Thursday, December 18, 2025

திருக்கச்சி ஒருமாவன் (அசுரத்தில், ஏகாம்பரநாதர்) திருக்கோவிலின் முதல் திருச்சுற்றிலிருக்கும் நிலாத்துண்டப் பெருமாள்!


இன்று முதலெழுத்து திருடிக் கொண்டிருக்கும் கொல்டியாள்களின் கொடுங்கோல் முன்னோருடன் வந்த நாம நஞ்சு, நம் திருக்கோவில்களுக்குள் நுழைந்து, இன்று வரை தங்கியிருப்பது கொடுமையெனில், நஞ்சாக காண வேண்டிய அதை, திருநெறியின் ஒரு கூறாக காணுவது கொடுமையிலும் கொடுமையாகும்!! 😔

oOo

🌷 பெருமாள் + தொப்புளிலிருந்து கிளம்பும் தாமரைக் கொடி

இது, திருவானைக்கா திருக்கோவிலிருந்து சுடப்பட்டதாகும். அங்கு குடி கொண்டிருக்கும் திரு நாவல் மாமுனிவர் (அசுரத்தில், ஜம்பு மகரிஷி), "நாம் நுகரும் யாவும் நமக்குள்ளிருந்து வெளிப்படுகிறது" என்ற பேருண்மையை உணர்ந்து வெளிப்படுத்தினார். அதை, ஒரு நாவல் மரம் அவரது வயிற்றில் தோன்றி, வாய் வழியாக வளர்வதாக பதிவு செய்திருப்பர். அதை சற்று மாற்றி, பெருமாளின் வயிற்றிலிருந்து வளரும் தொப்புள் கொடியாக காண்பித்துள்ளனர்.

🌷 தொப்புள் கொடியில் மலர்மகள்

🔸 மலர்மகள் - மெய்யறிவு
🔸 தொப்புள் கொடி - மனம், உடல், காட்சிகள்... நாம் நுகரும் யாவும். மனம் தோன்றினால் யாவும் தோன்றும். மனமழிந்தால் யாவும் அழியும். மனமே அனைத்திற்கும் அடிப்படையாகிறது. எனவே, இங்கு, தொப்புள் கொடி என்பது மனதை குறிக்கும்.

🔸 தொப்புள் கொடியில் மலர்மகள் = மனதில் மெய்யறிவு.

மெய்யறிவு கிடைத்துவிட்டால், படைப்பை பற்றிய நமது கண்ணோட்டம் மாறிவிடும். பிறகு, எதனாலும் பாதிப்படைய மாட்டோம். படைப்பினால் பாதிப்படைய வேண்டுமென்பது இயற்கை (அசுரத்தில், விதி). ஆனால், மெய்யறிவு கிடைத்துவிட்டால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதையே, "இவ்வரிய காட்சிக்கு விதியை மாற்றும் தன்மையுண்டு" என்று பதிவு செய்துள்ளனர்.

ஓர் இறைவடிவத்தை காண்பதால் எந்த "விதியும்" மாறிவிடாது. அது உணர்த்தும் செய்தியை புரிந்து கொண்டால் மட்டுமே "விதி" மாறும்.

🌷 தாய்-சேய் பாசப்பிணைப்பு கூடும்

நாம மதத்தை பொறுத்தவரையில், தாய் என்பது உள்ளபொருளையும், சேய் என்பது மனதையும் குறிக்கும்.

(ஓர் அசுரத்தாய் (வெள்ளையினம்) ஓர் அழகிய தமிழினக் குழந்தையை (கருப்பினம்) தூக்கி வைத்திருக்கிறார். இது, பாலைவன மதங்களிடமிருந்து சுடப்பட்டதாகும். இதிலும் தங்களது இனவெறியை நாமாசுரர் புகுத்தியிருப்பர்.)

மெய்யறிவு பெற்ற பிறகு, மனமானது, மெல்ல மெல்ல, மாறும் வையகத்தை விரும்பாமல், மாறாத உள்ளபொருளை விரும்பத் தொடங்கும். இதுவே, "தாய்-சேய் பாசப்பிணைப்பு கூடும்" என்ற சொற்றொடரின் உட்பொருளாகும்.

oOo

எல்லா விளக்கமும் ஏரண (பீட்டரில், இலாஜிக்) அடிப்படையில் பொருந்தும் போது, ஏன் நாம மதத்தை விளாசுகிறேனென்ற கேள்வியெழலாம். அதற்கான பதில்:

மாப்பிள்ளை அவருதான். ஆனா, அவரு போட்டிருக்கிற சட்டை என்னோடது!

