Sunday, July 31, 2016

பரங்கியர்களுக்கு ஏன் காளிதேவியின் மேல் இவ்வளவு அக்கறை? 😕


(தினமலர் - சென்னை - 03/07/2016)

💥 முதலில் பெரிய கருங்காலிகளை தேவையான இடங்களில் (அரசாங்கம், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்) உட்கார வைத்துவிடவேண்டும்.

💥 அடுத்து, சிறிய கருங்காலிகளை வைத்து யாரும் அறியாதவாறு, இவர்களுக்கு ஏற்றவாறு (அதாவது, "இந்து சமயத்தை, கலாச்சாரத்தை, வரலாற்றை அழிக்கவேண்டும்" என்ற குறிக்கோளுக்கு ஏற்றவாறு) ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதவைக்கவேண்டும்.

💥 அடுத்து, பெரிய கருங்காலிகள் அந்தக் கட்டுரைகளை ஏற்று, அங்கீகரித்து பதிப்பிக்கவேண்டும்.

💥 பின்னர், அவற்றை உலகின் முக்கியமான பகுதிகளில், முக்கியமான கல்வியாளர்களின், சிந்தனையாளர்களின் (அதாவது, பரங்கிநாடுகளில் அமர்ந்து கொண்டு மற்ற நாடுகளை, கலாச்சாரங்களை, சமயங்களை எவ்வாறு அவர்களைக் கொண்டே சிதைக்கலாம், அழிக்கலாம் என்று சிந்திக்கும் மேதாவி பரங்கியர்களின்) பார்வையில் படும்படி ஏற்பாடு செய்யவேண்டும்.

💥 அந்த கல்விமான்கள், சிந்தனையாளர்கள், மேதாவிகள் அவற்றை போற்றிப் புகழவேண்டும்.

💥 அடுத்து, பன்றி டோனிகர் என்பது போன்ற "அமெரிக்க வாழ் இந்தியலாளரை" வைத்து புத்தகம் எழுத வேண்டும். 😛

💥 அடுத்து, அந்தப் புத்தகங்களை "த சிண்டு" போன்ற தேசிய வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😜

💥 அடுத்து, அந்தப் பன்றி டோனிகரின் புத்தகத்தை தமிழாக்கம் செய்யவேண்டும். அதை "த தமிழ் சிண்டு" போன்ற மாநில வேசி ஊடகங்களை வைத்து விமர்சிக்க ("புகழ") வேண்டும். 😝

💥 அடுத்து, இதை வைத்து மற்ற வேசி ஊடகங்கள் வழியாக "இதெல்லாம் சரி போலிருக்கிறது" என்ற மாயையை / சலசலப்பை ஏற்படுத்தவேண்டும்.

அப்புறமென்ன? சட்ட திட்டங்கள் மாறும், இடஒதுக்கீடு மாறும், புது கருங்காலிகள் சேர்வர், .... 😠

மேலோட்டமாகப் பார்த்தால், நமது சமயத்தை அளித்துவிட்டு அவர்களது மதத்தை பரப்புவதாகத் தோன்றும். ஆனால், அவர்களது உண்மையான திட்டம் நம்மை ஆட்டு மந்தைகளாக்குவது தான். அவர்கள் அசையச் சொன்னால் நாம் அசைய வேண்டும். எதை வாங்கச் சொல்கிறார்களோ அதை வாங்க வேண்டும். யாரை அவர்கள் ஆட்சியில் அமரவைக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கு நாம் ஓட்டுப் போடவேண்டும். "இன்று 1 கோடி மேகி குப்பை தயாரித்து விற்கப்பட வேண்டும்" என்று பரங்கியர்கள் ஆணையிட்டால்,
நாமே தயாரித்து,
நாமே விற்று,
நாமே வாங்கிச் சாப்பிட்டு,
நாமே அவனது ஆங்கில மருத்துவரிடம் சென்று,
நாமே அவனது ஆங்கில மருந்துகளை வாங்கி உண்டு, ஏற்படும் பக்க விளைவுகளை சரி செய்து கொண்டு ஓரளவு பணம் சேர்ந்தவுடன்,
நாமே அவர்களது நாடுகளுக்குச் சுற்றுலா சென்று, சம்பாதித்தை அவர்கள் நாட்டிலேயே தீர்த்துவிட்டு ...
மீண்டும் 1 கோடி மேகி குப்பை தயாரிக்க ஆணை வராதா என ஏங்கி ...

புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 😉

நமக்கு நமதைப் பற்றிய சரியான அறிவு இல்லாததாலேயே பரங்கிகளால் இவ்வளவு தூரம் ரோடு போட முடிந்திருக்கிறது. ஆகையால், காளிதேவியைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி - காளம் - கருமை - கருப்பு ("காத்து கருப்பு"-ல் உள்ள கருப்பு).

(இவரை சிவனின் அம்சம் என்பார்கள். அந்த சிவன் மேலேயே நிற்பது போன்று வரைந்தும் இருப்பார்கள். வேறொரு இடத்தில் சக்தியின் அம்சம் என்பார்கள். பெருமாளின் சகோதரி என்பார்கள். ஏன் இப்படிக் குழப்புகிறார்கள் என்று பின்னர் பார்ப்போம்.)

அண்டத்தில் உள்ள கருப்பான "வெளி"யே இவர். பரங்கி அறிவியல் இவரை Dark Matter / Energy என அழைக்கும். அவர்களுக்கு இவரைப் பற்றி இன்னும் புரியவில்லை. நம்மவர்கள் இவரை ஆராய்ந்து, புரிந்து, உணர்ந்து உருவமில்லா இவரும், உருவமுள்ள ஏனையப் பொருள்களும் ஒன்றே (சிவனும் சக்தியும் ஒன்றே) என்று படைப்பின் உச்சந்தொட்டார்கள். 👍

உருவமில்லா கருந்துகள் (Dark Matter) சிவம் (மொத்த அண்டமும் சிவம்தான் - ஒரே இறைவன் தான்; நிலைகளை விளக்கும் போது, முதல் நிலை சிவம் என்றும், முதல் பொருள் கருந்துகள் என்றும் பெயரிட்டுள்ளனர் நம் பெரியோர்). இந்தத் துகள் உருவநிலையை அடைய (சக்தியாக) தேவையான விசை காளி எனலாம். அல்லது, உருவமில்லா (அருவ) நிலையிலிருந்து உருவநிலையை அடையும் முன்னர் உள்ள ஒரு மிகச்சிறிய நிலை காளி எனலாம்.

அருவ நிலையிலிருந்து (சிவ நிலையிலிருந்து) கணக்கிடும் போது இவர் சிவனின் அம்சமாகிறார். உருவ நிலைக்கு (சக்தி நிலைக்கு) முன்னர் என்று கணக்கிடும் போது இவர் சக்தியின் அம்சமாகிறார்.

அண்டத்திலுள்ள அத்தனை விஷயங்களும் அருவத்திலிருந்து காளி நிலை வழியாக உருவ நிலைக்கு வந்திருப்பதால் அனைத்திற்கும் இவர் அன்னையாகிறார். "யாதுமாகி நின்றாய் காளி" என்றார் முண்டாசு கவிஞர். இப்படி அனைத்தையும் இவரே செய்வதால், சிவன் படுத்துக் கிடப்பதைப் போலும், காளி அவர் மேல் நின்று கொண்டிருப்பது போலும் வரைந்த ஓவியங்களைக் காணலாம்.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது". நம் பிண்டத்தில் எங்கு காளி வருகிறார் என்று பார்ப்போம்.

"நான் இன்னார்" என்பதே அனைவரின் பொதுவான அனுபவம். இன்னார் என்பது நம் உடல், அது பிறந்த குலம் & கோத்திரம், அதன் படிப்பு, அது பெற்றிருக்கும் பதவி மற்றும் பல. ஆனால், உண்மை இதுவல்ல! நாம் இவ்வுடலல்ல!! இவ்வுடல் நமது உடமை மட்டுமே. நமது உடமை நாமாக முடியாது. இந்த "இன்னார்" கழண்டு "நான்" மட்டும் தனியாக நிற்பதே ஞானம் (அறிவு) எனப்படும். இந்த ஞானம் அனுபவமாகும் முன்னர் பயம் தோன்றும். இது எமபயம் எனப்படும். திருக்கடவூரில் சமாதியாகியிருக்கும் மார்க்கண்டேய மகரிஷியின் வரலாறு இந்த எமபயத்தை முக்கியப்படுத்திக் காட்டும்.

