Wednesday, August 28, 2024

வேலுண்டு வினையில்லை - சிறு விளக்கம்

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
குகனுண்டு குறையில்லை
கந்தனுண்டு கவலையில்லை, மனமே

🌷 வேலுண்டு வினையில்லை

நம்மை நாம் உடலாக கருதும் வரை, செயல்களை நாம்தான் செய்கின்றோம் என்ற எண்ணமிருக்கும் வரை, செயல்களின் விளைவுகளால் (வினைப்பயன்) பாதிப்படைவோம். இதற்கு தீர்வு? வேல்!

வேல் = மெய்யறிவு.

நாம் உடலல்ல என்ற நமதுண்மையை உணர்ந்து, செயல்களை செய்வது நாமல்ல என்ற உண்மையையும் உணர்ந்து, நாம் நாமாக இருந்துவிட்டால் (வேலாக இருந்துவிட்டால்), செயல்களும் அவற்றின் விளைவுகளும் நம்மை பாதிக்காது (வினையில்லை).

🌷 மயிலுண்டு பயமில்லை

மனிதப் பிறவியின் குறிக்கோள் பிறவிப்பெருங்கடலை தாண்டுவதாகும். ஒருவேளை, இப்பிறவியில் நமது முயற்சிகள் பயனளிக்கவில்லை எனில் அச்சப்படத் தேவையில்லை. அடுத்த பிறவியில் தொடர்ந்து கொள்ளலாம். முதல் நாள் இரவு தூங்கும்போது நமது மனநிலை எப்படியிருந்ததோ அப்படியேதான் அடுத்த நாள் காலையிலும் தொடரும். பிறவிகளும் இப்படிப்பட்டதே! ஒரு பிறவியின் முடிவில் நமது மனநிலை எப்படியிருந்ததோ அப்படியேதான் அடுத்த பிறவியின் தொடக்கத்திலும் இருக்கும்.

> மயில் = பிறவி.
> மயிலுண்டு பயமில்லை = பிறவிகளுண்டு அச்சப்படத் தேவையில்லை.

🌷 குகனுண்டு குறையில்லை

குகன் = நான் எனும் நமது தன்மையுணர்வு.

எப்போதும் எந்நிலையிலும் நமது தன்மையுணர்வு மாறவே மாறாது. ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் சரி, சும்மாவிருந்தாலும் சரி, நமது தன்மையுணர்வில் ஒரு மாற்றமும் ஏற்படாது. நமது தன்மையுணர்வை இறுகப்பற்றிக் கொண்டுவிட்டால், குகனாக இருந்துவிட்டால், நமக்கு ஒரு குறையும் ஏற்படாது!

அன்பர்: எவ்வாறு தன்மையுணர்வை இறுகப்பற்றுவது?

பகவான்: குமரன் என்பவன் தன்னை குமரனென்று உணர கண்ணாடி தேவையோ? ☺️

🌷 கந்தனுண்டு கவலையில்லை

இது, மேற்கண்ட மெய்யறிவு, தன்மையுணர்வு என எதுவும் புரியவில்லை என்போருக்கான சொற்றொடராகும்!

கந்தன் = திரண்டவன்.

பலவாறாக பரவிச்செல்லும் மனதை திரட்டி (கந்தனாக்கி), ஒரு முகமாக நம்மிடமே வைத்துக்கொண்டால்... கவலைக்குதான் கவலை! நமக்கில்லை. 😀

oOo

மொத்தத்தில், மெய்யறிவுத் தேடலில் இருப்போருக்கான வழிகாட்டி & ஆறுதல் மொழியே "வேலுண்டு வினையில்லை..." என்ற பாடல் வரிகளாகும். 🙏🏽

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, August 25, 2024

வெண்ணெய் திருடும் கண்ணன்!! 🥸


🌷 மெய்யியலில் வெண்ணெய், அமுது, கொழுக்கட்டை & இனிப்பு ஆகியவை மெய்யறிவை குறிக்கும். சில எடுத்துக்காட்டுகள்:

- பிள்ளையாரின் கையிலிருக்கும் கொழுக்கட்டை / இனிப்பு
- பாற்கடலை கடைந்து பெறப்பட்ட அமுது
- "வெண்ணெய் திருடும் கண்ணன்" வடிவத்திலிருக்கும் வெண்ணெய்

💥 வெண்ணெய் திருடுதல் = மெய்யறிவை திருடுதல்.

பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற பெருமானை, அவரது உயரிய நிலையிலிருந்து வீழ்த்தி, ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் மீண்டும் பிறக்க வைத்து, மெக்காலே மண்டையனாக்கி, (இந்துவாக இருந்தால்) 'மம' சொல்லும் மடையனாக்கும் மாயை / மாயோனின் பெயர்தான் "வெண்ணெய் திருடும் கண்ணன்"!!

💥 வெண்ணெயை திருடிவிட்டு வீட்டிற்குள் வரும் கண்ணனை வரவேற்பதென்பது...

அண்மையில், கொல்கத்தாவில், தனது உடற்பசிக்காக ஒரு பயிற்சி-மருத்துவரை கற்பழித்துக் கொன்ற கொடியவனான சஞ்சய் ராயை மகிழ்ச்சியுடன் வரவேற்று, மரியாதை செய்து, விருந்தளித்து மகிழ்வதற்கு நிகராகும்!!

(திரு மறைக்காட்டு மணாளரையோ (விசுவாமித்திரர்), திருவாதவூரடிகளையோ (மாணிக்கவாசகர்) கேட்டால் தெரியும் "வெண்ணெய் திருடும் கண்ணன்" என்ற மாயை / மாயோன் எவ்வளவு கொடியதென்று!)

💥 பிள்ளையார் என்ற இறைவடிவத்தில், ஒரு மூஞ்சூறு இனிப்பை கொறித்துக் கொண்டிருக்கும். அந்த மூஞ்சூறை ஓர் அழகான கருப்புக் குழந்தையாக மாற்றி, இனிப்புக்கு பதிலாக வெண்ணெயை கொடுத்து, "சின்னத்தம்பி" ஐயிட்டத்தை சேர்த்துவிட்டால் "வெண்ணெய் திருடும் கண்ணன்" கிடைத்துவிடுவார்! 😀

அதாவது, இனிப்பை கொறிக்கும் மூஞ்சூறுவும், வெண்ணெயை திருடும் கண்ணனும் ஒன்றுதான் - ஒரே கருத்தை வெளிப்படுத்துகின்றன: மெய்யறிவை திருடுதல்.

(அதென்ன "சின்னத்தம்பி" ஐயிட்டம்? சென்டிமென்ட்! - திவ்யமங்கள ரூபம் & நாமம், இலட்டு, வடை, புளியோதரை, மனதை மயக்கும் குரலில் தீந்தமிழ்ப்பாடல்கள்... 😉)

💥 5,125 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கண்ணபிரானுக்கும் பெண்குறி மதத்திற்கும் எந்த தொடர்புமில்லை. பெண்குறி மதம் உருவாக்கப்பட்டதோ 7ம் நூற்றாண்டில் பிற்பகுதியில். பெண்குறியை அம்மதத்தின் சின்னமாக தெலுங்கர் இராமானுஜர் அறிவித்ததோ 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்.

🌷 படம் #1:


🔸 குழந்தை கண்ணன் - மாயை / மாயோன்
🔸 கவிழ்ந்த பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்

🌷 படம் #2:


🔸 உறியில் தொங்கும் வெண்ணெய் பானை - பகவான் போன்ற மெய்யறிவாளர்.

இவர்கள் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் என்பதை காட்டுவதற்காக உறியை கூரையில் (உயரமான இடத்தில்) தொங்கவிட்டிருக்கிறார்கள்.