😁

அதாவது, இப்பதிவில் பயன்படுத்தியுள்ள குறியீடுகள் நாம மதத்தை சேர்ந்தவைதாம். ஆனால், விளக்கம் திருநெறியினை சேர்ந்ததாகும்!

நாம மதத்தை வைத்து விளக்கவேண்டுமானால்:

ஒரு வாழப்பழம் இங்கிருக்கு. இன்னொரு வாழப்பழம் எங்க?

அதாங்க இது!

என்ற வகை ஏமாற்று வேலையாக இருக்கும். 😆

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 12, 2025

குறளன் + மேஜிக் + வெஸ்டர்ன் டான்ஸ் = மூவடி பெருமாள்! 😜


திரு அருட்கடல் பெருமான் (அசுரத்தில், பகவான் இராமணர்) வீற்றிருக்கிறார். அவரை அணுகி, நாம் கரையேற வழிகாட்டுமாறு வேண்டுகிறோம். எவ்வுயிரையும் தன்னுயிர் போல கருதும் அப்பெருமான், நம் மீது இரக்கங் கொண்டு, நமதுண்மையை சுட்டிக்காட்டி, "நான் யார்?" என்ற தனது தன்னாட்டப் பயிற்சியை விளக்கியருளுகிறார். நாமும் இரவு பகலாக அந்த பயிற்சியில் ஈடுபட்டு, ஒரு சமயத்தில், பிறவிப் பெருங்கடலை விட்டு கரையேறுகிறோம்.

இப்போது, நம்மை கரையேற்றியது அருட்கடல் பெருமானா? அல்லது, அவரருளிய "நான் யார்?"-ஆ?

"நான் யார்?"-தான் நம்மை கரையேற்றியது என்று நீங்கள் கருதினால், அதாவது, பெருமானை விட, அவரிடமிருந்து வெளிப்பட்டது பெரிதென்று நீங்கள் கருதினால், பின்வரும் போற்றிகளை சொல்லி, மூவடி பெருமாளை (அசுரத்தில், திரிவிக்கிரமன்) வணங்கலாம்! 🤭:

ஓம் நான் யார்? நமக
ஓம் நீ யார்? நமக
ஓம் நாலுந் தெரிந்தவர் யார் யார்? நமக
ஓம் தாய் யார்? நமக
ஓம் மகன் யார்? நமக
ஓம் தந்தையென்பார் அவர் யார்? நமக

😆😝😂😂🤣

இவ்விடுகையை ஒரு நாமாசுரன் படிக்க நேர்ந்தால், என் மீது சினங்கொள்வானா? அல்லது, என் எழுத்தின் மீது சினங்கொள்வானா? 😏

oOo

(அன்பு கூர்ந்து, குறளன் பெருமாள் (அசுரத்தில், வாமன அவதாரம்) கதையை நினைவு படுத்திக் கொள்ளவும்.)

🌷 இந்திரன் - திரு அருட்கடல் பெருமான் போன்றொரு மாமுனிவர்.

🌷 உபேந்திரன் (குறளன் / குள்ளன்) - பெருமானிடமிருந்து வெளிப்பட்ட "நான் யார்?" போன்ற அறிவுரை.

🌷 பலி மன்னர் - செருக்கு நிறைந்த நாம்.

🌷 அசுரகுரு சுக்கிராச்சாரியார் - நமது மனம்.

🌷 அசுவமேத வேள்வி - நாம் வாழும் வாழ்க்கை.

🌷 வேள்வியின் இறுதியில் கொடுக்கப்படும் நன்கொடை - வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து, முதிர்ச்சிய டைந்து, நாம் சேர்த்து வைத்திருக்கும் பற்றுகளை விட்டுவிடுதல்.

🌷 குறளன் பெருமாளின் வருகை - தக்க சமயம் வந்ததும், "நான் யார்?" போன்ற அறிவுரையை பற்றி அறிந்து கொள்ளுதல்.

🌷 அசுரகுரு பலி மன்னரை தடுத்தல் - இத்தனை ஆண்டுகளும் திராவிசம், சமூக அநீதி, இந்து மதச்சார்பின்மை என்று ஏமாற்றித் திரிந்த கொல்டியாள் கூட்டம், இன்று உண்மை வெளிவரத் தொடங்கியதும், எவ்வாறு தங்களது நிலையை தக்க வைத்துக் கொள்ள போராடுகிறதோ, அவ்வாறே நமது மனமும் போராடும். "நான் யார்?" பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட விடாமல் ஐயங்களை எழுப்பும்.