இந்த பயத்தை தாண்டியவுடன், இலக்கை நோக்கி ஒரு வித வெறி & கோபத்துடன் நம் சாதனை தொடரும். இறுதியாக, இறை நிலைக்கு (சிவநிலைக்கு) அருகில் (சாமீபம்) சென்றவுடன் பிரமித்து நமது சாதனை நின்று போகும். அக்கணம் உள்ளிருந்து ஒரு சக்தி தோன்றி நம்மை (நமது தனித்துவத்தை) கபளீகரம் செய்துவிடும் (ஆட்கொண்டுவிடும்). "நான்" "தானாகி" விடும்!!

மேற்சொன்ன சாதனையில், தோன்றும் வெறி "பைரவர்" எனப்படும். கோபம் "காளி" எனப்படும். அருகில் சென்றவுடன் தோன்றும் பிரமிப்பு "சமிசீனா" எனப்படும். சாதனை நின்று போதல் "சரணாகதி" எனப்படும். ஆட்கொள்ளுதலே "ஞானமடைதல் / சாயுஜ்யமடைதல் / பரலோகமடைதல் / இறைவனின் திருவடியடைதல் / கைலாச பதவியடைதல் / வைகுண்டம் செல்லுதல் / நிர்வாணம் (பெளத்தம்) / சொர்க்கம் செல்லுதல் (Heaven - கிறித்துவம்)" என பலவாறு அழைக்கப்படுகி்றது.

பிரமிப்பு எனப்படும் சமிசீனா நிலையில் இருப்பவர், "அம்மையே" என்று ஸ்ரீகைலாசபதி (கைலாசத்தில் சமாதியாகியிருக்கும் மகான்) அழைக்கும் பேறுபெற்ற காரைக்கால் அம்மையார். திருவாலங்காட்டில் இவர் சமிசீனாம்பிகை என்றழைக்கப்படுகிறார். இதற்கு பொருள் "அருகிலிருந்து வியந்தவள்". "இறைவனுக்கு / இறைநிலைக்கு அருகிலிருந்து வியந்தவள்" என விரிக்கலாம்! 🙏

சாதாரண கோபத்தினால் பாதிப்புகள் தான் ஏற்படும். ஆனால், காளி எனும் கோபத்தினால் சிவநிலையே கிட்டும்.

சிவனை சுடுகாட்டில் வசிப்பவர் என்பர். அதாவது, சிவனுக்கு (ஞானிக்கு) இவ்வுலகம் எரிக்கப்பட்டு உருக்கலையாத சாம்பல் போல் தோன்றும். சிவனின் அம்சம் காளி என்பதால் காளிக்கு சுடுகாட்டின் மற்ற அடையாளங்களான மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள் என அணிவித்துவிட்டனர்.

🌸🌹🌺🌻💮🌷🍀🍁🌼

காளி வழிபாடு தான் வைணவத்திற்கு அடிப்படை! இதனால் தான் காளி பெருமாளுக்கு (பெருமைக்குரிய / பெரிய ஆள் = விஷ்ணு = விண்டு = விண்) சகோதரியாகிறார்! ☺ சமண பெளத்த மதங்கள் தங்கள் மதிப்பை இழந்ததும், சைவத்திற்குள் நுழைய முடியாது என்ற காரணத்தினால், பெளத்தத்திலிருந்து ஒரு கூட்டம் இதற்கு மாறியது. பெண்ணை ஆணாக மாற்றியது. ஆணைப் பெண்ணாக மாற்றியது. பெண்ணை ஆணின் பாதத்தில் வைத்தது. சிவலிங்கம் என்ற வார்த்தைக்கு "சிவநிலையில் இருப்பவரின் அடையாளம்" என்ற பொருளை ஒதுக்கி "வேறு" பொருள் கற்பித்தது. அது தோண்டிய குழியில் அதுவே விழுந்தது. அவர்கள் கற்பித்த "வேறு" பொருளுக்கு சமமான "ஒரு" அடையாளத்தை போட்டுக்கொண்டது. 😬 எதற்காக இவ்வளவு திள்ளுமுள்ளுகள்?

இக்கேள்விக்கான பதிலும், மேலே நான் எழுப்பிய "ஏன் இப்படி குழப்புகிறார்கள்?" என்ற கேள்விக்கான பதிலும் ஒன்றே: மனிதனின் சுயநலம், பேராசை, சோம்பல், குறுகிய சிந்தனை மற்றும் தான் & தனது விஷயங்கள்.