🔸 கண்ணனின் நண்பர்கள் - விருப்பு & வெறுப்புகள் / பற்றுகள். 

இவை கீழானவை என்பதை காட்டுவதற்காக, தரையிலிருந்து ஒருவர் மீது ஒருவரை நிற்க வைத்து, மாடம் அமைத்திருக்கிறார்கள்.

🔸 கண்ணன் - மாயை / மாயோன்

🌷 வெண்ணெய் திருடும் கண்ணனுக்கு நிகரான அன்னை வடிவம்: அன்பு விழியாள் (அசுரத்தில், காமாட்சி).

👊🏽 பெண்குறி மதத்தை இரு சொற்களாக சுருக்கினால்: நாமம் போட்டுட்டாங்களா? (ஏமாற்றிவிட்டார்களா?)

பெண்குறி மதம் = ஏமாற்று வேலை!!

oOOo

அசுரம் தவிர். தமிழ் பயில். 💪🏽

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, August 23, 2024

அமெரிக்காவின் 90-அடி உயர குரங்குச்சிலை!!


🔸 குரங்கு - மனம்

🔸 வானளாவிய குரங்கு - மனம், உடல், வையகம் என படைப்பு முழுவதும்.


மனமியங்கும் வரை இணைவு (அசுரத்தில், யோகம் & பீட்டரில், யூனியன்) என்பது கிடையாது. எனில், எவ்வாறு அச்சிலையை "Statue of Union" என்றழைக்கலாம்? வேண்டுமானால் "Statue of Disunion" என்றழைக்கலாம்!


- சுடர்நெறியில் (சைவத்தில்) விடை,

- தென்னாடுடையவனின் முடி மேலிருக்கும் கங்கையன்னை,

- உமைமுருகுஈசர் வடிவத்தில் முருகர்,

- இறைகுடும்ப வடிவத்தில் முருகர்,

- அன்னை வழிபாட்டில் மாயை, தவ்வை & பல அன்னை வடிவங்கள்

- பிள்ளையார் வழிபாட்டில் மூஞ்சூறு,

- முருகர் வழிபாட்டில் வள்ளி,

- பெண்குறி மதத்தில் குரங்கு & பெருமாள் (#),

- பாலைவன மதங்களில் சாத்தான் & சைத்தான்


ஆகிய அனைத்தும் மனதையே குறிக்கின்றன!


"ஏன் மனதை வெறுக்கவேண்டும்? மனம் இயங்கினாலென்ன?", போன்ற கேள்விகள் எழலாம். இதற்கான பதில்-கேள்விகள்:


💥 கொரோனாவை வைத்து பில்கேட்ஸ் பெரும் பணம் சம்பாதித்ததில் தவறென்ன இருக்கிறது?

💥 பணம் படைத்த (!) பொதுமக்களை பிழிந்து, பரம ஏழைகளான அம்பானி-அதானிகளுக்கு நம்ம ஜி வாரி கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது?

💥 தனது உடற்பசிக்காக, கொல்கத்தா பயிற்சி-மருத்துவரை ஒரு கொடியவன் கற்பழித்துக் கொன்றதில் தவறென்ன இருக்கிறது?

...

...


இவையெல்லாம் மனம் "நன்கு" இயங்கியதால் ஏற்பட்ட சில விளைவுகளாகும். மனதிற்கு நம் பெருமான்கள் இட்ட சில பெயர்கள்: ஆய், பேய், நச்சி, பாம்பு, கொடுங்காடு!!


மனதை போற்றக்கூடாது; வணங்கக்கூடாது. எப்பாடுபட்டாவது அதை அழிக்கவேண்டும்.


வானளாவிய குரங்குச்சிலை - 👎🏽👎🏽!!