🌷 குறளன் வானளாவ பெருகுதல் - தொடக்கத்தில், அவ்வப்போது "நான் யார்?" பற்றி சிந்திப்போம். போகப் போக நனவு, கனவு & தூக்கம் என எல்லா நிலைகளிலும் அது பற்றிய சிந்தனை நடந்து கொண்டேயிருக்கும். இதுவே குறளன் வானளாவ வளர்ந்து, எடுத்து வைத்த 3 அடிகளாகும்!

🌷 பலி மன்னர் தனது தலையை கொடுத்தல் - இறுதியில், நம்மை பற்றிய தெளிவு பிறந்ததும், "நான் இன்னார்" என்ற நமது செருக்கை விட்டுவிடுதல்.

(இது நுட்பமான, தலையாய படியாகும். எவ்வளவு தெளிவு கிடைத்தாலும், வெள்ளோட்டமே (டெமோ) கிடைத்திருந்தாலும், அவ்வளவு எளிதில் செருக்கை விட்டுவிடமுடியாது.)

oOo

அற நூல்களை கசடறக் கற்றுத் தெளிந்து, வடக்கிருந்து (அசுரத்தில், தவமிருந்து), அரும்பாடுபட்டு பேருண்மையை உணர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டிருந்தால், நாம மதம் வேறு வகையாக இருந்திருக்கும். ஆனால், திரு சீர்காழிப் பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) விட்ட ✊🏽👊🏽🤛🏽👊🏽🤜🏽👊🏽-களால் "வடை போச்சே!" என்ற வயிற்றெரிச்சலில் இருந்த வடக்கத்திய பௌத்தரில் ஒரு பிரிவினர், தமிழரையும், அவர்தம் திருநெறியையும் வீழ்த்த வேண்டுமென்ற மட்டமான குறிக்கோள்களுடன், பாலைவன மதங்களிலிருந்து குறியீடுகளை திருடிக் கொண்டுவந்து, அவர்களுக்கு ஏற்றவாறு டிங்கரிங் செய்ததின் விளைவு...

அதே கண்கள் (1967) திரைப்படத்தில், டைப்பிஸ்ட் கோபு, "இடுப்ப ஆட்டு", "கழுத்த வெட்டு" என்று சொல்லச் சொல்ல, சிங்கப்பூர் மாதவி ஆடுவது போன்று மூவடி பெருமாளின் வடிவம் அமைந்துவிட்டது! 🤣


oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, December 5, 2025

விளக்கீடே உண்மையான தீபாவளியாகும்!


விளக்கீடுத் திருவிழாவின் அழகில் மயங்கிய வடவர், அதை அவர்களது தீபாவளியோடு (திரு கண்ண பெருமான் மெய்யறிவு பெற்ற திருநாள்) இணைத்துக் கொண்டனர்.

திரு கண்ண பெருமான் உணர்ந்தது: "இவ்வுடலே நான்" எனும் தவறான எண்ணத்தை விட்டொழித்தலே, உடலெனும் கொடுஞ்சிறையிலிருந்து (நரகம்-நரகாசுரன்) விடுதலை (அசுரத்தில், முக்தி) அடைவதாகும்.

திரு இடைக்காடர் உணர்ந்தது: உயிரிகள் எண்ணற்றவையாக இருந்தாலும், வகை வகையாக இருந்தாலும், அவற்றின் உள்ளிருப்பது ஓர் உள்ளபொருளேயாகும்.

இதையுணர்த்தவே வரிசை வரிசையாக, பல் வேறு அளவுகளில், பல் வேறு வகைகளில் விளக்குகளை ஏற்றுகிறோம். எனவே, விளக்கீடுத் திருநாளே உண்மையான தீபாவளியாகும் (தீப+ஆவளி - தீபங்களின் வரிசை)!

oOo

இத்தனுவே நானா மெனுமதியை நீத்தப்
புத்தியித யத்தே பொருந்தியக நோக்கா
லத்துவித மாமெய் யகச்சுடர்காண் கைபூ
மத்தியெனு மண்ணா மலைச்சுடர்காண் மெய்யே.

