🌷 பால்குடம் சுமத்தல்:
பால்குடம் சுமப்பவர், நடந்து சென்று கொண்டிருந்தாலும், குடத்திலிருக்கும் பாலானது தளும்பி, வெளிவராமல் பார்த்துக்கொள்வார். அதாவது, எந்த செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும், அவரது கருத்தானது பால்குடத்தின் மீதேயிருக்கும். இது போன்று, நமது அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், "நாம் இவ்வுடல் அல்ல" என்ற உண்மையின் மீது கருத்தாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு போதும் அதை மறவாதிருக்கவேண்டும்.
🌷 காவடி தூக்குதல்:
🔸 காவடி = நமது பிறவி.
🔸 காவடி தூக்குதல் = இப்பிறவியை சுமத்தல்.
🔸 காவடியை சுழற்றுதல் = இப்பிறவியை நாமே இயக்குதல்.
🔸 காவடியை எதுவரை தூக்குகிறோம்? பழநி முருகப் பெருமானை காணும் வரை.
🔸 பழநி முருகப் பெருமான் என்பதென்ன? பழநி - பழம்+நீ - நீயே உள்ளபொருள் என்ற மெய்யறிவு.
நாமே உள்ளபொருள் என்ற மெய்யறிவு கிட்டும்வரை, இப்பிறவியை நாம் சுமக்கிறோம் என்ற உணர்விருக்கும். பின்னர் அது நீங்கிவிடும். பிறகு, வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்போம்.
இவ்வாறு வினைமுறைகளை பற்றி சிந்தித்து தெளிந்தால் நமக்கு பயன் கிட்டும். அல்லாமல், செக்கு மாடு போன்று, வினைமுறைகளை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அசுரருக்கு பயன் கிட்டும்! 😏
oOOo
அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽♂️

No comments:
Post a Comment