(# - பெண்குறி மதத்தின் (நாம மதத்தின்) தொடக்க கால நிர்வாகிகள், மனதை குறிக்க பெருமாளை பயன்படுத்தினார்கள். பின்னர் வந்தவர்கள், பெருமாள் வடிவத்திற்கு பதவி உயர்வு கொடுத்துவிட்டு, மனதை குறிக்க குரங்கை பயன்படுத்தினார்கள். சுடர்நெறியுடன் இணைந்த பிள்ளையார் வழிபாட்டிற்கு போட்டியாக கொண்டுவரப்பட்டது தான் குரங்கு வடிவம் -"பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்தது"!!)


oOOo


கண்ணனே அச்சிலையை செய்தான். 

கண்ணனே இவ்விடுகையை எழுதினான்.


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻

Wednesday, August 21, 2024

செய்தி: திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் தென்பட்ட வெகு பழமையான சுவர்


மேற்கண்ட செய்தியினால் பின்வரும் விளைவுகள் ஏற்படலாம் 🤭:


அசுரர்கள்: தேவசம்ஹாரம் முடிஞ்ச பின்னாடி, அசுரர்கள் சேஃபா, சௌக்கியமா, கம்ஃபர்ட்டா யக்ஞம் செய்யறதுக்காக, இங்க ஒரு கோட்டைய கட்டச் சொல்லி, அசுர சிற்பியான விசுவகர்மாவுக்கு ஆணையிட்டார் சுப்ரமணிய சுவாமி. அந்த கோட்டையோட மிச்சம்தான் இந்த சுவர். கோட்டைய கட்றச்சே, விசுவகர்மாவோட கூட இருந்து, வேலைய கத்துண்டார் தேவ சிற்பியான மயன். அப்புறம்தான், ஐந்திரம்-ங்கற சயின்ஸ் பொஸ்தகத்த எழுதினார். ஓம் புருடா சத்! 😜


குறிமதத்தினர்: இன்று கடலுக்குள் புதைந்திருக்கும் இச்சுவரின் மேல், அன்று வெள்ளை நிற குட்டிச்சுவர் இருந்துள்ளது. பண்டைய தமிழ் ஆண்கள், தங்களை ஆண்குறி போன்று ஒப்பனை செய்துகொண்டு, அச்சுவரின் முன், ஒவ்வொரு நாளும் 5 முறை பஸ்கி, தண்டால் எடுத்து, "இறைவன் மிகப்பெரியவன்" இறைவனை ஒழு செய்துள்ளனர். இவ்விடத்திற்கு அருகில்தான், உலகின் முதல் நபியான ஆதாம் வானத்திலிருந்து இறங்கியுள்ளார். எனவே, திருச்செந்தூரும், அதைச் சுற்றியுள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பும் வக்பு வாரியத்திற்கு சேர்ந்ததாகும்! சைத்தான் மிகப்பெரியவன்!! 😆


திராவிடியாள்: வரலாற்று அறிஞர்களான முனைவர் சீ. வெங்கடேசலு, முனைவர் அ.சுப.தூ-லு, பேரா. ஓட்டேரி நரிலு ஆகியோரின் ஆய்வின்படி, அச்சுவரானது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு தீண்டாமைச் சுவராகும். அச்சுவரை கட்டுவதற்காக, சோழர்கள் அந்தணர்களை வைத்து பூமி பூசை செய்துள்ளனர் என்ற செய்தி தெரியவந்துள்ளது. சுவரை கட்டுவதில் சமூகநீதி காக்கப்படவில்லை என்ற செய்தியும் கிடைத்துள்ளது. இவற்றை மக்களிடையே கொண்டு செல்வதற்காக, "சுவரலான்" என்ற திரைப்படத்தை "தொங்கலான்" திரைப்படக் குழுவினர் தொடங்கவுள்ளனர். அதற்கான பகுத்தறிவு பூசையானது, தனது இறுதி காலத்தில், தெலுங்கு ஆச்சாரியான் திருவடியை சேவித்துக் கொண்டே புட்டுக்கொண்ட பகுத்தறிவு கருந்துளையின் கல்லறையில் நடத்தப்படும். தொழில் செய்தவளுக்கு பிறந்தவனின் நாமம் வாழ்க! சாதிகள் உள்ளதடி பாப்பா! குல தாழ்ச்சி உயர்ச்சி கொள்ளல் நல்லதடி பாப்பா! 😝


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Thursday, August 8, 2024

திருநீறா நீரா? நிம்மதியா அலைக்கழிவா?