-- திரு அருட்கடல் பெருமான் (அசுரத்தில், பகவான் இரமணர்) 🌺🙏🏽🙇🏽‍♂️

பொருள்: "இவ்வுடலே நான்" எனும் தவறான எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, புறம் நோக்காது, அகம் நோக்கி (கருத்தை நமது தன்மையுணர்வில் பொருத்தி), "நாமே இறுதியான உள்ளபொருள்" என்பதை உறுதியாக அறுதியாக உணர்வதே, திரு அண்ணாமலையாரின் முடி மீது ஏற்றப்படும் சுடரை காண்பதின் பொருளாகும்.

oOo

தொல்கார்த்திகைநாள் விளக்கீடு காணாதே போதியோ? பூம்பாவாய்!

-- திரு ஆளுடைய பிள்ளையார் (அசுரத்தில், திருஞானசம்பந்தர்) 🌺🙏🏽🙇🏽‍♂️

திருமயிலைப் பதிகத்தில், தொன்மையான தமிழர் திருவிழாக்களை பட்டியலிடும் பெருமான், விளக்கீடை மட்டும் "தொல்" என்ற பெயரடையோடு குறிப்பிட்டு, அதன் தொன்மையை சிறப்பிக்கிறார்.

oOo

அனைவருக்கும் எனது உளங்கனிந்த இனிய விளக்கீடுத் திருநாள் நல்வாழ்த்துகள்!! 🙏🏽🪔☀️

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Monday, December 1, 2025

திருவெண்பாக்கம்: அசலை இழந்தோமென்ற அறிவே இல்லாமலிருக்கிறோம்!!


ஒரு விலையுயர்ந்த பொருளை ஓரிடத்தில் புதைத்து வைக்கிறோம். அவ்விடத்தை மறவாமலிருக்க, அடையாளமாக ஒரு பொருளை நட்டு வைக்கிறோம். காலப்போக்கில், புதைத்து வைக்கப்பட்ட பொருளை மறந்துவிடுகிறோம். அடையாளத்தை மட்டும் இறுகப் பிடித்துக் கொள்கிறோம். அணைக்கட்டு திட்டம் அறிவிக்கப்படுகிறது. அவ்விடம் நீரில் மூழ்கிவிடுமென தெரிந்ததும், அடையாளத்தை மட்டும் அகற்றி, வேறொர் இடத்தில் நட்டு வைத்து, அடையாளத்தை காப்பாற்றுகிறோம். ஆனால், புதையலை இழக்கிறோம்! புதையலை இழந்தோமென்ற அறிவே இல்லாமலிருக்கிறோம்!!

இதுதான் இன்றைய திருவெண்பாக்கம் கோவிலின் (பூண்டி, திருவள்ளூர்) வரலாறாகும்.

oOo

திரு ஆளுடைய தோழருக்கு (அசுரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார்) ஊன்றுகோல் வழங்கிய பெருமானின் திருவிடம் (அசுரத்தில், சமாதி) நீர்தேக்கத்திற்குள் உள்ளது. ஆனால், அவரது திருவிட அடையாளம் (அசுரத்தில், சிவலிங்கம்) சென்னை புரசையிலுள்ள திரு கங்கைமுடியரின் திருக்கோவிலில் உள்ளது. 

நீர்த்தேக்கத்திற்குள் புதைந்த திருக்கோவிலிலிருந்து அகற்றப்பட்ட மற்ற
சிலைகள், நெடுங்கற்கள் & கல்வெட்டுள்ள கற்கள் ஆகியவற்றை கொண்டு, நீர் தேக்கத்தின் கரையிலுள்ள தற்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது. நீருக்குள்ளிருக்கும் பெருமானின் நினைவாக புதிய உடையவரும் நிறுவப்பட்டுள்ளது.

அசுரர்-அரவம் (#) கூட்டணியால், "திருக்கோவில் என்பது ஒரு பெருமானின் திருவிடம்" என்ற அறிவு நம்மிடமிருந்து நீங்கியது. விளைவு: அசலை விடுத்து, நகலை வணங்கிக் கொண்டிருக்கிறோம்! அசலை இழந்தோமென்ற அறிவே இல்லாமலிருக்கிறோம்!!

(# - அரவம் - நச்சுப்பாம்பு - கொல்டியாள்)

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

பொய்யடியேன் பிழைத்திடினும்
பொறுத்திடநீ வேண்டாவோ

-- நம்பி திருச்சொல் 7.89.3  🌺🙏🏽🙇🏽‍♂️

அருள் நிறைவான அருட்கடல் பெருமான் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