்களுள் ஒன்றான திருமண் எனப்படும் நாமத்தை, ஏறக்குறைய 900 ஆண்டுகளுக்கு முன்னர் திரு ராமானுஜர் உருவாக்கினர்

🔸 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட வைணவ மதத்தின் அடிப்படை பெண்தெய்வ வழிபாடாகும் - மருள்வழி. இந்த வழிபாட்டில், தன்னிலை மறந்து பேசுவதை இன்று "அருள்வாக்கு" என்றழைத்தாலும், அன்று "மருள்வாக்கு" என்றேயழைத்தனர். அப்படி பேசுவோரை "மருளாளிகள்" என்றும் அழைத்தனர். மருள் வழிபாட்டினரின் சில நம்பிக்கைகள்:

> உயிரற்றதிலிருந்து உயிர் தோன்றியது
> காட்சிகளில்லாமல் காண்பான் தன்னை உணரமுடியாது
> பெண்ணுறுப்பு இல்லாமல் ஆணுறுப்பு இயங்கமுடியாது; உயிர்கள் தோன்றாது; உலகம் இயங்காது.

🔸 இவற்றையெல்லாம் இணைத்து, பெண்ணுறுப்பை நாமமாக - வைணவத்தின் முகமை அடையாளமாக - அறிவித்தார் ராமானுஜர்.

🔸 நாமத்திலுள்ள வெள்ளை வெளிப்புறக் கோடு உயிரற்றதைக் குறிக்கும். உட்புற சிவப்புக்கோடு உயிரைக் குறிக்கும். உயிரற்றதினுள்ளே உயிரடங்கும் என்ற அவர்களது நம்பிக்கையைக் குறிக்கும்.

🔸 மூன்று கோடுகளும் ஒரு சிறு வெள்ளைக் கோட்டில் தொடங்கி, பின்னர் விரியும். உயிரற்றதிலிருந்தே அனைத்தும் உருவானது என்ற அவர்களது நம்பிக்கையைக் குறிக்கும்.

🔸 பெண்ணுறுப்பை சமயச்சின்னமாக முதன் முதலில் ராமானுஜர்தான் பயன்படுத்தினார் என்று சொல்லமுடியாது.

> காலத்தால் முந்திய பெண்தெய்வப் பெயரான "அங்காளி" என்ற பெயரிலேயே பெண்ணுறுப்பு இடம் பெற்றுள்ளது: [பெண்] அங்கமாகிய காளி!
> ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றிய முகம்மதியத்தின் தலையாயக் குறியீடுகளில் ஒன்று பெண்ணுறுப்பாகும். அவர்களது பள்ளிவாசலின் நுழைவாயில் பெண்ணுறுப்புக்கு சமமாகும்.
> முகம்மதியம் தனியாக & தானாகத் தோன்றிவிடவில்லை. அதன் முன்னோடிகளில் ஒன்றான கிறித்தவத்தின் மிகப்பெரிய குறியீடே பெண்ணுறுப்புத்தான்! மதிப்பில் குறுக்கை பெரிதாக இருந்தாலும், எண்ணிக்கையில் பெண்ணுறுப்பே இவர்களது கட்டிடங்களில் மிகுதியாகவிருக்கும்.
> கிறித்தவத்தின் குறியீடுகள் யாவும் அவர்களுடையதல்ல. ரோமானிய குருமார்கள் உருவாக்கிக் கொடுத்தவை.
> படையெடுப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் என பல வழிகளில் இவர்கள் யாவரும் நம்மோடு தொடர்பிலிருந்தவர்களே!

🔸 ஏனையோர் பெண்ணுறுப்பை தலைகீழாக்கி 'n' வடிவில் பயன்படுத்தினர். ராமானுஜர் நேராக பயன்படுத்தினார். நடுவில் ஒரு சிவப்புக்கோட்டை சேர்த்து, அச்சு அசல் பெண்ணுறுப்பாக்கிவிட்டார். இவைதாம் ராமானுஜரின் தனிப்பட்ட பங்களிப்பாகின்றன.

🔸 வைணவர்களின் அடிப்படை (பெளத்தம் -> மருள்வழி) & கொள்கைகளை (தோன்றி மறைகின்ற & அறிபடுபொருளாகிய மால் / மாயையை வணங்குதல்) நன்கு உணர்ந்திருந்த அக்காலப் பெரியோர்கள் & பண்பட்ட குடிகள் வைணவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், தங்களை வளர்த்து, நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய மதமாற்றிகள் பயன்படுத்தும் "ஊழியங்களை" பயன்படுத்தினர். விளைவு...

அன்றிலிருந்து இன்றுவரை நாமம் எனில் ஏமாற்றுதல் என்றாகிவிட்டது!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌻🏵️💮

No comments:

Post a Comment