நமது திருக்கோயில்களில் திருநீறு கொடுப்பார்கள். நாம விகாரைகளில் நீர் கொடுப்பார்கள்.

👍🏽 திருநீறு - திண் பொருள் - நிலைபேறு - பிறவியறுத்தல்.
👎🏽 நீர் - நீர்மப்பொருள் - அலைபேறு - பிறவியெடுத்தல்.

🙏🏽 நிலைபேற்றிற்கு சில எடுத்துக்காட்டுகள் - பகவான் இரமணர், தாயுமானவர், நால்வர் பெருமக்கள், ஒளவையார், திருவள்ளுவர்.

👊🏽/🤦🏽 அலைபேற்றிற்கு சில எடுத்துக்காட்டுகள் - கொரோனாவை பெற்றெடுத்த பில்கேட்ஸ், இவனைப் போன்ற புறம்போக்குகளின் உற்ற நண்பனான நம்ம ஜி, இவ்விருவர் போன்றோரால் அல்லல்படும் பொதுமக்கள்.

எது வேண்டும்? நிலைபேறா அலைபேறா? பிறவாமையா பிறவியா? நிம்மதியா அலைக்கழிவா?

யாரைப் போலாகவேண்டும்? பகவானா படுத்துபவனா / படுபவனா? 😃

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Sunday, August 4, 2024

கோலாட்டம் & குழலூதும் கண்ணன் - உட்பொருள்



செய்தி: சென்ற மார்ச் திங்கள் தொடக்கத்தில், 121+ ஆந்திரா அன்பர்கள், கோலாட்டம் அடிக்கொண்டு, சிவன் பாடல்களையும், பெருமாள் பாடல்களையும் பாடிக்கொண்டு, திரு அண்ணாமலையாரை வலம் வந்தனர்.

இன்று, இச்செய்தியில் தவறிருக்கிறது என்று சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சரி. இதே செய்தி, இன்னும் சில நூற்றாண்டுகளில், பின்வருமாறு மாறும்:

ஆந்திரா அன்பர்கள், கோலாட்டம் அடிக்கொண்டு, சிவன் பாடல்களையும், பெருமாள் பாடல்களையும், இயேசு பாடல்களையும் பாடிக்கொண்டு திரு அண்ணாமலையாரை வலம் வந்தனர். மேற்கு திசை வரும்போது, சாலையிலேயே ஒழு செய்து, மிகப்பெரிய இறைவனை வணங்கினர்!!

😃

இப்போது, முதல் செய்தியிலுள்ள தவறு புரிந்திருக்கும்!

🌷 தென்னாடுடையவன் வழிபாடு = அசைவற்ற உள்ளபொருளை போற்றுவது
🌷 பெருமாள் வழிபாடு = அசையும் யாவற்றையும் போற்றுவது

எது உங்கள் கொள்கை? எது சரியென்று கருதுகிறீர்கள்? உள்ள பொருளா? அல்லாத பொருளா?... இவ்வகையில் சிந்திக்கவேண்டும்.