மன்னனின் வரி வருமானத்தில் ஒரு பங்கும், மக்களின் வருமானத்தில் ஒரு பங்கும் சமூகத்தின் வழிகாட்டிகளுக்கும், அறிவு வங்கிகளுக்கும் செல்லும். (ஐயர்கள், பிராமணர்கள், பரதேசிகள், பண்டாரங்கள், போதகர்கள் என்போரைத் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்). எல்லா மத அமைப்புகளும் எப்போதுமே முக்கோண வடிவம் தான்! இருப்பது ஒரு பெரிய முக்கோணம் என்று வைத்துக் கொண்டால், மன்னனும் மக்களும் கொடுக்கும் பணம், அந்தப் பெரிய முக்கோணத்தின் மேலிருந்து கடை நிலைக்கு வருவதற்குள் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாகி விடும். ஆகையால், ஆட்டம் தெரிந்தவர்கள் ஒரு புது முக்கோணத்தை ஆரம்பித்து, தனியாக கல்லா கட்டுவார்கள். இன்று அரசியல் கட்சிகளில், ஜாதி அமைப்புகளில், தொழிலாளர் நலச்சங்கங்களில் இது நடப்பதைக் காணலாம்.

"தான் உழைக்கக் கூடாது. அதே சமயத்தில் சமூகத்தில் முன்னிலையில் இருக்க வேண்டும். மற்றவர் தன் சொல்படி நடக்க வேண்டும். தான் என்ன செய்தாலும் அதை எல்லோரும் பெருமதிப்புடன் பார்க்கவேண்டும்." என்பன போன்ற சுயநலக் கொள்கைகள் தாம் முக்கோணங்கள் உருவாகக் காரணங்கள். அன்று ஜின்னா இந்தியாவை பிரித்ததற்கும் இதுவே காரணம். இன்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உருவானதற்கும் இதுவே காரணம். 😡

இந்த "சமூக ஒட்டுண்ணிகளான" முக்கோண அமைப்புகள் சமண & பெளத்தர்களிடமிருந்து தான் தோன்றியிருக்க வேண்டும் என்பது என் கருத்து. இவர்களின் வருகைக்கு முன் அப்படி ஒரு தேவை இருந்ததாகத் தெரியவில்லை. திருவள்ளுவரின் மனைவியாகிய வாசுகி அம்மையாருக்கும் கொங்கணவ சித்தருக்கும் நடந்த உரையாடலே இதற்கு சான்று ("கொக்கென்று எனை நினைத்தாயோ, கொங்கணவா?").

ஒரு சாதாரண இல்லத்தரசியும், இறைச்சித் தொழில்புரிபவருமே அன்று உயர்ந்த "சகஜ ஞான" நிலையில் இருந்திருக்கின்றனர். அதற்கென்று அவர்கள் தனியாக பயிற்சிப் பெற்றதாகத் தெரியவில்லை. தேவையுமில்லை. "ஆன்மவித்தை அதி சுலபம்" என்பார் பகவான் ஸ்ரீரமணர். தன் பாதத்தில் 108 முறை விழுந்து கும்பிட முயன்ற பெண்ணிடம், "எதற்கு இந்த சர்க்கஸ் வேலை? உண்மையான குருவின் (இறைவனின்) பாதம் உன்னுள்ளது. அதைப்பிடித்துக் கொள்." என்றார். "எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கே வர விரும்புகிறேன்" எனக் கேட்ட எத்தனையோ பேரை பகவான் தடுத்துள்ளார். மேற்கொண்டு, "நீங்கள் மட்டும் வந்துள்ளீரே" எனக் கேட்டவர்களுக்கு, "உங்கள் தலைவிதி அதுவாயின் என்னிடம் கேட்க மாட்டீர்கள்" என பதிலுரைப்பார்.

ஒவ்வொரு கணமும் நேரடி அனுபவமாகும் (பிரத்யட்சமாகும்) ஒரு விஷயத்தை, ஏன் எங்கோ இருப்பதாகக் காட்டவேண்டும்? பின்னர், உபதேசம், ஞானஸ்நானம் என்று ஊரை ஏமாற்றவேண்டும்? சிவன், சக்தி, காளி என்பதெல்லாம் பெரும் உண்மைகளின் உருவ வடிவமே என்று பாமரனும் உணரும்படி செய்திருந்தால் பரங்கியரால் இவ்வளவு தூரம் ரோடு போட்டிருக்க முடியுமா? பன்றி டோனிகரின் புத்தகங்கள் தான் விற்றிருக்குமா? இன்று காளி தத்துவம் எள்ளி நகையாடப் பட்டிருக்குமா? 😡😡😡

posted from Bloggeroid

No comments:

Post a Comment