Sunday, May 8, 2016

திராவிடர்களின் பூர்வீகம் சிந்து சமவெளியாம்!! 😂


(தினமலர் - சென்னை - 08/05/2016)

அடுத்து, திராவிடர்கள் சுமேரியாவிலிருந்து குடியேறியவர்கள் என்பர் (ஆதாரம்: மொட்ட சிவா எழுதிய, கிறுக்குப் பதிப்பக வெளியீடான டுபாக்கூர் புத்தகம்). 😂😂

இறுதியாக, எச்சம் மச்சம் விகுதி தகுதி என ஏதாவது காரணம் காட்டி 'சு'-வைக் கழட்டிவிட்டு தமிழர்கள் மேரியர்கள் என்பர் (ஆதாரம்: கெட்ட சிவா எழுதிய, தி பிந்து வெளியீடான ஜிங்குச்சான் புத்தகம்). 😂😂😂

💥 லெமூரியா கண்டத் தத்துவம் என்னவாயிற்று?
💥 ஆப்பிரிக்கா & அண்டார்டிகா தத்துவம் என்னவாயிற்று?
💥 "கல் தோன்றி மண் தோன்றா... " கணக்கு என்னவாயிற்று?
💥 தென்மதுரை எங்கே போயிற்று?
💥 தமிழனின் வருடப்பிறப்பு கணக்கு சிந்து சமவெளிக்கு எப்படி ஏற்புடையதாகும்? (பூமத்தியரேகைக்கு அருகில் இருந்தால் தான் இந்த கணக்கு சரி வரும்)
💥 அவன் நாட்டில் ஓடிய பஃருளி எங்கேயிருந்தது? சிந்து சமவெளியிலா? (பஃருளி - பல துளி; சிந்து - சில துளி; சிந்துவோடு ஒப்பிடுகையில் பஃருளி மிகப்பெரிய ஆறு)

உலகின் மூத்தக்குடியான தமிழன் தோன்றியது இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே. அப்பகுதியெல்லாம் கடல் கொண்டுவிட்டது. கீழிருந்து வடக்கு நோக்கிச் சென்றது நம் மூத்தக்குடி.

சிந்து சமவெளி நாகரிகம் தமிழனதே. ஆனால், அங்குத் தோன்றி தெற்கே பரவவில்லை. தெற்கில் தோன்றி வடக்கு நோக்கிப் பரவியது.

தமிழன் உலகின் மூத்தக்குடி, தமிழ் உலகின் மூத்தமொழி - என்பனவெல்லாம் இவர்களுக்கு பிரச்சினையில்லை. இவர்கள் குறி வைப்பதெல்லாம் தமிழனின் சமயத்தை! அவனது சமயத்தின் உருக்குலைந்த எச்சமே இன்றைய இந்து சமயம்! இந்த மிச்சத்தை அழிக்கத் தானே இத்தனைப் பாடுகள். 😉 "தமிழனது மதம் சமணம்" என்ற பிட்டைப் போட்டுப் பார்த்தார்கள். அவ்வளவாக வேலை செய்யவில்லை. ஆகையால், இந்த புது பிட். 😡

இவர்களுக்கென்றே சில கல்வி நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும், பதிப்பகங்களும் உள்ளன. கருங்காலிகளை அடையாளம் கண்டு முனைவராக்குவார்கள், குறும்பட இயக்குனராக்குவார்கள். அவர்கள் வழியாக இவர்கள் விதைக்க விரும்புவதை "ஆராய்ச்சி" கட்டுரைகளாக, குறும்படங்களாக வெளியிடுவார்கள். அவற்றை உலகின் முக்கிய கல்விக்கூடங்களுக்கும் (😛), சந்தைகளுக்கும் எடுத்துச் செல்வார்கள். கல்வித் தந்தைகளின், அறிவுஜீவிகளின் பார்வையில் படும்படி செய்வார்கள். பின்னர், அந்த தந்தைகளின் மற்றும் ஜீவிகளின் வழியாக "பெரும் உண்மைகளை" வெளியிடுவார்கள். 😜 நாமும், மேற்கத்தான் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம் பிள்ளைகளுக்கு "அறிவை" ஊட்டுவோம். தமிழன்டா!! 😝

posted from Bloggeroid

No comments:

Post a Comment