இதை விடுத்து, சிவபெருமானின் மனைவி அன்னை, அன்னையின் அண்ணன் பெருமாள், பெருமாளின் மருமகன் முருகன், மாமன், மச்சான், ஒன்று விட்டது, இரண்டு விட்டது என்று சிந்தித்தால்... அவ்வளவுதான்! மீண்டும் ஜிஎஸ்டி-சூழ் வையகத்தில் பிறந்து, "இந்திரன் அசோகன் சாலையோரங்களில் மரம் நட்டான்", "வாஸ்கோடகாமா பாரதத்தை கண்டுபிடித்தான்", "திப்பு சுல்தானே முதல் விடுதலைப் போராட்ட வீரன்", "இராமசாமி சமூகநீதி காத்தான்" போன்ற "வரலாற்று உண்மைகளை" படித்து தெளிந்து, தேவர்களுக்கு அவிர்ப்பாகம் (ஜிஎஸ்டி முதலான வரிகள்) கொடுத்து, "மஸ்தான் நல்லவன்" என்பதை ருசித்துப் பார்க்கவேண்டியிருக்கும்! 😝

oOo

உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல், கோலாட்டம் ஆகியவை நாம மதத்தை சார்ந்தவையாகும்.

உள்ளபொருளாய் சமைந்த மெய்யறிவாளர்களுக்கு "விறகு" என்றொரு பெயரிருக்கிறது. எப்போதும் எதனாலும் பாதிப்படையாமல், அப்படியே அவர்களிருப்பதால் இப்படியொரு பெயரைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள். (அசுரத்திலுள்ள தாணு என்ற பெயருக்கும் இதே விளக்கம்தான்)

எ.கா.: (காஞ்சிபுரம் மாவட்டம்) மாகறல் பெருமான் - மா+கறல் - பெரிய / சிறந்த விறகு.

இப்போது, விறகை சற்று மாற்றினால், கோல் கிடைக்கும். இன்னும் சற்று மாற்றினால் குழல் கிடைக்கும்.

விறகு = கோல் = குழல் = உள்ளபொருள் (சிவம்).

கோலாட்டத்தில் பயன்படுத்தப்படும் கோல் என்பது அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும். எனில், தன்னை நன்கு ஒப்பனை செய்துகொண்டு, கோலை வைத்துக்கொண்டு, குனிந்து, நிமிர்ந்து, வளைந்தாடும் நபர்... மாயோனை (அல்லது, அன்னை மாயையை) குறிப்பார். (மாயோனை "ஒப்பனை விரும்பி" என்று அழைக்கின்றனர். எனவே, மாயோனை குறிக்கும் நபர், தன்னை நன்கு ஒப்பனை செய்துகொண்டிருக்கிறார்.)

அதாவது, உள்ளபொருளை இயக்குவது மாயை என்பது கோலாட்டம் உணர்த்தும் உட்பொருளாகும்! அசைவற்றதை அசைவது இயக்குகிறதாம்! திரைத்துணியானது படத்திற்கு இடங்கொடுக்கிறதா? அல்லது, படமானது திரைத்துணியை அசையச் செய்கிறதா?

படம்தான் துணியை அசைக்கிறது என்று நம்புகிறவர்கள் கோலாட்டம் ஆடலாம்! 😏

oOo

கோலாட்டத்தில் ஆடும் நபர் மாயோனுக்கு ஒப்பானவரென்று பார்த்தோம். இப்போது, மாயோனே அங்கு நிற்பதாக வைத்துக் கொள்வோம். கோலுக்கு பதிலாக குழலை வைத்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குழலூதும் கண்ணன் வடிவம் கிடைத்துவிட்டது!

அதாவது, கோலாட்டத்தின் உட்பொருள் என்னவோ, அதுவேதான் குழலூதும் கண்ணன் வடிவத்தின் உட்பொருளுமாகும்: அசைவது அசைவற்றதை இயக்குகிறது! (காட்சியானது துணியை அசைக்கிறது! ☺️)

(குழலூதும் கண்ணன் நேராக நிற்கமாட்டார். வளைந்து நெளிந்து நிற்பார். இது அசைவை குறிக்கும். நேராக இருக்கும் அவரது குழல் அசைவற்ற உள்ளபொருளை குறிக்கும்.)

மேற்கண்டது திரு கண்ணபிரானின் கருத்தல்ல. அவர் மெய்யறிவிற்கு வழிகாட்டியவர். அவர் வாழ்ந்த சமயத்தில் வைணவமே இல்லை! (ஒருவேளை, அன்று, கண்ணபிரானிடம் "குழலூதும் கண்ணன்" வரைபடத்தை வைணவர்கள் காண்பித்திருந்தால், "மாமனை பிற்பாடு பார்த்துக் கொள்ளலாம். முதலில், இந்த பயல்களை போட்டுத்தள்ளவேண்டும்" என்று முடிவெடுத்திருப்பார்"!! 😆)

oOo

உண்மையில் என்ன நடக்கிறதென்பதை வெகு அழகாக, சொற்களால் படம் பிடித்து காட்டியிருக்கிறார் திரு நடனானந்தர்:

ஏதேது வந்தாலும் ஏதேது செய்தாலும்
ஏதேதில் இன்புற்று இருந்தாலும் - ஏதேதும்
தானாகா வண்ணம் தனித்திருக்கும் 
ஞானாகாரம் தானே நாம்!

என்றும் எப்போதும் எந்நிலையிலும் உள்ளபொருளாகிய நமது தன்மையுணர்வில் எம்மாற்றமும் நிகழ்வதில்லை. மாற்றங்கள் நிகழ்வதெல்லாம் மற்றவற்றில் - மனம், உடல் & வெளி. மாறுவது எதுவும் உள்ளபொருளாகாது. செயல் என்பதும் மாற்றத்தை குறிக்கும். அதுவும் உள்ளபொருளாகாது. இதனால்தான், செயலை குறிக்கும் கூத்தப்பெருமானின் திருவடிவம், தில்லையை தவிர, மற்றனைத்து திருக்கோயில்களிலும், கருவறையில் வைக்கப்படாமல், மனதை குறிக்கும் 3வது கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செயல் நடைபெறுவதற்கு இசைவது (அனுமதிப்பது) மட்டுமே உள்ளபொருளின் பங்காகும். செயலை நிகழ்த்துவது மாயோனின் (அல்லது, மாயையின்) பங்காகும். 

"நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே..." -- கவியரசர். (நான் - தன்மையுணர்வு)

ஒரு கதையில், பேரரசர் இராவணன், தனது தலைகளில் ஒன்றை கொய்து, தனது நரம்புகளை அதில் பூட்டி, அதையொரு வீணையாக்கி, இசைத்து, இறைவனின் அருளை பெற்றாரென்று புனைந்திருப்பார்கள். இங்கு, இராவணன் மனதை குறிக்கிறார். மனமானது, தனது உருப்படிகளை வைத்து, தானே இயங்கி, விளைவுகளை உண்டாக்குகிறது என்பது உட்பொருளாகும். இது, கோலாட்டம் & குழலூதும் கண்ணன் ஆகிய வரைவுகளை (அசுரத்தில், சித்திரிப்பு) விட உண்மைக்கு பொருத்தமானதாகும்.

கோலாட்டம் ஆடுவோர், கோல்களுக்கு பதிலாக, தங்களது கைகளையே பயன்படுத்தலாம். குழலூதும் கண்ணன், தனது வாயாலோ, அல்லது, கைகளை குவித்தோ ஓசையெழுப்புவது போன்று மாற்றி வரையலாம். உண்மைக்கு பொருந்தும். மாற்றுவார்களா? (கண்ணபிரானே வந்து சொன்னாலும் மாற்றமாட்டார்கள்!! 😏)

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Friday, August 2, 2024

பிரதோச வழிபாட்டின் உட்பொருள்


🌷 பிரதோசம் - பிர + தோசம்

🌷 தோசம் - இருள்

🌷 பிர - அருகில் / முன்

🌷 விடை (அசுரத்தில், நந்தி) - மனம்

🌷 விடையை தூய்மைபடுத்துதல் - அடுத்து வரவிருக்கும் இருளுக்கு முன்னர் மனதை தூய்மைப்படுத்தி கொள்ளுதல்.

🌷 இருள் - இறப்பு. இறப்பதற்கு முன்னர் மனதை தூய்மைப்படுத்தி கொள்ளுதல்.

🌷 மனதை தூய்மைபடுத்துதல் - சேர்த்து வைத்திருக்கும் எல்லா பற்றுகளையும் விட்டொழித்தல்.

பிறவி முடிவதற்குள், எல்லாவற்றையும் விட்டொழித்து விட்டு, நாம் நாமாக - நமது தன்மையுணர்வாக - மட்டும் இருந்தோமானால் தப்பிப்போம். இல்லையெனில்... கோவிந்தா! ஜிஎஸ்டி-சூழ் வையகத்திற்குள் மீண்டும் பிறந்து... 😏

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Thursday, August 1, 2024

திருக்குறள் #20: நீர்இன்று அமையாது உலகெனின்...


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு


-- திருக்குறள் #20 (வான் சிறப்பு)


பொதுவான பொருள்: நீர் இல்லாமல், நாம் வாழும் இவ்வையகம் இயங்காது. மழை பெய்யாவிட்டால், ஒருவரிடமும் ஒழுக்கமிருக்காது (மழையின்மை -> பஞ்சம் -> ஒழுக்கமின்மை -> மனிதமின்மை -> அனைத்தும் கோவிந்தா!).


இனி, வேறொரு பொருளை பார்ப்போம்.


🌷 மெய்யியலில், நீர் என்பது அசைவை (நிலையற்றதை) குறிக்கும். படைப்பில், அசையாதது, மாறாதது, என்றும் நிலைத்திருப்பது என்று ஏதேனுமிருக்கிறதா? இல்லை. தோற்றமும், மாற்றமும் & அழிவும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. எனவே, அசையும் பொருட்களில்லாமல் வையகமில்லை.


நீர்இன்று அமையாது உலகு = அசைவின்றி அமையாது வையகம்.


🌷 அடுத்தது, வான்இன்று அமையாது ஒழுக்கு.


மெய்யியலில், வான் என்பது மனதை குறிக்கும். வான் - விண் - விண்டு (விஷ்ணு) - மாயோன் - மாயை - மனம்.


ஒழுக்கு என்பது, இங்கு, பொருந்துகையை குறிக்கும். எதனோடு பொருந்தவேண்டும்? உள்ளபொருளோடு.


வெறுமனே பொருந்தி விடுவோமா? 😏 "தரும" அடி வாங்கினால்தானே "போதுமடா, சாமி" என்ற எண்ணமே வரும்! 😀 


அப்படி "தரும" அடி வாங்குவதற்கு என்னவேண்டும்? பற்றுகள் வேண்டும்.


பற்றுகள் எதன் வழியாக தோன்றும்? மனதின் வழியாக.


மனமின்றி பற்றுகள் கிடையாது. பற்றுகளின்றி தரும அடி கிடையாது. தரும அடியின்றி ஒழுக்கு கிடையாது.


வான்இன்று அமையாது ஒழுக்கு = மனமின்றி அமையாது உள்ளபொருளோடு பொருந்துகை.


இனி, இரண்டையும் சேர்ப்போம்:


அசைவின்றி அமையாது வையகம். இது போன்று, அசையும் மனமின்றி கிட்டாது வீடுபேறு.


oOo


🌷 கடவுள் வாழ்த்து = அசைவற்ற உள்ளபொருளை பற்றியது


🌷 வான் சிறப்பு = அசையும் மனதைப் பற்றியது


oOOo


கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️


🪻🌼🪷🌼🪻